Jump to content

(இலங்கை) நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமான மட்டத்தில்


Recommended Posts

 
நாட்டின் பொருளாதாரமானது 4 முதல் 6 வீதத்திற்கு இடைப்பட்ட ஸ்திரமான மட்டத்தில் இருப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

இதேநேரம், தற்போது வட்டி வீதங்களும் குறைந்திருப்பதைக் அவதானிக்க முடிவதாகவும், அதற்கமைய வைப்புகள் மற்றும் கடன் மீதான வட்டி வீதத்தை குறைக்குமாறும் வர்த்தக வங்கிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் பின்னர் சுற்றுலா விருந்தகங்களில் கூடுதலான சலுகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதனால் நாட்டிற்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைப்பதை தடுக்கும் நோக்கில் மத்திய வங்கியின் நிதி உளவுப் பிரிவு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், இதற்கு பாதுகாப்புத் தரப்பினரின் ஒத்துழைப்பு பெறப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.
 
Link to comment
Share on other sites

சவால்களுக்கு மத்தியில் மீண்டு வருமா சுற்றுலாத்துறை

நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி  இடம்­பெற்ற குண்டுத் தாக்­கு­தல்கள் நாட்டின்  சுற்­று­லாத்­து­றையை பாரி­ய­ளவில் பாதித்­தது. கடந்த  2009ஆம் ஆண்டு யுத்தம் முடி­வ­டைந்த பின்னர் மிகவும்  வேக­மாக வளர்ச்­சி­ய­டைந்து வந்த  சுற்­று­லாத்­து­றை­யா­னது இந்த   அசம்­பா­வி­தத்தின் பின்னர் பாரிய தாக்­கத்தை எதிர்­கொண்­டுள்­ளது. 

காரணம் இந்த தாக்­கு­தல்­களில்  இலங்­கையின் நட்­சத்­திர ஹோட்­டல்­களில்  தங்­கி­யி­ருந்த   வெளிநாட்டு சுற்­றுலாப் பய­ணிகள் பலரும் உயி­ரி­ழந்­தி­ருந்­தனர். அது வெளிநாட்டு சுற்­றுலாப் பய­ணி­களிடையே பாரிய தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது. அதன்­படி  ஏப்ரல் 21 ஆம் திக­திக்கு பின்னர்  சுற்­று­லாத்­துறை பாரிய  சரிவை அடைந்­தது.    நட்­சத்­திர மற்றும் சுற்­று­லாத்­துறை  ஹோட்­டல்கள்  வெறிச்­சோடி கிடக்கும் நிலைமை காணப்­ப­டு­கின்­றது.   தற்­போது சுற்­றுலா அபி­வி­ருத்தி அதி­கார சபையும்   சுற்­றுலா ஊக்­கு­விப்பு பணி­ய­கமும்  சுற்­று­லாத்­து­றையை  மீண்டும் பழைய நிலைக்கு கொண்­டு­வர பாரிய  நட­வ­டிக்­கை­களை  முன்­னெ­டுத்­து­ வ­ரு­கின்­றன. எனினும் அது பாரிய சவா­லுக்கு உரிய விட­ய­மா­கவே உள்­ளது. 

ஆனால் யுத்தம் முடி­வுக்கு வந்ததன் பின்னர் நாட்டின் பொரு­ளா­தாரக் கட்­ட­மைப்பில்  சிறப்­பான பங்­க­ளிப்பை செய்து வந்த சுற்­று­லாத்­து­றையை    மீண்டும்  விரை­வாக கட்­டி­யெ­ழுப்­ப­வேண்­டிய நிலை காணப்­ப­டு­கின்­றது.  சுற்­று­லாத்­து­றை­யினால்  எந்­த­ளவு தூரம் அந்­நிய செலா­வணி நாட்­டுக்குள் வந்து சேர்­கின்­ற­னவோ  அதே­போன்று உள்­நாட்டில் நேர­டி­யா­கவும் மறை­மு­க­மா­கவும்    இலட்­சக்­க­ணக்­கான வேலை­வாய்ப்­புக்­களும்  உரு­வாக்­கப்­ப­டு­கின்­றன.

bususe4.JPG 

 

இந்­நி­லையில்  கடந்த மே மற்றும்   ஜூன் மாதங்­களில்   இலங்­கைக்­கான சுற்­றுலாப் பய­ணி­களின் வருகை எவ்­வாறு உள்­ளன  என்­பதை பார்க்­க­வேண்­டி­யுள்­ளது. இலங்கை சுற்­றுலா அபி­வி­ருத்தி சபையின்  புள்­ளி­வி­ப­ரங்­களின்படி கடந்த மே மாதம் வெறு­மனே 37,802  சுற்­றுலாப் பய­ணி­களே  இலங்­கைக்கு வெளிநா­டு­க­ளி­லி­ருந்து வருகை தந்­துள்­ளனர்.  இது  கடந்த வரு­டத்தின் மே மாதம் வந்த சுற்­றுலாப் பய­ணி­களின் எண்­ணிக்­கை­யுடன் ஒப்­பி­டு­கையில் 70 வீத வீழ்ச்­சி­யா­கவுள்ளது. அதே­போன்று கடந்த மார்ச் மாதம் இலங்­கைக்கு 2,44,328  சுற்­றுலாப் பய­ணிகள் வருகை தந்­துள்­ளனர். ஆனால் மே மாதத்தில் வெறு­மனே  37,000  பேர் மட்­டுமே­ வந்­துள்­ளனர். 

 

bususe4.JPG

 

அதே­போன்று கடந்­து­போன ஜூன் மாதத்தில் இலங்­கைக்கு 63,072 சுற்­றுலாப் பய­ணி­களே வந்­துள்­ளனர். இது கடந்த வரு­டத்தின் ஜூன் மாதத்­துடன் ஒப்­பி­டு­கையில் 57 வீத­மான வீழ்ச்­சி­யா­க­வுள்­ளது. எனினும் இங்கு மகிழ்ச்­சி­ய­டை­யக்­கூ­டிய ஒரு விடயம் உள்­ளது. அதா­வது மே மாதத்தின் பின்னர் ஜூன் மாதத்தில்  சுற்­றுலாப் பய­ணி­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளது.   இது இவ் ­வாறே அதி­க­ரித்துச் செல்­லு­மானால்   வருட இறு­தியில் நிலைமை  ஓர் அள­வுக்கு திருப்­தி­க­ர­மாக அமையும் என்று எதிர்­பார்க்­கலாம். 

busnuse3.JPG

 

கடந்த 2018 ஆம் ஆண்டில் இலங்­கைக்கு 2333796 சுற்­றுலாப் பய­ணிகள் வருகை தந்­தனர். அதன்­படி 2019 ஆம் ஆண்டில் 25 இலட்சம் சுற்­றுலாப் பய­ணி­களை  வர வைக்­கலாம் என்ற எதிர்­பார்ப்பு ஏற்­பட்­டது. எனினும் ஏப்ரல் 21  தாக்­கு­தல்கள் அனை த்து எதிர்­பார்ப்­புக்­க­ளையும் சீர்­கு­லைத்­து­விட்­டன. தற்­போ­தைய சூழலில்  மே மற்றும் ஜூன்  மாதங்­களில்  இலங்­கைக்கு வந்த சுற்­றுலாப் பய­ணி­களில்  இந்­தி­யாவே முத­லிடம் வகிக்­கின்­றது. தாக்­கு­தல்கள் இடம்­பெ­று­வ­தற்கு முன்­னரும்     இலங்கை வரும் சுற்­றுலாப் பய­ணி­களில் இந்­தி­யாவே  முத­லி­டத்தில் இருந்­தது. அந்த  நிலைமை  தொடர்ந்தும் நீடிக்­கின்­றது. இலங்­கைக்கும் இந்­தி­யா­வுக்கும் இடையில் காணப்­ப­டு­கின்ற  நீண்­ட­கால நெருக்­க­மான இரு­த­ரப்பு உறவு   இதற்கு கார­ண­மாக இருக்­கலாம். 

மே மாதத்தில் இந்­தி­யா­வி­லி­ருந்து 11,246  சுற்­றுலாப் பய­ணிகள் இலங்­கைக்கு வந்­துள்­ளனர்.  இரண்­டா­வது இடத்தில் பிரித்தானியாவும்மூன்­றா­வது  இடத்தில் ஆஸி.யும்  நான்­கா­வது  இடத்தில்  ஜேர்­ம­னியும்  ஐந்­தா­வது  இடத்தில் சீனாவும்  இருக்­கின்­றன.   மூன்­றா­வது இடத்தில் இதற்கு முன்னர் சீனா இருந்­தது.   தற்­போது  சீனா பின்­சென்­றுள்­ளது. கிட்­டத்­தட்ட இதே நிலைதான் ஜூன்  மாதத்­திலும் காணப்­ப­டு­கின்­றது. 

 

 

ஜூன் மாதத்தில் வழ­மை­போன்று முத­லா­வது இடத்தில் இந்­தியா உள்­ளது. ஜூன் மாதம் இலங்கை வந்த 63,000 சுற்­றுலாப் பய­ணி­களில் இந்­தி­யா­வி­லி­ருந்து மட்டும் 15,048  பேர் வந்­துள்­ளனர்.  இரண்­டா­வது  இடத்தில்  ஆஸி.யும் மூன்­றா­வது இடத்தில்  பிரித்தானியாவும் நான்­கா­வது இடத்தில் சீனாவும் உள்­ளன. 

கடந்த  மார்ச்  மாத­த்தின் தர­வு­களை நாங்கள் பார்க்­கும்­போது  2,44,328 சுற்­றுலாப் பய­ணிகள் இலங்­கைக்கு வந்­துள்­ளனர். இதில் 34,812  சுற்­றுலாப் பய­ணிகள் இந்­தி­யா­வி­லி­ருந்து வருகை தந்­துள்­ளனர்.  அதே­போன்று  பிரித்தானியாவிலி­ருந்து  29,682  சுற்­றுலாப் பய­ணிகள் வருகை தந்­துள்­ளனர்.  சீனா­வி­லி­ருந்து 23,759  பய­ணிகள் வந்­துள்­ளனர். 

எப்­ப­டி­யி­ருப்­பினும்   மே மாதத்­துடன் ஒப்­பி­டு­கையில், ஜூன் மாதத்தில்  சுற்­றுலாப் பய­ணி­களின் வருகை அதி­க­ரித்­துள்­ளது. இந்த நிலைமை மேலும் உயர்­வ­டை­ய

வேண்டும். நாடு  பாது­காப்­பா­ன­தாக  உள்­ளது என்ற விடயம்  வெளிநா­டு­க­ளுக்கு உணர்த்­தப்­ப­டு­வது அவ­சி­ய­மாகும்.  ஏப்ரல் 21 தாக்­கு­தலின் பின்னர் இலங்­கைக்கு பயணத் தடையை விதித்­தி­ருந்த நாடுகள் தற்­போது அவற்றை தளர்த்தி வரு­கின்­றன.    

2018 ஆம் ஆண்டில் மட்டும் இலங்­கைக்கு 2333796   சுற்­றுலாப் பய­ணிகள் வந்­துள்­ளனர்.   இது இலங்­கையை  பொறுத்­த­வரை  பாரிய வளர்ச்­சி­யாகும். கடந்த  2009 ஆம் ஆண்டு யுத்தம் முடி­வ­டைந்தபோது இலங்­கைக்கு வந்த சுற்­றுலாப் பய­ணி­களின் எண்­ணிக்கை  நான்­கரை இலட்­சங்­க­ளாகும்.   

busnuse2.JPG

 

எனினும்  கடந்த 10 வருட காலப்­ப­கு­தியில்  23 இலட்­ச­மாக  வெளிநாட்டு  சுற்­றுலாப் பய­ணி­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளது.  இது அபார வளர்ச்­சியை  எடுத்­துக்­காட்­டு­கின்­றது. இத­னூ­டாக இலங்­கையின் சுற்­று­லாத்­துறை எந்­த­ளவு தூரம் வளர்ச்­சி­ய­டைந்து செல்­கின்­றது என்­ப­தனை  புரிந்­து­கொள்ள முடி­கின்­றது. 

கடந்த 2018 ஆம் ஆண்டு தர­வு­களின் பிர­காரம் சுற்­று­லாத்­துறை கார­ண­மாக  169003  பேர் நேர­டி­யாக  தொழில் வாய்ப்­புக்­களை பெற்­றுள்­ளனர். அதே­போன்று மறை­மு­க­மாக 219484 பேர்   தொழில்­வாய்ப்­புக்­களை  பெற்­றுள்­ளனர். இது இன்னும் அதி­க­மாக இருக்கும்  என கூறப்படுகிறது.அத­னூ­டாக பார்க்­கும்­போது சுமார் 4  இலட்சம் பேர்  சுற்­று­லாத்­துறை கார­ண­மாக  தொழில்­வாய்ப்­புக்­களை பெற்­றுள்­ளனர். இதனை வெறு­மனே  நான்கு இலட்சம்   பேர் என்று கூற முடி­யாது. இங்கு நான்கு இலட்சம் குடும்­பங்கள்  இதில் தங்கி வாழ்­கின்­றன  என்­பதே யதார்த்­த­மாகும். 

கடந்த  2018 ஆம் ஆண்டில் மட்டும் இலங்­கைக்கு சுற்­று­லாத்­துறை ஊடாக  4,381  மில்­லியன்  டொலர்கள்   வரு­மானம் கிடைத்­துள்­ளது.  2017 ஆம் ஆண்டில் 3,925  மில்­லியன் டொலர்கள் இலங்­கைக்கு கிடைத்­துள்­ளன. அதனால்    சுற்­று­லாத்­துறை ஊடாக இலங்­கைக்கு எந்­த­ளவு தூரம் வரு­மானம் கிடைக்­கின்­றது என்­ப­த­னையும்   அது பொரு­ளா­தா­ரத்தில் எவ்­வ­ளவு முக்­கிய பங்­க­ளிப்பை செலுத்­து­கின்­றது  என்­ப­த­னையும் நாம்  ஊகிக்­கலாம். 

இவ்­வாறு அதி­க­ளவு  தொழில்­வாய்ப்­புக்­களை ஏற்­ப­டுத்­தி­யுள்ள மற்றும்   பொரு­ளா­தா­ரத்தில் பாரிய  பங்­க­ளிப்பை செலுத்­து­கின்ற சுற்­று­லாத்­து­றையை    மீளக் கட்­டி­யெ­ழுப்ப அர­சாங்கம்    உட­ன­டி­யாக உரிய  நட­வ­டிக்­கை­களை எடுக்­க ­வேண்டும். தற்­போ­தைய  சூழலில்  இலங்­கையின் சுற்­று­லாத்­து­றையை   மீளக்­கட்­டி­யெ­ழுப்­பக்­கூ­டிய   இய­லுமை அர­சாங்­கத்­தி­டமே காணப்­ப­டு­கின்­றது.   ஏற்­க­னவே  சுற்­றுலா அபி­வி­ருத்தி அதி­கார சபையும்  சுற்றுலா ஊக்குவிப்பு பணியகமும்  இந்த விடயத்தில் பல நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன. இந்த விடயத்தில் உலக நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்று  செயற்படலாம். குறிப்பாக உலக அளவில் உள்ள சுற்றுலாத்துறை  தொழில்சார் நிபுணர்களின்  ஆலோசனைகளை பெற்று  நடவடிக்கை எடுக்கலாம். 

எப்படியும் தற்போதைய இந்த நிலைமையில் மாற்றம் ஏற்படவேண்டியது முக்கியமாகும். நாட்டில் பாதுகாப்பு  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் பாதுகாப்பான சூழல் உள்ளது என்றது மான செய்தி  சரியான முறையில் கொண்டு செல்லப்படவேண்டும்.  சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் செலவிடும் ஒவ் வொரு  டொலரும்  எமது நாட்டின் பொரு ளாதாரத்துக்கு வலுச் சேர்க்கும் என்பதனை  யாரும் மறந்துவிடக்கூடாது. 

எனவே தற்போது இந்த விடயத்தில் செலுத்தப்படும் அதிகூடிய அவதானம்  தொடரவேண்டும் என்பதுடன் சுற்று 

லாத்துறையை  கட்டியெழுப்ப  அர்ப் பணிப்புடன் செயற்படவேண்டியது கட்டாயமாகும்.  

https://www.virakesari.lk/article/60232

(ரொபட் அன்டனி)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, ampanai said:
 
நாட்டின் பொருளாதாரமானது 4 முதல் 6 வீதத்திற்கு இடைப்பட்ட ஸ்திரமான மட்டத்தில் இருப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

குமாரசாமி என்ற தமிழன்.... தனது பதவியை காப்பாற்றுவதற்காக,
பொய் சொல்லுகிறார். இதை... நம்பாதீங்கோ. :grin:

நாட்டின்.. நிலைமை, அதல பாதாளத்தில் இருப்பதே உண்மை. 🤠

Link to comment
Share on other sites

image_92ea860879.jpg
Central Bank Governor 

The Central Bank yesterday said it has revised growth down to 3% from 4% earlier in the year, but kept policy rates unchanged on moderate inflation, international rate cuts, and expectations of lending rates declining in the coming weeks, to boost economic expansion.

  • Growth revised from 4% to 3% after the Easter Sunday attacks 
  • But CB chief optimistic of faster than expected recovery 
  • CB keeps policy rates unchanged, expects significant reduction in lending rates soon
  • Private sector credit growth slumps by Rs. 2.6 b in first five months 
  • Reserves up to $ 8.9 b at end June after ISBs, rupee appreciates 4.1%   

http://www.ft.lk/front-page/CB-revises-growth-to-3/44-681779

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • "தைரியமானவள்"     வவுனியாவில் உள்ள  ஒரு குக்கிராமம் இது. இங்கு பெருமளவில் இந்துக்களையும் சிறிய அளவில் கிறித்தவர்களையும் கொண்டுள்ள போதிலும் மக்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு குடும்பம்போல் வாழ்கின்ற ஒரு சமாதானம் நிலவும் கிராமம் இதுவாகும்.  இக் கிராமமானது அங்கு உள்ள ஒரு பெரும் குளத்தைச் சேர்ந்த நிலங்களைக் காடு வெட்டி துப்புரவு செய்து கமம் செய்து உருவாக்கப்பட்டது என்பது வரலாறு ஆகும்.    அங்கு தான் கமங்களில் கூலிவேலை செய்யும் தாய் தந்தையரின் இளைய மகளாக, அவள் இருந்தாள். கோவலன் கண்ட கண்ணகியின் அழகு கூட இவளுக்கு நிகரில்லை!         "மாயிரும் பீலி மணி நிற மஞ்சை நின் சாயர் கிடைந்து தங்கான் அடையவும் ......... அன்ன நன்னுதல் மென்னடை கழிந்து நன்னீர்ப் பண்ணை நளி மலர் செரியவும் ........... அளிய தாமே சிறு பசுன் கிளியே குழளும் யாழும் அமிழ்துங் குழைத்த நின் மழைக் கிளவிக்கு வருந்தின வாகியும் மட நடை மாது நின் மலர்க்கையீ நீங்காது"   கரிய பெரிய மயில்கள் உன் தோற்றத்தை கண்டு தோற்று அவைகள் கூட்டை சென்று அடைகின்றன .. அன்னப் பறவைகள் உன் மேன்மையுடைய நடைக்கு பயந்து நன்னீர் பூக்கள் பின் சென்று மறைகின்றன .. பசுங் கிளிகள் குழழின் இசையையும், யாழின் இசையையும்,அமிர்த்தத்யும் கலந்த உன் சொற்களுக்கு போட்டி இட முடியாமல் வருந்தி அதனை கற்பதற்காக உன்னை பிரியாமல் உள்ளன என்றான் கோவலன். ஆனால் இவள் அதற்கும் மேலாக, "அரிசந்திர புராணம்" வர்ணிக்கும் பெண்களின் விழி அழகை அப்படியே கொண்டு இருந்தாள்   "கடலினைக் கயலைக் கனையமேன் பினையைக் காவியை கருவிள மலரை வடுவினைக் கொடிய மறலியை வலையை வாழை வெண் ர்ரவுநீன் டகன்று கொடுவினை குடி கொண்டிருபுறம் தாவிக் குமிழையும் குழைyaiயும் சீறி விடமெனக் கறுப்பூர் றரிபரந துங்கை வேலினும் கூறிய விழியால்"   ஒப்புமையில் கடலினையும், மீனையும்,அம்பையும், மென்மையான பெண் மானையும் நீலோற்பல மலரையும் கருவிளம் பூவையும், பார்வையால் ஆடவரை துன்புறுத்தி கவர்வதில் கொடிய எமனையும், வலையையும், வாளையும் வென்று முற்றிலும் செவியளவு நீண்டு அகன்று கண்டார் உயிர் உண்ணும் கொடுந்தொழில் நிலை பெற்று இரண்டு பக்கங்களிலும் தாவி குமிழாம் பூ போன்ற மூக்கும், விசம் போல் கருநிறம் பொருந்தி கூரிய வேலை விட கூர்மையான கண்களை உடையவள் இவள். அதனால்தானோ என்னவோ பெயர்கூட ' மலர்விழி'    காட்டோடு அண்டிய ஒரு இடத்தில், சிறு குடிசை ஒன்றில் பெற்றோருடனும் ஒரு அண்ணனுடனும் வாழ்ந்து வந்தாள். அவள் பாடசாலைக்கு மூன்று மைல் , காட்டோடும்   கமமோடும் நடந்து தான் போவாள். குடிசையும் பெரிய வசதி ஒன்றும் இல்லை. ஆனால், பெற்றோருக்கு  கமத்துக்கு கூலிவேலைக்கு போக வசதியான இடமாக இருந்தது.    அவள் இப்ப பத்தாம் வகுப்பு மாணவி, பெண்மை பூரித்து துள்ளும் வயது. பாடசாலைக்கு அருகில் ஒரு பெரிய பலசரக்கு கடையும், அதனுடன் கூடிய  சிற்றுண்டிச்சாலையும் புடவை கடையும் இருந்தது. இந்த மூன்றுக்கும் முதலாளி ஒருவரே, பெரும் பணக்காரர். அவரின் ஒரு மகன், யாழ் பல்கலைக்கழகத்தில் படித்தவர்,  பரீடசை எடுத்து விட்டு வீட்டில் மறுமொழி வரும் மட்டும் காத்து இருக்கிறார். எனவே அவ்வவ்போது தந்தைக்கு ஓய்வு கொடுத்து, கடையை கவனிக்க தொடங்கினார்.    மலர்விழி தோழிகளுடன், பாடசாலை முடிய கடைப்பக்கம் போவார். ஆனால் தோழிகள் வாங்குவதை, மற்றும் அங்கு உள்ளவற்றை பார்ப்பதை தவிர, மற்றும் படி ஒன்றும் வாங்குவதில்லை. அந்த வசதி ஒன்றும் அவருக்கு இல்லை. அது மட்டும் அல்ல, ஒரு சில வினாடிகளே அங்கு நிற்பார். காரணம் மூன்று மைல் நடந்து வீடு போகவேண்டும். அவருடன் ஒரு சில பிள்ளைகளும் சேர்ந்து நடப்பதால், ஆளுக்கு ஆள் துணையாக.    கம்பனின் மகன் அம்பிகாபதி போல இந்த முதலாளியின் மகன், சங்கரும் அவளை முதல் முதல் பார்த்தவுடன், அவன் கண்ணுக்கு அவள் உருவம் மனித உருவமாகவே தெரியவில்லை. அவன் கற்பனை  கொடியோடும் குளத்தோடும் மீனோடும் உறவாடிற்று    “மைவடிவக் குழலியர்தம் வதனத்தை         நிகர்‘ஒவ்வா மதியே! மானே!! செய்வடிவைச் சிற்றிடையை வேய்தோளைத்         திருநகையைத் தெய்வ மாக இவ்வடிவைப் படைத்தவடி வெவ்வடிவோ         நானறியேன்! உண்மை யாகக் கைபடியத் திருமகளைப் படைத்திவளைப்         படைத்தனன் நல்கமலத் தோனே! ”      பொற்கொடியாளே,  வாடாத உன் தலையில் மழைமேகத்தை சுமந்தவளே. பிறை அணிந்த தாமரை முகத்தாளே, நீ கேட்டாள், உனக்காக  எதையும் தரத் தயாராக உள்ள கற்பகத்தரு போல் நான் நிக்கிறேன் என்று அவன் சொல்லாமல் அவளிடம் சொல்லிக்கொண்டு தன்னை மறந்து நின்றான்.    ஒரு சில நாட்கள் ஓட, அவன் மெல்ல மெல்ல அவளுடன் கதைக்க தொடங்கினான். அவனும் அழகில் கம்பீரத்தில் குறைந்தவன் அல்ல.    "எண் அரும் நலத்தினாள்     இனையள் நின்றுழி, கண்ணொடு கண் இணை     கவ்வி, ஒன்றை ஒன்று உண்ணவும், நிலை பெறாது     உணர்வும் ஒன்றிட, அண்ணலும் நோக்கினான்!     அவளும் நோக்கினாள்."   அழகின் எல்லை இது தான் என்று நினைப்பதற்கும் அரிய அழகுடைய அவளை, ஒருவர் கண்களோடு, மற்றொருவர் கண்கள் கவர்ந்துப் பற்றிக் கொண்டு, ஒன்றை ஒன்று கூடி ஒன்று படவும், அவனும் அவளை பார்த்தான். அவளும் அவனை பார்த்தாள்.  அவளுக்கும் உண்மையில் ஆசை இருந்தாலும், அவளின் நிலைமை, கவனமாக இருக்க வேண்டும் என்று உறுத்தியது. காரணம் இவன் பெரும் பணக்கார பையன், மற்றும் பட்டதாரி ஆகப்போகிறவன். என்றாலும் அவன் வாக்குறுதிகள் நம்பிக்கைகள் கொடுத்து, அவளும் அப்பாவிதானே, நம்பி இருவரும் கொஞ்சம் கொஞ்சம் நெருங்க தொடங்கினார்கள். அவளின் பெற்றோர் கூலி வேலைக்கு போனால், வீடு திரும்ப இரவாகிடும், அண்ணனும் , நண்பர்களுடன் போய்விடுவார். எனவே, சங்கர் இப்ப அவளை தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இறக்குவதும், அப்படியே , அந்த சின்ன குடிசையில் தனிய கதைத்து மகிழ்வதும், சிற்றுண்டிகள், குளிர்பானங்கள் எடுத்துக்கொண்டு போய் இருவரும் அங்கு அவையை அனுபவிப்பதும் என காலம் போகத் தொடங்கியது. அத்துடன் அவன் அவளுக்கு தெரியாத பாடங்களும் படிப்பித்தான். எனவே சிலவேளை பெற்றோர்கள் அறிய வந்தாலும், அது ஒரு சாட்டாகவும் அவர்களுக்கு இருந்தது. ஆனால் அது தான் அவர்களை மேலும் இறுக்கமாக இணைத்ததும் எனலாம்.   "இசை போன்ற மெல்லிய  மொழி இடைவெளி குறைக்க வழி சமைக்க   இறைவி நேரே வந்தது போல  இதயம் மகிழ பாடம் புகட்டினான்! "   "இருசொல் இணைதல் புணர்ச்சி என்று  இரண்டு பொருள்பட இலக்கணம் சொல்லி  இங்கிதமாய் விளக்கி அவளைத் தழுவி  இருவரும் கூடி இன்பம் கண்டனர்!"   மறுமொழியும் வர, அவன் மேற்படிப்புக்கு வெளிநாடு போய்விட்டான் அதன் பிறகு தான் அவளின் வாழ்வில் வெறுமை தோன்ற தொடங்கியது. அவளின் உடலிலும் மாற்றம் தென்பட்டது. அவள் இப்ப ஒரு குழந்தைக்கு தாயென மருத்துவரும் உறுதி செய்து விட்டனர். தந்தை அந்த முதலாளியிடம் நடந்தவற்றை சொல்லி, மகளை மருமகளாக ஏற்கும் படி மற்றும் அவரின் மகனின் விலாசத்தை எடுத்தால், அவனுக்கு செய்தி அனுப்பலாம் என்று போனவர்தான், பின் வீடு திரும்பவே இல்லை. அன்று அங்கு போர்க்காலம். ஆகவே உண்மையில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது? அண்ணனும் தந்தையை தேட போனவர், இடையில் ஷெல் பட்டு இறந்துவிட்டார். இப்ப தான் அவள் தன் அப்பாவி தனத்தை உணர்ந்தாள். முன்பு, அவனுடன் பழகும் பொழுது  தைரியமாக இருந்து இருந்தால், இந்த நிலை வந்திருக்காது. நம்பி கெட்டது அவளை வருத்தியது. "சாது மிரண்டால் காடு கொள்ளாது". அவள் துணிந்து விட்டாள். தைரியம் பெற்றாள்.    அவளின் கதை அந்த ஊரில் பரவத் தொடங்கியது. அந்த முதலாளி பணத்தை கொடுத்து சமாளிக்க எத்தனித்தார். கருவை கலைக்கும் படியும் வேண்டினார். ஆனால் அவள் இப்ப தைரியமானாள். அதை ஏற்கவில்லை. அவளின் ஒரே குரல், இவன் உங்கள் பேரன், உங்க மகனின் மகன். அதில் மாற்றம் இல்லை. எந்த பேச்சுக்கும் இனி இடமில்லை, பணத்தை அவள் மதிக்கவே இல்லை. தூக்கி எறிந்தாள். தந்தை, அண்ணன் இருவரையும் இழந்துவிட்டாள். இனி தானே தன் வாழ்வை தீர்க்க தைரியமாக புறப்பட்டாள்!    கண்ணகி அரசசபையில் தைரியம் கொண்டு போனது போல,    ‘தேரா மன்னா! செப்புவது உடையேன்'    ஆராய்ந்து பார்க்காத முதலாளி நான் சொல்வதைக் கேள் என, வாயும் வயிறுமாக முதலாளியின் வீட்டின் கதவில் நின்ற காவலாளியிடம் உரக்க சொன்னாள்.    "வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப, சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து,"   கூலி செய்து, எம் கையையால் நாமே வாழ்வதற்காக உன் ஊருக்கு வந்தோம். ஊழ்வினை துரத்திக்கொண்டு வர வந்தோம் என்று துணிச்சலாக கூறினாள். அவளின் துணிவு, புத்திகூர்மை, அழகு, கோபத்திலும் அவளின் நளினம், உண்மையான பேச்சு சங்கரின் தாயை நன்றாகவே கவர்ந்தது. சங்கரின் தாய் அவளை உள்ளே வரும் படி அழைத்து, அங்கு முன் விறாந்தையில் இருந்த சோபாவில் அமரச் சொன்னாள். பின் சங்கரின் தந்தையுடன் எதோ கதைத்தார். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. எதாவது தந்திரமோ என்று தைரியமாக, எதையும் எதிர்க்க துணிந்து நின்றாள். இந்த இடைவெளியில், அவர்களின் வேலைக்காரி காப்பி கொண்டுவந்து அவளுக்கு கொடுத்தார். ஆனால் அதை அவள் வாங்க மறுத்தார். சிற்றுண்டி பெற்று தானே இன்று இந்த நிலை என்று அவள் மனது கொதித்துக்கொண்டு இருந்தது.   "நெஞ்சே நெஞ்சே துணிந்து விடு நீதியின் கண்களை திறந்து விடு நச்சு பாம்புகள் படமெடுத்தால் அச்சம் வேண்டாம் அழித்து விடு"   "பணிந்து பணிந்து இந்த பூமி வளைந்தது குனிந்து குனிந்து குனிந்த கூனும் உடைந்தது வெள்ளி வெள்ளி காசுக்கு விற்பவன் மகனில்லை ஓர் மகனில்லை"   அவர்களுக்கு அது புரிந்துவிட்டது. தாய் அவள் அருகில் வந்து, மகனுக்கு தொலைபேசி அழைப்பு விட்டுள்ளோம். எமக்கு உண்மை தெரியாது. அது  சரியாக அறிந்ததும் , உன் பிரச்னைக்கு தீர்வு காண்போம் என்றனர். அவளின் துணிந்த பார்வை, தைரியமாக எடுத்த முடிவு, ஒரு பதிலை நோக்கி அசைவதை காண்டாள்.      சங்கரும் கொஞ்ச நேரத்தால் தொலைபேசியில் வந்தும் வராததுமாக, முதலில் மலர்விழியையே கூப்பிட்டான். அவளுடன் ஏதேதோ கதைதான். வீறாப்புடன், தைரியமாக வந்தவள், தன் வேலை முடிந்தது கண்டு, இப்ப ஒரு மணமகள் மாதிரி கால் விரலால் கொடு போட தொடங்கி விட்டாள். பெற்றோருக்கும் விளங்கிவிட்டது. சங்கரும் பின் பெற்றோருடன் எதோ பயந்து பயந்து கூறிக்கொண்டு இருந்தார். எல்லோர் முகத்திலும் நிம்மதி, மகிழ்ச்சி  நிழலிட்டிருந்தது அங்கு ஒரு சுமுக நிலையை ஏற்படுத்தியது.    "தைரியம் என்பது பயம் இல்லாதது அல்ல, அதன் மீதான வெற்றி என்பதை அவள் காண்டாள். தைரியமானவள் பயப்படாதவள் அல்ல, அந்த பயத்தை வெல்பவளே"    நன்றி     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • ஒருவர் எழுதும் கருத்துக்களை பொறுத்தே பதில் கருத்துக்களும் வரும் மற்றும்படி தனிப்பட்ட கோபதாபங்கள் எதுவும் இல்லை!
    • "என் அன்பு மகளே"     "யாயே, கண்ணினும் கடுங் காதலளே, எந்தையும், நிலன் உரப் பொறாஅன்;  ‘சீறுடி சிவப்ப, எவன், இல! குறு மகள்!  இயங்குதி! என்னும்;’யாமே,"      தாய் தன் மகளை தன் கண் மாதிரி அன்பு செலுத்துகிறாள் அப்பனோ "என் சிறு மகளே, ஏன் நடந்து உன் அழகிய காலை வருத்துகிறாய்?" என கேட்டு தவிக்கிறார். அப்படித் தான் என் அன்பு மகள் எனக்கு அன்று இருந்தாள். அவள் கடைசி பிள்ளை என்பதால் ஒரு படி மேல் அதிகமாகவே செல்லமாக இருந்தாள். அதன் விளைவு எப்படி வரும் அன்று எனக்கு புரியவில்லை.      வீட்டில் எப்பவும் அவள் செல்லப்பிள்ளை தான். எனவே அவள் இட்டது தான் சட்டம். என்றாலும் அவளுக்கு என்று ஒரு தனிக் குணமும் உண்டு. அது தான் அவளை மேலும் மேலும் செல்லப்பிள்ளை ஆக்கியது. நல்ல புரிந்துணர்வுடன் இனிமையாக மகிழ்வாக பழகுவாள். எமக்கு ஒரு கவலை என்றால், அவளை பார்த்தாலே போய்விடும். அவளின்   குறும்புத்தனம் எவரையும் எந்த நிலையிலும் மகிழ்விக்கும்!     "உள்ளம் களிக்க உடனே சிரிக்க உதிர்மா வேண்டுமம்மா! .     துள்ளித் திரிந்து துயரை மறந்திடத் துளிமா வேண்டுமம்மா!"     அவள் இதை துள்ளி ஆடி பாடும் பொழுது எம்மை அறியாமலே கவலை பறந்திடும். அத்தனை நளினம், தானே கற்று தானே ஆடுவாள்!  அவளுக்கு என்று ஒரு பாணி / போக்கு உண்டு !! படிப்பிலும் சூரி , குழப்படி தான் கொஞ்சம் கூட, அத்துடன் பிடிவாதமும் பிடித்தவள், ஆனால் இரக்கம், அன்பு, மரியாதை எல்லாம் உண்டு. நாளும் ஓட, அவளும் பல்கலைக்கழகம் மிகச் சிறந்த பெறுபேருடன் நுழைந்தாள்.     "இருண்ட மேகஞ்ச்சுற்றி சுருண்டு சுழி எரியுன் கொண்டையாள் குழை ஏறி ஆடி நெஞ்சை சூறையாடும் விழிக் கெண்டையாள் திருந்து பூ முருக்கின் அரும்பு போலிருக்கும் இதழினால் வரிச் சிலையை போல் வளைந்து பிறையை போல் இலங்கு நுதுலினால்"     மேகங்கள் சில சுருண்டு சுழித்தது போன்ற கூந்தலுடன்..  காது வரை நீண்டு ஆடவர் மனதை கொள்ளை கொள்ளும் கெண்டை விழியுடன் ,  அழகான அரும்பை போன்ற இதழுடன், அழகிய வில்லை போல் வளைந்து மூன்றாம் பிறை திங்களை போன்று ஒளி விடும் நெற்றி உடன் அவள் திகழ்ந்தது தான் எமக்கு கொஞ்சம் அச்சத்தை கொடுத்தது. இனி அவள் மிக தூர, வேறு ஒரு நகரத்தில் உள்ள பல்கலைக்கழகம் போகப் போகிறாள். படிப்பை பற்றி பிரச்சனை இல்லை. அது அவளுடன் பிறந்தது. தனிய, அதுவும் இந்த பொங்கி பூரிக்கும் அழகுடன், தந்திரமாக சமாளிப்பாளா என்ற ஒன்று மட்டுமே கொஞ்சம் கவலை அளித்தது. காரணம் அவளுக்கு எல்லாமே நாமே செய்து, எம்மை சுற்றியே பழக்கி விட்டோம் என்பதால். அதுவும் நான் இல்லாமல் எங்கும் தனிய போனதும் இல்லை.  கையை இறுக்க பிடித்துக் கொண்டு தான் போவாள். இப்ப தான் எம் வளர்ப்பின் சில சில தவறுகள் தெரிந்தன. ஆனால் இது நேரம் கடந்த ஒன்று!     "பூக்களின் அழகை வண்டுகள் அறியும் பூங்கா முழுவதும் மயங்கி திரியும்  பூவையரின் அழகை ஆண்கள் அறிவர்  பூரிப்பு கொண்டு மயங்கி திரிவர்"      அவள் எப்படியும் பாடத்தில் கவனம் செலுத்தி, இவை எல்லாம் சமாளிப்பாள் என்று என் நெஞ்சை நானே தேற்றினேன்! . ஆனால் அவளின் சந்தேகமற்ற தூய மனம், பிள்ளைத்தனம் நிறைந்த இயல்பான குணம், இலகுவாக நம்பும் இரக்க தன்மை அவள் வாழ்வை ஏமாற்றி விளையாடி விட்டது அவள் முதலாம் ஆண்டு விடுதலையில் வந்து என் மடியில் இருந்து , என் கைகளால் தன் முகத்தை பொற்றி அழும் பொழுது தான் தெரிந்தது அவளின் வேதனை.!     ஆனால் ஒன்றை கவனித்தேன். இப்ப அவள் நாம் முன்பு கண்ட சின்னப் பிள்ளை அல்ல, அவளின் மற்றும் ஒரு குணமான பிடிவாதம், அவளை நிலைகுலைய  வைக்கவில்லை. தன்னை ஆசைகாட்டி மோசம் செய்தவன், அதே பல்கலைக்கழக, அதே மருத்துவ பீடத்தின் மூன்றாம் வகுப்பு மாணவன். பகிடிவதையில் நண்பர்களாகி, காலப்போக்கில் அவனை உண்மையான காதலன் என் அவள் நம்பியதை, அவன் தந்திரமாக தன் ஆசையை தீர்க்க பாவித்துள்ளான் என்பதை அறிந்தோம். ஆனால், 'நான் பார்த்துக்கொள்வேன்' , கவலை வேண்டாம் அப்பா , அவனை என்னால் திருத்தமுடியும். அவனே உங்கள் மருமகன், எனவே கவலை வேண்டாம் என தைரியமாக மடியில் இருந்து இறங்கி படுக்க போனாள்.     “கற்பும் காமமும் நாற்பால் ஒழுக்கமும் நல்லிதின் புரையும் விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவு மன்ன கிழவோள் மாண்புகள்”        என்று கற்பு நிலை, ஒழுக்க நிலை, நன்னெறி, பிறரை உபசரித்தல் பெண்ணின் கடமை என்றனர் அன்று. ஆனால் என் மகள் தான் நினைத்தவனையே , தன்னை ஏமாறியவனையே திருத்தி மனிதனாக்கி , தன் துணைவனாகவும் மாற்ற புறப்பட்டாள்!. கட்டாயம் அவள் வெற்றி பெறுவாள். அவளின் துணிவு, இன்றைய அனுபவம், வாழ்வை அலசும் திறன், இப்ப அவள் செல்லப் பிள்ளை அல்ல, ஒரு முழுமையான அறிவு பிள்ளை!     என் அன்பு மகளே,  தந்தைக்கு உபதேசம் செய்தான் என்கிறது ஒரு புராணம். அது கட்டுக்கதையாக இருந்தாலும், தந்தை மகன் முன் சீடனாகி உபதேசம் கேட்பது என்பது அகந்தை துறந்து மகனின் கருத்து என்ன என்று அறிந்துகொள்ள ஒரு தந்தை தயாராகும் வாழ்க்கைத் தத்துவம் அது. இன்று குடும்பங்களில் பெரும் பிரச்னையாக இருப்பது இந்த சுய அகந்தைதான். வயதில் சிறியவர்கள் பெரியவர்களின் பேச்சைக் கேட்க வேண்டும் என்று அடம்பிடிப்பது. இன்று நீ சொல்லாமலே என் தவறை சுட்டிக்காட்டி விட்டாய். நீ இனி எனக்கு அம்மாவும் கூட! அவளுக்கு இரவு முத்தம் கொடுத்து, முத்தம் வாங்கி நித்திரைக்கு அனுப்பினேன்!      "பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால் விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்திப், புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறு கோல் ‘உண்’ என்று ஓக்குபு புடைப்ப தெண் நீர் முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,  5 அரி நரைக் கூந்தல் செம் முது செவிலியர் பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி, ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்"     தேன் கலந்த வெண்மையான சுவையான இனிய பாலைக் கொண்ட விரிந்த ஒளியையுடைய பொற்கலத்தை ஒரு கையில் ஏந்தியவண்ணம், மென்மையான நுனியைக் கொண்ட சிறிய கோலை உயர்த்தி என் மகளை அச்சமூட்டிக் ‘இதைக் குடி’ என்று அவளுடைய மென்மையாக நரைத்த கூந்தலையுடைய செவ்விதான முது செவிலித் தாயார்கள் கூறவும், அதனை மறுத்துத் தெளிந்த நீரின் முத்துக்கள் பரலாக உள்ள தன்னுடைய பொற்சிலம்புகள் ஒலிக்கப் பாய்ந்து அவள் ஓட, நடைத் தளர்ந்து அவள் பின்னால் ஓட முடியாமல் அவர்கள் இருக்க, அவள் எங்கள் இல்லத்திற்கு முன் இருக்கும் பந்தலுக்கு ஓடி விடுவாள்.  இவ்வாறு பாலைக் குடிக்க மறுத்த என்னுடைய விளையாட்டுப் பெண், இப்பொழுது எவ்வாறு அறிவையும் ஒழுக்கத்தையும் அறிந்தாள்? எனக்கு இன்னும் வியப்பாகவே அது இருக்கிறது. அந்த வியப்பான பெண் தான் என் அன்பு மகளே !!      [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • எல்லா துன்பங்களில் இருந்தும் மீண்டுவர இறைவனை பிரார்த்திக்கிறேன் பையா 🙏 எங்களுக்கும் லண்டனிலை ஸ்லீப்பர் செல்ஸ் இருக்கினம் தெரியுமோ 😜
    • "பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம்! பிள்ளைகள் பெற்றோரை உருவாக்க முடியாது!" பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம் என்பதில் ஐயப்பாடு ஒன்றும் இல்லை. புறநானுறு 312 இல் அப்படித்தான் கூறுகிறது.  "ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே; சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;" மகனைப் பெற்று வளர்த்தல் பெண்களின் கடமைகளுள் தலையான கடமையாகும்.அவனைச் சான்றோ னாக்குதல் (வீரன்) தந்தையின் கடமையாகும். இப்படி பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம். ஆனால் பிள்ளைகள் பெற்றோரை உருவாக்க முடியாது என்பதில் தான் எனக்கு ஒரு சந்தேகம்   [1] நாம் இப்ப சொல்லின் கருத்தை பார்ப்போமா ? பெற்றோர் = தங்கள் வாரிசை(குழந்தை) வளர்க்கும் பாதுகாவலர் என்று கொள்ளலாம். அல்லது = பிள்ளை பெற்றவர்கள் / பெற்றோர் என்று கொள்ளலாம். ஆகவே பெற்றோர் என்ற சொல்லே பிள்ளை இல்லாமல் உருவாகாது.  பிள்ளை = குழந்தை, குட்டி , குஞ்சு  இதில் கவனியுங்கள் பெற்றோர் என்ற சொல் தொடர்பு படுத்தப் படவில்லை [2] மேலும் எப்படி பிள்ளைகளை ஒழுங்காக பெற்றோர்கள் உருவாக்கினார்களோ, அப்படியே, பிள்ளைகள் வளர்ந்து ஒரு நிலைக்கு வந்த பின், கெட்டுப்போன / தீய வழியில் சென்ற பெற்றோர்களை , பிள்ளைகள் நல்லவராக உருவாக்கலாம். இதற்கு உதாரணமாக இரணியன், அவன் மகன் பிரகலாதன் கதையை கூறலாம் ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.