Jump to content

கதிர்காமம்..... #உலக_முஸ்லிம் வரலாற்றின்_உன்னத_அடையாளம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் ஊவா மாகாணத்தின் மொனரகல மாவட்டத்தில் அமைந்துள்ளதும், கொழும்பில் இருந்து 228 KM தூரத்தில் உள்ள இடமே கதிர்காமம். இது இலங்கையின் நான்கு இன மக்களாலும் புனிதமாக மதிக்கப்படும் பிரதேசம், இதில் பல்வேறு சமய நம்பிக்கைகளும், வரலாறுகளும், வழிபாடுகளும் இடம்பெறுகின்றன, ஒவ்வொருவரும் தமக்கான இடமாக இதனைக் கருதுகின்றனர்...

ஆனால் குறித்த பதிவு கதிர்காமம் பற்றிய முஸ்லிம் ,பூர்வீக வரலாற்று ஆதாரங்களையும், வழக்காறுகளையுமே ஆராய்கின்றது,

#கதிர்காமம்_என்ற_பெயர்..

இவ் இடம் பாளி மொழியில் 'கஜரகம' என மகாவம்சத்தில் உள்ளது, அதே போல் சிங்களத்தில் 'கட்டரகம, தமிழில் கதிர்காமம், என அழைக்கப்படுகின்றது, ஆனால் இது அறபு மொழியில் "ஹிழ்ரகம் " என்று அழைக்கப்படுகின்றது இதன் அர்த்தம் ஹிழ்ர் இன் வசிப்பிடம் என்பதாகும், அந்தவகையில் ஹிழ்ர் நபி, எனவும், இறைநேசர் எனவும் அறியப்படும் ஹிழ்ர் அவர்களின் இடம் என்றே இஸ்லாமிய வரலாறு இவ் இடத்தை கூறுகின்றது,

#புராதனம்

குறித்த இடம் 125000 ஆண்டுகளுக்கு முந்திய மெசோலிதிக் கற்கால வேடுவ வழிபாட்டுக்குரிய ஆதாரங்களைக் கொண்ட இடம் என தொல்பொருள் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன, பௌத்தர்களின் இங்குள்ள கிரிவெஹர கிமு, 1ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கருதப்படுகின்றது,

இஸ்லாமிய அறிஞர்களின் கருத்தில் ஆதம் அலை அவர்களின் வருகையுடன் தொடர்புடைய பல நபிமார்களின் வாழ்வுடன் இந்த இடம் தொடர்பு பட்டுள்ளது, முஹம்மது நபிக்கு முன்னரே பல நபிமார் இங்கு வந்ததாக நம்பப்படுகின்றது,

#யார்_இந்த_ஹிழ்ர்??

ஹிழ்ர் என்றால் பச்சை மனிதன் (Green man) என்பது அர்த்தம், இவர் ,ஒரு இறை நேசர், மூஸா எனப்படும் Moses இன் ஆசிரியர், அல்குர்ஆனின் #சூறதுல்_கஹ்ப்(The cave) எனும் அத்தியாயத்தில் இவர்பற்றிய ஆதாரங்கள் உண்டு, இவர் இயற்கையோடு வாழ்ந்த புனித மனிதர், இவரது இறை நேசத்தால் இறைவன் இவருக்கு "#மாஉல்_ஹயாத் " எனும் நிரந்தர வாழ்வை பரிசளித்தான்,

பாரசீக, துருக்கி,ஈராக் பாகிஸ்த்தானிய இலக்கியங்களில், உயிரினங்களின் நேசராக இவர் கருதப்படுகின்றார், மயில், சேவல், மீன் என்பன இவரது அடையாளங்களாகவும் கூறப்பட்டுள்ளது, இவர் இன்றும் உயிரோடு இருப்பதாகவும் இவரை #ஹயாத்து_நபி அப்பா என சாதாரண மக்கள் அழைக்கின்றனர் இன்னல்களின் போது அழைக்கின்ற வேளை ஆஜராவதாகவும் இன்றும் மக்கள் , நம்புகின்றனர்,

#ஸ்கந்தர்_எனும்_பெரியார்,

இந்து மரபிலும், பௌத்தத்திலும், ஸ்கந்தர், (ஸ்கந்த வழிபாடு) என அழைக்கப்படும் புனிதர், அறபிய வரலாற்றில் சிக்கந்தர் என அழைக்கப்படுகின்றார், இந்த சிக்கந்தரையே அல்குர்ஆன் துல்கர்னைன் நபி என அழைக்கின்றது, இவரை கிறிஸ்த்தவ வரலாறு Alexander the Great( கிமு,356-323) என அழைக்கின்றது,

இந்த சிக்கந்தர் எனப்படும் துல்கர்னைன் இந்த முழு உலகத்தையே ஆட்சி செய்தவர், அவருக்கு ஹிழ்ர் நபியின் உதவி தேவைப்பட்டிருக்கின்றது, அவரும் மரணமற்ற நிரந்தர வாழ்விற்காக முயற்சித்து,நிரந்தர உயிர்நீர் அதிசயத்தை அறிய ஹிழ்ருடன் இணைந்து பயணம் செய்து அவர்கள் இருவரும் தங்கி இருந்த இடமாகவும் இந்த கதிர்காமம் கருதப்படுகின்றது, இங்குதான் கருவாடாக இருந்த மீனை உயிர்ப்பித்தாகவும் நம்பப்படுகின்றது,

#கொடியேற்றமும், #மக்கள்_வருகையும்,

இங்குள்ள ஹிழ்ர் மகாம் எனும் இடத்திலும், பக்கீர்மடத்திலும் புனித நாட்களில் கொடி ஏற்றப்படுவதுடன், பல்லின மக்களும் ஒன்றிணைகின்றனர், அத்தோடு இந்த இடத்தில் முஸ்லிம்களின் நீண்டகால பல சியாறங்களும் பண்பாடும் உண்டு,

இது பற்றி 1870 ல் ஹம்பாந்தோட்டைக்கு அரசாங்க அதிபராக இருந்த Hudson அவர்களது பல எழுத்து ஆவணங்கள் உண்டு, அவர் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும், குறிப்பாக கிழக்கு மாகாண முஸ்லிம்கள் கால்நடையாகவும், பல வழிகளிலும் வந்து இந்த இடத்தில் உள்ள கங்கையில், குளித்து, அருந்தி மகிழ்வதாக குறிப்பிடுகின்றார் அதேபோல் இன்றுள்ள மாணிக்க கங்கையின் புனிதம் "மாஉல் ஹயாத் என்பதில் இருந்து தொடர்பு படுகின்றது என்ற நம்பிக்கையும் உண்டு,

#பால்குடிபாவா_சியாறம்

கதிர்காமத்தில் புனிதராக கருதப்படும் பால்குடிபாவா தொடர்பான பல அதிசயங்களை பல்லின மக்களும் நம்புகின்றனர், அதனால் காலா காலம் அவர் தத் தமது சமய மரபுகளுக்கு உரியவர் என உரிமை கோரப்படுவதுமுண்டு, அந்த வகையில் இதுபற்றி1991 ல்September 26 அன்று முஸ்லிம் தலைவர் Dr, MC Kaleel அவர்கள் டெய்லி நியூஸ் பத்திரிகையில் தட்டர்கிரி சுவாமி அவர்களுக்கு எழுதிய மறுப்பறிக்கை மிகவும் ஆதார பூர்வமானது, அதில் பால்குடி பாவா முஸ்லிம் சூபித்துவ மரபிற்குரியவர் என்பதற்கான பல ஆதாரங்களை அவர் முன்வைக்கின்றார்

#இருப்பியல்_ஆதாரம்

கதிர்காமம் இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் உரிய புனித இடமாக இருக்கின்ற அதே வேளை முஸ்லிம்களைப் பொறுத்தவரை, ஆதம் நபி தொடக்கம் பல நபிமார்களினதும், பல அற்புதங்களினதும், இறை நேசர்களினதும் உறைவிடமாகவும் அது உள்ளது.

அந்த வகையில் இந்த நாட்டில் எமது இருப்பிற்கும், ,உலக வரலாற்றில் இஸ்லாத்தின் தோற்றத்திலும் மிக முக்கிய இடமாக இருந்திருக்கின்
றது அதனைப் பாதுகாப்பதும், அதன் வரலாற்றை உயிர்ப்பிப்பதும், எமது கட்டாய கடமை மட்டுமல்ல, எமது சமயத்தின் தோற்றத்தின் பல சம்பவ இடங்களைக் பாதுகாத்த நன்மையையும் நமக்குத் தரும்

#எதிர்கால_நடவடிக்கை,

இதுபோன்ற பல இடங்களை சமய தூய்மைவாதிகளின் பிழையான வழிகாட்டல்களினால் முஸ்லிம்கள் இலங்கையில் கைவிட்டு வந்துள்ளனர், ஆனால் இனியும் இவ்வாறான இடங்களைக் கவனிக்காமல் விடுவது எமது எதிர்கால இருப்பிற்கான பாரிய அச்சுறுத்தலாக அமையும், எனவே தான் இவ்வாறான இடங்களுக்கு விஜயம் செய்வதுடன், இவை தொடர்பான ஆய்வுகளையும் மேற்கொண்டு, எமது எதிர்கால சந்த்தியினரும் இவ்வரலாறுகளை அறிந்து தமது இருப்பை உறுதிப்படுத்திக்கொள்ள அனைவரும் ஒன்று பட்டு உதவ வேண்டியது எமது கட்டாய கடமையாகும்,

அத்துடன் இவ்வாறான இடங்களில் இடம்பெறும் நிகழ்வுகளிலும், விழாக்களிலும் கலந்து கொள்வது இலங்கையர் என்ற அடிப்படையில் சிங்கள, தமிழ், வேடுவ மக்களுடன் எமது உறவைப் பலப்படுத்துவதற்கான நல்லதொரு சந்தர்ப்பமாக அமைவதுடன் , எமது சமயத்தின் புராதன இடத்தையும் பார்வை இட்ட, பாதுகாத்த பெருமையையும்,சந்தோசத்தையும் எமக்குத் தரும் அத்தோடு எமது எதிர்கால சந்த்தியினருக்கான உதவியாகவும் அது அமையும் .

#எமது_புராதனங்களைப்_பாதுகாப்போம், #இலங்கையில்_எம்_இருப்பை #உறுதிப்படுத்துவோம்.

நன்றி முகனூல்

MUFIZAL ABOOBUCKER
SENIOR LECTURER
DEPARTMENT OF PHILOSOPHY
UNIVERSITY OF PERADENIYA
14:07:2019

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் கடவுளான முருகனுக்கு என்னமா விளக்கம்.

இலங்கைக்கும் இஸ்லாத்துக்கும் என்ன சம்பந்தம்?! இங்க வந்து மதம்மாற்றி குடிபெருகிற்று என்னமா புலுடா விடுறாங்க!
அதுவும் சிரேஷ்ட விரிவுரையாளர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/15/2019 at 1:52 PM, colomban said:

இலங்கையின் ஊவா மாகாணத்தின் மொனரகல மாவட்டத்தில் அமைந்துள்ளதும், கொழும்பில் இருந்து 228 KM தூரத்தில் உள்ள இடமே கதிர்காமம். இது இலங்கையின் நான்கு இன மக்களாலும் புனிதமாக மதிக்கப்படும் பிரதேசம், இதில் பல்வேறு சமய நம்பிக்கைகளும், வரலாறுகளும், வழிபாடுகளும் இடம்பெறுகின்றன, ஒவ்வொருவரும் தமக்கான இடமாக இதனைக் கருதுகின்றனர்...

ஆனால் குறித்த பதிவு கதிர்காமம் பற்றிய முஸ்லிம் ,பூர்வீக வரலாற்று ஆதாரங்களையும், வழக்காறுகளையுமே ஆராய்கின்றது,

#கதிர்காமம்_என்ற_பெயர்..

இவ் இடம் பாளி மொழியில் 'கஜரகம' என மகாவம்சத்தில் உள்ளது, அதே போல் சிங்களத்தில் 'கட்டரகம, தமிழில் கதிர்காமம், என அழைக்கப்படுகின்றது, ஆனால் இது அறபு மொழியில் "ஹிழ்ரகம் " என்று அழைக்கப்படுகின்றது இதன் அர்த்தம் ஹிழ்ர் இன் வசிப்பிடம் என்பதாகும், அந்தவகையில் ஹிழ்ர் நபி, எனவும், இறைநேசர் எனவும் அறியப்படும் ஹிழ்ர் அவர்களின் இடம் என்றே இஸ்லாமிய வரலாறு இவ் இடத்தை கூறுகின்றது,

#புராதனம்

குறித்த இடம் 125000 ஆண்டுகளுக்கு முந்திய மெசோலிதிக் கற்கால வேடுவ வழிபாட்டுக்குரிய ஆதாரங்களைக் கொண்ட இடம் என தொல்பொருள் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன, பௌத்தர்களின் இங்குள்ள கிரிவெஹர கிமு, 1ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கருதப்படுகின்றது,

இஸ்லாமிய அறிஞர்களின் கருத்தில் ஆதம் அலை அவர்களின் வருகையுடன் தொடர்புடைய பல நபிமார்களின் வாழ்வுடன் இந்த இடம் தொடர்பு பட்டுள்ளது, முஹம்மது நபிக்கு முன்னரே பல நபிமார் இங்கு வந்ததாக நம்பப்படுகின்றது,

#யார்_இந்த_ஹிழ்ர்??

ஹிழ்ர் என்றால் பச்சை மனிதன் (Green man) என்பது அர்த்தம், இவர் ,ஒரு இறை நேசர், மூஸா எனப்படும் Moses இன் ஆசிரியர், அல்குர்ஆனின் #சூறதுல்_கஹ்ப்(The cave) எனும் அத்தியாயத்தில் இவர்பற்றிய ஆதாரங்கள் உண்டு, இவர் இயற்கையோடு வாழ்ந்த புனித மனிதர், இவரது இறை நேசத்தால் இறைவன் இவருக்கு "#மாஉல்_ஹயாத் " எனும் நிரந்தர வாழ்வை பரிசளித்தான்,

பாரசீக, துருக்கி,ஈராக் பாகிஸ்த்தானிய இலக்கியங்களில், உயிரினங்களின் நேசராக இவர் கருதப்படுகின்றார், மயில், சேவல், மீன் என்பன இவரது அடையாளங்களாகவும் கூறப்பட்டுள்ளது, இவர் இன்றும் உயிரோடு இருப்பதாகவும் இவரை #ஹயாத்து_நபி அப்பா என சாதாரண மக்கள் அழைக்கின்றனர் இன்னல்களின் போது அழைக்கின்ற வேளை ஆஜராவதாகவும் இன்றும் மக்கள் , நம்புகின்றனர்,

#ஸ்கந்தர்_எனும்_பெரியார்,

இந்து மரபிலும், பௌத்தத்திலும், ஸ்கந்தர், (ஸ்கந்த வழிபாடு) என அழைக்கப்படும் புனிதர், அறபிய வரலாற்றில் சிக்கந்தர் என அழைக்கப்படுகின்றார், இந்த சிக்கந்தரையே அல்குர்ஆன் துல்கர்னைன் நபி என அழைக்கின்றது, இவரை கிறிஸ்த்தவ வரலாறு Alexander the Great( கிமு,356-323) என அழைக்கின்றது,

இந்த சிக்கந்தர் எனப்படும் துல்கர்னைன் இந்த முழு உலகத்தையே ஆட்சி செய்தவர், அவருக்கு ஹிழ்ர் நபியின் உதவி தேவைப்பட்டிருக்கின்றது, அவரும் மரணமற்ற நிரந்தர வாழ்விற்காக முயற்சித்து,நிரந்தர உயிர்நீர் அதிசயத்தை அறிய ஹிழ்ருடன் இணைந்து பயணம் செய்து அவர்கள் இருவரும் தங்கி இருந்த இடமாகவும் இந்த கதிர்காமம் கருதப்படுகின்றது, இங்குதான் கருவாடாக இருந்த மீனை உயிர்ப்பித்தாகவும் நம்பப்படுகின்றது,

#கொடியேற்றமும், #மக்கள்_வருகையும்,

இங்குள்ள ஹிழ்ர் மகாம் எனும் இடத்திலும், பக்கீர்மடத்திலும் புனித நாட்களில் கொடி ஏற்றப்படுவதுடன், பல்லின மக்களும் ஒன்றிணைகின்றனர், அத்தோடு இந்த இடத்தில் முஸ்லிம்களின் நீண்டகால பல சியாறங்களும் பண்பாடும் உண்டு,

இது பற்றி 1870 ல் ஹம்பாந்தோட்டைக்கு அரசாங்க அதிபராக இருந்த Hudson அவர்களது பல எழுத்து ஆவணங்கள் உண்டு, அவர் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும், குறிப்பாக கிழக்கு மாகாண முஸ்லிம்கள் கால்நடையாகவும், பல வழிகளிலும் வந்து இந்த இடத்தில் உள்ள கங்கையில், குளித்து, அருந்தி மகிழ்வதாக குறிப்பிடுகின்றார் அதேபோல் இன்றுள்ள மாணிக்க கங்கையின் புனிதம் "மாஉல் ஹயாத் என்பதில் இருந்து தொடர்பு படுகின்றது என்ற நம்பிக்கையும் உண்டு,

#பால்குடிபாவா_சியாறம்

கதிர்காமத்தில் புனிதராக கருதப்படும் பால்குடிபாவா தொடர்பான பல அதிசயங்களை பல்லின மக்களும் நம்புகின்றனர், அதனால் காலா காலம் அவர் தத் தமது சமய மரபுகளுக்கு உரியவர் என உரிமை கோரப்படுவதுமுண்டு, அந்த வகையில் இதுபற்றி1991 ல்September 26 அன்று முஸ்லிம் தலைவர் Dr, MC Kaleel அவர்கள் டெய்லி நியூஸ் பத்திரிகையில் தட்டர்கிரி சுவாமி அவர்களுக்கு எழுதிய மறுப்பறிக்கை மிகவும் ஆதார பூர்வமானது, அதில் பால்குடி பாவா முஸ்லிம் சூபித்துவ மரபிற்குரியவர் என்பதற்கான பல ஆதாரங்களை அவர் முன்வைக்கின்றார்

#இருப்பியல்_ஆதாரம்

கதிர்காமம் இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் உரிய புனித இடமாக இருக்கின்ற அதே வேளை முஸ்லிம்களைப் பொறுத்தவரை, ஆதம் நபி தொடக்கம் பல நபிமார்களினதும், பல அற்புதங்களினதும், இறை நேசர்களினதும் உறைவிடமாகவும் அது உள்ளது.

அந்த வகையில் இந்த நாட்டில் எமது இருப்பிற்கும், ,உலக வரலாற்றில் இஸ்லாத்தின் தோற்றத்திலும் மிக முக்கிய இடமாக இருந்திருக்கின்
றது அதனைப் பாதுகாப்பதும், அதன் வரலாற்றை உயிர்ப்பிப்பதும், எமது கட்டாய கடமை மட்டுமல்ல, எமது சமயத்தின் தோற்றத்தின் பல சம்பவ இடங்களைக் பாதுகாத்த நன்மையையும் நமக்குத் தரும்

#எதிர்கால_நடவடிக்கை,

இதுபோன்ற பல இடங்களை சமய தூய்மைவாதிகளின் பிழையான வழிகாட்டல்களினால் முஸ்லிம்கள் இலங்கையில் கைவிட்டு வந்துள்ளனர், ஆனால் இனியும் இவ்வாறான இடங்களைக் கவனிக்காமல் விடுவது எமது எதிர்கால இருப்பிற்கான பாரிய அச்சுறுத்தலாக அமையும், எனவே தான் இவ்வாறான இடங்களுக்கு விஜயம் செய்வதுடன், இவை தொடர்பான ஆய்வுகளையும் மேற்கொண்டு, எமது எதிர்கால சந்த்தியினரும் இவ்வரலாறுகளை அறிந்து தமது இருப்பை உறுதிப்படுத்திக்கொள்ள அனைவரும் ஒன்று பட்டு உதவ வேண்டியது எமது கட்டாய கடமையாகும்,

அத்துடன் இவ்வாறான இடங்களில் இடம்பெறும் நிகழ்வுகளிலும், விழாக்களிலும் கலந்து கொள்வது இலங்கையர் என்ற அடிப்படையில் சிங்கள, தமிழ், வேடுவ மக்களுடன் எமது உறவைப் பலப்படுத்துவதற்கான நல்லதொரு சந்தர்ப்பமாக அமைவதுடன் , எமது சமயத்தின் புராதன இடத்தையும் பார்வை இட்ட, பாதுகாத்த பெருமையையும்,சந்தோசத்தையும் எமக்குத் தரும் அத்தோடு எமது எதிர்கால சந்த்தியினருக்கான உதவியாகவும் அது அமையும் .

#எமது_புராதனங்களைப்_பாதுகாப்போம், #இலங்கையில்_எம்_இருப்பை #உறுதிப்படுத்துவோம்.

நன்றி முகனூல்

MUFIZAL ABOOBUCKER
SENIOR LECTURER
DEPARTMENT OF PHILOSOPHY
UNIVERSITY OF PERADENIYA
14:07:2019

 

roflphotos-dot-com-photo-comments-201710

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் எப்போதும் என்னை தேர்தல் விற்பனர் என்றோ - என் கணிப்புகள் திறம் என்றோ சொன்னதில்லை.  நான் என்ன லயலா கொலிஜா அல்லது இந்தியா டுடேயா? சர்வே எடுக்க. அல்லது சாத்திரக்காரனா🤣 நான் கணிக்கிறேன் என நீங்கள் எழுதுவதே சுத்த பைத்தியக்காரத்தனம். எல்லாரையும் போல் நான் என் கருத்தை எதிர்வுகூறலாக எழுதுகிறேன். அது என் கருத்து மட்டுமே. Pure speculation. அது சரி வரும், பிழைக்கும் - I don’t give a monkey’s.
    • சீமான் பேசுவ‌தை உள‌வுத்துறை தொட்டு ப‌ல‌ர் கேட்ப‌து உண்டு சீமான் தேர்த‌ல் ஆணைய‌த்தை ப‌ற்றி அவ‌தூறாக‌ பொய்யாக‌ பேசி விட்டார் என்று வ‌ழ‌க்கு தொடுக்க‌ வேண்டிய‌து தானே நீங்க‌ள் சொல்லுவ‌து ம‌ட்டும் உண்மை என்று எத‌ன் அடிப்ப‌டையில் ந‌ம்புவ‌து இத‌ற்க்கு உங்க‌ளால் ப‌தில் அளிக்க‌ முடியுமா.....................நேர்மையான‌வ‌ர்க‌ள் என்றால் நேர்மையின் ப‌டி தான் ந‌ட‌ப்பின‌ம் 2009க்கு முத‌ல் ஒரு முக‌ம் 2009க்கு பின் இன்னொரு முக‌ம் இதில் சீனானை ப‌ற்றி விம‌ர்சிப்ப‌து வெக்க‌க் கேடு.................... சீமான் ஊட‌க‌த்துக்கு கொடுத்த‌ பேட்டி அப்ப‌டியே இருக்கு அதை ப‌ல‌ ல‌ச்ச‌ம் பேர் பார்த்து இருக்கின‌ம் தேர்த‌ல் ஆணைய‌த்துக்கு சீமான் பேசின‌து தெரியாம‌ போகுமா அல்ல‌து உள‌வுத்துறை இப்ப‌டியான‌ விடைய‌த்தில் தூங்கி கொண்டு இருக்குமா ஜ‌ன‌நாய‌க‌ நாட்டின் தேர்த‌ல் ஆணைய‌த்தை சீமான் தேவை இல்லாம‌ அவ‌தூறாக‌ பொய்யாக‌ பேசி விட்டார் என்று சீமானை கைது செய்து இருக்க‌லாமே அல்ல‌து சீமான் பிர‌ச்சார‌ம் செய்ய‌க் கூடாது என்று த‌டை விதித்து இருக்க‌லாமே தேர்த‌ல் ஆனைய‌ம்........................பொல்லை கொடுத்து அடி வேண்ட‌ வேண்டாம்😁........................
    • இதுவரை பல தரம் கேட்டும் நீங்கள் பதில் சொல்லாத கேள்வி-  இவ்வளவு மோசமான தேர்தல் முறையில், எப்படியும் தோற்கடிப்பார்கள் என தெரிந்து, அதுவும் தனியே ஏன் 2016 இல் இருந்து போட்டியிட்டு மண்ணை கவ்வுகிறார்? பேசாமல் தேர்தலுக்கு அப்பால் இயக்கம் நடத்தலாமே? வாங்கோ என்னை வசைபாட எனவே வாழும் அகலிகை….சாரி யாழுக்கு வரும் கல்யாண். நான் கஜேஸ் கட்டுகாசு இழப்பார் என கூறவில்லை. நான் வெல்லமாட்டார்கள் என கூறிய அத்தனை தேர்தல்களிலும் அவர்கள் வெல்லவில்லை. கடந்த முறை சொன்னது போலவே யாழில் ஒரு சீட்டை எடுத்தார் பொன்னர். அம்பாறை மக்களை ஏமாற்றி அடுத்த சீட்டை 100 வாக்கு வித்தியாசத்தில் எடுத்தார் குதிரை கஜே.   நேற்று வைரவர் பூசை பலமோ?
    • மற்றவர்களிடம் கேள்வி கேட்கும் போதே நீங்களும் ஏதோ ஒரு ஐடியாவை வைத்துள்ளீர்கள் என நம்புகிறேன்.எடுத்து(துணிவாக) விடுங்கள் பார்க்கலாம். ஆப்பா  இல்லை காப்பா என பின்னர் பார்க்கலாம்.
    • உங்களுக்கு மேலே இருப்பது என் பதில். இப்போ யார் கோமாளி🤣 இதுவும் சீமான் ப்ரோ விட்டா இன்னொரு அவிட்டா. இல்லை என்றால் இப்படி தேர்தல் ஆணையம் சொன்ன ஆதாரம் எங்கே? அண்ணன் சொல்வதை எல்லாம் மொக்கு தம்பிகள் நம்பலாம். எல்லாரும் நம்ப தேவையில்லை. நீங்கள் ஏலவே என்னை 200 உபி என பல இடங்களில் எழுதிவிட்டீர்களே. எனக்கு ஒரு நற்பெயர் மீதும் ஆர்வம் இல்லை. அப்படி புற இருக்கோ இல்லையோ இ டோண்ட் கேர். இருந்தாலும் - சீமான் முகத்திரையை கிழிக்காமல் அந்த பெயரை தக்கவைப்பதிலும் பார்க்க கெட்ட பெயரே மேல்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.