Jump to content

சீனப் பொருளாதார வளர்ச்சி வேகத்தில் வீழ்ச்சி: 27 ஆண்டுகளில் மோசமான நிலை


Recommended Posts

இரண்டாவது காலாண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி மிகக் குறைந்த வேகத்தில் செல்கிறது. 1990களுக்குப் பிறகு சீனாவில் பொருளாதார வளர்ச்சி வேகம் இவ்வளவு குறைவாக இருப்பது இப்போதுதான் என்பதை அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

ஜூன் வரையிலான மூன்று மாதங்களில் சீனாவின் பொருளாதாரம் கடந்த ஆண்டைவிட 6.2 சதவீதம் வளர்ந்துள்ளது.

வளர்ச்சியைத் தூண்டும் வகையில் செலவீடுகளை ஊக்குவித்து, வரிக் குறைப்புகளையும் அறிமுகப்படுத்தியது சீனா.

அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகப் போர் சீனாவின் வணிக நலன்களையும், வளர்ச்சியையும் பாதித்துள்ளது.

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 6.4 சதவீதமாக இருந்த சீனாவின் வளர்ச்சி அடுத்த காலாண்டில் வேகம் குறைந்து 6.2 ஆகியிருக்கிறது.

இந்த புள்ளிவிவரங்கள் உள்நாடு மற்றும் வெளிநாட்டில் உள்ள சிக்கலான சூழ்நிலையைக் குறிக்கிறது என சீனாவின் தேசிய புள்ளிவிவர அமைப்பு கூறியுள்ளது.

மேலும் "இந்த ஆண்டின் முதல் அரையாண்டில் பொருளாதாரம் நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது. ஆனால் தற்போது கீழ்நோக்கிச் செல்வதற்கான அழுத்தத்தை சந்திக்கிறது" என்று அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

தரவுகள்

 

 

சீனா வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ ஜி.டி.பி. (மொத்த உள்நாட்டு உற்பத்தி) புள்ளிவிவரத்தின் நம்பகத்தன்மை குறித்து சீனாவை கவனித்து வருகிறவர்கள் ஐயத்தை வெளிப்படுத்துகின்றனர்.

வேறு சில தரவுகள் சீனாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடைவதற்கான அறிகுறிகள் இருப்பதாகக் கூறுகின்றன.

தொழில்துறை உற்பத்தி கடந்த ஆண்டை ஒப்பிடும்போது ஜூன் மாதம் 6.3 சதவீதம் வளர்ந்துள்ளது. அதேபோல் சில்லறை விற்பனை ஒவ்வொரு ஆண்டுக்கும் 9.8 சதவீதம் வளர்ந்துள்ளது. இரண்டுமே ராய்டர்ஸ் செய்த கணிப்பை விட அதிகம்.

உலக வர்த்தக தாக்கம்

சீனாவில் வளர்ச்சி வேகம் குறைவது, உலகப் பொருளாதாரத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கம் குறித்த கவலைகள் தோன்றியுள்ளன.

இந்த ஆண்டு தொடக்கத்தில் பொருளாதாரத்துக்கு உதவும் வகையில் செலவினங்களை அதிகரித்து, பல நூறுகோடி வரிகுறைப்பு செய்யும் திட்டத்தை அறிவித்தது சீனா. வங்கிகள் ரொக்க கையிருப்பு வைக்கவேண்டிய அளவைக் குறைத்து பணப்புழக்கத்தை ஊக்குவித்தது.

”மெதுவான பொருளாதார வளர்ச்சி வேகம் நீடிக்கிறது. மேலும் புதிய ஊக்குவிப்பு நடவடிக்கைகளை சீனாவின் மத்திய வங்கி அறிவிக்கும் என்று சந்தை எதிர்பார்க்கலாம்" என்பதை சமீபத்திய பொருளாதாரத் தரவுகள் காட்டுவதாக மூத்த சந்தை பகுப்பாய்வாளர் எட்வர்ட் மோயா கூறியுள்ளார்.

அமெரிக்காவுடனான வர்த்தகப் போரும் வளர்ச்சியைப் பாதிக்கிறது.

”வர்த்தகபோர் சீனாவின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பொருளுள்ள முன்னேற்றம் காண வணிகப் பேச்சுவார்த்தைகள் போராடுகின்றன. இந்நிலையில் இந்த வர்த்தகப் போருக்கு கண்ணுக்கெட்டிய தூரத்தில் முடிவு ஏதும் தெரியவில்லை. எனவே, சீனப் பொருளாதாரம் சந்திக்கக்கூடிய தரைமட்ட வீழ்ச்சி இன்னும் வந்துவிடவில்லை" என்கிறார் அவர்.

ஜப்பானில் நடந்த G-20 மாநாட்டில் சீனா- அமெரிக்கா என்ற இரு தரப்பும் வர்த்தகப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க ஒப்புக்கொண்டன. ஆனால், அதற்கு முன்பே இரு நாடுகளும் ஒன்றின் பொருள்கள் மீது மற்றொன்று பலநூறுகோடி டாலர் மதிப்புள்ள வரிகளைவிதித்து, வர்த்தகத்தைப் பாதித்துவிட்டன; அதனால், உலகப் பொருளாதாரத்தின் மீது இருள் படரத் தொடங்கிவிட்டது.

https://www.bbc.com/tamil/business-48989759

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

china-us.jpg

சீனப் பொருளாதாரம் மெதுவடைந்ததற்கும் வர்த்தக உடன்பாட்டுக்கும் தொடர்பில்லை – பீயிங்

சீனப் பொருளாதாரம் மெதுவடைந்ததற்கும், அமெரிக்கா உடனான வர்த்தக உடன்பாட்டுக்கும் தொடர்பில்லை என்பதைப் பீயிங் தெளிவுபடுத்தியுள்ளது.

சீனப் பொருளாதாரம் மெதுவடைந்திருப்பதால், அமெரிக்காவோடு அது வர்த்தக உடன்பாடு செய்துகொள்வது அவசியமாகிறது என்று, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நேற்று கூறியிருந்தார்.

சீன இறக்குமதிப் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள தடை, பீயிங்கைக் கடுமையாகப் பாதித்துள்ளது என்றும், ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் அதை மறுத்த பீயிங், அமெரிக்க ஜனாதிபதியின் கூற்று முற்றிலும் தவறானது என்றது. வர்த்தக உடன்பாட்டை இரு நாடுகளுமே செய்துகொள்ள விரும்புகின்றன என, சீன வெளியுறவு அமைச்சுப் பேச்சாளர் குறிப்பிட்டார். அது ஒருதரப்பு விருப்பம் மட்டுமல்ல என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.

சீனப் பொருளாதாரம், கடந்த 27 ஆண்டுகளில் முதன்முறையாக ஆகக் குறைவான வளர்ச்சி கண்டதாக நேற்று அறிவிக்கப்பட்டது. அது, இந்த வருடத்தின் இரண்டாம் காலாண்டில் 6.2 விழுக்காடு மட்டுமே வளர்ச்சி கண்டதாகப் பீயிங் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/சீனப்-பொருளாதாரம்-மெதுவட/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • https://online.srilankaevisa.lk/ யாராவது முயற்சி செய்து பார்த்தீர்களா? எனக்கு சரிவர வேலை செய்யவில்லை.
    • சர்கரை இல்லாங்கால்லிலுப்பை அஃதுபோல் சொல் ஒன்றின்றி நகைக்க லொல். உடான்ஸ்சுவாமி உரை எவ்வாறு சர்க்கரை இல்லாதவிடத்து, இனிப்பு சுவைக்கு இலுப்பை உபயோகிக்கப்படுகிறதோ, அதே போல,  சிரிப்பதை, நகைப்பு என சொல்லால் எழுதாமல், குறியீடாக லொல் எனவும் எழுதலாம்.  
    • வீசா பெறுவது இலகுவாக்கபடுவது முக்கியம். இழுபறி கூடாது. மற்றும்படி கட்ணங்கள் சம்மந்தமாக குறை சொல்ல ஏதும் இல்லை. அது எல்லாருக்கும் பொதுவானது தானே.  ஆனால் இங்கே என்ன கவனிக்கப்படவேண்டும் என்றால் நாங்கள் வீசா பெற்று சென்று இறங்கும்போது விமானநிலையத்தில் இலங்கை குடிவரவுப்பகுதி கையூட்டு/கைவிசேடம் கேட்டு எங்களுக்கு கரைச்சல் தரக்கூடாது. 
    • ஓம்….இடையிடே இச்சையின்றி வரும் yeah, தோள் குலுக்கல், கண் மேலே உருட்டல், பிறகு கடையில் வாய்தவறி £இல் விலை கேட்பது… எதையும் 100% மறைக்க முடியாது…. ஆனால் அப்பட்டமாய் ஜொலி ஜொலித்தால்…..ஏமாறும் சதவிகிதம் எகிறும். அதே போல் வெளிநாடு என தெரிந்தாலும், ஏமாற்ற முடியாது, விசயம், விலை தெரியும் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதும் கைகொடுக்கும். எந்த வளர்முக நாட்டுக்கு போனாலும் உதவும் உத்திகள்தானே இவை.     நன்றி🙏
    • நான் இதன் மறுவளமாகவே பார்க்கிறேன். அங்கே மண்னெணை, முதல், மா, சகலதும் மானிய விலையில்தான் மக்களுக்கு தரப்படுகிறது.  ஏன் என்றால் அதை விட கூட விலைக்கு விற்றால் அந்த மக்களால் வாங்க முடியாது. அதே போலவே வடையும். அங்கே இவற்றுக்கான விலை அந்த மக்களின் வாங்கு திறனை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் நாம் ஒரு பிரிதானியா வாங்கு திறனோடு போய், இலங்கை வாங்குதிறனுக்குரிய விலையில் பொருட்களை வாங்குவது - ஒரு வகையில் அந்த மக்களிடம் அடிக்கும் கொள்ளையே. ஆனால் எம் அந்நிய செலவாணி வரவால் அதை விட அதிகம் கொடுக்கிறோம் என்பதால் நன்மையே அதிகம். இது எல்லா 3ம் உலக நாட்டுக்கும் பொருந்தும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.