Jump to content

கன்னியா பிள்ளையார் ஆலயம் மீண்டும் உடைப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கன்னியா பிள்ளையார் ஆலயம் மீண்டும் உடைப்பு

திருகோணமலை கன்னியா வெந்நிருற்று பிள்ளையார் ஆலய அத்திவாரம் மீண்டும் உடைக்கப்பட்டு வருகின்றது.

கடந்த மாதம் அமைச்சர் மனோகணேசன் தலைமையிலான குழுவினர் பௌத்த குருமாருடன் கலந்துரையாடி உடைக்கப்படும் வேலைகள் தடைசெய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த திங்கள் முதல் மக்கள் நடமாட்டம் இல்லாத சமயங்கள் மீண்டும் உடைக்கப்பட்டு வருகின்றது.என கன்னியாவில் இயங்கி வருகின்ற தென் கையிலை ஆதனத்தின் குரு முதல்வர் தவத்திரு அகத்திய அடிகளார் தெரிவித்தார்.

59682616_2359056400820686_45143166230410

சம்பவம் தொடர்பாக உடைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுபவர்களிடம்  வினவிய போது உடைப் பதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக அதற்கான அனுமதிக்கடிதத்தை தமக்கு காட்டுவதனாக குருமுதல்வர் தெரிவிக்கின்றார்.

இக்கடிதத்திற்கான அனுமதி இன்று கிடைக்கப்பட்டுள்ளதாகவும் அதனைப் போல சம்மந்தபட்ட  அமைச்சுக்களிடமும் ஜனாதிபதி செயலகத்திடமும் இருந்து அனுமதி பெற்று இந்த பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் உடைக்கும் தரப்பினர் தெரிவிப்பதாக குரு முதல்வர் தெரிவித்துள்ளார்

 

https://www.virakesari.lk/article/60315

 

Link to comment
Share on other sites

புத்த  துறவிகள், இலங்கை தொல்லியல் திணைக்களம் போன்றவற்றால் தொல்லைக்கு உள்ளாகும் சைவ ஆலயங்கள் ஒரு புத்த பிரானின் உருவச் சிலையையும் உள்ளே வைத்து வழிபடுவைத்தன் மூலம் ஒரு தற்காலிக தீர்வை பெறலாம். 
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.