Jump to content

கிரிக்கெட் உலகக் கிண்ணம் - 44 வருடகால கனவை சூப்பர் ஓவரில் நனவாக்கிய இங்கிலாந்து !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

44 வருடகால கனவை சூப்பர் ஓவரில் நனவாக்கிய இங்கிலாந்து !

நியூஸிலாந்து அணியுடனான இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி சூப்பர் ஓவரில் வெற்றிபெற்றுள்ளது.

D_dJyaWWwAE2DF_.jpg

ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி இன்று மாலை இலங்கை நேரப்படி 3.10 மணியளவில் லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து, இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணிகளுக்கிடையே ஆரம்பமானது. 

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 241 ஓட்டங்களை பெற்றது.

242 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இங்கிலாந்து அணி சார்பில் ஆரம்ப வீரர்களாக ஜோனி பெயர்ஸ்டோ - ஜோசன் ரோய் ஆகியோர் களமிறங்கினர்.

நியூஸிலாந்து அணியினர் மேற்கொண்ட பந்துப் பரிமாற்றங்களினால் திக்குமுக்காடிய ரோய் 17 ஓட்டத்துடன் 5.4 ஆவது ஓவரில் ஆட்டமிழந்து வெளியாறினார் (28-1). 

முதல் விக்கெட் 28 ஓட்டத்துக்கு வீழ்த்தப்பட்டதனால் இரண்டாவது விக்கெட்டுக்காக களமிறங்கிய ஜோ ரூட்  நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வர மறுமுணையில் பெயர்ஸ்டோ ஓட்டங்களை வேகமாக பெற முற்பட்டார்.

இதனால் இங்கிலாந்து அணி 10 ஓவரில் 39 ஓட்டத்தையும், 15 ஓவரில் 56 ஓட்டத்தையும் பெற்றது. 17 ஆவது ஓவருக்காக பந்துப் பரிமாற்றம் மேற்கொண்ட கிரேண்ட்ஹோம் அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் ரூட்டை 7 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க வைத்து வெளியேற்ற, 19.3 ஆவது ஓவரில் பெயர்ஸ்டோ 36 ஓட்டத்துடன் லொக்கி பெர்குசனின் பந்தில் போல்ட் ஆனார் (71-3).

D_cl3YFWwAAoBOe.jpg

ரூட்டின் ஆட்டமிழப்பையடுத்து களமிறங்கிய அணித் தலைவர் இயன் மோர்கன் 23.1 ஆவது ஓவரில் 9 ஓட்டத்துடன் ஜேம்ஸ் நீஷமின் பந்தில் லொக்கி பெர்குசனின் அபார பிடியொடுப்பினால் களம் விட்டு நீங்கினார்.

இதனால் இங்கிலாந்து அணி 86 ஓட்டத்துக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து நிலை தடுமாறியது. இந் நிலையில் 5 ஆவது விக்கெட்டுக்காக பென் ஸ்டோக் மற்றும் பட்லர் ஜோடி சேர்ந்து நியூஸிலாந்து அணியின் பந்துகளை அனைத்து திசைகளிலும் அடித்தாட அணியின் ஓட்ட எண்ணிக்கை அதிகரித்தது.

அதன்படி 27.3 ஆவது ஓவரில் பென்ஸ்டோக் ஒரு நான்கு ஓட்டத்தை விளாச இங்கிலாந்து அணி 100 ஓட்டங்களை கடந்ததுடன், 37.2 ஆவது ஓவரில் 150 ஓட்டங்களையும் கடந்தது.

D_c4_UEWwAIkj4y.jpg

ஒரு கட்டத்தில் 40 ஓவருக்கு 170 ஓட்டங்களை இங்கிலாந்து அணி பெற்றவேளை வெற்றிக்கு 60 பந்துகளுக்கு 72 ஓட்டம் என்ற நிலை இருந்தது. ஆடுகளத்தில் பென் ஸ்டோக் 43 ஓட்டத்துடனும், பட்லர் 42 ஓட்டத்துடனும் தொடர்ந்து துடுப்பெடுத்தாடி வந்தனர்.

தொடர்ந்து 43.2 ஆவது பந்தில் ஒரு நான்கு ஓட்டத்தை விளாசி பட்லர் அரைசதம் கடக்க மறுமுணையில் பென் ஸ்டோக் அதே ஓவரின் ஐந்தாவது பந்தில் அரைசதம் பெற்றார்.

32 பந்துகளுக்கு 46 ஓட்டம் என்ற இக்கட்டான நிலையிருந்த வேளையில் பட்லர் 44.5 ஆவது ஓவரில் மொத்தமாக 60 பந்துகளை எதிர்கொண்டு 6 நான்கு ஓட்டம் அடங்கலாக 59 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேற ஆட்டம் சூடு பிடித்தது.

45 ஓவர்களுக்கு இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 196 ஓட்டங்களை பெற, வெற்றிக்கு 30 பந்துகளுக்கு 46 என்ற நிலையானது. (பென்ஸ்டோக் - 51, கிறிஸ் வோக்ஸ் - 0).

46.1 ஆவது ஓவரில் கிறிஸ் வோக்ஸ் லொக்கி பெர்குசனின் பந்து வீச்சில் 2 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க (203-6), நியூஸிலாந்து அணிப் பக்கம் அதிர்ஷ்ட காற்று வீசத் தொடங்கியது.

7 ஆவது விக்கெட்டுக்காக பிளாங்கட் களமிறங்கி துடுப்பெடுத்தாட 18 பந்துகளுக்கு 34 என்ற நிலையும் 12 பந்துகளுக்கு 24 என்ற நிலையுமிருக்க பிளாங்கட் 48.3 ஆவது ஓவரில் 10 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார் (220-7).

தொடர்ந்து வந்த ஜோப்ர ஆர்ச்சரும் 49 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் எதுவித ஓட்டமின்றி டக்கவுட் ஆக இங்கிலாந்தின் வெற்றிக்கு 6 பந்துகளுக்கு 15 என்ற இக்கட்டான நிலையானது.

ஆடுகளத்தில் பென்ஸ்டோக் 70 ஓட்டத்துடனும், அடில் ரஷித் எதுவித ஓட்டமின்றியும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

இறுதி ஓவரை எதிர்கொண்ட பென்ஸ்டோக் அந்த ஓவரின் முதல் இரு பந்துகளையும் டொட் ஆக்கினார். எனினும் மூன்றாவது பந்தில் 6 ஓட்டத்தை விளாசித் தள்ளினார். அத்துடன் நான்காவது பந்தில் 2 ஓட்டங்களை பெற முற்பட்ட வேளை இங்கிலாந்துக்கு அதிர்ஷ்ட காற்று வீசி அந்த பந்தில் மொத்தமாக 6 ஓட்டம் பெறப்பட்டது. இதனால் இங்கிலாந்துக்கு 2 பந்துகளில் 3 ஓட்டம் நிலையானது.

அந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் இரண்டு ஓட்டம் பெற முற்பட்டபோது அடில் ரஷித் ரன் அவுட் ஆக, ஒரு பந்துக்கு 2 ஓட்டம் என்ற நிலையானது. இறுதிப் பந்தை பென்ஸ்டோக் எதிர்கொண்டார். எனினும் அந்த ஓவரில் 2 ஓட்டம் பெற முற்பட ஒரு ஒட்டம் மாத்திரம் பெறப்பட்டதுடன், மார்க்வூட் ரன் அவுட் ஆனார்.

இதனால் சூப்பர் ஓவர் என்ற நிலையானது. சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் அரங்கில் இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டமை இதுவே முதற் தடவையாகும்.

பந்து வீச்சில் நியூஸிலாந்து அணி சார்பில் லொக்கி பெர்குசன் மற்றும் ஜேம்ஸ் நீஷம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும், கிரேண்ட்ஹோம் மற்றும் மேட் ஹென்றி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

சூப்பர் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 15 ஓட்டங்களை பெற, நியூஸிலாந்தின் வெற்றிக்கு 16 ஓட்டம் நிர்ணயிக்கப்பட்டது.

16 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணிக்கும் இறுதிப் பந்தில் இரண்டு ஓட்டம் என்ற நிலையானது எனினும் அந்தப் பந்தில் ஒரு ஓட்டம் மாட்டும் பெறப்பட, சூப்பர் ஓவர் விதிப்படி ஒரு அணி அதிகபடியான நான்கு ஓட்டங்களை பெற்ற அணிக்கே வெற்றி கிட்டும்.

அதன்படி இப் போட்டியில் இங்கிலாந்து அணியே அதிகபடியான நான்கு ஓட்டங்களை விளாசித் தள்ளியமையினால் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத்தை கைப்பற்றி 44 வருடகால கிரிக்கெட் கனவை நனவாக்கியது.

D_dOhmTXoAAwuSc.jpg

 

https://www.virakesari.lk/article/60459

Link to comment
Share on other sites

...ஆனாலும் 241 எடுக்க எல்லாரையும் இழந்தவர்களா அல்லது அதே இலக்கை அடைய 8 பேரை மட்டும் இழந்தவர்களா உலக சாம்பியன் என்ற கேள்வி மனசுக்குள் குறுகுறுக்கத்தான் செய்யுது....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

...ஆனாலும் 241 எடுக்க எல்லாரையும் இழந்தவர்களா அல்லது அதே இலக்கை அடைய 8 பேரை மட்டும் இழந்தவர்களா உலக சாம்பியன் என்ற கேள்வி மனசுக்குள் குறுகுறுக்கத்தான் செய்யுது....

விதி (ரூள்ஸ்) வலியது (வலிக்கவும் செய்யும்) 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நிழலி said:

...ஆனாலும் 241 எடுக்க எல்லாரையும் இழந்தவர்களா அல்லது அதே இலக்கை அடைய 8 பேரை மட்டும் இழந்தவர்களா உலக சாம்பியன் என்ற கேள்வி மனசுக்குள் குறுகுறுக்கத்தான் செய்யுது....

 

 இந்த தொடரில் பெரும்பாலும் சிறப்பாக விளையாடிய அணிகள் இரண்டு ஒன்று இந்தியா மற்றது இங்கிலாந்து ஆனால் வாழ்வா சாவா என்ற போட்டியில் நியுசிலாந்து அணி இரண்டு அணிகலளையும் விட சிறப்பாக ஆடியது உண்மைதான் , இங்கிலாந்து இந்த வெற்றிக்கு தகுதியான அணிதான் என்பதை இந்தக்காணொளியில் மிக சிறப்பாக கூறியுள்ளார் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 

WE HAD ALLAH WITH US - இங்கிலாந்து கெப்டன் தெரிவிப்பு (வீடியோ)

 
இங்கிலாந்து அணி உலக்கிண்ணத்தை கைப்பற்றிய பின்னர் நடைபெற்ற 14.07.2019 ஊடகவியலாளர் மாநாட்டின் போது, இங்கிலாந்து அணித் தலைவர் தெரிவித்த கருத்துக்கள் இதோ...!
 
 
Link to comment
Share on other sites

உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணிக்கு ஐந்து ஓட்டங்கள் வழங்கப்பட வேண்டிய இடத்தில், ஆறு ஓட்டங்கள் வழங்கப்பட்டமை நடுவர்களின் தவறு என்று, முன்னாள் நடுவர் சைமன் டௌஃபல் தெரிவித்துள்ளார்.

களத்தடுப்பாளரால் வீசப்பட்ட பந்து பென்ஸ்டோக்ஸின் மட்டையில் பட்டு, எல்லைக்கோட்டை தாண்டியதை அடுத்து ஆறு ஓட்டங்கள் வழங்கப்பட்டன.

ஆனால் விதிகளின் படி ஐந்து ஓட்டங்களே வழங்கப்பட வேண்டும் என்றும், இது நடுவர்களின் பிழை என்றும் சைமன் டௌஃபல் தெரிவித்துள்ளார்.

http://www.hirunews.lk/tamil/sports/220364/நியூசிலாந்து-தோல்வி-குறித்து-நகைச்சுவையாக-கருத்து-வெளியிட்டுள்ள-நியூசிலாந்து-பிரதமர்

 

தனது கிரிக்கட் வாழ் நாள் முழுவதிலும் நியுசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சண் இடம் மன்னிப்பு கோருவதாக இங்கிலாந்து அணியின் சகல துறை ஆட்டக்காரர் பென் ஸ்டொக் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற போட்டியில் போட்டியின் இடைநடுவில் பென்ஸ்டொக் அடித்த பந்து எல்லையை தொடுவதற்கு சிறிது தூரம் காணப்படுகையில் நியுசிலாந்து அணியின் வீரர் அதனை தடுத்து விக்கட் காப்பாளர் நோக்கி வீசுகிறார்.

அதற்கிடையில் தனது முதலாவது ஓட்டத்தை நிறைவு செய்த பென் ஸ்டொன் இரண்டாவது ஓட்டத்திற்காக ஓடிக்கொண்டிருந்த வேளையில் அவரின் உடலில் மோதுண்ட பந்து மீண்டும் எல்லைக் கோட்டினை நோக்கி சென்று ஒரு பந்துக்கு 6 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தது.

அதாவது பென் ஸ்டொக் இரண்டு ஓட்டங்களையும் உதிரிகளாக நான்கு ஓட்டங்களும் கிடைக்கப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

எல்லைக்கோட்டிலிருந்து விக்கட் நோக்கி வீசப்பட்ட பந்தினை தாம் திட்டமிட்டு தனது உடலில் எதிர்கொள்ளவில்லை எனவும் தன்னிச்சையாக நடைபெற்றது எனவும் விளக்கமளித்து இங்கிலாந்து அணியின் சகல துறை ஆட்டக்காரர் பென் ஸ்டொன் நியுசிலாந்து அணியின் தலைவர் கென் வில்லியம்சனிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

http://www.hirunews.lk/tamil/sports/220328/உலக-கிண்ணத்தை-வென்ற-இங்கிலாந்து-அணி-மன்னிப்பு-கோரியது-நியுசிலாந்திடம்

பென் ஸ்டொக் இரண்டாவது ஓட்டத்தை நிறைவு செய்வதற்கு முன்பதாகவே கப்டிலால் எறியப்பட்ட பந்து பென் ஸ்டொக்கின் மட்டையில் பட்டு நான்கு ஓட்டங்களுக்கான எல்லையை அடைந்ததனால் ஐந்து ஓட்டங்களை மாத்திரமே வழங்க முடியும் என விமர்சகர்கள் கொந்தளித்துள்ளதோடு, வெற்றியானது நியூசிலாந்து அணிக்கு உரியது என சுட்டிகாட்டியுள்ளதுடன், நடுவா்களின் தீா்ப்பு தவறானது எனவும் குறிப்பிட்டுள்ளனா்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.