Jump to content

பலாலியில் இருந்து திருச்சி அல்லது மதுரைக்கு விமான சேவை – இந்தியா ஆர்வம்


Recommended Posts

பலாலியில் இருந்து திருச்சி அல்லது மதுரைக்கு விமான சேவை – இந்தியா ஆர்வம்

Palaly_Airport-300x200.jpgபலாலி விமான நிலையத்தில் இருந்து, தமிழ்நாட்டின் மதுரை அல்லது திருச்சி நகரங்களுக்கு அல்லது கேரளாவின் திருவனந்தபுரத்துக்கு நேரடி விமான சேவைகளை நடத்த இந்தியா விருப்பம் கொண்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் பலாலி விமான நிலையத்தை தரமுயர்த்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கு சிறிலங்கா அரசாங்கம் 1950 மில்லியன் ரூபாவை செலவிடவுள்ளது. இந்தியா 300 மில்லியன் ரூபாவை வழங்கவுள்ளது.

தற்போது முதற்கட்டமாக ஓடுபாதையை சீரமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

இந்தப் பணிகள் நிறைவடைந்ததும், குறைந்த கட்டண விமான நிறுவனங்கள் பயன்படுத்தும் நெருக்கமான ஆசனங்களைக் கொண்ட சிறிய விமானங்களின் மூலம் சேவைகள் ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிகள் நிறைவடைந்ததும், சிவில் விமான சேவைகள் நிறுவனத்தினால், அனைத்துலக விமான நிலையமாக இயக்கப்படவுள்ளது.

தற்போது பலாலி விமான நிலையத்தில் சுமார் 200 பயணிகளைக் கையாளக் கூடிய ஒரே ஒரு முனையம் மாத்திரமே உள்ளது.

இங்கிருந்து சிறிலங்கா விமானப்படையின் சி-130, ஏ.என்-32, எம்.ஏ-60 போன்ற விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

ஆரம்பத்தில், சில குறைந்த கட்டண விமான சேவைகள் இந்திய நகரங்கள் சிலவற்றுக்கே ஆரம்பிக்கப்படக் கூடும் என்றும், சிறிலங்கா விமானப்படையே தொடர்ந்தும், விமான நிலையத்தை நிர்வகிக்கும் என்றும் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு சிறிலங்காவில் உள்ள இந்திய தூதரகத்தினால், 15,400 வணிக நுழைவிசைவுகளும், 121,000 சுற்றுலா நுழைவிசைவுகளும் வழங்கப்பட்டுள்ளன என்றும் கொழும்பு ஆங்கில வாரஇதழ் சுட்டிக்காட்டியுள்ளது.

http://www.puthinappalakai.net/2019/07/14/news/38978

Link to comment
Share on other sites

 

எந்த ஊர்களுக்கு பறப்பது என முடிவு செய்யாமல் நடாத்தப்படும் அபிவிருத்தி கொஞ்சம் சந்தேகத்தை தருகின்றது.  

இது இராணுவ தேவைக்காக மட்டும் தரமுயர்த்தப்படும் என எண்ணவும் முடியவில்லை. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.