Jump to content

சம்­பந்தன், அநுர அமைச்சு பத­வி­களைப் பெறு­வதே சிறந்­தது - பொதுஜன பெரமுன


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சம்­பந்தன், அநுர அமைச்சு பத­வி­களைப் பெறு­வதே சிறந்­தது - பொதுஜன பெரமுன

 

(இரா­ஜ­துரை ஹஷான்)

தமிழ் மக்­களின் அடிப்­படை பிரச்­சி­னை­க­ளுக்கு அர­சாங்­கத்­தால் இது­வ­ரையில் தீர்வு பெற்றுக் கொடுக்­க­வில்லை என்று  குறிப்­பிடும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பினர் தொடர்ந்து  ஐக்­கிய தேசிய கட்­சி­யைப்   பாது­காத்து  தமிழ் மக்­க­ளுக்கு துரோ­க­மி­ழைக்­கின்­றது. 

எதிர்த் தரப்­பி­ன­ராக  இருந்து கொண்டு  கூட்­ட­மைப்­பி­னரும்,  மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யி­னரும் அர­சாங்­கத்தின் பங்­கா­ளி­யாக செயற்­ப­டு­வதை விட  அமைச்சுப் பத­வி­களை பெற்றுக் கொள்­வதே பொருத்­த­மா­ன­தாக அமையும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர்   செஹான் சேம­சிங்க தெரி­வித்தார்.

பொது­ஜன பெர­மு­னவின் தலைமைக் காரி­யா­ல­யத்தில் நேற்று  வெள்­ளிக்­கி­ழமை இடம்பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு  கருத்­து­ரைக்­கையில் அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யினர் அர­சாங்­கத்­துக்கு எதி­ராக கொண்டு வந்த நம்­பிக்கை­யில்லா பிரேரணை தோல்­வி­ய­டைந்­துள்­ளமை ஆச்­ச­ரி­யப்­படும் ஒரு விட­ய­மல்ல.  

ஏப்ரல்  21  குண்டுத் தாக்­கு­தலைத் தொடர்ந்து அடிப்­ப­டை­வாத குற்­றச்­சாட்­டு­களை முன்­னி­லைப்­ப­டுத்தி முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதி­யு­தீனுக்கு எதி­ராக  எதி­ர­ணி­யினர் பாரா­ளு­மன்­ற­ததில் நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையைக் கொண்டு  வந்து    அது  விவா­தத்­துக்கு எடுத்துக் கொள்ளும் திக­தி யும்   தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருந்­தது.

முன்னாள் அமைச்சர் ரிஷாத் ப­தி­யு­தீ­னுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை  விவா­தத்­துக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்டு  வாக்­கெ­டுப்­புக்கு எடுத்துக் கொண்­டி ருந்தால் நிச்­சயம்  பிரே­ரணை வெற்றி பெறும் என்­பதை அர­சாங்கம் நன்கு அறிந்­தி­ருந்­தது.   அர­சாங்­கத்தைப்  பாது­ 

காக்க  பிர­தமர் ரணில் விக்­கிர­ம­சிங்க   மக்கள் விடு­தலை முண்­ணயின் ஊடாக அர­சாங்­கத்­துக்கு எதி­ராக  நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை  கொண்டு வரு­வ­தற்கு அர­சியல்   திட்­டங்­களை முறை­யாக  வகுத்தார்.

மக்­கள் விடு­தலை முன்­னணி அர­சாங்­கத்­ திற்கு எதி­ராக   கொண்டு வந்த நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை  தோல்­வி­ய­டையும் என்று நன்கு  அறிந்தும்  எதிர்க்­கட்­சி­யினர் என்ற ரீதியில் அர­சாங்­கத்­துக்கு எதி­ரான ஒரு பிரே­ர­ணைக்கு  ஆத­ர­வாக  வாக்­க­ளித்து எதிர்க்­கட்­சியின்  கட­மை­யை முழு­மைப் 

ப­டுத்­தி­யுள்ளோம். எதிர்க் கட்சித் தலை­வ­ராலே நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை  தோல்­வி­ய­டைந்­தது என்று  எவ­ராலும் குறிப்­பிட முடி­யாது.  பிரே­ர­ணையை  வெற்றி கொள்­வ­தற்­கான எவ்­வித  முயற்­சி­க­ளையும் மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யினர் மேற்­கொள்­ள­வில்லை. இவர்­களின் நோக்கம்  அர­சாங்­கத்தைப் பாது­காப்­பதி­லேயே முழு­மை­யாகத் தங்­கி­யி­ருந்­தது.

தமிழ்  மக்­களின்  அடிப்­படைப்  பிரச்­சி­னை­ க­ளுக்கு  அர­சாங்கம் இது­வ­ரையில் எவ்­வித தீர்­வையும் பெற்றுக் கொடுக்­க­வில்லை  என்று  குற்­றஞ்­சாட்டும் கூட்­ட­மைப்­பினர் தொடர்ந்து   ஐக்­கிய தேசிய கட்­சியை   பாது­காப்­பதால் எவ்­வித  பயனும் ஏற்­ப­டாது. வடக்கு மற்றும் கிழக்கு   பிர­தே­சங்­களில் உள்ள  பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு   காணும் நோக்கம் கூட்­ட­மைப்­பி­ன­ரிடம் கிடை­யாது. எதிர்க்­கட்­சி­யினர் என்று குறிப்­பிட்டுக் கொண்டு கடந்த    நான்கு  வருட கால­மாக அர­சாங்­கத்தின் அனைத்து வரப்­பி­ர­சா­தங்­க­ளையும் இவர்கள் பெற்று தமிழ் மக்­க­ளுக்கு துரோ­க­மி­ழைத்­துள்­ளார்கள்.

ஐக்­கிய தேசிய கட்­சி­க்கு கூட்­ட­மைப்­பி­னரும்,  மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யி­னரும்  தொடர்ந்து  ஆதரவு வழங்குவது அவர்க ளின் தனிப்பட்ட தீர்மானமாகும். எதிர்க்கட்சியினர் என்று   குறிப்பிட்டுக்  கொள்வதால்  பதவி நிலையின் பொறுப்புகள் அவமதிக் கப்படுகின்றன. 

ஆகவே  இவ்விரு தரப்பினரும் குறுகிய காலத்துக்கு  அரசாங்கத்தின்  அமைச்சுப் பதவிகளை பெற்றுக்   கொண்டு முழுமை யாக  அரசாங்கத்துக்கு  சார்பாகவே  செயற் படலாம். அதுவே  சிறப்பாக அமையும் என்றார்.

 

https://www.virakesari.lk/article/60387

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"வெடி புகழ் மாவை"யின்ரை பொடியன் சும்மாதானே இருக்கிறார்.அவருக்கு ஒரு அமைச்சு பதவி குடுக்கலாம் .😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பேருக்கேண்டாலும் சில சில்லறைகள் எதிர்வரிசையிலை இருக்க வேணும் அல்லா எல்லாரும் மந்திரி ஏண்டா எப்பிடி? கிடைக்கிற சலுகை வந்து சேந்தாக்காணும் தானே

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.