Jump to content

இந்தியாவின் நிலவுப் பயணம் 2.0


Recommended Posts

இந்திய விண்வெளித்துறையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சந்திராயன் 2 விண்கலம் வரும் 15ஆம் தேதி அதிகாலை 02:51 மணியளவில் ஏவப்பட உள்ளது.

 

அருமையான தொகுப்பு 

https://www.bbc.com/tamil/extra/13BKJReCgm/chandrayan-2_tamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலவில் நிரந்தரமாக குடியேற..👍

bus.gif

கியர் கம்பிக்கு பதில் மர கட்டையில் இயங்கும் அரசு பேருந்து சேவை.. 👌

Link to comment
Share on other sites

சந்திரயான் - 2 : இறுதி நேரத்தில் கவுன்டவுன் நிறுத்தப்பட்டது

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த சந்திரயான் - 2 செயற்கைக்கோள் ஏவப்படுவது தொழில்நுட்பக் காரணங்களால் தள்ளிவைக்கப்படுவதாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் அறிவித்துள்ளது. 

ராக்கெட் ஏவப்படுவதற்கு 56 நிமிடங்கள் இருந்த நிலையில், கவுன்ட் - டவுன் நிறுத்தப்பட்டது. 

நிலவில் ஊர்ந்துசெல்லும் வாகனத்தை இறக்கி, ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சந்திரயான் - 2 விண்கலம் திங்கட்கிழமை அதிகாலை 2.51 மணியளவில், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு நிறுவனத்திலிருந்து ஏவப்படவிருந்தது.  

இந்தியாவின் சந்திரயான் - 1 திட்டம் வெற்றிகரமாக அமைந்ததையடுத்து, நிலவின் தென்துருவப் பகுதியை ஆராயும் நோக்கில் சந்திரயான் - 2 திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்தவிருந்தது. இந்த விண்கலம் புவிசார் ஏவுவாகனம் - மார்க் 3 மூலம் விண்ணில் ஏவப்படுவதாக இருந்தது.

இதற்கான கவுன்ட் - டவுன் ஜூலை 14ஆம் தேதி காலை 6.51 மணியளவில் துவங்கியது. இந்த ஏவுவாகனத்திற்கான எரிபொருள் நிரப்பும் பணிகள் ஏவுவதற்கு 18 மணி நேரத்திற்கு முன்பாகத் துவங்கின.  இரவு பத்து மணியளவில் கிரையோஜெனிக் எஞ்சினில் திரவ ஆக்ஸிஜனை நிரப்பும் பணி துவங்கியது. 

ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி நிலையத்திலிருந்து செய்தி தரும் பிபிசி தமிழின் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதன், தொழில்நுட்ப காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கிறார்.

"நள்ளிரவு 12 மணியளவில் ஆக்ஸிஜன் நிரப்பும் பணி முடிந்த பிறகு, திரவ ஹைட்ரஜனை நிரப்பும் பணி துவங்கியது. 15ஆம் தேதி அதிகாலை 1.30 மணியளவில் இந்தப் பணியும் முடிவடைந்தது. ஆனால், அதிகாலை 1.50 மணியளவில் தொழில்நுட்பக் காரணங்களால் சந்திரயான் - 2 ஏவப்படுவது நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. என்ன தொழில்நுட்ப பிரச்சனை என்பதை இஸ்ரோ இதுவரை தெரிவிக்கவில்லை." என்கிறார்.

7000 பேர் ஏமாற்றம்

"சந்திரயான் 2 விண்ணில் ஏவப்படுவதை காண 7000 பேர் சதீஷ் தவான் ஏவுதளத்திருக்கு வந்திருந்தனர். அவர்கள் அனைவரும் ஏமாற்றம் அடைந்தனர். சந்திரயான் 2 மீண்டும் எப்போது விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தெரிவிக்கவில்லை" என்கிறார் பிபிசி தமிழ் செய்தியாளர் முரளிதரன்.

 

தென்துருவம்

சந்திரயான் - 2 விண்கலன் இதுவரை எந்தவொரு நாடும் சென்றிராத நிலவின் தென்துருவ பிரதேசத்திற்கு செல்ல இருந்தது.

இந்தப் பிரதேசத்தில் நிலவின் மேற்பரப்பில் காணப்படும் அதிக ஆபத்துகளின் காரணமாக எந்த விண்வெளி நிறுவனமும் இந்த பிரதேசத்திற்கு கலன்களை இதுவரை அனுப்பவில்லை.

இதற்கு முன்னால், நிலவுப் பயணத் திட்டங்கள் நிகழ்ந்துள்ள நிலவின் மத்தியரேகை பகுதி, ஓரளவு சமவெளி பகுதியாகும். ஆனால், நிலவின் இந்த தென் பகுதி முழுவதும் பள்ளங்களும், கடினமான நிலப்பரப்பும் காணப்படுகின்றன. எனவே, இவ்விடத்தில் ஏற்படும் ஆபத்துகளும் கணிசமாகவே இருக்கின்றன.

நிலவின் மேற்பரப்பு, கனிமவியல், மிகுதியாக கிடைக்கும் தனிமங்கள், நிலவின் வெளிப்புறப்பகுதியில் ஆய்வு மற்றும் ஏதாவதொரு வடிவத்தில் அங்கு நீர் உள்ளதா என அறிந்து கொள்ளுதல் போன்றவை இந்தத் திட்டத்தின் அறிவியல் ஆய்வு நோக்கங்களாக இருந்தன.

https://www.bbc.com/tamil/india-48985629

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.