Jump to content

பிரிட்டன் எண்ணெய் கப்பலை இடைமறிக்க முயற்சித்த இரான் - என்ன நடந்தது?


Recommended Posts

வளைகுடா நாடுகளின் கடற்பரப்பில் பிரிட்டன் எண்ணெய் கப்பலை தடுக்க இரானிய படகுகள் மேற்கொண்ட முயற்சி, ராயல் கடற்படை கப்பலால் முறியடிக்கப்பட்டது என்று பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

பிரிட்டிஷ் ஹெரிட்டேஜ் எண்ணெய் கப்பலை தொடர்ந்து சென்ற பிரிட்டனின் போர்க்கப்பலான ஹெச்எம்எஸ் மெண்ட்ரோஸ் மூன்று படகுகளுக்கும், எண்ணெய் கப்பலுக்கும் இடையில் பயணிக்க கட்டாயப்படுத்தப்பட்டது என்று செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இரானின் இந்த நடவடிக்கைகள் "சர்வதேச சட்டத்திற்கு முரணானது" என்று அவர் கூறியுள்ளார்.

 

தனது எண்ணெய் கப்பலை பிரிட்டன் தடுத்து வைத்திருப்பதற்கு பதிலடி வழங்கப்படும் என்று இரான் முன்னதாக மிரட்டல் விடுத்திருந்தது. ஆனால், அத்தகைய முயற்சி எதையும் எடுக்கவில்லை என்று இரான் தெரிவித்திருக்கிறது.

இரானின் இஸ்லாமிய புரட்சி பாதுகாப்புப் படையை சேர்ந்ததாக நம்பப்படும் படகுகள் வளைகுடாவுக்கு வெளியே ஹோர்முஸ் நீரிணைக்குள் நகர்ந்து கொண்டிருந்ததை, பிரிட்டிஷ் ஹெரிட்டேஜ் எண்ணெய் கப்பலை நெருங்கி, நிறுத்த முயற்சித்தன என்று தெரிவிக்கப்படுகிறது.

வரைபட விளக்கம்

படகுகளை விலகி செல்ல ஆணையிடப்பட்ட வேளையில், ஹெச்எம்எஸ் மெண்ட்ரோஸ் கப்பலில் இருந்து தாக்குதல் நடத்துவதற்கு தயார் செய்யப்பட்டது என்று அமெரிக்க ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

எச்சரிக்கைக்கு செவிமடுத்ததால், தாக்குதல் எதுவும் நடத்தப்படவில்லை.

இரானின் படகுகள் நெருங்கி வந்தபோது, அபு முஸா தீவுக்கு அருகில், அபு முசா தீவின் அருகே பிரிட்டிஷ் ஹெரிட்டேஜ் எண்ணெய் கப்பல் பதிவு செய்யப்பட்ருந்ததாக பிபிசியிடம் தெரிவிக்கப்பட்டது.

இரானிய படகுகள் பிரிட்டிஷ் ஹெரிட்டேஜ் எண்ணெய் கப்பலுக்கு தெந்தரவு வழங்கியவுடன், அதனை சற்று தள்ளி தொடர்ந்து வந்து கொண்டிருந்த ஹெச்எம்எஸ் மெண்ட்ரோஸ் உதவிக்கு விரைந்து வந்தது என்று பிபிசியின் பாதுகாப்பு செய்தியாளர் ஜோனதான் பிலே தெரிவித்தார்.

அபு முசா சர்ச்சைக்குரிய கடற்பரப்பில் இருந்தாலும், ஹெச்எம்எஸ் மெண்டரோஸ் சர்வதேச கடற்பரப்பில் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

"ஹோர்முஸ் நீரிணை மூலம் வந்த வணிகக்கப்பலான பிரிட்டிஷ் ஹெரிட்டேஜ் எண்ணெய் கப்பலை தடுக்க இரானின் மூன்று படகுகள் சர்வதேச சட்டத்திற்கு புறம்பாக முயற்சித்துள்ளன" என்று பிரிட்டன் அரசின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

"இந்த நடவடிக்கையால் கவலையடைந்துள்ளோம். இந்த பிரதேசத்தில் பதட்ட நிலைமையை தணிக்க இரானிய அதிகாரிகளிடம் வலியுறுத்துவதை தொடர்ந்து வருகிறோம்" என்றும் அவர் கூறினார்.

ஹெச்எம்எஸ் மெண்ட்ரோஸ் படையணிக்கு நன்றி தெரிவித்துள்ள சர்வதேச வர்த்தக செயலாளர் லியாம் ஃபாக்ஸ், "இத்தகைய படைப்பிரிவுகள் அனைத்தும் எல்லா வசதிகளையும் போதுமான அளவுக்கு பெற்றிருப்பதை உறுதி செய்வது நமது கடமை" என்று கூறியுள்ளார்.

இரான் சொல்வது என்ன?

"பிரிட்டிஷ் ஹெரிட்டேஜ் எண்ணெய் கப்பலை தடுக்க முயற்சித்ததாக கூறப்படும் அமெரிக்க தகவலை ஐஆர்ஜிசி (இரானின் இஸ்லாமிய புரட்சி பாதுகாப்புப் படை) மறுக்கிறது" என்று அந்நாட்டு கடற்படையின் பொது தொடர்பு அதிகாரியை மேற்கோள்காட்டி ஃபார்ஸ் செய்தி நிறுவனம் ட்விட்டர் பதிவில் இரானின் வெளியுறவு அமைச்சர் மொஹமத் ஜாவத் சாரிஃப் தெரிவித்துள்ளர்.

"பிரிட்டன் கப்பல் உள்பட எந்தவொரு வெளிநாட்டு கப்பல்களோடும் கடந்த 24 மணிநேரத்திற்குள் மோதல்கள் எதுவும் இல்லை" என்று ஐஆர்ஜிசி மேலும் தெரிவித்துள்ளதாக ஏஃப்பி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

பதற்றத்தை உருவாக்கவே பிரிட்டன் இவ்வாறு தெரிவித்துள்ளதாக இரானின் வெளியுறவு அமைச்சர் முகமது ஜவாத் ஸாரிஃப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

"இத்தகைய தகவலுக்கு எந்த மதிப்பும் இல்லை" என்றும் சாரிஃப் கூறியதாக ஃபார்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/global-48951754

 

 

பாது­காப்பை உறு­திப்­ப­டுத்த சர்­வ­தேச இரா­ணுவ கூட்­ட­மைப்பை ஸ்தாபிக்க அமெ­ரிக்கா திட்டம்

வளை­குடா கடல் பரப்­பி­னூ­டான சுதந்­தி­ர­மான கப்பல் பய­ணங்­களை உறுதி  செய்­வ­தற்கு ஈரான்  மற்றும் யேம­னிய கடற்­க­ரை­க­ளுக்கு அப்­பா­லுள்ள  கடல் பிராந்­தி­யத்தைப் பாது­காப்­ப­தற்கு  சர்வதேச இரா­ணுவக் கூட்­ட­மைப்­பொன்றை  உரு­வாக்க அமெரிக்கா விரும்­பு­வ­தாக அமெ­ரிக்க சிரேஷ்ட கடற்­படை ஜெனரல்  ஒருவர் தெரி­வித்தார்.

image.jpg

முக்­கிய வர்த்­தகப் பாதை­களை உள்­ள­டக்­கிய அந்தப் பிராந்­தி­யத்­தி­லான சுதந்­தி­ர­மான கடற்­ப­ய­ணத்தை உறு­திப்­ப­டுத்தத் தாம் விரும்­பு­வ­தாக கடற்­படை ஜென­ர­லான ஜோசப் டன்போர்ட் தெரி­வித்தார்.

கடந்த மாதம் அந்தப் பிராந்­தி­யத்தில்  எண்ணெய் தாங்கிக் கப்­பல்கள் மீது நடத்­தப்­பட்ட தாக்­கு­தல்­க­ளுக்கு ஈரா­னிய ஆத­ர­வுடன் செயற்­படும் கிளர்ச்­சி­யா­ளர்­களே கார ணம் என அமெ­ரிக்கா குற்­றஞ்­சாட்­டி­யி­ருந்­ தது.

இந்­நி­லையில் வளை­குடா கடல் பரப்­பி­லான பாது­காப்பை உறு­திப்­ப­டுத்தும் இந்த செயற்­பாட்டை முன்­னெ­டுக்க ஒரு தொகை நாடு­க­ளுடன் அமெ­ரிக்கா பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்­ள­தாக ஜெனரல் ஜோசப் டன் போர்ட் தெரி­வித்தார்.

அமெ­ரிக்கா அந்தப் பிாந்­தி­யத்தில் பய­ணிக்கும் கப்­பல்­க­ளுக்கு கட்­டளை மற்றும் கட்­டுப்­பாட்டை வழங்­க­வுள்­ள­தாக தெரி­வித்த அவர், ஏனைய நாடுகள் அந்தக் கப்­பல்­க­ளுக்கு பாது­காப்பை வழங்க அவற்­றுக்­கி­டையில் தமது பட­கு­களை ரோந்து நட­வ­டிக்­கையில் ஈடு­ப­டுத்­துவ­தற்கு எதிர் பார்க்­கப்­ப­டு­வ­தாக கூறினார்.

அமெ­ரிக்கா இந்­ந­ட­வ­டிக்­கைக்­கான ஆத­ரவைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக ஒவ்வொரு நாடும் கொண்­டுள்ள குறிப்பிட்ட திறன் ­களை அடை­யாளம் காண்ப­தற்­காக இரா­ணு­வத்­தி­ன­ருடன் நேர­டி­யாக இணைந்து பணியாற்றவுள்ளதாக  அவர் மேலும் தெரி வித்தார். வளைகுடா மற்றும் செங்கடலை சென்றடைவதற்கான பாதையாகவுள்ள ஹொர்மஸ் நீரிணை மற்றும் பாப் அல் மன்டாப் நீரிணை என்பன முக்கிய தந்தி ரோபாய கடல் பிராந்தியங்களாக விளங்கு கின்றன.

குறைந்தளவானவர்களின் பங்களிப்புடன்  சிறிய நடவடிக்கையொன்றையே மேற் கொள்ள முடியும் என்பதால் தம்மை அடை யாளப்படுத்தும் வகையில் இந்நடவடிக்கை யில் பங்கேற்க விருப்பம் கொண்டுள்ள  ஒரு தொகை நாடுகளை உள்ளடக்கி  இந்த செயற்கிரமத்தை விரிவாக்கம் செய்ய எதிர் பார்த்துள்ளதாக அவர் கூறினார். பாப் அல் மன்டாப் நீரிணையூடாக ஒவ்வொரு நாளும் சுமார் 4 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் ஏனைய நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/60250

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • சினிமா காலத்தை வைத்து பார்த்தால் கருணாநிதியே ஆட்சி கதிரையில் அமர்ந்திருக்க முடுடியாது.நீங்கள் விரும்பினால்  படங்களுடன் பூரண விளக்கம் தரப்படும்  ஓகேயா? முதலில் கனிமொழியுடம் தொடங்கவா? ஆதாரம் கேட்டால் படங்கள் போட்டோக்கள் எக்ஸ்சற்றாக்கள் இணைக்கலாம். 😂
    • ஆழ்ந்த இரங்கல்கள். மேலே  ஏராளன் இணைத்த தினக்குரல் பத்திரிகையில் 1933 ஓகஸ்ட்இல் பிறந்த எதிர்வீரசிங்கம் வயது 89 என்று எழுதியிருக்கிறார்கள். 90 என்றுதானே வரவேண்டும்?. அவர் மத்திய கல்லூரியில் படிக்கும் போது இலங்கை சாதனையை முறியடிக்கும் போது ,  கொழும்பில் வெளிவந்த ஆங்கில பத்திரிகை ஒன்றில் இவரது பெயரை எதிர்வீரசிங்க என்று எழுதியிருந்தது. அப்பொழுது மத்திய கல்லூரியின் அதிபர் சிமித் அவர்கள் ‘எதிர்வீரசிங்க அல்ல நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்’  என்று எழுதிய கடிதம் அதே பத்திரிகையில் பிறகு வந்தது.  ஆசிய விளையாட்டுப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்றபின்பு யாழ் புகையிரத நிலையத்தில் இருந்து மத்திய கல்லூரிக்கு அழைத்து வரப்பட்டு ,எதிர்வீரசிங்க அவர்களுக்கு சிறந்த வரவேற்பு பாடசாலையில்வழங்கப்பட்டது.  -  மத்திய கல்லூரியின் பழைய மாணவரான எனது தகப்பனார் சொன்ன தகவல் இவரும் , இவரது சகோதரர்களும் படிக்கிற காலத்தில் மத்திய கல்லூரியில்துடுப்பாட்டத்தில் ஆரம்ப வேகப்பந்தாளராக விளங்கினார்கள் (Opening blower). 
    • அட்லீஸ்ட் விஜயலக்சுமிக்கு செய்தது போல் அநியாயம் செய்யாமல் தன்னை நம்பி வந்த பெண்ணை கண்ணியத்தோடு நடத்தினார் என நினைக்கிறேன்🤣. பதில் விளக்கம் போதும் என நினைக்கிறேன்🤣 ஐயகோ….இரு மாநில ஆளுனர்….ஆட்டுகுட்டி கதையை கேட்டு…
    • இல்லை அண்ணாவின் ஆட்சிகாலம் போல இருக்கும்.   
    • அவ‌ங்க‌ள் இட‌த்தில் நேர்மை ஊழ‌ல் இல்லாம‌ இருந்தால் ஏன் த‌மிழ‌ர்க‌ள் திராவிட‌த்தை வெறுக்க‌ போகின‌ம் 2ஜீ ஊழ‌லால் ஒரு இன‌ம் அழிவ‌தை வேடிக்கை பார்த்த‌வ‌ர்க‌ள் பெரியார் ஜாதியை ஒழித்தார் அது தான் குறிப்பிட்ட‌  ஜாதி ம‌க்க‌ள் வ‌சிக்கும் இட‌த்தில் ம‌னித‌க் க‌ழிவை த‌ண்ணீருக்கை க‌ல‌ந்த‌வை....................... சோடா க‌டையில் வேலை பார்த்து விட்டு ம‌ஞ்ச‌ல் வாக்கில் 4புத்த‌க‌த்தோட‌ வ‌ந்த‌வ‌ரின் குடும்ப‌த்துக்கு இத்த‌னை ல‌ச்ச‌ம் கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து ச‌த்திய‌மாய் கோடி காசுக்கு எத்த‌னை 0 என்று என‌க்கு தெரியாது ஆனால் நீட் தேர்வை ர‌த்து செய்ய‌ எங்க‌ளிட‌ம் ர‌க‌சிய‌ம் இருக்கு என்று சொல்லி ப‌ல‌ பிள்ளைக‌ள் நீட்டால் இற‌ந்து போனார்க‌ள் அத‌ற்க்கு பிற‌க்கு உத‌ய‌நிதியின் பெயர் கொல்லிநிதி கொல்லுநிதியின் ம‌க‌ன் இன்ப‌நிதிக்கு தெரியும் கோடி காசுக்கு எத்த‌னை 0 என்று....................திமுக்காவுக்கு ஓட்டு போட்ட‌ ம‌க்க‌ள் ம‌ழை வெள்ள‌த்தால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ போது வீட்டுக்குள் இருந்து க‌டும் வேத‌னை ப‌ட்ட‌வை 4000ஆயிர‌ம் கோடி ஒதுக்கி ப‌ணி செய்தார்க‌ளா அல்ல‌து அதையும் ஊழ‌ல் செய்து மூடி ம‌றைத்தார்க‌ளா...........................ஆண்ட‌வா இனி வ‌ள‌ந்து வ‌ரும் பிள்ளைக‌ளுக்கு ந‌ல்ல‌ அறிவைக் கொடு அப்ப‌ தான் கால‌ம் க‌ட‌ந்து த‌மிழ் நாட்டில் ந‌ல் ஆட்சி ம‌ல‌ரும் நாடும் செல்ல‌ செழிப்பாய் இருக்கும் ம‌க்க‌ளும் குறைக‌ள் இல்லாம‌ எல்லா வ‌ச‌தியோடும் வாழுவின‌ம்...............................................  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.