Jump to content

தமிழகத்தில் இந்திய வம்சாவளி இலங்கை அகதிகள் ; திருப்புமுனையாக அமைந்த ஒரு நீதிமன்றத்தீர்ப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் இந்திய வம்சாவளி இலங்கை அகதிகள் ; திருப்புமுனையாக அமைந்த ஒரு நீதிமன்றத்தீர்ப்பு

 

கலாநிதி வி.சூரியநாராயன்

தமிழகத்தில் உள்ள அகதி முகாம்களில் தங்கியிருக்கும் சுமார் 25,500 இந்திய வம்சாவளி தமிழ் அகதிகளின் எதிர்காலம் மீது பரந்தளவு பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய வரவேற்கத்தக்க தீர்ப்பொன்றை 17 ஜூன் 2019 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைங்கிளையின் நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் வழங்கியிருந்தார்.

INDIA_-_1027_-_Campi_profughi_Tamil.jpg

தங்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படவேண்டும் என்று இந்த அகதிகள் செயதிருக்கும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்யவேண்டும் என்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த தீர்ப்பில் நீதிபதி இந்திய அரசாங்கத்தை அறிவுறுத்தியிருந்தார்.

     இந்தியக்குடியுரிமைக்கு விண்ணப்பம் செய்த 65 அகதிகளும் திருச்சியில்உள்ள கொட்டப்பட்டு முகாமில் வசிக்கிறார்கள்.அவர்கள் தங்கள் விண்ணப்பங்களை உள்ளாட்சி அதிகாரிகளிடம் கையளித்திருந்தார்கள். இந்த விண்ணப்பங்கள் புதுடில்லிக்கு  அனுப்பிவைக்கப்படவில்லை. ஏனென்றால் அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதில்லை என்பது புதுடில்லியின் கொள்கையாக இருக்கிறது.வழமைநிலை திரும்பும்போது அகதிகள் தங்கள் தாயகத்துக்கு திரும்பிச்செல்வார்கள் என்ற நிலைப்பாட்டை புதுடில்லி கொண்டிருக்கிறது.

    இயல்புநிலைக்கு மாறான ஒரு  சூழ்நிலை முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டியதாக இருக்கிறது.இந்தியா இதுவரையில் தேசிய அகதிச்சட்டம் ஒன்றை இயற்றவில்லை.அதனால், அகதி என்ற பதம் வரையறைசெய்யப்படவில்லை.அதேவேளை, 1983 ஜூலை இனவன்செயல்களைத் தொடர்ந்து இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு பெரும் எண்ணிக்கையில் ஓடிவந்த தமிழர்களுக்கு தன்னியல்பாகவே அகதிகள் அந்தஸ்து கொடுக்கப்பட்டது.

220px-Camp_for_Sri_Lankan_refugees_in_Ta

அவர்களுக்கு அகதி முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உணவு, மருந்துவகைகள், உறைவிடம், கல்வி மற்றும் உதவிக்கொடுப்பனவு வழங்கப்பட்டது. மேலதிகமாக, ஒரு வருமானத்தைப் பெற்றுக்கொள்வதற்கு வசதியாக முகாம்களுக்கு வெளியே சென்று அவர்கள் தொழில் பார்ப்பதற்கும் அனுமதிக்கப்பட்டது.

    ஆனால், தமிழ் அகதிகள் " சட்டவிரோத குடியேறிகளாக " கருதப்பட்டது கவலைக்குரிய விடயமாக இருந்தது. அதனால், 1955 ஆம் ஆண்டின் இந்தியக்குடியுரிமை சட்டத்தி்ன் 5 வது பிரிவின் கீழ் பதிவுசெய்வதற்கோ அல்லது 6 வது பிரிவின் கீழ் குடியுரிமை பெறுவதற்கோ  தகுதியுடையவர்களாக இருக்கவில்லை." மனுதாரர்கள்  தகுதிக்கு தேவையான சகல பிரமாணங்களையும் பூர்த்தி செய்தாலும் கூட அவர்கள் தங்களது உரிமையாக இநதியக்குடியுரிமையைக் கோரமுடியாது " என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாக இருந்தது.

    " இந்தியக் குடியுரிமை வழங்கக்கோரி இலங்கை அகதிகள் சமர்ப்பிக்கக்கூடிய விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படலாகாது " என்று இந்திய அரசாங்கத்திடமிருந்து தெளிவான அறிவுறுத்தல்கள் வந்திருப்பதாகக் குறிப்பிட்டு தமிழக அரசாங்கத்தின் ஙெயலாளர், புனர்வாழ்வுக்கான விசேட ஆணையாளருக்கு 7 நவம்பர் 2007 அன்று கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

        இடரார்ந்த நிலைவரத்துக்கு மத்தியிலும் நம்பிக்கை தரங்கூடிய சில அறிகுறிகள் தோன்றவே செய்கின்றன.ராஜீவ் காந்தி கொலைசெய்யப்பட்டதைத் தொடர்ந்து  அகதிகளை இலங்கைக்கு திருப்பியனுப்புவதில் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா கடும் உறுதியாக இருந்தார்.இலங்கைக்கு திரும்பிச்செல்லத் தயாராயிருப்பதாக படிவங்களில் கைச்சாத்திடுமாறு அகதிகளுக்கு கடுமையான நெருக்குதல்கள் பிரயோகிக்கப்பட்டன. 

z_p-10-Only-01.jpg

அகதிகளை அவர்களின் விருப்பத்துக்கு மாறாக இன்னொரு நாட்டுக்கு அனுப்பிவைக்கக்கூடாது என்று கூறும் மனிதாபிமான அகதி சட்டத்தின் அடிப்படைக் கோட்பாட்டை இந்தியா மீறுகின்றது என்று மனித உரிமைகள் அமைப்புகள் சுட்டிக்காட்டின. இதன் விளைவான அசௌகரியத்தை தவிர்க்குமுகமாக பிரதமர் பி.வி.நரசிம்மராவ் வெளியுறவுச் செயலாளர் முச்குந்த் துபேயி்ன் ஆலோசனையின் பேரில் சென்னையில் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகரின் அலுவலகம் ஒன்றை திறப்பதற்கு அனுமதி வழங்கினார்.அகதிகளை நாடு திருப்பியனுப்பும் நடவடிக்கைகள் அவர்களின் சுயவிருப்பின் பேரில் நடைபெறுகின்றது என்பதை அத்தாட்சிப்படுத்தும் ஆணை அந்த அலுவலகத்துக்கு வழங்கப்பட்டது.

    இலங்கைக்கு திரும்பிச்செல்ல மீண்டும் நிர்ப்பந்திக்கப்படக்கூடும் எனனறு அஞ்சிய அகதிகள் பரிகாரம் காண்பதற்கு உயர்நீதிமன்றத்தை நாடி மனுத்தாக்கல் செய்தனர். மனுதாரர்கள் வலுக்கட்டாயமாக நாடு திருப்பியனுப்பப்படப்போவதில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் 1994 ஆம் ஆண்டில் தீர்ப்பொன்றை வழங்கியது.

      மனுதாரர்கள் பற்றிய சில விடயங்கள் குறிப்பிடப்படவேண்டியவையாக இருக்கின்றன.இவர்கள் இ்லங்கையில்  பெருந்தோட்டப்பொருளாதாரம் அபிவிருத்திசெய்யப்பட்டபோது 19வது நூற்றாண்டில் இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட இந்திய தமிழ் தொழிலாளர்களின் வழித்தோன்றல்களே.அந்த தொழிலாளர்களின் உழைப்பும் வியர்வையும்தான் இலங்கையில் மலேரியா நோயின் தோற்றுவாயாக விளங்கிய மத்திய மலைநாட்டுக் காடுகளை ஒரு பசுமைப்பூமியாக மாற்றின.தேயிலை இறக்குமதி இலங்கைப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக மாறியது.

     இலங்கை 1948 ஆம் ஆண்டில் சுதந்திரம் பெற்றபோது இந்திய தமிழ் தொழிலாளர்கள் நிரந்தர குடியேறிகளாக மாறிவிட்டார்கள் அவர்கள் இலங்கைக் குடியுரிமையைப் பெறவிரும்பினார்கள்.ஆனால், துரதிர்ஷ்டவசமாக  சுதநந்திர இலங்ஙையின் முதலாவது பாராளுமன்றம் அவர்களது குடியுரிமைமையைப் பறித்து நாடற்றவர்களாக்கியது.நாடற்ற இந்த தமிழர்களின் பிரச்சினை இலங்கை -- இந்திய உறவுகளில் ஒரு நெருடலான விவகாரமாகமாறியது. 1964 சிறிமா -- சாஸ்திரி  ஒப்பந்தம், 1984 சிறிமா --  இந்திரா காந்தி ஒப்பந்தம் என்று மினிதாபிமானமற்ற இரு ஒப்பந்தங்களின் மூலமாக பெரும் எண்ணிக்கையான இந்திய தொழிலாளர்களு்கு இந்திய குடியுரிமை வழங்குவதற்கு புதுடில்லி தீர்மானித்தது.ஆனால், அந்த தொழிலாளர்களின் கருத்துகள் கேட்டறியப்படவில்லை. முதலில்  தாயகம் திரும்பியவர்கள் தமிழ்நாட்டில் பெரும் கஷ்டங்களுக்குள்ளானார்கள்.வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சியபோன்று, தமிழ்நாட்டவர்கள் இவர்களை இலங்கையர்கள் என்றே  அழைத்தார்கள்.இலங்கையில் மிக நீண்டகாலம் இவர்கள் வாழ்ந்தாலும்  இலங்கையர்கள் என்ற அந்தஸ்தை  ஒருபோதுமே பெற்றதில்லை.

    இந்திய வம்சாவளி தமிழர்கள் பற்றிய இன்னொரு அம்சம் இங்கு குறிப்பிடப்படவேண்டியதாகிறது. தேயிலைத்தோட்டங்கள் இலங்கையின் மத்திய பகுதியிலேயே இருக்கின்றன. தோட்டங்கள் சிங்களக் கிராமங்களினால் சூழப்பட்டிருக்கின்றன. தங்களது மீட்சிக்கு சுதந்திர தனித்தமிழ் ஈழம் ஒருபோதும் உதவப்போவதில்லை என்பதை இந்திய வம்சாவளி தமிழர்களுக்கு அவர்களது  புவியியல் அமைவிடம் புரியவைத்தது. சிங்களவர்களுடனான சுமுகமான உறவுகளிலேயே அவர்களது எதிர்காலம் தங்கியிருக்கிறது.

அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 1978 ஆம் ஆண்டில் அரசாங்கத்தில் இணைந்து தேர்தல்களின்போது ஐக்கிய தேசிய கட்சிக்கு முக்கியான ஆதரவை வழங்கியது. ஆனால்,  தமிழ் ஈழம் கோரிக்கையுடன் இந்திய வம்சாவளி தமிழர்கள் தங்களை அடையாளப்படுத்திிக்கொள்ளவில்லை என்றபோதிலும் அவர்களது அமைதியும் பாதுகாப்பும் உத்தரவாதப்படுத்தப்பட்டவையாக இருக்கவில்லை.1977,1981, 1983 ஆண்டுகளில் இடம்பெற்ற இனவன்முறைகளின்போது அவர்கள் படுமோசமாகப் பாதிக்கப்பட்டார்கள்.

V-Suryanarayan.jpg

    1983 வன்முறைகளுக்கு பிறகு அகதிகளாக தமிழ்நாட்டுக்கு வந்தவர்களே மனுதாரர்கள்.தங்களது உடமைகள் சகலதையும் விற்றுவிட்டு இந்திய பிரஜகளாகும் நம்பிக்கையில் தமிள்நாட்டுக்கு ஓடிவந்தார்கள். அவர்களது பிள்ளைகள் நாளடைவில் தமிழ்நாட்டவர்களை திருமழஞ்செய்திருக்கிறார்கள்.இலங்கையில் இருக்கும் தங்களது சமூகத்தவர்களுக்கு கிடைக்கின்றதையும் விட கூடுதலான அளவுக்கு மேம்பட்ட கல்வி தமிழ்நாட்டில் அவர்களுக்கு கிடைத்தது.திருச்சி கொட்டப்பட்டு முகாமில் தங்கியிருப்பவர்களுடன் நான் நடத்திய கலந்துரையாடலின்போது  " என்னதான் வந்தாலும் நாம் இலங்கைக்கு திரும்பிச்செல்லப்போவதில்லை " என்று அவர்கள் திரும்பத்திரும்பச் சொன்னதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

      இந்திய அரசாங்கம் அதன் அகதி கொள்கையை மீள்பரிசீலனை செய்துகொண்டிருக்கின்ற ஒரு நேரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையின் தீர்ப்பு வந்திருக்கிறது. அகதிகள் இந்திய குடியுரிமையை பெறுவதற்கு வகைசெய்யக்கூடிய குடியுரிமை திருத்தச்சட்டமூலம் ஒன்றை 2016 ஆம் ஆண்டில் புதுடில்லி அறிமுகப்படுத்தியது.பாகிஸ்தான்,  பங்களாதேஷ்,ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்த இந்துக்களுக்கு  இந்திய குடியுரிமை வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திரமோடி அளித்திருந்த உறுதிமொழியை அடிப்படையாகக் கொண்டதே இந்த சட்டமூலம்.ஆனால், குடியுரிமை வழங்கப்படுவதற்கு இந்துக்கள் மாத்திரம் தனித்து கருத்தில் எடுக்கப்படுவது பாரபட்சமானதாக அமையலாம் என்பதால் சட்டமூலம் குடியுரிமை வழங்கப்படக்கூடியவர்கள் என்ற உரிமையை ' ' 'முஸ்லிம் அல்லாத சிறுபான்மையிருக்கு ' என்று விரிவுபடுத்தியது.

ஆனால், தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்த  இலங்கையைச் சேர்ந்த இந்திய வம்சாவளி தமிழர்களுக்கு அந்த சட்டமூலத்தை  பிரயோகிக்க இயலாது என்பது அதன் மிகவும் துரதிர்ஷ்டமான ஒரு பகுதியாகும்.அத்துடன் முன்னர் சுட்டிக்காட்டியதைப் போன்று 1955 குடியுரிமைச்சட்டத்தின் கீழ் இந்திய குடியுரிமையைப் பெறுவதற்கான சகல தகுதிகளையும் அவர்கள் பூர்த்திசெய்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது. 

    சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை அதன் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பில் இந்தய குடியுரிமை சட்டத்துக்கான உத்தேச திருத்தம் பற்றி குறிப்பிடாதது துரதிர்ஷ்டவசமானதாகும்.பங்களாதேஷ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானிலிருந்து வந்த முஸ்லிம் அல்லாத அகதிகள் இனிமேல் சட்டவிரோத குடியேற்றவாசிகள் என்று நடத்தப்படமாட்டார்கள் என்றும் அவர்கள் இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்  என்றும் அந்த திருத்தம் தெட்டத்தெளிவாக கூறுகிறது. குடியுரிமைத் திருத்தச்  சட்டமூலத்தில் உள்ளடக்கப்படுகின்ற நாடுகளில் இலங்கையையும் சேர்க்குமாறு இந்திய மத்திய அரசாங்கத்தை அறிவுறுத்தக்கோரி மனுதாரர்களினால் மனு ஒன்றைத் தாக்கல்செய்ய இயலுமாக இருந்தால் அது மிகவும் நல்லதொரு விடயமாக இருக்கும்.இன்று அச்சத்துக்கும் எதிர்பார்ப்புக்கும் இடையில் வாழ்ந்துகொண்டிருக்கும் இலங்கையைச் சேர்ந்த " குரலற்றவர்களின் குரலுக்கு " இந்திய பிரதமரும் மத்திய உள்துறை அமைச்சரும் சாதகமான முறையில் செவிமடுப்பார்களா? 

( சூரியநாராயன் சென்னை பல்கலைக்கழகத்தின் தெற்கு மற்றும் தெற்காசிய கற்கைகளுக்கான நிலையத்தின் தாபக பணிப்பாளரும் ஓய்வுபெற்ற பேராசிரியருமாவார் )

 

https://www.virakesari.lk/article/60429

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.