Jump to content

இந்திய அணியில் பிளவு? ரோகித் சர்மாவை கேப்டனாக கொண்டுவர கோரிக்கை வலுக்கிறது


Recommended Posts

உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த சில நாட்களிலேயே, அணிக்குள் பிளவு இருப்பது வெளியே தெரிய வந்துள்ளது. இந்திய அணியில் இருக்கும் வீரர்களில் கேப்டன் கோலிக்கு ஆதரவாக சில வீரர்கள் இருப்பதாகவும், ரோகித் சர்மாவுக்கு ஆதரவாக சில வீரர்கள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், தோல்விக்குப் பொறுப்பேற்று கோலியை கேப்டன் பொறுப்பில் இருந்து மாற்றிவிட்டு, அதற்கு பதிலாக ரோகித் சர்மாவை கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது. இந்திய அணியில் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும், கேப்டன் கோலியும் சேர்ந்து கொண்டு அணியில் தன்னிச்சையாக பல முடிவுகளை எடுக்கிறார்கள் என்றும் கோலி மற்றும் சாஸ்திரி இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளில் பல தவறான முடிவுகளை எடுத்துள்ளனர் என்றும் புகார் எழுந்துள்ளது.

ரவி சாஸ்திரியும் - வீராட் கோலியும் தங்களுக்கு தேவைப்பட்ட வீரர்களை மட்டுமே தேர்வு செய்கிறார்கள். மற்றவர்களிடம் கலந்து பேசி எந்த முடிவும் எடுப்பதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா அறிவுறுத்தும் வீரர்களை தேர்வு செய்வதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்பத்தி ராயுடு, மணீஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் அய்யர், சுக்மான் கில் போன்ற பேட்ஸ்மேன்களை நடுத்தர வரிசையில் கொண்டு வர முடியும். அணியில் ஜஸ்பிரித் பும்ரா, ரோகித் சர்மா இருவரும் தவிர்க்க முடியாதவர்கள் இவர்களைத் தேர்வு செய்யாமல் இருக்க முடியாது. ஆனால், மற்ற வீரர்களை தேர்வு செய்யும் விதத்தில் சார்புத்தன்மை கையில் எடுக்கப்படுகிறது. குறிப்பாக விராட் கோலியும், பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் குறிப்பிட்ட சார்புடனும், அளவுகோலுடன் விளையாடும் 11 வீரர்களைத் தேர்வு செய்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கே.எல்.ராகுல் உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்பாக மிகவும் மோசமாக செயல்பட்ட போதிலும் கூட அவருக்கு அணி நிர்வாகத்தின் ஆதரவு இருந்ததால், அவர் தொடர்ந்து அணியில் நீடித்தார். தொடக்க வீரராக வந்த மயங்க் அகர்வாலுக்கு வாய்ப்பு தரப்படவில்லை. விராட் கோலி ஒரு பேட்ஸ்மேனாக ஒரு அற்புதமான செயல்திறன் கொண்டவர் என்பதில் சந்தேகம் இல்லை, அவர் தனியாக பல போட்டிகளில் வென்றுள்ளார். ஆனால் வெளிநாட்டு போட்டிகளில் ஒரு கேப்டனாக, போட்டிக்கு முன் ஆடுகளத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக கோப்பை தோல்வியால் இந்தியா மீண்டும் ஒரு புதிய நடுத்தர வரிசையைக் கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 18 மாதங்களுக்குப் பிறகு, அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் 20 ஓவர் உலகக் கோப்பையும், 2023-ல் இந்தியாவில் ஒருநாள் உலகக் கோப்பையும் நடைபெற உள்ளது. இதற்காக நமது அணியை இப்போதே தயார் செய்ய வேண்டும். இந்த இரண்டு பெரிய போட்டிகளிலும் மகேந்திர சிங் டோனி அணியின் ஒரு பகுதியாக இருக்க மாட்டார் என்பதில் சந்தேகமில்லை. அத்தகைய சூழ்நிலையில், இந்தியாவின் ஐந்து, ஆறு மற்றும் ஏழு எண் இடங்கள் காலியாக இருக்கும். இத்தகைய சூழ்நிலையில், இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தினர் எதிர்கால அணியை எவ்வாறு உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டும்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=509911

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.