Jump to content

இலங்கைக்கு முக்கிய எச்சரிக்கை விடுக்கும் சீனா!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Sl-and-China-flag.jpg

இலங்கைக்கு முக்கிய எச்சரிக்கை விடுக்கும் சீனா!

அந்நிய சக்திகளின் தலையீடுகள் குறித்து இலங்கை விழிப்புடன் இருக்க வேண்டுமென இலங்கைக்கான சீனத் தூதுவர் செங் ஷி யுவான் எச்சரித்துள்ளார்.

அவர் நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, “சீனா, இலங்கை போன்ற நாடுகள் மேற்கத்திய சக்திகளின் ஆதிக்கத்தின் கீழ் பொதுவான வரலாற்றைக் கொண்டவை.

எனவே அந்நிய சக்திகளின் தலையீடுகள் குறித்து எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

இத்தகைய தலையீடுகள் சிக்கல்கள் மற்றும் பேரழிவுகளைத் தருமே தவிர ஒருபோதும் நன்மைகளைத் தராது.

சுயாதீனமான மற்றும் அமைதியான இராஜதந்திர கொள்கைகளை கடைபிடிக்கும் சீனா, ஒருபோதும் மற்றவர்களின் உள் விவகாரங்களில் தலையிடாது. அத்தகைய தலையீடுகளை கடுமையாக எதிர்க்கின்றது.

நாம் எப்போதும் சுதந்திரத்தை வலியுறுத்த வேண்டும். வெளிப்புற தலையீடுகளுக்கு எதிராக போராட வேண்டும். சொந்தமாக முடிவுகளை எடுக்க வேண்டும். இந்த வழியில் மட்டுமே நாம் சரியான திசையை நோக்கிச் சென்று பிரகாசமான எதிர்காலத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

http://athavannews.com/இலங்கைக்கு-முக்கிய-எச்சர/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

இந்த வழியில் மட்டுமே நாம் சரியான திசையை நோக்கிச் சென்று பிரகாசமான எதிர்காலத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

எங்கப்பா....பிரகாசிக்குது...?

வட்டியும்....குட்டியும் மட்டும் தானே வளருது...!😌

Link to comment
Share on other sites

சீனாவின் கடன் பல நாடுகளில் அதன் அரசியல் ஆதிக்கத்தை வளர்த்து வருகின்றது. இந்த கடன்கள் அமெரிக்க, இந்திய கடன்கள் போல அல்லாது மக்கள் பார்த்து அனுபவித்து பயன்பெறும் கடன்கள் : பாலங்கள், துறைமுகங்கள், வீதிகள், கட்டிடங்கள். அதனால், மக்கள் சீன அரசை விரும்புகிறார்கள்.

அமெரிக்கா, ஆசியாவால் சீனாவின் ஆதிக்கத்தை குறைக்க முடிவெடுத்துள்ளது.  

இந்த போட்டிக்குள் பல மாற்றங்கள் நிகழும். அதில் புதிய நாடுகளை கூட உருவாக்கலாம்.

Link to comment
Share on other sites

On 7/16/2019 at 8:54 AM, தமிழ் சிறி said:

இத்தகைய தலையீடுகள் சிக்கல்கள் மற்றும் பேரழிவுகளைத் தருமே தவிர ஒருபோதும் நன்மைகளைத் தராது.

சீனாக்காரர், குறிப்பாக இந்திய அரச பயங்கரவாதிகளின் எல்லை தாண்டிய பயங்கரவாதம் பற்றி கவனமாக இருக்கும்படி கூறுகிறார்கள்.

Link to comment
Share on other sites

இலங்கை பாராளுமன்ற குழு சீனா பயணம்

இலங்கை - சீன பாராளுமன்ற உறுப்பினர்களின் நட்புறவு நிமித்தம் ஆளும் , எதிர்க்கட்சி உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்  நாள் உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று சீனா சென்றுள்ளனர். 

எதிக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் இந்த விஜயம் அமைந்துள்ளது. 

ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித்தலைவரும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் , எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான பந்துல குணவர்தண, கெஹெலிய ரம்புக்வெல்ல, மஹிந்தானந்த அலுத்கமகே, லக்ஷ்மன் யாபா அபேவர்தன மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்தி ஸ்ரீகந்தராஜா ஆகியோர் இந்த விஜயத்தில் உள்ளடங்குகின்றனர். 

https://www.virakesari.lk/article/60550

 

அமெரிக்க – சீன முரண்பாட்டுக்காக நாட்டை பலியாக்க முடியாது - வாசுதேவ

அமெரிக்க – சீன முரண்பாடுகளுக்கு  நாட்டை பலியாக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

அமெரிக்கா ஆசிய நாடுகளில் நிரந்தர ஆதிக்கம் செலுத்தும் திட்டங்களை தற்போது வகுக்கின்றது. சீனாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையில் பாரிய பொருளாதார போட்டித் தன்மை காணப்படுகின்றது. இவ்வாறான நிலையில் எமது நாட்டின் இறையான்மைக்கு அச்சுறுத்தல் விடுக்கும்  ஒப்பந்தங்களை அமெரிக்காவுடன் அரசாங்கம் செய்துக் கொள்வது  எதிர்காலத்தில்  நாட்டை பாரிய நெருக்கடிக்குள் கொண்டு செல்லும் என்றார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்  கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கிடையிலான அதிகார போட்டியே  கடந்த  நான்கு வருட காலமாக அரசாங்கம் பலவீனமடைவதற்கு பிரதான காரணம் என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

https://www.virakesari.lk/article/60609

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ampanai said:

அமெரிக்க – சீன முரண்பாட்டுக்காக நாட்டை பலியாக்க முடியாது - வாசுதேவ

கடன் வெள்ளம் தலைக்கு மேலால் ஓடுது இப்பத்தான் ஒண்டு நித்திரையால் எழும்பி அறிக்கை விடுது .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.