Jump to content

புதிய வரலாறுகளைப் படைக்கும் விம்பில்டன்


Recommended Posts

ரெனிஸ் விளையாட்டின் மூத்த அரங்கம் இங்கிலாந்தின் விம்பில்டன் போட்டிகள். 1877இல் முதல் களம் கண்ட போட்டி அரங்கம், இவ்வருடம் 133ஆவது போட்டிகளின் முடிவை எட்டியிருக்கிறது. இம்முறை இறுதிப் போட்டிகள் மேலும் புதிய சாதனைகளுக்கு வழிவகுக்குமா? என்பதிற்கான பதிலை சனி, ஞாயிறு பெண்கள் மற்றும் ஆண்கள் இறுதிப் போட்டிகள் வழங்கும்.

சனி காலை நடைபெறும் பெண்கள் இறுதிப் போட்டியில், 10ஆவது தரவரிசையில் உள்ள அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், 7ஆவது தரவரிசையில் உள்ள ரூமேனியாவின் சிமோனா கெலப்புடன் மோதுகிறார். அவுஸ்திரேலியன் ஓப்பின், பிரென்ஜ் ஓப்பன், விம்புல்டன், அமெரிக்கன் ஓப்பின் எனப்படும் ரெனிசின் முதல தரப் போட்டிகளான கிராண்ட சிலாம்களில், இது செரீனாவின் 32ஆவது தடவையாக போட்டியிடும் இறுதிப்போட்டி. இவற்றில் ஏற்கனவே 23 தடவைகள் அவர் வெற்றி பெற்றுள்ளார். இது நவீன யுகத்தின் சாதனையாகும். அடுத்த நிலையில் 22 வெற்றிகளுடன் ஓய்வு பெற்றுவிட்ட ஸ்ரெவி கிராவ் உள்ளார்.

தற்போது விளையாடுபவர்களில், அதிக வெற்றிகளுடன் செரீனாவின் சகோதரி வீனஸ் வில்லியமே, 7 வெற்றிகளுடன் உள்ளார். இது செரீனாவின் சாதனையை இன்னொரு விதத்தில் யாரும் நெருங்குவதற்கான வாய்ப்பு சமீப காலத்தில் இல்லை என்பதையே உணர்த்துகிறது. அதேவேளை செரீனா தற்போது 38 வயதை நெருங்குகிறார். ஆகவே அவரது ஒவ்வொரு வெற்றியும் முக்கியத்துவத்துடன் பார்க்கப்படும். கடந்த ஆண்டு அவர் இரண்டு கிராண்ட் சிலாம் போட்டிகளில், இறுதிப் போட்டிக்கு முன்னேறி அவற்றில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டார். நவீன யுகத்தைக் கடந்து அதற்கு முன்னைய காலத்தையும் எடுத்துக் கொண்டால், மாகிரெட் கோட் அவர்கள் 24 வெற்றிகளைப் பெற்றார். இம்முறை விம்புள்டனை செரீனா வெற்றி கொண்டால், அச்சாதனையும் அவர் சமன் செய்வார் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. அத்துடன் இது அவரது 8ஆவது விம்பிள்டன் வெற்றியாக வேறு அமையும்.

அடுத்து ஞாயிறு நடைபெறும், ஆண்கள் இறுதிப் போட்டி. அதில் 2ஆவது தரவரிசையில் உள்ள சுவிட்சலாந்தின் றோஜர் பெடரர், 1ஆவது தரவரிசையில் உள்ள சேர்பியாவைச் சேர்ந்த நோவாக் டொக்கவிச்சுடன் மோதுகிறார். 30 வயதைக் கடந்தாலும், முதல் தர வீரர் டொக்கவிச், இரண்டாவது தர வீரர் நடால் மற்றும் மூன்றாவது தர வீரர் பெடரர் ஆகியோரே ஆண்கள் பகுதியில் தொடர்ந்தும் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இதில் 20 கிராண்ட் சிலாம் வெற்றிகளுடன் பெடரர் முதல் இடத்திலும், 18 கிராண்ட் சிலாம் வெற்றிகளுடன் நடால் இரண்டாவது இடத்திலும், 15 கிராண்ட் சிலாம் வெற்றிகளுடன் டொக்கவிச் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். ஆகவே இவர்கள் ஒவ்வொருவரின் வெற்றியும் இறுதியில் யார் முதலிடத்தில் திகழ்வது என்பதில், முக்கிய இடத்தை வகிக்கும். இவர்களில் பெடரர் 38வயதை நெருங்கி மூத்தவர் என்ற நிலையில் அவருக்கு இவ்வெற்றி முக்கியமானது.

டொக்கவிச் கடந்த ஆண்டின் விம்பில்டனின் ஆண்கள் வெற்றி வீரர். அதேவேளை 8 முறை விம்பிள்டன் ஆண்கள் போட்டியை வென்று, தனிச் சாதனையுடன் தன் களம் என்ற முத்திரையுடன் பெடரர் உள்ளார். அந்த வகையில் ஞாயிறு ஆண்கள் இறுதிப் போட்டியும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படுகிறது. அது சரி நீங்கள் யார் வெற்றி பெறுவார்கள் என்று நினைக்கின்றீர்கள் என ஆரூடம் செல்லுங்கள் பார்க்கலாம்... இல்லையேல் விரும்புகின்றீர்கள் என்றாவது சொல்லுங்களேன். என் விருப்பு 38வயதை நெருக்கும் இருவர் மேலும் தான்.

முக நூல் நண்பரின் பதிவில் ...

சிமோனா கெலப் செரீனா வில்லியம்ஸை  தோற்கடித்தார் !

Simona Halep beats Serena Williams 6-2 6-2 to win first Wimbledon title

 

Link to comment
Share on other sites

`இது எனது அம்மாவுக்காக!' - விம்பிள்டனில் முதல்முறையாக மகுடம்சூடிய சிமோனா ஹாலெப்

`இது என் அம்மாவுக்காக.. ஏனென்றால் அவர் தான் நான் சிறு வயதாக இருந்த போது விம்பிள்டன் இறுதிப்போட்டியில் விளையாட வேண்டும் என விரும்பினார்'.

`நான் இந்த புற்களை விரும்புகிறேன்’ ரூமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் விம்பிள்டன் அரையிறுதிப் போட்டியில் வெற்றிப்பெற்றதும் உதிர்த்த வார்த்தை இது. இங்கிலாந்தில் நடக்கும் விம்பிள்டன் தொடரில் இறுதிப்போட்டிக்கு ஹாலெப் முதன்முறையாக தகுதிப்பெற்றார். இதனையடுத்து தனது உற்சாகத்தை வார்த்தைகளில் வெளிக்காட்டினார். இன்று நடந்த இறுதிப்போட்டியில் செரினா வில்லியம்ஸ் - சிமோனா ஹாலெப் மோதினர். இந்தப் போட்டிக்கு ரசிகர்களிடையே பலத்த எதிர்ப்பார்ப்பு நிலவியது. செரினா, ஹாலெப் இந்தத் தொடரில் சிறப்பாக செயல்பட்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறினர். எனவே இந்தப்போட்டி கடுமையானதாக இருக்கும் என எதிர்ப்பார்ப்பு நிலவியது.

 

அதற்கு காரணமும் இருக்கிறது. இந்த டைட்டிலை செரினா வென்றால், இது அவரது 24 வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாக அமையும். அவ்வாறு வென்றால் ஒற்றையர் பிரிவில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற மார்கரட் கோர்ட் (24) சாதனையை செரினா சமன் செய்ய வாய்ப்பு இருந்தது. உலக தரவரிசையில் சிமோனா ஹாலெப் 7-வது இடத்தில் இருக்கிறார். செரினா 10-வது இடத்தில் உள்ளார். இந்த இறுதிப்போட்டிக்கு முன்னதாக இருவரும் 10 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியிருந்தனர். இதில் 9 போட்டிகளில் செரினாவே வெற்றி பெற்றிருந்தார். அதனால் செரினாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது எனக் கூறப்பட்டது. செரினாவுக்கு தற்போது 37 வயது. அதிக வயதில் டென்னிஸ் விளையாடும் வீராங்கனையும் இவர்தான்.

ரூமேனியா வீராங்கனையான சிமோனாவும் சளைத்தவர் இல்லை. இந்தத் தொடரில், தான் விளையாடி போட்டிகளில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிப்போட்டிக்கு வந்தவர். எனவே, இந்தப்போட்டியை சரியாக பயன்படுத்திக்கொள்வார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்தது. இது செரினாவுக்கு 11வது விம்பிள்டன் இறுதிப்போட்டி ஹாலெப்புக்கு முதல் விம்பிள்டன் இறுதிப் போட்டி. இந்தநிலையில் தான் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.

ஆட்டம் தொடங்கிய முதலே சிமோனாவின் கை ஓங்கியே இருந்தது. முதல் செட்டை 6-2 என்ற நிலையில் சிமோனா கைப்பற்றினர். முதல் 7 நிமிடத்தில் 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். வெறும் 26 நிமிடத்தில் செரினாவிடம் இருந்து முதல் செட்டை பறித்து விட்டார். இரண்டாவது செட்டில் செரினா கடுமையாக போராடினார். அந்த போராட்டம் சிமோனாவின் வெற்றியை தாமதப்படுத்தியதே தவிர, அதைத் தடுக்கவில்லை. 56 நிமிட போராட்டத்திற்கு பின்பு 2-6 என்ற கணக்கில் இரண்டாவது செட்டை இழந்தார். பட்டத்தையும் சிமோனாவிடம் பறிக்கொடுத்தார். சிமோனா ஹாலெப் மைதானத்தில் கண்ணீர் விட்டார்.

 

போட்டிக்கு பின்னர் பேசிய சிமோனா, ``நான் இதுவரை விளையாடியதிலே சிறப்பான போட்டி இதுதான். இது சிறந்த போட்டியாக இருந்தது. செரினா எனக்கு ஊக்கமளித்தார். இந்தப் போட்டிக்கு முன்பு நான் பதற்றமாக இருந்தேன். எனக்கு வயிற்றில் பிரச்னை இருந்தது. ஆனால் இது உணர்ச்சிகளுக்கான நேரம் இல்லை என்பது எனக்கு தெரியும். இது சிறப்பான தருணம். என் வாழ்நாளில் நான் இதை மறக்க மாட்டேன்.

இது என் அம்மாவுக்காக ஏனென்றால் அவர் தான் நான் சிறு வயதாக இருந்த போது விம்பிள்டன் இறுதிப்போட்டியில் விளையாட வேண்டும் எனக் கூறினார். நான் இந்த ஆண்டு விளையாட தொடங்கியபோதே லாக்கர் அறையில் உள்ளவர்களிடம் நான் பட்டத்தை வெல்ல விரும்புவதாக கூறினேன். ஏனெனில் அதுதான் எனக்கு வாழ்நாள் உறுப்பினருக்காக அந்தஸ்தை தரும் அது இப்போது என்னிடம் உள்ளது. உண்மையில் புல் தரையில் விளையாடுவதற்காக எனது ஆட்டத்தை மாற்றினேன். நான் ஓட விரும்புதால் அது கடினமாக இருந்தது. ஆனால், நீங்கள் புல் தரையில் சரியவும் முடியாது. ஆனால் இந்த முறை நான் அனுபவித்து விளையாடினேன். அடுத்த வருடத்திற்காக என்னால் காத்திருக்க முடியாது” என்றார்.

செரினா பேசுகையில், ``அவள் தனது மனதில் இருந்து உண்மையாக விளையாடினார். சிமோனாவுக்கு வாழ்த்துகள். நான் தொடர்ந்து போராட வேண்டும். தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். நான் இந்த விளையாட்டை ரசிக்கிறேன். நான் வெளியில் வந்து மக்கள் முன்பு விளையாடுவதை விரும்புகிறேன். அதுதான் மகிழ்ச்சி. எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. ஒரு வீரர் சிறப்பாக விளையாடும்போது நாம் நமது தொப்பியை கழற்றிவிட்டு அவர்களுக்கு தலைவணங்க வேண்டும்” என்றார்.

https://www.vikatan.com/sports/news/simona-halep-to-win-first-wimbledon-title

 

Link to comment
Share on other sites

சாம்பியன் நோவாக் ஜோகோவிச் !

TamilNews_Jul_14_2019__86879909038544.jpg

விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் நோவாக் ஜோகோவிச் (செர்பியா), சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர் நேற்று மோதினர். 

ஐந்து தொடர்களில் முடிந்த இந்த ஆட்டம், 7-6; 1-6; 7-6; 4-6; 13-12 என்ற முடிவில் நோவாக் ஜோகோவிச் சம்பியனானார். 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.