Jump to content

தமிழுக்கென்று ஓர் இணையத்தளம் -சொற்குவை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
மொழித் தொல்லியல் (Linguistic Archeology) என்ற புதிய மொழியியல் துறையின்ஆய்வுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கிறபோதுஉலகில் மொழி தோன்றியகாலத்திலேயே தோன்றிய மொழி தமிழ்மொழி என்பது இன்னும் தெளிவாகிறதுமொழிப் பதிவுகளில் முற்பட்டதாகக் கூறப்படும் பாறை ஓவியஎழுத்துகள்மட்பாண்டக் கிறுக்கல் எழுத்துகள் தமிழ்மொழி எழுத்துகளாகஅடையாளம் கண்டறியப்படுகின்றனஅவற்றிற்கு ஒலிப் பொருத்தம்(PhotonicValue) கொடுத்து மொழிப் பனுவலாக்கம் (Decipherment) செய்யப்படுகின்றனசிந்துவெளி போன்ற புதையுண்ட நாகரிகங்களில் கிடைக்கும் மொழிசார் தொல்பொருள்களிலிருந்து மீட்டெடுக்கப்படும் சொற்களும்,தொடர்களும் தமிழ்மொழியில் ஒப்பீடு செய்து தமிழாகப் படிக்கப் பெறுகின்றனஅவை தமிழ்மொழிதான் என நிறுவப்படுகின்றன.
 
அதேநேரத்தில்உலக வரலாற்றில் புகழ்பெற்ற பல பேரரசுகளோடு பரவலாக ஆட்சி செய்த பழம்பெரும் மொழிகள் பலஇன்றைக்கு மக்கள்வழக்கிழந்து இருந்த இடம் தெரியாமல் போய்விட்டனஆனால்தமிழ்மொழி இன்றும் மக்கள் வழக்கிலும் பயன்பாட்டிலும் வளமாக வாழ்ந்துகொண்டுள்ளதுஅதற்குக் காரணம் தமிழ்நாட்டை ஆண்ட அன்றைய தமிழ்ப் பேரரசுகள் கழகம் வைத்து இலக்கியங்களை உருவாக்கியும் தொகுத்தும் தமிழ் வளர்த்துள்ளனர்தொடக்க காலத்தில் கல்வெட்டுகள்செப்பேடுகள்ஓலைச்சுவடிகளில் வாழ்ந்துவந்த தமிழ்,இன்றைய அறிவியல் உலகத்தில் நூல் வடிவிலும்கணிப்பொறியிலும் தன்னைத் தக்கவைத்துள்ளதுஒருங்குகுறி வழக்குக்கு வந்ததன் விளைவாகத் தொடர்ந்து பதிவுகோல்(Pen drive),இணையம்முகநூல்கீச்சகம்(Twitter),புலனம் (Whatsapp) எனப் பலவற்றின் பயன்பாடுகளிலும் தமிழ்மொழி பயன்படுத்தப்பட்டு உலா வருகிறது.மக்களின் வழக்கிலும் கருத்திலும் பதிவிலும் இடம்பெற்றுஇத்தொழில்நுட்பக் காலத்துக்கேற்ற ஏராளமான கலைச்சொற்களின் உருவாக்கத்திற்குத்தகச் சொல்வளத்தைப் பெருக்கிக் கொண்டுள்ள மொழி தமிழ்மொழி.இவ்வாறான தொடர் பயன்பாட்டுடன் உலக மொழிகளிலேயே நீண்ட நிலைத்த வாழ்நாளைப் பெற்றதோர் அரிய மொழியாகத் தமிழ் விளங்குகிறது.
அத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழ்மொழியை மேலும் வளர்க்க தமிழக அரசு முன்வந்துள்ளது. அதன்தொடர்ச்சியாக தமிழ்மொழியில் உள்ள தமிழ்ச்சொற்களுக்கு ஏற்ப அகராதியை வெளியிட்டுள்ளது.இதில் சுமார் 3,45,000 சொற்கள் இணைக்கப்பட்டுள்ளஎ.தமிழ்மொழியைதவிர வேறு எந்த மொழியிலும் இவ்வளவு சொற்கள் இல்லை என்பது விஷேஷமாகும்.இதன் இணையதளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும். நீங்கள் கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 
2019-07-11%2B12_54_51-.jpg
 
இதில் உள்ள தேடுபொறியில நீங்கள் விரும்பும் சொற்களுக்கான தமிழ் மற்றும் ஆங்கில சொற்களை தேட தட்டச்சு செய்யவும். சில நிமிடங்கள் காத்திருப்பிற்கு பின்னர் உங்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கில சொற்கள் கிடைக்கும். 
2019-07-11%2B12_54_41-%25E0%25AE%259A%25E0%25AF%258A%25E0%25AE%25B1%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%25B5%25E0%25AF%2588%2B-%2B%25E0%25AE%25AE%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AF%2581.jpg
நீங்கள் :தேடிய சொற்களுக்கு  ஏற்ப பொருள்தரும் பிற சொற்களையும்,அது இடம்பெற்ற பாடல்வரிகளையும் இதில் இணைத்துள்ளார்கள். சொற்களுக்கான ஆங்கில சொற்களும் இதில் இடம்பெற்றுள்ளது.
மேலும் இவர்கள் தமிழ்மொழியில் 35 நூல்களை வெளியிட்டுள்ளார்கள். நூல்களை வாங்கும் முறையையும் விவரித்துள்ளார்கள். இவர்கள் இணையதளம் மூலம் தெரிந்துகொள்ள வசதிஏற்படுத்திஉள்ளார்கள். இவர்களை தொடர்பு கொள்ள தொடர்பு முகவரியையும் வெளியிட்டுள்ளார்கள். 05.07.2019 அன்று முதன்முதலாக தமிழுக்கு என்று இந்த இணையதளத்தினை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. நாமும் இதனை பயன்படுத்தி தமிழ்மொழியை அறிந்துகொள்வோம்.
வாழ்கவளமுடன்
வேலன்.
 
 
 
Link to comment
Share on other sites

வரவேற்கப்பட வேண்டிய நல்லதொரு முயற்சி..ஒரு சில வார்த்தைகளுக்கு இன்னும் சரியான அர்த்தம் கொடுக்கப்படவில்லை, முயற்சிக்கு வாழ்த்துகள்.  செய்யுள்களை மேற்கோள் காட்டிக் குறிப்பிட்டுள்ளது பாராட்டுதலுக்கு உரியது. 

எ.கா. 

தொன்மை1
toṉmai,
பெ. (n.)

1. பழைமை (திவா.);;
oldness, antiquity.

   தொன்மை யுடையார் தொடர்பு(நாலடி, 216);.

2. உரைவிரவிப் பழைமையாகிய கதை பொருளாகச் செய்யப்படுவது (தொல். பொருள். 549);;
narrative poem interspersed with prose, having for its subject an ancient story.

[தொல் → தொன்மை (வே.க. 274);]

தொன்மை2
toṉmai,
பெ. (n.)

தன்மை (சங்கற்ப நிராகரணம்);;
nature.

தொன்மை நாடி நன்மைவிடாதே (பழ.);.

[தொல் → தொன்மை]
---------

தொன்மை2
toṉmai,
பெ. (n.)

தன்மை (சங்கற்ப நிராகரணம்);;
nature.

தொன்மை நாடி நன்மைவிடாதே (பழ.);.

[தொல் → தொன்மை]
 

Link to comment
Share on other sites

  • 10 months later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.