Jump to content

(இலங்கை) நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமான மட்டத்தில்


Recommended Posts

 
நாட்டின் பொருளாதாரமானது 4 முதல் 6 வீதத்திற்கு இடைப்பட்ட ஸ்திரமான மட்டத்தில் இருப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

இதேநேரம், தற்போது வட்டி வீதங்களும் குறைந்திருப்பதைக் அவதானிக்க முடிவதாகவும், அதற்கமைய வைப்புகள் மற்றும் கடன் மீதான வட்டி வீதத்தை குறைக்குமாறும் வர்த்தக வங்கிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் பின்னர் சுற்றுலா விருந்தகங்களில் கூடுதலான சலுகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதனால் நாட்டிற்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைப்பதை தடுக்கும் நோக்கில் மத்திய வங்கியின் நிதி உளவுப் பிரிவு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், இதற்கு பாதுகாப்புத் தரப்பினரின் ஒத்துழைப்பு பெறப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.
 
Link to comment
Share on other sites

சவால்களுக்கு மத்தியில் மீண்டு வருமா சுற்றுலாத்துறை

நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி  இடம்­பெற்ற குண்டுத் தாக்­கு­தல்கள் நாட்டின்  சுற்­று­லாத்­து­றையை பாரி­ய­ளவில் பாதித்­தது. கடந்த  2009ஆம் ஆண்டு யுத்தம் முடி­வ­டைந்த பின்னர் மிகவும்  வேக­மாக வளர்ச்­சி­ய­டைந்து வந்த  சுற்­று­லாத்­து­றை­யா­னது இந்த   அசம்­பா­வி­தத்தின் பின்னர் பாரிய தாக்­கத்தை எதிர்­கொண்­டுள்­ளது. 

காரணம் இந்த தாக்­கு­தல்­களில்  இலங்­கையின் நட்­சத்­திர ஹோட்­டல்­களில்  தங்­கி­யி­ருந்த   வெளிநாட்டு சுற்­றுலாப் பய­ணிகள் பலரும் உயி­ரி­ழந்­தி­ருந்­தனர். அது வெளிநாட்டு சுற்­றுலாப் பய­ணி­களிடையே பாரிய தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது. அதன்­படி  ஏப்ரல் 21 ஆம் திக­திக்கு பின்னர்  சுற்­று­லாத்­துறை பாரிய  சரிவை அடைந்­தது.    நட்­சத்­திர மற்றும் சுற்­று­லாத்­துறை  ஹோட்­டல்கள்  வெறிச்­சோடி கிடக்கும் நிலைமை காணப்­ப­டு­கின்­றது.   தற்­போது சுற்­றுலா அபி­வி­ருத்தி அதி­கார சபையும்   சுற்­றுலா ஊக்­கு­விப்பு பணி­ய­கமும்  சுற்­று­லாத்­து­றையை  மீண்டும் பழைய நிலைக்கு கொண்­டு­வர பாரிய  நட­வ­டிக்­கை­களை  முன்­னெ­டுத்­து­ வ­ரு­கின்­றன. எனினும் அது பாரிய சவா­லுக்கு உரிய விட­ய­மா­கவே உள்­ளது. 

ஆனால் யுத்தம் முடி­வுக்கு வந்ததன் பின்னர் நாட்டின் பொரு­ளா­தாரக் கட்­ட­மைப்பில்  சிறப்­பான பங்­க­ளிப்பை செய்து வந்த சுற்­று­லாத்­து­றையை    மீண்டும்  விரை­வாக கட்­டி­யெ­ழுப்­ப­வேண்­டிய நிலை காணப்­ப­டு­கின்­றது.  சுற்­று­லாத்­து­றை­யினால்  எந்­த­ளவு தூரம் அந்­நிய செலா­வணி நாட்­டுக்குள் வந்து சேர்­கின்­ற­னவோ  அதே­போன்று உள்­நாட்டில் நேர­டி­யா­கவும் மறை­மு­க­மா­கவும்    இலட்­சக்­க­ணக்­கான வேலை­வாய்ப்­புக்­களும்  உரு­வாக்­கப்­ப­டு­கின்­றன.

bususe4.JPG 

 

இந்­நி­லையில்  கடந்த மே மற்றும்   ஜூன் மாதங்­களில்   இலங்­கைக்­கான சுற்­றுலாப் பய­ணி­களின் வருகை எவ்­வாறு உள்­ளன  என்­பதை பார்க்­க­வேண்­டி­யுள்­ளது. இலங்கை சுற்­றுலா அபி­வி­ருத்தி சபையின்  புள்­ளி­வி­ப­ரங்­களின்படி கடந்த மே மாதம் வெறு­மனே 37,802  சுற்­றுலாப் பய­ணி­களே  இலங்­கைக்கு வெளிநா­டு­க­ளி­லி­ருந்து வருகை தந்­துள்­ளனர்.  இது  கடந்த வரு­டத்தின் மே மாதம் வந்த சுற்­றுலாப் பய­ணி­களின் எண்­ணிக்­கை­யுடன் ஒப்­பி­டு­கையில் 70 வீத வீழ்ச்­சி­யா­கவுள்ளது. அதே­போன்று கடந்த மார்ச் மாதம் இலங்­கைக்கு 2,44,328  சுற்­றுலாப் பய­ணிகள் வருகை தந்­துள்­ளனர். ஆனால் மே மாதத்தில் வெறு­மனே  37,000  பேர் மட்­டுமே­ வந்­துள்­ளனர். 

 

bususe4.JPG

 

அதே­போன்று கடந்­து­போன ஜூன் மாதத்தில் இலங்­கைக்கு 63,072 சுற்­றுலாப் பய­ணி­களே வந்­துள்­ளனர். இது கடந்த வரு­டத்தின் ஜூன் மாதத்­துடன் ஒப்­பி­டு­கையில் 57 வீத­மான வீழ்ச்­சி­யா­க­வுள்­ளது. எனினும் இங்கு மகிழ்ச்­சி­ய­டை­யக்­கூ­டிய ஒரு விடயம் உள்­ளது. அதா­வது மே மாதத்தின் பின்னர் ஜூன் மாதத்தில்  சுற்­றுலாப் பய­ணி­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளது.   இது இவ் ­வாறே அதி­க­ரித்துச் செல்­லு­மானால்   வருட இறு­தியில் நிலைமை  ஓர் அள­வுக்கு திருப்­தி­க­ர­மாக அமையும் என்று எதிர்­பார்க்­கலாம். 

busnuse3.JPG

 

கடந்த 2018 ஆம் ஆண்டில் இலங்­கைக்கு 2333796 சுற்­றுலாப் பய­ணிகள் வருகை தந்­தனர். அதன்­படி 2019 ஆம் ஆண்டில் 25 இலட்சம் சுற்­றுலாப் பய­ணி­களை  வர வைக்­கலாம் என்ற எதிர்­பார்ப்பு ஏற்­பட்­டது. எனினும் ஏப்ரல் 21  தாக்­கு­தல்கள் அனை த்து எதிர்­பார்ப்­புக்­க­ளையும் சீர்­கு­லைத்­து­விட்­டன. தற்­போ­தைய சூழலில்  மே மற்றும் ஜூன்  மாதங்­களில்  இலங்­கைக்கு வந்த சுற்­றுலாப் பய­ணி­களில்  இந்­தி­யாவே முத­லிடம் வகிக்­கின்­றது. தாக்­கு­தல்கள் இடம்­பெ­று­வ­தற்கு முன்­னரும்     இலங்கை வரும் சுற்­றுலாப் பய­ணி­களில் இந்­தி­யாவே  முத­லி­டத்தில் இருந்­தது. அந்த  நிலைமை  தொடர்ந்தும் நீடிக்­கின்­றது. இலங்­கைக்கும் இந்­தி­யா­வுக்கும் இடையில் காணப்­ப­டு­கின்ற  நீண்­ட­கால நெருக்­க­மான இரு­த­ரப்பு உறவு   இதற்கு கார­ண­மாக இருக்­கலாம். 

மே மாதத்தில் இந்­தி­யா­வி­லி­ருந்து 11,246  சுற்­றுலாப் பய­ணிகள் இலங்­கைக்கு வந்­துள்­ளனர்.  இரண்­டா­வது இடத்தில் பிரித்தானியாவும்மூன்­றா­வது  இடத்தில் ஆஸி.யும்  நான்­கா­வது  இடத்தில்  ஜேர்­ம­னியும்  ஐந்­தா­வது  இடத்தில் சீனாவும்  இருக்­கின்­றன.   மூன்­றா­வது இடத்தில் இதற்கு முன்னர் சீனா இருந்­தது.   தற்­போது  சீனா பின்­சென்­றுள்­ளது. கிட்­டத்­தட்ட இதே நிலைதான் ஜூன்  மாதத்­திலும் காணப்­ப­டு­கின்­றது. 

 

 

ஜூன் மாதத்தில் வழ­மை­போன்று முத­லா­வது இடத்தில் இந்­தியா உள்­ளது. ஜூன் மாதம் இலங்கை வந்த 63,000 சுற்­றுலாப் பய­ணி­களில் இந்­தி­யா­வி­லி­ருந்து மட்டும் 15,048  பேர் வந்­துள்­ளனர்.  இரண்­டா­வது  இடத்தில்  ஆஸி.யும் மூன்­றா­வது இடத்தில்  பிரித்தானியாவும் நான்­கா­வது இடத்தில் சீனாவும் உள்­ளன. 

கடந்த  மார்ச்  மாத­த்தின் தர­வு­களை நாங்கள் பார்க்­கும்­போது  2,44,328 சுற்­றுலாப் பய­ணிகள் இலங்­கைக்கு வந்­துள்­ளனர். இதில் 34,812  சுற்­றுலாப் பய­ணிகள் இந்­தி­யா­வி­லி­ருந்து வருகை தந்­துள்­ளனர்.  அதே­போன்று  பிரித்தானியாவிலி­ருந்து  29,682  சுற்­றுலாப் பய­ணிகள் வருகை தந்­துள்­ளனர்.  சீனா­வி­லி­ருந்து 23,759  பய­ணிகள் வந்­துள்­ளனர். 

எப்­ப­டி­யி­ருப்­பினும்   மே மாதத்­துடன் ஒப்­பி­டு­கையில், ஜூன் மாதத்தில்  சுற்­றுலாப் பய­ணி­களின் வருகை அதி­க­ரித்­துள்­ளது. இந்த நிலைமை மேலும் உயர்­வ­டை­ய

வேண்டும். நாடு  பாது­காப்­பா­ன­தாக  உள்­ளது என்ற விடயம்  வெளிநா­டு­க­ளுக்கு உணர்த்­தப்­ப­டு­வது அவ­சி­ய­மாகும்.  ஏப்ரல் 21 தாக்­கு­தலின் பின்னர் இலங்­கைக்கு பயணத் தடையை விதித்­தி­ருந்த நாடுகள் தற்­போது அவற்றை தளர்த்தி வரு­கின்­றன.    

2018 ஆம் ஆண்டில் மட்டும் இலங்­கைக்கு 2333796   சுற்­றுலாப் பய­ணிகள் வந்­துள்­ளனர்.   இது இலங்­கையை  பொறுத்­த­வரை  பாரிய வளர்ச்­சி­யாகும். கடந்த  2009 ஆம் ஆண்டு யுத்தம் முடி­வ­டைந்தபோது இலங்­கைக்கு வந்த சுற்­றுலாப் பய­ணி­களின் எண்­ணிக்கை  நான்­கரை இலட்­சங்­க­ளாகும்.   

busnuse2.JPG

 

எனினும்  கடந்த 10 வருட காலப்­ப­கு­தியில்  23 இலட்­ச­மாக  வெளிநாட்டு  சுற்­றுலாப் பய­ணி­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளது.  இது அபார வளர்ச்­சியை  எடுத்­துக்­காட்­டு­கின்­றது. இத­னூ­டாக இலங்­கையின் சுற்­று­லாத்­துறை எந்­த­ளவு தூரம் வளர்ச்­சி­ய­டைந்து செல்­கின்­றது என்­ப­தனை  புரிந்­து­கொள்ள முடி­கின்­றது. 

கடந்த 2018 ஆம் ஆண்டு தர­வு­களின் பிர­காரம் சுற்­று­லாத்­துறை கார­ண­மாக  169003  பேர் நேர­டி­யாக  தொழில் வாய்ப்­புக்­களை பெற்­றுள்­ளனர். அதே­போன்று மறை­மு­க­மாக 219484 பேர்   தொழில்­வாய்ப்­புக்­களை  பெற்­றுள்­ளனர். இது இன்னும் அதி­க­மாக இருக்கும்  என கூறப்படுகிறது.அத­னூ­டாக பார்க்­கும்­போது சுமார் 4  இலட்சம் பேர்  சுற்­று­லாத்­துறை கார­ண­மாக  தொழில்­வாய்ப்­புக்­களை பெற்­றுள்­ளனர். இதனை வெறு­மனே  நான்கு இலட்சம்   பேர் என்று கூற முடி­யாது. இங்கு நான்கு இலட்சம் குடும்­பங்கள்  இதில் தங்கி வாழ்­கின்­றன  என்­பதே யதார்த்­த­மாகும். 

கடந்த  2018 ஆம் ஆண்டில் மட்டும் இலங்­கைக்கு சுற்­று­லாத்­துறை ஊடாக  4,381  மில்­லியன்  டொலர்கள்   வரு­மானம் கிடைத்­துள்­ளது.  2017 ஆம் ஆண்டில் 3,925  மில்­லியன் டொலர்கள் இலங்­கைக்கு கிடைத்­துள்­ளன. அதனால்    சுற்­று­லாத்­துறை ஊடாக இலங்­கைக்கு எந்­த­ளவு தூரம் வரு­மானம் கிடைக்­கின்­றது என்­ப­த­னையும்   அது பொரு­ளா­தா­ரத்தில் எவ்­வ­ளவு முக்­கிய பங்­க­ளிப்பை செலுத்­து­கின்­றது  என்­ப­த­னையும் நாம்  ஊகிக்­கலாம். 

இவ்­வாறு அதி­க­ளவு  தொழில்­வாய்ப்­புக்­களை ஏற்­ப­டுத்­தி­யுள்ள மற்றும்   பொரு­ளா­தா­ரத்தில் பாரிய  பங்­க­ளிப்பை செலுத்­து­கின்ற சுற்­று­லாத்­து­றையை    மீளக் கட்­டி­யெ­ழுப்ப அர­சாங்கம்    உட­ன­டி­யாக உரிய  நட­வ­டிக்­கை­களை எடுக்­க ­வேண்டும். தற்­போ­தைய  சூழலில்  இலங்­கையின் சுற்­று­லாத்­து­றையை   மீளக்­கட்­டி­யெ­ழுப்­பக்­கூ­டிய   இய­லுமை அர­சாங்­கத்­தி­டமே காணப்­ப­டு­கின்­றது.   ஏற்­க­னவே  சுற்­றுலா அபி­வி­ருத்தி அதி­கார சபையும்  சுற்றுலா ஊக்குவிப்பு பணியகமும்  இந்த விடயத்தில் பல நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன. இந்த விடயத்தில் உலக நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்று  செயற்படலாம். குறிப்பாக உலக அளவில் உள்ள சுற்றுலாத்துறை  தொழில்சார் நிபுணர்களின்  ஆலோசனைகளை பெற்று  நடவடிக்கை எடுக்கலாம். 

எப்படியும் தற்போதைய இந்த நிலைமையில் மாற்றம் ஏற்படவேண்டியது முக்கியமாகும். நாட்டில் பாதுகாப்பு  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் பாதுகாப்பான சூழல் உள்ளது என்றது மான செய்தி  சரியான முறையில் கொண்டு செல்லப்படவேண்டும்.  சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் செலவிடும் ஒவ் வொரு  டொலரும்  எமது நாட்டின் பொரு ளாதாரத்துக்கு வலுச் சேர்க்கும் என்பதனை  யாரும் மறந்துவிடக்கூடாது. 

எனவே தற்போது இந்த விடயத்தில் செலுத்தப்படும் அதிகூடிய அவதானம்  தொடரவேண்டும் என்பதுடன் சுற்று 

லாத்துறையை  கட்டியெழுப்ப  அர்ப் பணிப்புடன் செயற்படவேண்டியது கட்டாயமாகும்.  

https://www.virakesari.lk/article/60232

(ரொபட் அன்டனி)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, ampanai said:
 
நாட்டின் பொருளாதாரமானது 4 முதல் 6 வீதத்திற்கு இடைப்பட்ட ஸ்திரமான மட்டத்தில் இருப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

குமாரசாமி என்ற தமிழன்.... தனது பதவியை காப்பாற்றுவதற்காக,
பொய் சொல்லுகிறார். இதை... நம்பாதீங்கோ. :grin:

நாட்டின்.. நிலைமை, அதல பாதாளத்தில் இருப்பதே உண்மை. 🤠

Link to comment
Share on other sites

image_92ea860879.jpg
Central Bank Governor 

The Central Bank yesterday said it has revised growth down to 3% from 4% earlier in the year, but kept policy rates unchanged on moderate inflation, international rate cuts, and expectations of lending rates declining in the coming weeks, to boost economic expansion.

  • Growth revised from 4% to 3% after the Easter Sunday attacks 
  • But CB chief optimistic of faster than expected recovery 
  • CB keeps policy rates unchanged, expects significant reduction in lending rates soon
  • Private sector credit growth slumps by Rs. 2.6 b in first five months 
  • Reserves up to $ 8.9 b at end June after ISBs, rupee appreciates 4.1%   

http://www.ft.lk/front-page/CB-revises-growth-to-3/44-681779

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.