Jump to content

மீண்டும் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை : ஆதரவளிப்போம் என்கிறார் டிலான் பெரேரா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

(நா.தினுஷா)

தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் ஆதரவின் காரணமாகவே அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வி அடைந்தது.

Dilan_perera.jpg

 கூட்டமைப்பின் ஆதரவு இல்லாவிட்டால் நிச்சயமாக அரசாங்கத்தால்  வெற்றிப்பெற்றிருக்க முடியாது என தெரிவித்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா , மீண்டும் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படுமாக இருந்தால் அதனூடாக ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கத்தை நிச்சயமாக  தோற்றகடிப்போம் என்றும் குறிப்பிட்டார். 

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கேந்திர நிலையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்ட அவர் மேலும் கூறியதாவது ;  

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் 70 வீத வாக்குகளை பெற்றுக்கொள்ளக்கூடிய ஒருவராக இருக்க வேண்டும். 

அவ்வாறாயின் அவர் 65 இலட்சம் வாக்குகளை பெற்றுக்கொள்ள கூடிய ஒருவராக இருக்க வேண்டும். கடந்த உள்ளுராட்சிமன்ற தேர்தலின் போது கிடைத்த வாக்குகளின் அடிப்படையில் இந்த 65 வாக்குகளை  எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பதை மிக இலகுவாக தீர்மானிக்க வேண்டும்.

இறுதியாக இடம்பெற்ற உள்ளுராட்சிமன்றங்களுக்கான தேர்தலின் போது ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணிக்கு மாத்திரம்  50 இலட்சம் வாக்குகள் கிடைக்கப்பெற்றிருந்தன. 

ஆகவே 50 வீதமான வாக்குகனை பொதுஜன முன்னணியால் பெற்றுக்கொள்ள முடியும். இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியும் சுந்திர கட்சியும் இணைந்து போட்டியிடுமாக இருந்தால் நிச்சயமாக தேர்தல் எங்களுக்கு சாதமாகவே அமையும் எனவும் இதன் போது அவர் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/60371

Link to comment
Share on other sites

எஸ்.பி.திஸாநாயக்க விடுத்துள்ள எச்சரிக்கை

பல குற்றச்சாட்டுக்கள் சுமுத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியூதீனுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்காவிடின் காவல்துறை மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் வைத்தே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

http://www.hirunews.lk/tamil/220193/எஸ்-பி-திஸாநாயக்க-விடுத்துள்ள-எச்சரிக்கை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.