Jump to content

வலி வடக்கில் பல ஆலயங்கள் இராணுவத்தினர் வசமே உள்ளன


Recommended Posts

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் ஆட்சியில் கூட, யாழ். வலி வடக்கில் பல ஆலயங்கள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
 
யாழில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
 
இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர், யாழ் வலி வடக்கில் பல ஆலயங்கள் திறக்கப்படாமலும் ஒளியேற்றப்படாமலும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன.
 
கடந்த ஒக்டோபர் மாதம் இடம் பெற்ற ஆட்சி மாற்றத்தின்போது, போராடியே ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை கொண்டு வந்தோம்.
 
ஜனாதிபதிக்காக மக்களிடம் வாக்கு கேட்டு நாங்களே அவரை தெரிவு செய்தோம். 
 
ஆனால் அவரை ஆட்சிக்கு கொண்டு வந்தது, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கோ அல்லது ஆலயங்களை மூடுவதற்கோ அல்ல.
 
எனவே வடக்கில் மூடப்பட்டுள்ள ஆலயங்கள் திறக்கப்பட வேண்டும். அதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார்.  
 

 

இந்துமதம் சார்ந்து ஐந்து முத்திரைகள் வெளியிடப்படும்-ஆளுநர் ராகவன் உறுதி

இந்து சமய மக்களின் ஐந்து முக்கிய ஸ்தலங்களைக் குறிக்கும் முத்திரைகளை வெளியிடவுள்ளதாக வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.
 
யாழில் நேற்றையதினம் நீராவியடி இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியில் இடம்பெற்ற இந்துக் கோயில்களுக்கான நிதிஉதவி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
அவர் மேலும் தெரிவிக்கையில் ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய எதிர்வரும் மாதம் வெளியிடத் தீர்மானித்துள்ளோம்.
 
வடமாகாணத்தில் உள்ள இந்துக்களின் முக்கிய ஸ்தலங்களாகக் கருதப்படும் விடயங்களை இந்து அமைப்புக்கள், நல்லை ஆதீனம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பரிந்துரைகளை முன் வைக்கலாம்.
 
தமிழ்க் கடவுளாகப் பேற்றப்படுகின்ற வள்ளுவப்பெருமானின் முத்திரையைக் கூட வெளிடத்தயாராக உள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.       
 

 

இந்து தேசிய மகா சபையை உருவாக்கியே தீருவேன்-யாழில் மனே கணேசன் சபதம்

இலங்கையிலுள்ள 25 மாவட்டங்களிலும் வாழும் இந்துக்களை உள்ளடக்கி நிறுவனமயப்படுத்தப்பட்ட இலங்கை இந்து தேசிய மகா சபையை உருவாக்கியே தீருவேன்.
 
 என தேசிய ஒருமைப்பாடு அரசகரும மொழிகள் சமூக முன்னேற்றம் மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் யாழில் தெரிவித்தார்.
 
நேற்றையதினம் யாழ் நீராவியடி இலங்கை வேந்த மன்றத்தில் இடம்பெற்ற வடமாகாண இந்து ஆலயங்களுக்கான நிதி வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
அவர் மேலும் தெரிவிக்கையில் ஆதியும் அந்தமும் இல்லாத இந்து மதம் இதுவரை காலமும் நிறுவனமயப்படுத்தபடாமல் கட்டுக் போப்பின்றி காணப்பட்டு வருவதாகவும் இதை ஓர் நிறுவன அமைப்பின் கீழ் கொண்டுவருவதற்கு தன்னால் ஆன பணியைச் செய்யத் தயாராக உள்ளதாகத் தெரிவித்தார்.
 
திருகோணமலைக் கன்னியாப் பிள்ளையார் ஆலயம், முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயம், மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வளைவு ஆகிய வற்றில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பில் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று ஆராய்ந்தேன்.
 
திருகோணமலை கன்னியா பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதியுடனும் பிரதமருடனும் பேசியிருக்கிறேன்.
 
இதன் பயனாக ஜனாதிபதியன்  மேலதிக செயலாளர் திருகோணமலை மாவட்ட செயலாளருக்கு குறித்த ஆலயம் வளவினுள் பௌத்த விகாரை கட்டுவதை நிறுத்த வேண்டும் என உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
 
அது மட்டுமல்லாமல் நானும் திருகோணமலை மாவட்ட செயலாளருக்கு தொலைபேசி ஊடாகத்  தொடர்பு கொண்டு எடுக்கப்பட்ட தீர்மானங்களை மீள செயற்பட்டால் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு நீங்கள்தான் பொறுப்பேற்க வேண்டு மெனவும் கூறியிருக்கிறேன்.
 
இவ்வாறான நிலையில் அமைச்சர் மனோ கணேசன் தான் இந்து மதம் எதிர்நோக்குகின்ற பிரச்சினைக்கு பொறுப்பேற்க வேண்டுமெனச் சிலர் வீரவசனம் பேசுகிறார்கள்.
 
அவ்வாறானவர்களுக்கு நான் ஒரு விடையத்தை கூற விரும்புகிறேன் உண்மையில் நாட்டையும் நாட்டு மக்களையும் நேசிக்கின்றவர்கள் இருந்தால் கட்சிகளின் வர்ணங்களை மறந்து சேவையாற்ற வாருங்கள் இல்லையென்றால் எம்மை வம்புக்கு இழுக்கலாம் அடி பணிந்து போவதற்கு நான் தயாராக இல்லை என அமைச்சர் மனோ மேலும் தெரிவித்தார்.   
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.