Jump to content

2050 ஆம் ஆண்டில் சவால்களுக்கு முகம் கொடுக்க நீங்கள் தயாரா ?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

2050 ஆம் ஆண்டில் சவால்களுக்கு முகம் கொடுக்க நீங்கள் தயாரா ?

மக்கள் தொகை அதிகரிப்பானது இயற்கைக்கும் மனிதனின் அத்தியாவசிய தேவைகளுக்கும் சவால்விடும் வகையில் வளர்ந்து வருகின்றது. இதன் காரணமாக உலகம் அழிவை நோக்கிப் பயணிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 

உலக மக்கள் தொகை வளர்ச்சி ஆண்டுக்கு 1.07 வீதமாக ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 82 மில்லியன் மக்கள் உலகில் அதிகரிக்கின்றனர்.

 World_Population.jpg

உலகமக்கள் தொகை அதிகரிப்பின் வரைபை நோக்கும் போது, மனிதனின் அறிவியல் புரட்சிக்குபிற்பட்ட காலப்பகுதியில் வளர்ச்சி வீதத்தில் கணிசமாக அதிகரித்திருப்பதை காணலாம். சனத்தொகையானது அறிவியல் ரீதியாக நோய்களுக்கு எதிராக போராடி தமது எண்ணிக்கையை அதிகரித்துக்கொண்ட போதும் நீர், வாழ்விடம், வாழ்வாதாரம் போன்ற அடிப்படைத் தேவைகளுக்காக முட்டி மோதிக்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இந்நிலை தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உலக மக்கள் தொகை தினம்,  ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தினால் கொண்டாடப்பட்டு வருகிறது.

1986 ஆம் ஆண்டில் இதே நாளிலேயே உலக மக்கள் தொகை ஐந்து பில்லியனைத் தாண்டியது. அதனையடுத்து 1987 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும்  ஜூலை மாதம் 11 ஆம் திகதி உலகமக்கள் தொகை  அனுஷ்டிக்கப்படுகின்றது.

2050 ஆம் ஆண்டில் உலக சனத்தொகை 10 பில்லியனை அண்மிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு காலகட்டத்தில் உலக சனத்தொகை வளர்ச்சிபற்றி பேசிய நாடுகள் இன்று அதனைக் கட்டுப்படுத்தும் வழிகளை நடைமுறைப்படுத்துவதைக் கட்டாயமாக்கி உள்ளன. இவற்றுக்குக் காரணம் 2050 களில் உலகம் எதிர்கொள்ள உள்ள சிக்கல்களே ஆகும்.

உலக சனத்தொகையில் மிகப்பெறிய பகுதி ஆசியாவிற்கானது. இதில் இந்தியாவின் மக்கள் தொகை 1.327 பில்லியனாக உள்ளது, இது உலக மக்கள் தொகையில் சுமார் 17.5 வீதமாகும். அத்துடன்  உலக மக்கள்தொகையில் 30 வீதம் தேவையற்ற மற்றும் தற்செயலான கர்ப்பங்களால் ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வளரும் மக்கள்தொகை, அருகிச்செல்லும் இயற்கை வளங்கள், எரிசக்தி மற்றும் உணவுப்பற்றாக்குறை ஆகியவை 2030 ஆம் ஆண்டில் "பூரணமான புயலை" உருவாக்கும் என்று ஐக்கி இராச்சியத்தின் முதன்மை விஞ்ஞானி எச்சரித்துள்ளார். அவர் தமது பதிவில் உலகின் உணவு கையிருப்பு அடுத்துவரும் 50 வருடங்களுக்கும் போதியதாக இல்லை எனும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். அத்துடன் 2030 ஆம் ஆண்டிற்குள்  உலகின் உணவு மற்றும் நீர் தேவை 50 வீத அதிகரிப்பைக் காட்டும் எனக் கூறியுள்ளார். 

crap.jpg

இவற்றோடு இன்று சுற்றுச் சூழல் மாசடைவும்  இணைந்துள்ளது. வறுமை, வேலையின்மை, அடிப்படைச்  சுகாதார வசதியின்மை. சுற்றுச்சூழல் கேடு, தண்ணீர்ப் பஞ்சம் போன்றவற்றிலிருந்து வன்முறை, கொலை, கொள்ளை வரையிலாக அனைத்தும் அளவுக்கதிமான மக்கள்  தொகைப்பெருக்கத்தின் பக்க விளைவுகளே!

உலகம் 2050 ஆம் ஆண்டுகளில்  2.3 பில்லியின் மக்கள் அதிகரிப்பைச் சந்திக்கும்  அதேவேளை அவர்களுக்கு உணவளிப்பதற்காக 70 வீத உணவை உலகம் உற்பத்தி செய்ய வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாயக் கழகம் கூறுகிறது.

உலகின் ஊட்டச்சத்து பற்றாக்குறையானது 1995 ஆம் ஆண்டில் 832 மில்லியனக இருந்து 2007 ஆம் ஆண்டில் 923 மில்லியனுக்கு உயர்ந்துள்ளது. அண்மைக்கால மதிப்பீட்டின்படி இந்த தொகையானது, 2009 ஆம் ஆண்டில் 1.2 மில்லியனுக்கு மேலும் அதிகரித்திருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளது.

2009 ஜூன் மாதம் இடம்பெற்ற ஜி.8 நாடுகளின் மாநாட்டின் ஒரு பகுதியான “உலக வருமையும் பற்றாக்குறையும்” என்ற அமர்வில் கலந்து கொண்டு பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் ஜொசெர்சின் கூறியதாவது,

உலகில் ஆறு பேரில் ஒருவர் பசிக்கொடுமைக்கு உள்ளாகின்றனர். உலகில் 6 விநாடிகளுக்கு ஒரு குழந்தை போதிய சத்துணவின்மையினால் இறக்கின்றது. ஆபிரிக்க நாடுகள்தான் இதில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. இது போன்ற நிலை கடந்த 20ஆண்டுகளில் எப்போதும் இருந்ததில்லை. இதே நிலை நீடித்தால் பட்டினிச்சாவு ஆபத்து ஏற்படும். மனிதாபிமான அவலத்தின் விளிம்பில் உலகம் உள்ளது. இதனை எதிர்கொள்ள முழுமையாக நன்கொடைகளையே நம்பியுள்ளோம் என குறிப்பிட்டிருந்தார்.

20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் 200 கோடிக்கும் குறைவாக இருந்த மக்கள் தொகை 2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் 31 ஆம் திகதி 700 கோடியைத் தொட்டுவிட்டது. இவ்வாறு உலகளாவிய ரீதியில் அதிகரித்துச் செல்லும் மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு  எடுத்துச் செல்லும் ஒரு முயற்சியாக ஐக்கிய நாடுகள் வளர்ச்சிக் திட்டத்தினால் இத்தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. மேலும் ஐ.நா. சனத்தொகை நிதியத்தினால் (UNFPA)  இவ்வாண்டின் தொனிப்பொருளாக  “ நிறைவு  செய்யப்படாத வணிக அலுவல்கள் மீது கவனம் செலுத்துதல்” என்பதனை பிரகடனப்படுத்தியுள்ளது. 

சனத்தொகை அதிகரிப்பின் தாக்கமானது ஒரு சிறிய குடும்பத்தில் இருந்தே ஆரம்பமாகின்றது. எனவே இதற்கான தீர்வை ஒவ்வொரு நாடும் அங்கிருந்தே ஆரம்பிக்க வேண்டும்.பல குடும்பங்கள் போதிய வருமானம், வாழ்விட பற்றாக்குறை அடிப்படை தேவைக்குறைப்பாடுகளுடன் வாழ்கின்றனர். இந்த சூழலில் குடும்பக்கட்டுப்பாடு பற்றிய போதிய அறிவின்மையால் குடும்பத்தைச் சரியான கட்டுக்கோப்பில் பேணுவதற்குத் தவறுகின்றனர். 

இந்தியா போன்ற நாடுகள் தமது வளங்களுக்கும் அதிகமாக சனத்தொகையை கொண்டுள்ளது. எனவே தனிநபரின் தேவைகளை பூர்த்தி செய்வது பெரும் சவாலாக உள்ளது. எனவே, ஒவ்வொரு தனிமனிதனும் மக்கள் தொகை கட்டுப்பாட்டின் அவசியத்தைப் புரிந்துகொள்வது அவசியமாகின்றது.

இலங்கையை பொருத்தமட்டில் இரு பல்லின மக்கள் ஒன்றாக வாழும் நாடாகும். 2018 ஆம்  ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டின்படி. இலங்கையின் மக்கள் தொகை 20, 950,041 ஆவதுடன் பிறப்பு விகிதம் 14.8 ஆகவும் இறப்பு விகிதம் 6.3 ஆகவும் காணப்பட்டது.

எதிர்நோக்கவுள்ள ஊட்டச்சத்து பற்றாக்குறைக்கு எதிராகச் செயற்பட தமக்கு தேவையான உணவைத் தாமே உற்பத்தி செய்து கொள்ளும் நிலைக்கு மனிதன் மாற வேண்டும். அத்துடன் இயற்கை வளங்களைப் பாதுகாத்து சனத்தொகை வளர்ச்சியையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதன் மூலம் மட்டுமே மனித இனத்தின் நிலவுகையை உலகில் நீடிக்க முடியும்.

- ஜெயந்தி

 

https://www.virakesari.lk/article/60273

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.