Jump to content

மஹிந்த மீண்டும் ஆட்­சிக்கு வந்தால் என்ன செய்­வது ? - இரா. சம்பந்தன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மஹிந்த மீண்டும் ஆட்­சிக்கு வந்தால் என்ன செய்­வது ?

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

தற்­போ­தைய அர­சாங்­கத்தை வீழ்த்­தினால் மீண்டும் மஹிந்த ராஜபக் ஷவின் அர­சாங்­கமே உரு­வாகும். அவர்­களின் அர­சாங்­கத்தில் கடந்த காலங்­களில் தமிழ் மக்கள் பட்ட துன்­பங்­களை நாம் மறக்­க­வில்லை. 

sambanthan.jpg

ஆக­வேதான் இந்த அர­சாங்­கத்தை வீழ்த்­தா­துள்ளோம் என தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் தலைவர் ஆர்.சம்­பந்தன் நேற்று சபையில் தெரிவித்தார். 

இன்னும் சிறிது காலத்தில் பொதுத் தேர்தல் வரும்.  அதில் மக்கள் தமக்­கான அர­சாங்­கத்தை உரு­வாக்­கிக்­கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்­பிட்டார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை பிர­தமர், அர­சாங்கம் மற்றும் அமைச்­ச­ர­வைக்கு எதி­ராக ஜே.வி.பி கொண்­டு­வந்­துள்ள நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை மீதான 

இரண்டாம் நாள் விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றி­ய­போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். 

அவர் மேலும் உரை­யாற்­று­கையில் 

கடந்த உயிர்த்த ஞாயிறு  தாக்­குதல்  நடத்­தப்­போ­வ­தாக அர­சாங்­கத்­துக்கு தகவல் கிடைத்தும் அதனை தடுக்க நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை. அயல் நாட்டில் இருந்து தகவல் கிடைத்தும் அதனை அர­சாங்கம் கருத்­தில்­கொள்­ள­வில்லை. இவ்­வா­றான நிலையில் அர­சாங்­கத்தை வீழ்த்த மக்கள் விடு­தலை முன்­னணி நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை கொண்­டு­வந்­துள்­ளது. இந்த நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையில் அர­சாங்கம் தோற்றால் அர­சாங்கம் பதவி விலக வேண்டும். அப்­படி இந்த அர­சாங்கம் பதவி வில­கினால் அடுத்­த­தாக யார் ஆட்­சியை அமைப்­பது என்ற கேள்வி உள்­ளது. அவ்­வா­றான நிலையில் மஹிந்த ராஜபக் ஷவே மீண்டும் ஆட்­சியை அமைப்பார். 

2015 ஆம் ஆண்டு ஜனா­தி­ப­தித்­தேர்தல் மற்றும் பொதுத்­தேர்­தல்­களில் மக்கள் ஜனா­தி­ப­தி­யையும் அர­சையும் மாற்­றி­ய­மைத்­தனர். இதற்கு பல கார­ணங்கள் உள்­ளன. மனித உரிமை மீறல்கள் சமூக,பொரு­ளா­தார உரிமை மீறல்கள் கடந்த ஆட்­சியில்  இடம்­பெற்­றன. இதனால் தமிழ் மக்­களே அதிகம் பாதிக்­கப்­பட்­டனர். ஆனால் தற்­போ­தைய அரசு அவ்­வா­றான செயல்­களை செய்­ய­வில்லை. மனித உரிமை விட­யங்­களில் முன்­னைய அரசை விடவும்  மிகவும் சிறப்­பா­னது என்று சொல்­ல­மு­டி­யாத போதிலும் ஓர­ளவு சிறப்­பாக செயற்­பட்­டுள்­ளனர்.  

இந்த  நிலையில் தற்­போ­தைய அர­சாங்கம் மாற்­றப்­பட்டு புதிய அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்தால் இவர்கள் சிறு­பான்மை மக்­களை எவ்­வாறு நடத்­து­வார்கள் என்ற எந்த உத்­த­ர­வா­தமும் இல்லை. கடந்த ராஜபக் ஷ ஆட்­சியில் அதி­க­மாக வடக்கு கிழக்கு தமிழ் மக்­களே பாதிக்­கப்­பட்­டனர் .  எனவே புதிய அரசின் தமிழ் மக்கள் தொடர்­பான கொள்கை தெரி­யாது தற்­போ­துள்ள அரசை நாம் எப்­படி எதிர்த்து வாக்­க­ளிப்­பது?நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணைக்கு எப்­படி ஆத­ர­வ­ளிப்­பது? 

 விரைவில் பொதுத்­தேர்தல் நடக்­க­வுள்­ளது. புதிய அரசு அர­சி­ய­ல­மைப்­பின்­படி தேர்ந்­தெ­டுக்­கப்­படும். இன்று  காலை [நேற்று] திரு­கோ­ண­ம­லை­யி­லுள்ள எனது வீட்­டுக்கு முன்­பாக இளை­ஞர்கள் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர்.

 தமக்கு சம்­பந்தன் வேலை வாய்ப்பு பெற்­றுத்­த­ர­வில்­லை­யென குற்றம்­சாட்­டினர். இன்று [நேற்று] அர­சுக்கு எதி­ராக வாக்­க­ளிக்க வேண்­டு­மெ­னக்­கூ­றினர். இந்த அரசில் கூட எமது  இளை­ஞர்­க­ளுக்கு நீதி கிடைக்­க­வில்லை. 

அவர்­க­ளுக்­கான வேலை வாய்ப்­புக்கள் கிடைக்க வேண்டும்.  தமிழ் மக்கள் தொடர்­பான தமது கொள்­கையை ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது. அக்­கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ருக்­குக்­கூட நாம் ஆத­ர­வ­ளித்­துள்ளோம். ஆனால் பொதுஜன பெரமுன தமிழ் மக்கள் தொடர்பான தமது கொள்கையை இன்னும் வெளிப்படுத்தவில்லை. 

எனவே இது தொடர்பில் எதுவும் தெரியாது தற்போதுள்ள அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு நாம் எப்படி ஆதரவளிக்க முடியும்?எனவே கடவுள் அனுக்கிரகத்துடன் நாம் ஒரு முடிவை எடுத்தது அதன்படி செயற்படுவோம் என்றார்.

 

https://www.virakesari.lk/article/60319

 

Link to comment
Share on other sites

சுமந்திரன்-தெரிவித்துள்ள-கருத்து

மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக செயற்படும் தமிழ்த் தரப்பினரே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க கூடாது என தெரிவிக்கின்றனர் என கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கான்பதை தவிர்த்து அரசாங்கத்தை பாதுகாக்கும் நடவடிக்கையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபட்டு வருவதாக சில தமிழ் அரசியல் கட்சிகளினால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் எமது செய்தி சேவை வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

http://www.hirunews.lk/tamil/220155/சுமந்திரன்-தெரிவித்துள்ள-கருத்து

Link to comment
Share on other sites

வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாத 13 பேர்

13-MPs-%281%29%20%281%29.jpg?itok=CnJvywbi

அரசாங்கத்துக்கெதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைமீதான வாக்கெடுப்பில் டக்ளஸ் தேவானந்தா, துமிந்த திஸ்ஸாநாயக்க, சிவசக்தி ஆனந்த உள்ளிட்ட 13 பேர் கலந்துகொள்ளவில்லை.

பிரேரணைக்கு எதிராக தமிழ்க் கூட்டமைப்பின் 14 பேரும் வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நேற்று (11) அரசாங்கத்துக்கெதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை 27 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. ஜே.வி.பியினரால் முன்வைக்கப்பட்ட இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக 92 வாக்குகளும், எதிராக 119 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

 

 
 

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக ஜே.வி.பி மற்றும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர் உள்ளடங்கலாக 92 பேர் வாக்களித்திருந்தனர். எதிராக ஆளும் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 பேரும் வாக்களித்திருந்தனர்.

  1. டக்ளஸ் தேவானந்தா
  2. சிவசக்தி ஆனந்தன்
  3. வீ.இராதகிருஷ்ணன்
  4. உதய கம்மன்பில
  5. விஜேதாஸ ராஜபக்‌ஷ
  6. துமிந்த திஸாநாயக்க
  7. எஸ்.பி. நாவின்ன
  8. மஹிந்த சமரசிங்க
  9. துனேஷ் கங்கந்த
  10. அசோக்க பிரியந்த
  11. மொஹான் லால் கிரேரு
  12. சந்திரசிறி கஜதீர
  13. சரத் சந்திரசிறி முத்துக்குமாரன ஆகியோர் வாக்கெடுப்பின்போது கலந்துகொள்ளவில்லை.

எதிரணியிலுள்ள ஆறுமுகன் தொண்டமான், முத்துசிவலிங்கம், அங்கஜன் இராமநாதன், காதர் மஸ்தான் மற்றும் வியாழேந்திரன் ஆகியோர் நம்பிகையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தடுப்பதற்கு இருந்த தனது பொறுப்பை அரசாங்கம் மீறியிருப்பதாகக் கூறி அரசுக்கு எதிராக ஜே.வி.பியினர் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவந்திருந்தனர்.

https://www.thinakaran.lk/2019/07/12/உள்நாடு/37114/வாக்கெடுப்பில்-கலந்துகொள்ளாத-13-பேர்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அரச பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழ் பணியாற்றும் ஊழியர்களின் செலுத்தப்படாத சட்டரீதியான பங்களிப்புகளை (EPF/ETF) செலுத்துவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. அரச பெருந்தோட்ட நிறுவன மறுசீரமைப்பு அமைச்சரும் நிதி இராஜாங்க அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் மேலதிக கட்டணங்களுடன் 500 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகை செலுத்தப்பட உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வருடத்தின் முதல் கடமையாக அமைச்சின் செயலாளருக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், உழைக்கும் மக்களின் சட்ட உரிமைகளை பாதுகாத்து பெருந்தோட்ட நிறுவன சீர்திருத்தங்களை ஆரம்பிக்க வேண்டும் என்றார். இது தொடர்பாக ஊழியர்கள் தரப்பினால் 2000க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், சட்டத்தரணி கட்டணமாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பெருமளவு பணத்தை செலவிடுவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/299474
    • ஆகவே தாங்கள்  அவரது குடும்பம் கோத்திரம் எல்லாவற்றையும் நன்கு அறிந்திருக்கிறீர்கள். அந்த அடிப்படையில்தான் அவரது செயலைக் குறிப்பிடும்போது குலவழக்கம் என்று குறிப்பிட்டீர்கள்.  சூப்பரப்பூ சூப்பர்,.........👏 @கிருபன்@பெருமாள்
    • Published By: DIGITAL DESK 3 18 APR, 2024 | 11:40 AM   யாழ்ப்பாணம் - நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவர் கடலில் குழந்தை பிரசவித்துள்ளார்.  நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு நேற்று புதன்கிழமை திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றுமாறு வைத்தியர் பரிந்துரைத்தார். அதனையடுத்து போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு, அம்புலன்ஸ் படகு தற்போது சேவையில் ஈடுபடாததால், பொதுமக்கள் போக்குவரத்து படகில் ஏற்றி குறிகாட்டுவான் நோக்கி அழைத்து வந்துள்ளனர்.  இந்நிலையில் கடலில் படகு பயணித்துக்கொண்டிருந்த வேளை, பிரசவ வலி பெண்ணுக்கு அதிகரித்ததை அடுத்து, படகின் கீழ் தளத்தில் இருந்த ஆண்களை மேல் தளத்திற்கு அனுப்பி வைத்த பின்னர் , படகில் பயணித்த பெண்களே பிரசவம் பார்த்துள்ளனர்.  படகு குறிகட்டுவான் இறங்கு துறையை வந்தடைந்ததும், அங்கு தயார் நிலையில் நின்ற புங்குடுதீவு வைத்தியசாலையின் நோயாளர் காவு வண்டியில் தாயையும் சேயையும், யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்து சென்றனர்.  தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/181359
    • 7 மாகாணங்களில் இன்று வெப்பநிலை அதிகரிப்பு! நாட்டின் 07 மாகாணங்களில் இன்று (18) வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன்படி வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, கிழக்கு, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் வெப்பநிலையானது மனித உடலால் உணரப்படும் அளவினை விட அதிகரித்துக் காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் வெப்பநிலை அதிகரித்துக் காணப்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இம்மாதத்தின் இறுதிவரை நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை தரச்சுட்டெண் அதிகரிக்கக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. https://thinakkural.lk/article/299507
    • Published By: RAJEEBAN    18 APR, 2024 | 03:14 PM   2024ம் ஆண்டு செல்வாக்கு செலுத்திய 100 நபர்களில் ஒருவராக பாலதீன புகைப்படப்பிடிப்பாளர் மொட்டாஸ் அசைசாவை டைம்ஸ் தெரிவுசெய்துள்ளது. இது குறித்து டைம்ஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது கடந்த 108 நாட்களாக அவரது சொந்த ஊரான காசா குறித்த உலகின் குரலாகவும் பார்வையாகவும் அசைசா விளங்கினார். கமராவுடனும் பிரெஸ் என்ற எழுத்துக்கள்பொறிக்கப்பட்ட ஜக்கெட்டுடனும் அவர் நான்கு மாதங்களாக இஸ்ரேலின் குண்டுவீச்சின் கீழ் வாழ்க்கை வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் நேசத்துக்குரியவர்களை இழந்து கதறும் பெண்கள் இடிபாடுகளின் கீழ் சிக்கி உயிரிழந்த நபர் போன்ற விடயங்களை பதிவு செய்தார். காசாவிற்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்களுக்கு சவாலாக அமையக்கூடிய விதத்தில் காணப்பட்ட அவரது படங்கள் காசாவில் என்ன நடைபெறுகின்றது என்பதை உலகிற்கு தெரிவித்தன. அவர் பெரும் ஆபத்தின் மத்தியிலேயே தனது பணியை முன்னெடுத்தார். ஒக்டோபர் ஏழாம் திகதி முதல் 98 பத்திரிகையாளர்கள் காசாவில் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் கொல்லப்பட்டுள்ளனர் கைது செய்யப்பட்டுள்ளனர். 1992ம் ஆண்டுமுதல் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதலை பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு பதிவுசெய்ய தொடங்கியது முதல்  பத்திரிகையாளர்களிற்கு மிகவும் ஆபத்தான ஆண்டாக இந்த ஆண்டே காணப்பட்டுள்ளது. காசாவிலிருந்து ஜனவரியில் வெளியேறியது முதல் அவரது பணி இந்த நெருக்கடி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவும் சர்வதேச கவனத்தை ஈர்ப்பதாகவும் மாறியுள்ளது. காசாவில்  நடைபெறுவது உங்களின் ஊடங்களிற்கான ஒரு உள்ளடக்கடம் இல்லை. அங்கு என்ன நடைபெறுகின்றது என்பதை நாங்கள் உங்கள் விருப்பங்களை கருத்துக்களை பெறுவதற்காக தெரிவிக்கவில்லை. நாங்கள் நீங்கள் செயற்படுவதற்காக காத்திருக்கின்றோம், இந்த யுத்தத்தை நாங்கள் நிறுத்தவேண்டும் என்கின்றார் அவர். https://www.virakesari.lk/article/181378
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.