Jump to content

பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆப்கான் அரசாங்கத்தின் அமைச்சர்கள் அதிகாரிகள்- பிபிசி விசாரணை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆப்கான் அரசாங்கத்தின் அமைச்சர்கள் அதிகாரிகள்- பிபிசி விசாரணை

ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தின் உயர்மட்டத்தில்  பாலியல் துன்புறுத்தல்கள் இடம்பெறுவது பிபிசி மேற்கொண்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

ஆப்கானிஸ்தான் தொடர்ந்தும் உலக அறிக்கைகளில் பெண்களிற்கு ஆபத்தான நாடாக பதிவாகிவருகின்றது.

இந்த பின்னணியிலேயே பிபிசி இந்த விசாரணையை மேற்கொண்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் என்னை தொடர்ச்சியாக துன்புறுத்தினார் ஒரு நாள் என்னை  அலுவலகத்தில் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினார் என அமைச்சர் கீழ் முன்னர் பணிபுரிந்த பெண்மணியொருவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.

தனது பெயரை பயன்படுத்த வேண்டாம் என தெரிவித்துள்ள அந்த பெண்மணி எனினும் தனது அனுபவங்களை உலகம் அறிந்துகொள்ளவேண்டும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

அந்த அமைச்சர் நேரடியாக என்னிடம் அந்த விடயத்தை கேட்டார், நான் நீங்கள் அனுபவம் மிக்கவர் தகுதி வாய்ந்தவர் உங்களிடம் நான் இதனை எதிர்பார்க்கவில்லை என தெரிவித்தேன் என அந்த பெண்மணி பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.

afhan_president_off.jpg

அதன் பின்னர் நான் அங்கிருந்து வெளியே முற்பட்டவேளை அவர் எனது கையை இழுத்து பின்னறைக்கு கொண்டு செல்ல முயன்றார் நான் அவரிடம் என்னை சத்தமிட வைக்காதீர்கள் என குறிப்பிட்டுவிட்டு அங்கிருந்து வெளியேறினேன் என அந்த பெண்மணி தெரிவித்துள்ளார்.

நான் பொலிஸாரிடம் முறையிடவில்லை எனது வேலையை இராஜினாமா செய்தேன் என தெரிவித்துள்ள அந்த பெண்மணி நான் அரசாங்கத்தை நம்பவில்லை,நீங்கள் நீதிமன்றத்திற்கோ பொலிஸாரிடமோ சென்றால் அவர்கள் எவ்வளவு ஊழல் மிகுந்தவர்கள் என்பது உங்களிற்கு தெரியும் எனவும் தெரிவித்துள்ளார்.

நீங்கள் உங்களிற்கு நடந்ததை பகிரங்கமாக தெரியப்படுத்தினால் அனைவரும் பெண்களையே குற்றம்சொல்வார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளாhர்.

குறிப்பிட்ட அமைச்சர் தங்களை பாலியல் வன்முறைக்கு உட்படு;த்தினார் என வேறு இரு பெண்கள் தன்னிடம் தெரிவித்தனர் என அந்த பெண்மணி குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இதனை உறுதி செய்ய முடியவில்லை என பிபிசி தெரிவித்துள்ளது.

அந்த அமைச்சர் எந்த வெட்கமும் இன்றி அச்சமின்றி இவ்வாறான செயல்களில் ஈடுபடுகின்றார் என அந்த பெண்மணி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஆப்கான் ஜனாதிபதி அஸ்ரவ் கானியின் நெருங்கிய சகாவொரு பாலியல் உறவில் ஈடுபடுமாறு கோரினார் என மற்றொரு பெண் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.

நான் அரசாங்க வேலைக்கு விண்ணப்பித்திருந்தேன் வேலை கிடைப்பது உறுதியாகியிருந்த நிலையில் ஆப்கான் ஜனாதிபதி; அஸ்ரவ் கானியின் நெருங்கிய சகாவை சந்திக்குமாறு என்னை கேட்டுக்கொண்டார்கள்  என அவர் தெரிவித்துள்ளார்.

நான் அந்த நபரை சந்தித்தவேளை அவர்  தான்  என்னுடைய ஆவணங்களில் கைச்சாத்திடுவதாக தெரிவித்ததுடன் தன்னுடன் பாலியல் உறவில் ஈடுபடுமாறும் தன்னுடன் சேர்ந்து மது அருந்துமாறும் கேட்டுக்கொண்டார் என  அந்த பெண்மணி தெரிவித்துள்ளார்.

woman1.jpg

அது எனக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்தது நான் அங்கிருந்து அச்சத்துடன் வெளியேறினேன் என அவர் தெரிவித்துள்ளார்.

நான் அதன் பின்னர் அரச அலுவலகத்துடன் தொடர்புகொண்டு வேலை குறித்து கேட்டேன் ஆனால் அவர்கள் உங்கள் வங்கியில் பணம் வைப்பிலிடப்பட்டது நீங்கள் அதனை எடுக்க மறுத்துவிட்டீர்கள் என குறிப்பிட்டனர்  என அந்த பெண்மணி தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஆப்கான் ஜனாதிபதியின் அலுவலகம் இது தொடர்பான பேட்டிக்கு அனுமதி வழங்க மறுத்துள்ளதுமின்னஞ்சல்களிற்கும் பதிலளிக்கவில்லை என பிபிசி தெரிவித்துள்ளது.

 

https://www.virakesari.lk/article/60267

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"ஒவ்வொரு ஆணும் உங்களுடன் பாலுறவு வைத்து கொள்ள விரும்புவார்கள்"

யோகிடா லிமே பிபிசி, காபுல்
அரசாங்கத்தின் மூத்த அமைச்சர் ஒருவர் தன்னை பாலியல் உறவில் ஈடுபடுமாறு வற்புறுத்தியதாகக் கூறுகிறார் இந்த முன்னாள் அரசு அதிகாரி Image caption அரசாங்கத்தின் மூத்த அமைச்சர் ஒருவர் தன்னை பாலியல் உறவில் ஈடுபடுமாறு வற்புறுத்தியதாகக் கூறுகிறார் இந்த முன்னாள் அரசு அதிகாரி

ஆப்கானிஸ்தான் அரசின் உயர் அதிகாரிகள் மீது பல பாலியல் புகார்கள் குவிந்துள்ளன. இவற்றை அந்த அதிகாரிகள் மறுத்தாலும், இது தொடர்பாக பிபிசி நடத்திய புலனாய்வில், பாதிக்கப்பட்ட பெண்கள் தாங்கள் அனுபவித்த பாலியல் தாக்குதல் குறித்து விவரித்தனர்.

காபூலை சுற்றியுள்ள மலைப்பகுதியின் அடிவாரத்தில் உள்ள ஒரு வீட்டில், முன்னாள் அரசு அதிகாரி ஒருவரை சந்தித்தேன். பின் விளைவுகள் ஏதேனும் ஏற்படுமோ என்று பயந்து, அவர் தனது பெயரை குறிப்பிட விரும்பவில்லை. ஆனால், அவர் தனது கதையை உலகிற்கு சொல்ல வேண்டும் என்று நினைக்கிறார்.

அவரது முன்னாள் தலைமை அதிகாரி, அதாவது அரசாங்கத்தின் மூத்த அமைச்சர் ஒருவர் தன்னை தொடர்ந்து துன்புறுத்தியதாக அப்பெண் கூறுகிறார். ஒரு நாள் அந்த அமைச்சரின் அலுவலகத்திற்கு செல்லும்போது, தன்னை தாக்க முயன்றதாக அவர் தெரிவிக்கிறார்.

"என்னிடம் நேரடியாக வந்து பாலியல் உறவு வைத்துக் கொள்ளுமாறு கேட்டார். என்னுடைய தகுதி மற்றும் வேலை அனுபவத்தை பற்றி அவரிடம் கூறினேன். அவர் என்னிடம் இதுபோன்று கேட்பார் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. நான் வெளியே செல்ல எழுந்து நின்றேன். என் கையை பிடித்து இழுத்து, அவரது அலுவலகத்திற்கு பின்புறம் இருக்கும் அறைக்கு என்னை கூட்டிச் சென்றார். என்னை அங்கு தள்ளி 'கொஞ்ச நிமிடங்கள்தான் ஆகும். கவலைப்படாதே. என்னுடன் வா!' என்று கூறினார்."

"நான் அவரை தள்ளிவிட்டு, என்னை கத்த வைக்க வேண்டாம் என்று எச்சரித்தேன். அதுதான் நான் அவரை கடைசி முறை பார்த்தது. நான் மிகுந்த கோபம் அடைந்தோடு, கவலையும் அடைந்தேன்" என்று அப்பெண் கூறினார்.

அந்த சம்பவத்திற்கு பிறகு அவர் புகார் தெரிவித்தாரா?

"இல்லை. என் வேலையை ராஜிநாமா செய்துவிட்டேன். எனக்கு அரசாங்கம் மீது நம்பிக்கை இல்லை. நீங்கள் காவல்துறைக்கோ அல்லது நீதிமன்றத்திற்கோ சென்றால், அங்கு எவ்வளவு ஊழல் நடக்கிறது என்பது உங்களுக்கு தெரியும். நீங்கள் சென்று புகார் அளிக்க இங்கு பாதுகாப்பான இடம் ஏதுமில்லை. நீங்கள் பேசினால், அனைவரும் பெண்கள் மீதுதான் பழி போடுவார்கள்" என்று அவர் தெரிவிக்கிறார்.

தன்னுடன் பணிபுரிந்த வேறு இரு பெண்கள், அதே அமைச்சரால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டதாக கூறியதாக இந்த முன்னாள் அரசு அதிகாரி தெவித்தார். இதனை பிபிசியால் சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை.

மூத்த அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பாலியல் தொழிலை ஊக்குவிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டை அதிபர் அலுவலகம் மறுக்கிறது Image caption மூத்த அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பாலியல் தொழிலை ஊக்குவிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டை அதிபர் அலுவலகம் மறுக்கிறது

"எந்த வெட்கமும் பயமும் இல்லாமல் அந்த அமைச்சர் இதனை செய்கிறார். ஏனென்றால் அவர் அரசாங்கத்தில் ஒரு செல்வாக்குள்ள மனிதர்" என்று கூறுகிறார் அப்பெண்.

பெண்கள் வாழ்வதற்கு மோசமான நாடுகள் பட்டியலில் ஆப்கானிஸ்தான் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. 2018ம் ஆண்டு வெளியான ஐநா அறிக்கை, பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண்கள் ஒரு சில அழுத்தங்களால், கொடுத்த புகார்களை திரும்பப் பெற வேண்டிய நிலை இருப்பது குறித்து விவரிக்கிறது. பல சூழ்நிலைகளில் பெண்களுக்கு எதிராக நடந்த குற்றங்களில், பெண்களே குற்றஞ்சாட்டப்படுகின்றனர்.

இப்படியிருக்க, செல்வாக்குமிக்க ஆண்கள் தவறாக நடந்து கொண்டால், அதனை வெளியே பேசுவது சுலபமானது அல்ல.

அதனால்தான், நாம் ஆறு பெண்களிடம் பேசியும் அவர்கள் பெயர் சொல்லவே அஞ்சுகிறார்கள். ஆனால், அவர்களிடம் நாம் பேசியதில், ஆப்கான் அரசாங்கத்தில் இருக்கும் இந்த பாலியல் துன்புறுத்தல் பிரச்சனை, ஒருவரையோ அல்லது ஒரே ஒரு துறையையோ சார்ந்ததோ அல்ல என்பது தெரிய வந்தது.

'இது எங்கள் கலாசாரத்தின் அங்கமாகிவிட்டது'

தன் கதையை பகிர்ந்து கொள்ள விரும்பும் மற்றுமொரு பெண்ணை சந்தித்தேன். அவர் அரசாங்க வேலைக்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால், ஆப்கான் அதிபர் அஷ்ரஃப் கனியின் நெருங்கிய நபர் ஒருவரை சந்திக்க வேண்டும் என்று கூறப்பட்டபோது சற்று பதட்டமடைந்தார்.

"அதிபருடன் பல புகைப்படங்களில் நான் அந்த நபரை பார்த்திருக்கிறேன். அவரது தனி அலுவலகத்திற்கு என்னை வரச் சொன்னார். வந்து இங்கு அமரு, நான் உன் ஆவணங்களுக்கு ஒப்புதல் அளிக்கிறேன் என்று கூறினார். பின்னர் என்னிடம் நெருங்கி வந்த அவர், நாம் மது அருந்தலாம், பாலியல் உறவில் ஈடுபடலாம் என்று கூறினார்" என்கிறார் அந்தப் பெண்.

"என்னிடம் இரு வழிகள்தான் இருந்தன. ஒன்று ஒப்புக்கொள்ள வேண்டும் அல்லது அங்கிருந்து வெளியேற வேண்டும். நான் ஒப்புக் கொண்டிருந்தால், அதோடு இந்த விஷயம் நின்றுருக்காது. பல ஆண்கள் இதுபோல என்னிடம் வந்து கேட்பார்கள். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. பயத்தில் அங்கிருந்து வெளியேறிவிட்டேன்", என்றார்

பெண்கள் வாழ்வதற்கு மோசமான நாடுகள் பட்டியலில் ஆப்கானிஸ்தான் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.படத்தின் காப்புரிமை AFP Image caption பெண்கள் வாழ்வதற்கு மோசமான நாடுகள் பட்டியலில் ஆப்கானிஸ்தான் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.

உங்கள் வேலை என்ன ஆனது என்று கேட்டேன்.

அரசாங்கத்துறைக்கு தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியதாக அவர் கூறினார்.

அப்போது அவரிடம் "வங்கிக்கணக்கில் இருந்து உங்களுக்கு பணம் வந்தது என்று நினைத்துக் கொள்ளுங்கள். ஆனால், நீங்கள் அதை வாங்கவில்லை" என்று தனக்கு தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறுகிறார்.

பேசிக்கொண்டிருக்கும்போதே உடைந்து அழுத அப்பெண், "இதனை நினைக்கும் போதெல்லாம் இரவில் தூங்க முடியவில்லை. கோபமாகவும் வேதனையாகவும் உள்ளது" என கூறினார்.

"நீங்கள் நீதிபதியிடமோ, போலீஸ், அரசு வழக்கறிஞர் என்று யாரிடம் போய் புகார் அளித்தாலும், அவர்களும் தங்களோடும் பாலியல் உறவில் ஈடுபடுமாறு உங்களை கேட்பார்கள். அப்படியிருக்க நீங்கள் யாரிடம் செல்ல முடியும்? இது ஒரு கலாசாரமாகிவிட்டது போல இருக்கிறது. உங்களை சுற்றி இருக்கும் அனைவரும் உங்களிடம் பாலியல் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பது போல இருக்கிறது" என்கிறார் அவர்.

இந்த விவகாரம் பல ஆண்டுகளாக வெளியே வராமல் இருந்தது. கடந்த மே மாதம், அதிபரின் முன்னாள் ஆலோசகர் ஜெனரல் ஹபிபுல்லா அஹ்மட்சாய் அரசாங்கத்திற்கு எதிராக திரும்பி, இது குறித்து ஆப்கன் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தார்.

பாலியல் தொழிலை உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் ஊக்குவிப்பதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

இது தொடர்பாக விளக்கம் பெற, அதிபர் அலுவலகத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. அது ஏற்கப்படவில்லை. அதேபோல மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட கேள்விகளுக்கும் எந்த பதிலும் இல்லை.

ஜெனரல் ஹபிபுல்லாவின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் முற்றிலும் பொய்யானது என்று முன்னதாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையையே நம்மிடம் சுட்டிக்காட்டினர்.

இது குறித்து ஆப்கன் அரசின் பெண் அமைச்சர் நர்கிஸ் நெஹன் தனது ட்விட்டர் பதிவில், "ஆப்கன் அரசாங்க அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் ஒரு பெண்ணாக நான் கூறுகிறேன். இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படையற்றவை என நம்பிக்கையுடன் சொல்வேன்" என்று எழுதியிருக்கிறார்.

முன்னாள் எம்பியான பிரபல பெண்கள் உரிமை செயற்பாட்டாளர் ஃபவ்சியா கூஃபி கூறுகையில், தற்போதைய அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள பல ஆண்களுக்கு எதிராக பாலியல் புகார்கள் தமக்கு கிடைக்கப்பெற்றதாக தெரிவித்தார்.

ஃபவ்சியா கூஃபி Image caption ஃபவ்சியா கூஃபி

"இதற்கு காரணமான ஆண்கள், தங்களை அரசாங்கம் பாதுகாக்குமென எண்ணுகின்றனர். அதுவே, இது மாதிரியான தவறுகளை செய்ய அவர்களை ஊக்குவிக்கிறது" என்று அவர் கூறுகிறார்.

பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்கக் குழு ஒன்றினை அரசாங்கம் அமைத்துள்ளது. அட்டர்னி ஜெனரல் அலுவலகத்தால் இது விசாரிக்கப்படும். இதற்காக அதிபரால் ஒரு நபர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அட்டர்னி ஜெனரலின் செய்தித் தொடர்பாளர் ஜம்ஷித் ரசூலியை அவரது அலுவகத்தில் சந்தித்து பேசினேன். அவரது அலுவலகத்தில் அதிபர் கனியின் புகைப்படம் சுவரில் இருந்ததை பார்க்க முடிந்தது.

விசாரணை ஒருதலைபட்சமாக நடக்காது என்பதை மக்கள் ஏன் நம்ப வேண்டும்? என்று நான் அவரிடம் கேட்டேன்.

"அட்டர்னி ஜெனரல் சுதந்திரமாக செயல்பட அரசியல் சாசனம் உரிமை அளித்துள்ளது. இது ஒருதலைபட்சமாக இருக்காது என்று மக்களுக்கு உறுதியளிக்க, செயற்பாட்டாளர்கள், முஸ்லிம் மத குருக்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகளையும் இந்த விசாரணையில் அங்கம் வகிக்குமாறு நாங்கள் கேட்டுக் கொண்டுள்ளோம்" என்று அவர் கூறினார்.

அரசாங்க அமைப்புகளிடம் புகார் அளிக்கும் அளவுக்கு அவர்கள் மீது நம்பிக்கை இல்லை என்று நான் சந்தித்த பெண்கள் கூறியதை அவரிடம் கூறினேன்.

"புகார் அளிக்கும் ஒவ்வொருவரின் அடையாளம் பாதுகாக்கப்படும் என்று நாங்கள் அறிவித்துள்ளோம்" என அவர் அதற்கு பதிலளித்தார். "எங்களுடன் யார் ஒத்துழைக்கிறார்களோ, நாங்கள் அவர்களையும் அவர்களது குடும்பங்களையும் பாதுகாக்க வழி செய்வோம்" என்றும் அவர் தெரிவித்தார்.

இது ஆப்கன் உள்நாட்டு விவகாரம் என்று கூறி இது தொடர்பாக கருத்து தெரிவிக்க, அந்நாட்டின் NATO தலைமையிலான பணியகம் மறுத்துவிட்டது. ஐ.நா பெண்கள் ஆணையத்திடம் பல முறை கருத்துக்கூற கோரிக்கை விடுக்கப்பட்டும் அவர்களிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

ஆப்கானிஸ்தானில் பெண்கள் ஆபத்தான தருணத்தில் உள்ளனர். அமெரிக்கா மற்றும் தாலிபான் இடையே நடைபெற்று வரும் அமைதி பேச்சுவார்த்தைகள் குறித்து முடிவு எடுப்பதில் பெண்கள் உறுதியாக இருக்கின்றனர். 2001ம் ஆண்டு தூக்கியெறிப்பட்ட தாலிபான் ஆட்சிக்காலம் முடிந்ததில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் முன்னேற்றம் அடைந்திருக்கிறார்கள்.

ஆனால், அரசாங்கத்தில் நடைபெறும் இந்தப் பாலியல் தாக்குதல் குறித்து நடவடிக்கை எடுக்கப்படாமல் போனால், அவர்களின் இந்த முன்னேற்றம் சிதைந்து போகும்.

"பெண்களின் குரலை கேட்டு, அதனை ஒப்புக் கொள்ள வேண்டியது அதிபரின் பொறுப்பு என்பதை நான் அவரிடம் சொல்ல விரும்புகிறேன். நாட்டை பாதுகாக்க வேண்டும் என்று அவர் நினைத்தால், அவர் இந்தப் பிரச்சனையை சரிசெய்ய வேண்டும். ஒருநாள் உண்மை வெளிவரும். ஆனால், தற்போது அது ஒரு நீண்ட நாள் கனவாகவே உள்ளது" என்றும் நாம் நேர்காணல் எடுத்த பெண்களில் ஒருவர் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/global-48952108

 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.