Jump to content

தமிழ்ப் பெயர்களைத் தேடும் பெற்றோர்களுக்கு இந்த நூல் உதவும்!


Recommended Posts

இதில், சங்க இலக்கியங்களிலிருந்து எடுக்கப்பட்ட 46,000 தனித்தமிழ் பெயர்கள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன.

பெட்னா மாநாடு

பெட்னா மாநாடு

ஒரு கலாசாரத்தின் வரைபடம் 'மொழி. ஒருவர் எங்கிருந்து வருகிறார், எதை நோக்கிப் பயணிக்கிறார் போன்ற தனிநபர் வரலாற்றின் சான்று அவர்களின் மொழியே. அப்படிப்பட்ட அரிய அடையாளத்தை எந்த அளவுக்கு நாம் பாதுகாக்கிறோம் என்பது இன்றைய காலகட்டத்தில் மிகப் பெரிய கேள்விக்குறியாகிவிட்டது.

ஒரு நாளில் நாம் பெரும்பாலும் உபயோகிக்கும் நம் 'பெயர்'கூட இன்றைய சூழலில் பிறமொழியைச் சார்ந்துதான் இருக்கிறது. இந்நிலையில், சமீபத்தில் சிகாகோவில் நடைபெற்ற பெட்னா மாநாட்டில், தமிழ் இயக்கம் உருவாக்கிய 'சூட்டி மகிழ்வோம் தமிழ்ப்பெயர்கள்' எனும் நூல் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில், சங்க இலக்கியங்களிலிருந்து எடுக்கப்பட்ட 46,000 தனித்தமிழ் பெயர்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

பத்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 32-வது தமிழ் விழா மற்றும் சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் வெள்ளிவிழா ஆகியவை சிகாகோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில், வி.ஐ.டி பல்கலைக்கழகத்தின் வேந்தரும் தமிழ் இயக்கத்தின் தலைவருமான டாக்டர் கோ.விசுவநாதன் முயற்சியில் உருவாகியுள்ள 'சூட்டி மகிழ்வோம் தமிழ்ப்பெயர்கள்' என்ற நூல் வெளியிடப்பட்டது.

தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இந்தப் புத்தகத்தை வெளியிட, முதல் பிரதியை வி.ஐ.டி துணைத்தலைவர் கோ.வி.செல்வம், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்க பேரவை (பெட்னா) தலைவர் சுந்தர் குப்புசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், நிர்மலா பெரியசாமி, எழுத்தாளர் லேனா தமிழ்வாணன், தொழிலதிபர் பால் பாண்டியன், மருத்துவர் சு.சம்பந்தம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விடியல் சேகர் மற்றும் வாஷிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவர் சிவா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
 
இதில், 23,000 ஆண் பெயர்களும் 23,000 பெண் பெயர்களும் அச்சடிக்கப்பட்டிருக்கின்றன. இதற்காக, வலைத்தமிழ் நிறுவனர் ச.பார்த்தசாரதி மற்றும் எழுத்தாளர் திருமதி.பவள சங்கரி ஆகியோர் தொகுப்பாசிரியர்களாகவும் புலவர் வே.பதுமனார் பதிப்பாசிரியராகவும் செயல்பட்டுள்ளனர்.

இந்த நிகழ்வைப் பற்றித் தமிழ் இயக்கத்தின் தலைவர் டாக்டர் கோ.விசுவநாதனிடம் கேட்டபோது, "இன்றைய இளம் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குத் தமிழ்ப் பெயர்களைவிடப் பிறமொழி பெயர்களைத்தான் அதிகம் தேர்ந்தெடுக்கிறார்கள். இது மிகவும் கவலையளிக்கும் விதமாக இருக்கிறது. ஒருவருடைய பெயர் என்பது அந்த மனிதனின் பொருள் பொதிந்த தனித்துவமான அடையாளம். பிறமொழியில் பொருளற்ற பெயர்களை வைப்பது சொந்த அடையாளத்தைத் தொலைத்து நிற்கும் நிலையை ஏற்படுத்தும். எனவே, இந்த அவலத்தைப் போக்க இந்நூல் பெரிதும் உதவும். 30 நாள்களுக்குள் இந்தப் புத்தகத்தை உருவாக்க உறுதுணையாக இருந்த தமிழ் வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள், இலக்கியவாதிகள் மற்றும் புலவர்கள் அனைவருக்கும் நன்றி" என்றார்.

இந்தப் புத்தகத்தின் தொகுப்பாளர் ச.பார்த்தசாரதி, "ஓர் இனத்தின் வரலாறு அவர்களின் பெயரிலிருந்துதான் தொடங்குகிறது. ஆனால், கடந்த 15, 20 ஆண்டுகளில் இளம் தமிழ் பெற்றோர்கள் நாகரிகம் என்று கருதி வாயில் நுழையாத, பொருளற்ற பிறமொழி பெயர்களை வைக்கும் நிலை உருவாகியுள்ளது. நம் பண்பாட்டை எடுத்துச் சொல்லும் நல்ல தமிழ்ப் பெயர்களை நம் குழந்தைகளுக்குச் சூட்ட இந்த நூல் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் 'திருக்குறள்' நூல் போன்று ஒவ்வொரு தமிழரின் வீடுகளிலும் தமிழ் நூலகங்களிலும் இருக்க வேண்டிய ஓர் அற்புதமான நூல் இது" என்று குறிப்பிட்டார்.
Tamil Script
 
Tamil Script

'உன் தாய்மொழி மதிக்கப்படவில்லை என்றால், உன் குரல்வளை நெறிக்கப்படுகிறது என்பதுபோல் தமிழ்ப் பெயர்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும்விதமாக இருக்கிறது இந்நூல்.

https://www.vikatan.com/news/literature/petna-releases-sooti-magizhvom-tamilpeyargal-book-at-chicago

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

எனது உறவுக்காரப் பிள்ளையொன்றின் பெயர் ‘ப்றேஹா‘. இன்னொரு பையனின் பெயர் ‘றுக் ஷியன்‘ . முடிந்தால் இவைகளையும் அந்தப் பெயர்ப் பட்டியலில் சேர்த்து விடுங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • சீமான் உட்பட எவருமே தங்கம் இல்லை. ஆகவே இவரும் மாற்று இல்லை. ஒரு கள்ளனை இன்னொரு கள்ளனால் பிரதியிடுவது அல்ல மாற்று. ஓம். ஏன் எண்டால் அவர் சின்ன கருணாநிதி என நான் எப்போதோ அடையாளம் கண்டு கொண்டதால்.
    • இராக்கில் உள்ள ஈரானிய புரொக்சி படைகள் மீதும் விமானத்தாக்குதலாம். அமெரிக்கன் சென்ரல் கொம்மாண்ட் தாம் இல்லை என மறுப்பு. இஸ்ரேல் லெப்ட் சிக்க்னல் போட்டு ரைட் கட் பண்ணி இருக்குமோ? விமானங்கள் ஜோர்தான் பக்கம் இருந்தே வந்தனவாம்.
    • ஆழ்ந்த அஞ்சலிகள். மத்திய கல்லூரியில் என் அப்பாவுக்கு சீனியர். எதிர் என ஆரம்பித்து இவரை பற்றி ஒரு அசகாய சூரனை போல கதைத்து கொண்டே இருப்பார் அப்பா. அதே போலத்தான் கந்தப்பு சொன்ன அதிபர் ஸ்மித்தை பற்றியும்.   
    • யார் சொன்னார் சீமான் மட்டும் தங்கம் என? சீமான் இன்னும் ஆட்சி செய்யவில்லையே? அவரவர் தாம் விரும்பும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை விரும்புகின்றனர். விஜய் கட்சி ஆரம்பிக்க முதலே நீங்கள் சீமான் எதிர்ப்பாளர் தானே? அது சரி விஜய் அரசியல் கட்சியின் கொள்கை என்ன? 🤣
    • ஓம் கருணாநிதி கூட ஒரு முறை சொன்னார் “நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்குத் தொல்லை” என. எப்போதும் ஏனைய தமிழ் நாட்டு தொகுதி முடிவுக்கு மாறாக போக அதிக வாய்ப்பு உள்ள தொகுதி கன்யாகுமரி. தவிர பொன்னாருக்கு தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. ஆனால் வாலி சொல்லும் காரணங்களும் பலமானவையே. கடும் போட்டி இருக்கும் என நினைக்கிறேன். மாற்று உண்மையான மாற்றாக இருக்க வேண்டும்.  உங்களை போலவே மேலே உள்ள காரணங்களுக்காக நான் விஜையின் அரசியல் வரவை வரவேற்கிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.