Jump to content

27 வருடங்களுக்குப் பிறகு இறுதிப் போட்டியில் இங்கிலாந்து


Recommended Posts

உலகக் கிண்ணத் தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்களினால் வெற்றியீட்டி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.

உலகக் கிண்ணத் தொடரின் இரண்டாவது அயைிறுதி ஆட்டம் ஆர்ரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலிய அணிக்கும், இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கிடையிலும் இன்று மாலை 3.00 மணிக்கு பேர்மிங்கமில் ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடி 49 ஓவர்களை எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 223 ஓட்டங்களை மாத்திரம் பெற்றனர். 

224 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இங்கிலாந்து அணியின் ஆரம்ப வீரர்களான ஜோசன் ரோய் - ஜோனி பெயர்ஸ்டோ நல்லதொரு இணைப்பாட்டத்தை பகிர்ந்து கொண்டனர்.

இதனால் இங்கிலாந்து அணி 5 ஓவரில் 19 ஓட்டத்தையும், 10 ஓவரில் 50 ஓட்டத்தையும் பெற்றது. 14.5 ஆவது ஓவரில் ரோய் ஒரு நான்கு ஓட்டத்தை விளாசித் தள்ளி அரைசதம் கடக்க இங்கிலந்து அணி 15 ஓவர் நிறைவில் 95 ஓட்டங்களை பெற்றது.

16 ஆவது ஓவருக்கா ஸ்டீவ் ஸ்மித் பந்துப் பரிமாற்றம் மேற்கொள்ள அந்த ஓவர‍ை எதிர்கொண்ட ரோய் தொடர்ச்சியாக மூன்று ஆறு ஓட்டங்களை விளாசித் தள்ளினார். அதனால் அந்த ஓவரில் மாத்திரம் இங்கிலாந்து அணி 21 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இந் நிலையில் 17.2 ஆவது ஓவரில் இங்கிலாந்து அணியின் முதல் விக்கெட் 124 ஓட்டத்துக்கு வீழ்த்தப்பட்டது. அதன்படி பெயர்ஸ்டோ மொத்தமாக 43 பந்துகளை எதிர்கொண்டு 5 நான்கு ஓட்டம் அடங்கலாக 34 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க, அதிரடிகாட்டி வந்த ரோய் 19.4 ஆவது ஓவரில் பேட் கம்மின்ஸின் பந்து வீச்சில் மொத்தமாக 65 பந்துகளை எதிர்கொண்டு 9 நான்கு ஓட்டம், 5 ஆறு ஓட்டம் அடங்கலாக 85 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார் (147-2).

தொடர்ந்து 3 ஆவது விக்கெட்டுக்காக ஜோ ரூட் - இயன் மோர்கன் ஜோடி சேர்ந்து சிறப்பாக அவுஸ்திரேலிய அணியின் பந்துகளை நான்கு திசைகளிலும் அடித்தாட இங்கிலாந்து அணி 29.2 ஆவது ஓவரில் 2 விக்கெட்டுக்களை இழந்து 200 ஓட்டங்களை கடந்தது. 

இறுதியாக இங்கிலாந்து அணி ஓவரில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 226 ஓட்டங்களை பெற்று அவுஸ்திரேலிய அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை கடந்தது.

ஆடுகளத்தில் ரூட் 45 ஓட்டத்துடனும், மோர்கன் 49 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி நான்காவது முறையாகவும் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளதுடன், 1992 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஒருநாள் உலகக் கிண்ண அரங்கில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி 27 வருடகால தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

அத்துடன் 1992 ஆம் ஆண்டுக்கு பின்னர் உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளதும் விசேட அம்சமாகும்.

இந் நிலையில் எதிர்வரும் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ள நடப்பு உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணியுடன் இங்கிலாந்து பலப்பரீட்சை நடத்தவுள்ளமையும் குறிப்பித்தக்கது.

https://www.virakesari.lk/article/60310

Link to comment
Share on other sites

ஆஸ்திரேலியாவை பந்தாடியது இங்கிலாந்து - எப்படிச் சாத்தியமானது?

உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் விளையாட இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் தகுதி பெற்றுள்ளன.

இன்று நடைபெற்ற இரண்டாவது அரை இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை எளிதாக வென்றது இங்கிலாந்து.

1975லிருந்து உலகக்கோப்பை அரை இறுதிப் போட்டியில் தோல்வியே அடையாத அணி எனும் பெருமையோடு வளைய வந்த ஆஸ்திரேலியாவை இங்கிலாந்து தோற்கடித்துள்ளது.

1975-ல் நடந்த முதல் உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவிடம் இங்கிலாந்து தோற்றது. அதற்கு பிறகு 44 ஆண்டுகளுக்கு பிறகு இவ்விரு அணிகளும் அரை இறுதியில் மோதின. இம்முறை ஆஸ்திரேலியாவை இங்கிலாந்து வெளியேற்றியது.

பேட்டிங்,பௌலிங், ஃபீல்டிங் என அனைத்துத் துறையிலும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தினர் இங்கிலாந்து வீரர்கள்.

 

2வது அரை இறுதியில் என்ன நடந்தது?

ரவுண்ட்ராபின் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் இரண்டாமிடம் பிடித்த ஆஸ்திரேலியாவும் மூன்றாமிடம் பிடித்த இங்கிலாந்தும் இப்போட்டியில் மோதின.

224 ரன்கள் எடுத்தால் கேன் வில்லியம்சன் அணியுடன் லார்ட்ஸ் மைதானத்தில் உலகக்கோப்பைக்காக மல்லுக்கட்டலாம் என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது.

அரை இறுதியில் நியூசிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய மூன்று அணிகளும் பேட்டிங் பவர்பிளேவில் தடுமாறியிருந்தன.

அடுத்தடுத்த நாள்களில் மூன்று அணிகள் பவர்பிளேவில் சரிவை சந்தித்தாலும் இங்கிலாந்து முதல் பத்து ஓவர்களை திறம்பட எதிர்கொண்டது.

ஆஸ்திரேலியாவின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஸ்டார்க்கை அநாயாசமாக கையாண்டது இங்கிலாந்து.

தொடக்க வீரர்கள் ஜேசன் ராய் - ஜானி பேர்ஸ்டோ இணை பதற்றமடையாமல் ஒவ்வொரு பந்தையும் எதிர்கொண்டது. முதல் பத்து ஓவர்களில் 50 ரன்கள் குவித்தது இந்த இணை. அதன் பின்னர் ரன் ரேட்டை உயர்த்தும் பணியில் ஈடுபட்டது.

இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியை போலவே இரண்டாவது பத்து ஓவர்களில் இங்கிலாந்து அதிரடி ஆட்டம் ஆடியது.

குறிப்பாக ஜேசன் ராய் மிகச்சிறப்பாக விளையாடினார். ஸ்மித் வீசிய ஒரு ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசினார். அந்த ஓவரில் மட்டும் 21 ரன்களை குவித்தது இங்கிலாந்து.

18-வது ஓவரில் ஸ்டார்க் இந்த இணையை பிரித்தார். அதற்கடுத்து பேட் கம்மின்ஸ் பந்தில் ஜேசன் ராய்க்கு அவுட் கொடுக்கப்பட்டது.

65 பந்துகளில் 9 பௌண்டரிகள், 5 சிக்ஸர்கள் உதவியுடன் 85 ரன்கள் குவித்தார். நடுவரின் முடிவு மீது கடும் அதிருப்தியோடு வெளியேறினார் ஜேசன் ராய்.

அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ஜோ ரூட் - இயான் மோர்கன் இணை எந்த பதற்றமும் இல்லாமல் இலக்கை நோக்கிச் சரியாக பயணித்தது.

ஆரோன் பின்ச்சின் எந்தவொரு வியூகமும் இங்கிலாந்திடம் எடுபடவில்லை.

32.1 ஓவர்களில் சேஸிங்கை முடித்தனர் .

உலகக்கோப்பைத் தொடரை நடத்தும் இங்கிலாந்து லார்ட்ஸில் நியூசிலாந்து அணியை இறுதிப்போட்டியை எதிர்கொள்கிறது.

 

 

தடுமாறிய ஆஸ்திரேலியா

முன்னதாக, பெர்மிங்காம் மைதானத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணித்தலைவர் ஃபின்ச் முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தார்.

இரண்டாவது ஓவரிலேயே ஃபின்ச் ஆட்டமிழந்தார்.

மூன்றாவது ஓவரில் டேவிட் வார்னர் நடையை கட்டினார். ஏழாவது ஓவரில் பீட்டர் ஹேண்ட்ஸ்கோம் போல்டானார்.

13 ரன்களுக்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலியா.

முதல் பவர்பிளேவில் கிறிஸ் வோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர் இருவரும் ஆஸ்திரேலியாவின் டாப் ஆர்டரை அலற வைத்தனர்

பவர்பிளேவில் தடுமாறிய ஆஸ்திரேலிய அணியை பின்னர் விரைவில் சரிவில் இருந்து மீட்டனர் அலெக்ஸ் கரே மற்றும் ஸ்மித்.

கடுமையான காயத்துடனும் பொறுப்பை உணர்ந்து விளையாடினார் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கரே. 21 ஓவர் போராட்டத்துக்கு பிறகு இந்த இணையை பிரித்தது மோர்கன் படை.

அடில் ரஷீத் வீசிய பந்தில் வின்சியிடம் கேட்ச் கொடுத்து அவர் அவுட் ஆனார்.

அப்போது இங்கிலாந்து அணி 27 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 117 ரன்கள் எடுத்திருந்தது.

அதே ஓவரில் மார்க்ஸ் ஸ்டாய்னிசையும் எல்.பி.டபிள்யூ ஆக்கினார் அடில்.

மீண்டும் மோசமான சூழலுக்குச் சென்றது ஆஸ்திரேலியா.

மேக்ஸ்வெல் கொஞ்சம் நம்பிக்கைத் தந்தார். அவர் இரண்டு சிக்ஸர்கள் ஒரு பௌண்டரி விளாசி அவுட் ஆனார்.

இந்த உலகக்கோப்பையில் இங்கிலாந்தின் நட்சத்திர பௌளராக இருந்த ஆர்ச்சரை கடைசி ஓவர்களுக்காக பாதுகாத்து வைக்காமல் மிடில் ஓவர்களில் களமிறங்கினார் மோர்கன். அதன் பயனாகத்தான் அபாயகரமான மேக்ஸ்வெல் விக்கெட்டை அறுவடை செய்தது இங்கிலாந்து.

கம்மின்ஸை ஒரு சிறப்பான கேட்ச் மூலம் ரூட் வெளியேற்றினார் . அதன்பின்னர் ஸ்டார்க் - ஸ்மித் ஜோடி ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு கொஞ்சம் நம்பிக்கைத் தந்தது.

இந்த இணை இருக்கும் வரை ஆஸ்திரேலியா 250 ரன்களைத் தாண்டக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் 51 ரன்கள் சேர்த்த இந்த இணையை பட்லரின் துடிப்பான ஃபீல்டிங் பிரித்தது.

48-வது ஓவரின் முதல் பந்தில் ஸ்மித் ரன் அவுட் ஆனார். அவர் பொறுமையாக சிறப்பாக விளையாடி 119 பந்துகளில் 85 ரன்கள் குவித்திருந்தார்.

மிச்செல் ஸ்டார்க் 36 பந்துகளில் 29 ரன்கள் குவிந்திருந்த நிலையில் ஸ்மித் பெவிலியனுக்கு சென்ற அடுத்த பந்திலேயே நடையை கட்டினார்.

49-வது ஓவரிலேயே அனைத்து விக்கெட்டையும் இழந்தது ஆஸ்திரேலியா.

வோக்ஸ், அதில் ரஷீத் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஜோஃப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்

https://www.bbc.com/tamil/sport-48950779

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நியுசிலாந்து கோப்பையை வெல்லும் என ஜோதிடர் கூறியுள்ளார்????????

 

Link to comment
Share on other sites

நாளை  நியூசிலாந்து வென்றுவிட்டால் ...

பாலாசியின் கைத்தொலைபேசி தொல்லைபேசியாக மாறிவிடலாம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.