Jump to content

பாகிஸ்தானை புறக்கணித்த சர்வதேச ஊடகங்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

World-media-boycotts.jpg

பாகிஸ்தானை புறக்கணித்த சர்வதேச ஊடகங்கள்!

பிரித்தானியாவில் நடைபெற்ற ‘ஊடக சுதந்திரத்துக்கான பாதுகாப்பு’ என்ற மாநாட்டில் பாகிஸ்தான் அமைச்சரின் உரையை சர்வதேச ஊடகங்கள் புறக்கணித்துள்ளன.

லண்டனில் ‘ஊடக சுதந்திரத்துக்கான பாதுகாப்பு’ என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்றது. இதில் பிரித்தானியா, கனடா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

குறித்த மாநாடு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது ஊடகவியலாளர் ஒருவர் பாகிஸ்தானில் ஊடக சுதந்திரம் பறிக்கப்படுவதாகவும் கருத்துரிமை தணிக்கைக்கு உள்ளாக்கப்படுவதாகவும் கோஷம் எழுப்பினார்.

மேலும், சுதந்திரமாக கருத்துக்களை தெரிவித்ததற்காக பாகிஸ்தான் அவரது தனது டுவிட்டர் கணக்கை முடக்கிவிட்டதாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இதனால், கோபமடைந்த பாகிஸ்தான் அமைச்சர் ஷா முகமது குரேஷி, பாகிஸ்தானில் எந்த ஊடக சுதந்திரமும் பறிக்கப்படவில்லை. மேலும், யாருடைய தனிப்பட்ட டுவிட்டர் கணக்கையும் முடக்கவில்லை என மறுப்பு தெரிவித்து குறித்த ஊடகவியலாளருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பாகிஸ்தானில் ஊடக சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரத்தின் குரல்வளை நெறிக்கப்படுவது தொடர்பாக இருவருக்கும் இடையேயான வாக்குவாதம் முற்றிய நிலையில் முகமது குரேஷியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து சர்வதேச ஊடகவியலாளர்கள் வெளிநடப்பு செய்திருந்தனர்.

http://athavannews.com/பாகிஸ்தானை-புறக்கணித்த-ச/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.