Jump to content

கூட்டமைப்பும் பேரம் பேசலும் சாணக்கியமும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பும் பேரம் பேசலும் சாணக்கியமும்

என்.கே. அஷோக்பரன் / 2019 ஜூலை 15 திங்கட்கிழமை, பி.ப. 04:10 Comments - 0

மீண்டும் ஒருமுறை, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் காப்பாற்றி இருக்கிறது.   

இது தொடர்பில், பரவலாகப் பிரதானமான இருவேறுபட்ட கருத்துகள், தமிழ் மக்களிடையே நிலவுவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.   

முதலாவதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னிலை தவறி, ஐக்கிய தேசியக் கட்சியின் ஓர் அங்கமாகவே மாறிவிட்டது என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டைக் கடுமையாக விமர்சிக்கும் கருத்து, தமிழ்த்தேசியத்தின் மீது பற்றுறுதி கொண்ட தமிழ் மக்களிடமிருந்தும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தொடர்ந்து விமர்சித்துவரும், தீவிர தமிழ்த் தேசியவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டவர்கள் இடமிருந்தும் வருவதைக் காணலாம்.   

மறுபுறத்தில், இந்த அரசாங்கத்தைக் காப்பாற்றாவிட்டால், அது ராஜபக்‌ஷ குழாமுக்குச் சாதகமானதாகவே அமையும் என்றும், ஆகவே ‘பெரிய பிசாசை விட, குட்டிப்பிசாசு பரவாயில்லை’ என்ற அடிப்படையிலேனும் இந்த ஆட்சியைக் காப்பாற்றிவிட வேண்டும்; ஆகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்த நிலைப்பாட்டில், தவறில்லை என்ற கருத்து வௌிப்படுவதையும் காணலாம்.  

ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் நிலைமைதான் மிகவும் தர்மசங்கடத்துக்கு உட்பட்டதாக இருக்கிறது. பெரிய பிசாசு வராமலிருக்கத்தான் நாம் குட்டிப்பிசாசை ஆதரிக்கிறோம் என்று அவர்களால் நேரடியாகச் சொல்ல முடியாது.   

ஏனென்றால், தீபாவளிக்கும், பொங்கலுக்கும் தீர்வு வரும்; இப்ப வரும், நாளை வரும் என்று தமிழ் மக்களுக்குப் போலி நம்பிக்கையை கடந்த ஐந்தாண்டுகளாக, அவர்கள் ஊட்டி வந்திருக்கிறார்கள். தாங்கள், ‘தேவதை’ என்று வர்ணித்த ஒரு விடயத்தைக் குட்டிப் பிசாசு என்று வர்ணிப்பது, தமது பொய்மையை அல்லது இயலாமையை வௌிப்படுத்திவிடும் என்பதை அவர்கள் நன்கே அறிந்திருக்கிறார்கள்.   

ஆகவே, இம்முறை ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கு எதிராக, மக்கள் விடுதலை முன்னணி கொண்டு வந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையிலிருந்து,க அரசாங்கத்தைக் காப்பாற்றியதை நியாயப்படுத்த, அவர்களுக்கு வேறு நியாயமொன்றேனும் கற்பிக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், அவர்களுக்குக் கிடைத்துள்ள நியாயம்தான், கல்முனை வடக்குப் பிரதேச செயலகம்.  

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தருமான செல்வம் அடைக்கலநாதன், “தேர்தல் காலங்களில், தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எவற்றையும் அரசாங்கம் நிறைவேற்றவில்லை” என்பதை ஏற்றுக்கொண்டிருக்கிறார். இது உண்மை! இந்த உண்மையை அவர் ஒத்துக்கொண்டார் என்பதை விட, ஒத்துக்கொண்டாக வேண்டிய சூழமைவு கட்டாயம் இருக்கிறது.   

தாம் தொடர்ந்து ஆதரித்துவரும் இந்த ‘நல்லாட்சி’ அரசாங்கத்தால், தாம் தொடர்ந்து ஏமாற்றப்பட்டுக்கொண்டு வருகிறோம் என்பதை, எந்தத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களாலும் மறுக்க முடியாது. ஆனால், இதனைத் தொடர்ந்து அவர் சொன்ன விடயம்தான் பரிசீலிக்கப்பட வேண்டியதொன்றாக இருக்கிறது. “கிடைக்கும் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக்கொண்டு, தமிழ் மக்களுக்கான உரிமைகளை வென்றெடுப்போம்” என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.   

இந்தக் கருத்தை இருவேறு நிலைகளில் ஆராய எத்தனிக்கிறேன். முதலாவதாக, கிடைக்கும் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி, தமிழ் மக்களின் அபிலாஷைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக அடையப் பெறுதல் என்ற கருத்தானது, தமிழ்த் தேசிய அரசியல் என்பது, ஒரேயடியாகத் தீர்வொன்றைப் பெறும் எண்ணப்பாட்டிலிருந்து, படிப்படியாகத் தமது அபிலாஷைகளை அடைந்துகொள்ளும் ‘incrementalism’ எனும் பாதைக்கு மாறியிருக்கிறது என்பதை உணர்த்துவதாக இருக்கிறது.   

இது, தமிழ்த் தேசிய அரசியலில் முக்கிய மாற்றம் என்றே கருத வேண்டும். எல்லா மாற்றங்களும் பெரும் ஆரவாரங்களோடும், வௌிப்படையான அறிவிப்போடும் வருவதில்லை. தமிழ்த் தேசிய அரசியலில், அதன் பிரதான அரசியல் சக்தி, தன்னுடைய அரசியல் பாதையை இன்று மாற்றியிருக்கிறது என்பதும், அது சூசகமான முறையில் இடம்பெற்றிருக்கிறது என்பதும் இங்கு கவனிக்கப்பட வேண்டியது.  

பேச்சுத் தமிழில், “வளர்த்தால் ஹிப்பி; அடித்தால் மொட்டை” என்றொரு வாக்கியம் உண்டு. அதுபோல, ‘கிடைத்தால் சமஷ்டி; இல்லையென்றால் வேறொன்றும் வேண்டாம்’ என்று, குறித்த தீர்வை, ஒரே இரவில் அடையப் பெறுவதற்குப் பதிலாக, தமது அரசியல் அபிலாஷைகளை, இறுதி இலக்காகக் கொண்டு, அதனை நோக்கிப் படிப்படியாக நகர்தலை ‘incrementalism’ சுட்டிக்காட்டி நிற்கிறது. தொடர்ந்து செய்யும் சின்னச் சின்ன மாற்றங்களூடாக, இறுதிவிளைவான பெரும் மாற்றத்தை அடைந்து கொள்ளுதலை ‘incrementalism’ குறித்து நிற்கிறது.   

ஆனால், இங்கு கேள்வி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தான் சுயமாக எண்ணி இந்த அணுகுமுறை மாற்றத்தைச் சுவீகரித்துக்கொண்டதா, அல்லது, சந்தர்ப்ப சூழல் சார்ந்து அது எடுத்துக்கொண்ட முடிவு, அணுகுமுறை மாற்றமொன்று ஏற்பட்டுள்ளதைப் போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தியிருக்கிறதா என்பதுதான்.   

இந்த ஐயம் ஏற்பட, முக்கியமான காரணங்களிலொன்று, இரு வாரங்களுக்கு முன்னர், யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் 16ஆவது தேசிய மாநாட்டில் உரையாற்றிய இராஜவரோதயம் சம்பந்தன், “உள்ளக சுயநிர்ணய உரிமையுடன், நிரந்தரமாகப் பாதுகாப்புடன் தமிழர்கள் வாழ வேண்டும். தந்தை செல்வா கட்சியை ஆரம்பித்து, ஏறத்தாழ 70 வருடங்கள் ஆகிவிட்டன. அந்தப் பாதையில் நாங்கள் நீண்டதூரம் பயணித்திருக்கின்றோம். சில முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கின்றோம். இன்னும் இறுதியானதும், உறுதியுமான முடிவு ஏற்படவில்லை. இந்த நாட்டில், இரண்டாம் தரப் பிரஜைகளாக, அடிமைகளாக வாழ வேண்டிய அவசியமில்லை. தற்போது வடக்கு மாகாணத்தில், பல குடியேற்றங்கள் நடைபெற்று வருகின்றன. இங்குள்ள சனத்தொகை விகிதாசாரத்தை மாற்றி அமைக்கக்கூடிய வகையில், பல்வேறு வழிகளில் பல கருமங்கள் நடைபெற்று வருகின்றன. இதனாலேயே, அதிகாரப் பகிர்வைத் தமிழ் மக்களுக்கு வழங்காமல், இருக்கின்றார்கள் போல எமக்குத் தெரிகின்றது. இவைகள் பாரதூரமான விடயங்கள்; இவற்றை அனுமதிக்க முடியாது. இவற்றுக்கு மிக விரைவில் முடிவு காணுவோம். தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் பல கருமங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால், தமிழீழ விடுதலைப் புலிகள் மௌனிக்கப்பட்ட பின்னர், புதிய அரசாங்கத்தின் கீழ், புதிய அரசியல் சாசனத்தை உருவாக்குவதென்று தீர்மானிக்கப்பட்டு, அந்தத் தீர்மானத்தின் அடிப்படையில், நாடாளுமன்றம் ஓர் அரசியல் சாசன சபையாக மாற்றி அமைக்கப்பட்டு, பல முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. எனினும் ஆயுதம் ஏந்தியவர்கள், எமக்காகப் பேச முடியாத சூழ்நிலையில், இன்று அவற்றைப் பயன்படுத்தி தாமதப்படுத்துவதற்கான சூழ்நிலை காணப்படுகின்றது. ஆயுதம் ஏந்திப் போராடினால் தான், அரசியல் தீர்வு சம்பந்தமாக ஆக்கபூர்வமான கருமங்களைப் பேணுவீர்கள் என்றால், ஆயுத பலம் இல்லாவிடின் அதைக் கைவிடுவோம் என நீங்கள் இருப்பீர்களானால், அது ஒரு தவறான நிலைப்பாடாகும். அவ்வாறான ஒரு நிலைப்பாட்டைச் சிந்திக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. அதை நாங்கள் பரிசீலிப்போம்” என்று பேசியிருந்தார்.   

மீண்டும் ஆயுதம் எடுப்பதைப் பரிசீலிப்போம் என்று அவர் சொன்னது, பகட்டாரவாரப் பேச்சாகக் கருதினாலும், அது தமிழ்த் தேசிய அரசியலின் மய்யவோட்டம் இன்னும் அதன் ஆரம்பக் காலப் போக்கிலிருந்து மாறவில்லை என்பதையே, நாம் உணரக்கூடியதான இருக்கிறது. இந்தப் பேச்சு ‘incrementalism’ அடிப்படையிலான அணுகுமுறையுடன் ஒத்துப் போகக்கூடியதொன்றல்ல.   

ஆகவேதான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, உண்மையிலேயே படிப்படியாகத் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை அடைந்துகொள்ளும் அணுகுமுறையை ஏற்றுக்கொண்டுள்ளதா, அல்லது எழுந்திருக்கும் சந்தர்ப்ப சூழலைச் சமாளிக்க, சந்தர்ப்பவாதக் கருத்தொன்றை முன்வைக்கிறதா என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியாதுள்ளது.  

கிழக்கு மாகாணத் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், கல்முனை வடக்கு தனித்த நிர்வாகம் என்பது மிகவும் முக்கியமானதொன்றாக மாறியிருக்கிறது. இதன் சரி, பிழை தொடர்பான வாதங்கள் எவ்வாறு இருப்பினும், வடமாகாணத் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு மேலதிகமாக, தமக்கேயுரிய சில முக்கிய பிரச்சினைகள் இருக்கின்றன என்பதைக் கிழக்கு மாகாணத் தமிழர்களும் அவர்களது தலைமைகளும் தொடர்ந்தும் குறிப்பிட்டு வந்திருக்கிறார்கள்,   
அத்தோடு, வடக்கு மய்யத் தமிழ்த் தலைமைகள், தம்மை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துகின்றன என்ற ஆதங்கமும் கிழக்கு மாகாணத் தமிழ் மக்களிடம் இருப்பதை மறுக்க முடியாது. இந்தப் பின்புலத்தில்தான், கல்முனை வடக்கு தனித்த பிரதேச செயலகம் அல்லது, தனித்த நிர்வாகம் என்பதை நோக்க வேண்டும்.   

ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தைப் காப்பாற்றியது, கல்முனை வடக்கு தனித்த பிரதேச செயலகம் என்ற தமது கோரிக்கையை அடைந்து கொள்ளவே என்று, தமது நிலைப்பாட்டை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று நியாயப்படுத்துவதை நாம் அவதானிக்கலாம். இதனைப் பெருஞ்சாணக்கியத்தனமான நகர்வு என்று கூட, கூட்டமைப்பின் சில தலைமைகள் வியாக்கியானப்படுத்துவதையும் அவதானிக்கலாம்.   

ஆனால், இந்தக் கல்முனை வடக்கு தனித்த பிரதேச செயலகம் என்பது, தமிழர்களினதோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதோ வெற்றியல்ல. மாறாக, இது ‘சிங்கள-பௌத்த’ அரசியலின் வெற்றி. இந்த யதார்த்தத்தைத் தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.  

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் ஆரம்பிக்கப்பட முஸ்தீபுகள் நடந்த வேளையில்தான், கன்னியாவில் பிள்ளையார் கோவில் அஸ்திவாரம் உடைக்கப்பட்டது. வடக்கில் புதியதொரு பௌத்த விகாரை இராணுவத்தால் திறந்து வைக்கப்பட்டது.   

ஆகவே, தமிழ் மக்களின் விருப்பத்தை இங்கு அரசாங்கம் நிறைவேற்றவில்லை. மாறாக, பெரும் பிரித்தாளும் தந்திரமொன்றுக்குத் தமிழ் மக்கள் இரையாகிக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் இருநிலைகளில் இந்தப் பிரித்தாளும் தந்திரம் கொண்டு நகர்த்தப்படுவதை நாம் அவதானிக்கலாம்.   

முதலாவதாக, இந்தநாட்டின் சிறுபான்மையினரைப் பிரித்துவைத்தல். ஏற்கெனவே, தமிழ்-முஸ்லிம் மக்களிடையே உள்ள சில கசப்புணர்வுகளை, முரண்பாடுகளைப் பேரினவாதம் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த விளைகிறது.   

கல்முனை வடக்கு தனித்த பிரதேச செயலகத்துக்கு சிங்கள-பௌத்த பேரினவாதத்தின் முகங்களான ரத்தன தேரரும், ஞானசார தேரரும் ஆதரவளித்ததன் பின்னணியை, நாம் ஐயக் கண்கொண்டு பார்க்க வேண்டாமா?   

இது, சிங்கள-பௌத்த நாடு என்று சூளுரைப்பவர்கள், தமிழர்கள் கேட்கும் கல்முனை வடக்கு தனித்த பிரதேச செயலகத்தை ஆதரிப்பது ஏன்? அதன் உள்நோக்கம் என்ன? சிங்கள-பௌத்த பேரினவாதம் ஒரு காலத்தில், இதே பிரித்தாளும் தந்திரத்தைத் தமிழர்களுக்கு எதிராக, முஸ்லிம்கள் மீது பயன்படுத்தியது வரலாற்று உண்மை.   

ஆகவே, எமக்குத் தேவையானது கிடைக்கிறது என்பதை விட, அதனைக் கொடுப்பவன், எமக்கு அதனை ஏன் கொடுக்கிறான் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். பசிக்குப் பாண் கிடைக்கிறது என்பதற்காக, விசம் தடவிய பாணை உட்கொள்ளக் கூடாது.  

மறுபுறத்தில், நாம் கேட்கவேண்டிய இன்னொரு கேள்வி, கல்முனை வடக்கு தனித்த பிரதேச செயலகத்தை வழங்கத் தயாரான இந்த அரசாங்கம், இதனை சிங்கள-பௌத்த பேரினவாத சக்திகள் எதிர்த்திருந்தால் வழங்க முன்வந்திருக்குமா என்பதுதான். ரத்தன தேரரும், சுமங்கல தேரரும், ஞானசார தேரரும் கல்முனை வடக்கு தனித்த பிரதேச செயலகத்தைக் கடுமையாக எதிர்த்திருந்தால், இந்த அரசாங்கம் இதனைச் செய்யத் துணிந்திருக்காது என்பதுதான் யதார்த்தம்.   

ஆகவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ரணில் அரசாங்கத்தை காப்பாற்ற, கல்முனை வடக்கு தனித்த பிரதேச செயலகம் என்ற பெரும் பேரத்தைப் பேசித்தான் செய்தது என்பது, கேட்பதற்கு நல்ல கதையாக இருந்தாலும், அது அத்தனை பெரியதோர் அடைவு அல்ல.   

தனது அரசாங்கத்தைப் பலமுறை காப்பாற்றிய விசுவாசமிகு சேவகர்களுக்கு, கல்முனை வடக்கு தனித்த பிரதேச செயலகம் என்பது மிகச்சிறியதொரு வெகுமதிதான்.    

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கூட்டமைப்பும்-பேரம்-பேசலும்-சாணக்கியமும்/91-235352

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.