Jump to content

5 ஜி அலைக்கற்றை உடல்நலனுக்கு தீங்கு விளைவிக்குமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

5 ஜி அலைக்கற்றை உடல்நலனுக்கு தீங்கு விளைவிக்குமா?

உண்மை பரிசோதிக்கும் குழுபிபிசி
Woman looking at her smart phoneபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இங்கிலாந்தில் சில நகரங்களில் செல்போன்களுக்கான 5 ஜி அலைக்கற்றை நெட்வொர்க் சேவை பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்தப் புதிய தொழில்நுட்பம் உடல் நலனுக்கு ஆபத்து எதையும் ஏற்படுத்துமா என்பது தொடர்பாக பல கேள்விகள் எழுந்துள்ளன.

எனவே கவலைப்பட வேண்டிய அம்சங்கள் என்ன, அதற்கான ஆதாரங்கள் என்ன?

5 ஜி பற்றி வித்தியாசமான அம்சம் என்ன?

முந்தைய செல்போன் தொழில்நுட்பங்களைப் போல, 5 ஜி நெட்வொர்க் சேவை ரேடியோ அலைகள் மூலம் எடுத்துச் செல்லப்படும் சிக்னல்களைக் கொண்டு செயல்படுகிறது. இது மின்காந்த அலைக்கற்றையின் ஓர் அங்கமாக இருக்கிறது. உயர்கோபுரங்களுக்கும் உங்களுடைய செல்போனுக்கும் இடையில் அந்த அலைக்கற்றைப் பரிமாற்றம் நடைபெறுகிறது.

எல்லா நேரத்திலும் மின்காந்த கதிர்வீச்சுகள் நம்மைச் சுற்றி உள்ளன. தொலைக்காட்சி, வானொலி சிக்னல்கள், செல்போன்கள் உள்பட எல்லா வகையான தொழில்நுட்பங்கள் மூலம் உருவாகும் சிக்னல்கள், சூரிய ஒளி போன்ற இயற்கை ஆதாரங்கள் மூலமான கதிர்வீச்சுகள் நம்மைச் சுற்றி உள்ளன.

ஏற்கெனவே உள்ள செல்போன் உயர் கோபுரங்களைவிட அதிக அதிர்வெண் கொண்ட சிக்னல்களை 5 ஜி தொழில்நுட்பம் பயன்படுத்துகிறது. தற்போதுள்ளதைவிட இன்னும் அதிக எண்ணிக்கையிலான செல்போன்கள் மூலம் இன்டர்நெட் சேவையை ஒரே நேரத்தில், இன்னும் அதிகமான வேகத்தில் பயன்படுத்துவதற்கு இது வகை செய்கிறது.

இந்த அலைகள் தரைப்பகுதியில் குறுகிய தொலைவுக்கு தான் பயணிக்கும். எனவே 5 ஜி நெட்வொர்க் சேவைக்கு, முந்தைய தொழில்நுட்பங்களைவிட அதிக அளவிலான உயர்கோபுரங்கள், தரைப் பரப்புக்கு நெருக்கமாக அமைக்கப்பட வேண்டும்.

கவலைக்குரிய அம்சங்கள் என்ன?

எல்லா செல்போன் தொழில்நுட்பங்களிலும் பயன்படுத்தப்படும் மின்காந்தக் கதிர்வீச்சு, சில வகை புற்றுநோய் உள்பட உடல் நலனுக்கு தீங்கு ஏற்படுத்துகிறது என்று சிலர் கவலைப்படுகிறார்கள்.

2014 ஆம் ஆண்டில், ``செல்போன் பயன்பாட்டால் உடல் நலனுக்கு கேடு ஏற்படுத்தும் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை'' என்று உலக சுகாதார நிறுவனம் கூறியது.

இருந்தபோதிலும், ரேடியோ அலைவரிசைக் கதிர்வீச்சுகள் (செல்போன் சிக்னல்கள் இதில் அடங்கும்) `புற்றுநோயை உருவாக்கும் சாத்தியம்' கொண்டவை என்று உலக சுகாதார நிறுவனமும், சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி முகமையும் (IARC) வகைப்படுத்தியுள்ளன.

``இந்தக் கதிர்வீச்சுக்கு ஆளாகும் மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் என்ற முடிவுக்கு வருவதற்கு ஓரளவுக்கு ஆதாரம் இருப்பதால்'' இந்த வகைப்பாட்டில் சேர்க்கப் பட்டுள்ளது.

பதப்படுத்திய காய்கறிகளை சாப்பிடுவது, முகத்துக்கு பவுடர் பூசுவது ஆகியவையும் இதே அளவுக்கு உடல் நலனுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியவை.

மது பானங்களும், பதப்படுத்திய மாமிசமும் அதிக ஆபத்துள்ளவையாக வகைப்படுத்தப் பட்டுள்ளன.

5G equipment in Seoulபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

அமெரிக்க சுகாதாரத் துறை 2018 ஆம் ஆண்டில் வெளியிட்ட நச்சியல் குறித்த அறிக்கையில், அதிக அளவில் ரேடியோ அலைவரிசை கதிர்வீச்சுக்கு உட்படுத்தப்பட்ட ஆண் எலிகளுக்கு இருதயத்தில் புற்றுநோய் கட்டிகள் உருவாவது தெரிய வந்திருக்கிறது என தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த கதிர்வீச்சு குறித்து கவலை தெரிவிக்கும் நிபுணர்களும் இதே கருத்தைக் கூறியுள்ளனர்.

இந்த ஆய்வுக்காக, எலிகளின் முழு உடலும் செல்போன்களின் கதிர்வீச்சுக்கு தினமும் ஒன்பது மணி நேரம் உட்படுத்தப்பட்டன. பிறப்பதற்கு முன்பிருந்து இரண்டு ஆண்டுகள் வரை இவ்வாறு செய்யப்பட்டது.

ஆய்வு மேற்கொண்டவற்றில் பெண் எலிகளுக்கு புற்றுநோய்க்கான தொடர்பு எதுவும் காணப்படவில்லை. கதிர்வீச்சுக்கு உட்படுத்தப்பட்ட எலிகள், மற்ற கட்டுப்பாட்டில் கவனிக்கப்பட்ட எலிகளைவிட அதிக காலம் உயிர் வாழ்ந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

``எலிகளுக்கு பயன்படுத்தப்பட்ட கதிர்வீச்சின் அளவை, செல்போன் பயன்படுத்தும் மனிதர்கள் மீது ஏற்படும் கதிர்வீச்சு அளவுடன் ஒப்பிட முடியாது'' என்று ஆய்வில் பங்கேற்ற மூத்த விஞ்ஞானி ஒருவர் தெரிவித்தார். அதிக அளவில் செல்போன் பயன்படுத்துபவர்களுக்கும் இது பொருந்தும் என்றார் அவர்.

``அதிக அளவில் செல்போன் பயன்படுத்துபவர்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்து அதிகமாக உள்ளது என்று புள்ளியியல் தகவல்கள் தெரிவித்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டிய அளவுக்கு இதை நிரூபிக்கப் போதிய ஆதாரங்கள் ஏதும் இல்லை'' என்று செல்போன் பாதுகாப்பு குறித்து அரசுக்கு ஆலோசனைகள் அளிக்கும் பொறுப்பில் உள்ள டாக்டர் பிராங்க் டி வோச்சிட் கூறியுள்ளார்.

இருந்தபோதிலும், 5 ஜி அலைக்கற்றை சேவை தொடங்குவதை நிறுத்தி வைக்குமாறு கோரி ஐரோப்பிய யூனியனுக்கு விஞ்ஞானிகள் மற்றும் டாக்டர்கள் குழுவினர் கடிதம் எழுதியுள்ளனர்.

ரேடியோ அலைகள் அயனிகளை உருவாக்காது

செல்போன் சேவைகளில் பயன்படுத்தப்படும் - ரேடியோ அலைக்கற்றைகள் - அயனிகளை உருவாக்காது. ``அதாவது டி.என்.ஏ.க்களில் பாதிப்பை ஏற்படுத்தி செல்களில் பாதிப்பை ஏற்படுத்தும் சக்தி அதற்கு இல்லை''

என்பது இதன் அர்த்தம் என்று மருத்துவரும், புற்றுநோய் ஆராய்ச்சியாளருமான டேவிட் ராபர்ட் கிரிம்ஸ் கூறியுள்ளார்.

செல்போன்களில் பயன்படுத்துவதைவிட அதிக அலைவரிசையில், மின்காந்த அலைக்கற்றைகளுக்கு அதிக காலம் ஆட்பட நேர்ந்தால், நிச்சயமாக ஆரோக்கியக் கேடுகள் வருவதற்கான ஆபத்துகள் உள்ளன.

5 ஜி அலைக்கற்றை உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்குமா?

சூரியனின் புறஊதாக் கதிர்கள், இந்தப் பாதிப்புக்கு உள்பட்ட பிரிவில் வருகின்றன. தோலில் புற்றுநோயை உருவாக்கும் வாய்ப்பு உண்டு.

மருத்துவ சிகிச்சையில் எக்ஸ்ரே மற்றும் காமா கதிர்வீச்சுகள் போன்ற அதிக சக்திமிக்க கதிர்வீச்சு அளவுகள் குறித்து கடுமையான ஆலோசனை வரம்புகள் இருக்கின்றன. இவை இரண்டுமே உடலுக்குள் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை.

``புற்றுநோய்க்கான ஆபத்தை நாம் அதிகரித்துக் கொள்கிறோமா என்று மக்கள் கவலைப்படுகிறார்கள். அது புரிந்து கொள்ளக் கூடியதுதான். ஆனால் தினமும் நாம் பார்க்கும், ஒளியில் உள்ளதைவிட ரேடியோ அலைகளின் சக்தி குறைவானது தான்'' என்கிறார் டாக்டர் கிரிம்ஸ்.

``செல்போன்கள் அல்லது வயர்லெஸ் சேவைகள் ஆரோக்கியப் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன என்பதைக் காட்டும் வகையில், ஏற்கத்தக்க ஆதாரங்கள் ஏதும் இல்லை'' என்று அவர் கூறினார்.

5 ஜி சிக்னல் உயர்கோபுரங்கள் பற்றி நாம் கவலைப்பட வேண்டுமா?

5 ஜி தொழில்நுட்பத்துக்கு நிறைய உயர்கோபுரங்கள் தேவைப்படும். அதில் இருந்து தான் செல்போன் சிக்னல்கள் கொடுத்து வாங்கப் படுகின்றன.

ஆனால், உயர்கோபுரங்கள் அதிகமாக இருந்தால், முந்தைய 4 ஜி உயர்கோபுரங்களைவிட குறைவான சக்தியில் ரேடிலோ அலைகள் பரிமாற்றம் இருக்கும். எனவே கதிர்வீச்சு அளவும் குறைவாக இருக்கும்.

மக்கள் புழங்கும் இடங்களில் ரேடியோ அலைவரிசைக் களங்கள், வழிகாட்டுதல் அளவைக் காட்டிலும் பல மடங்கு குறைவாக உள்ளன என்று செல்போன் உயர் கோபுரங்களுக்கான பிரிட்டன் அரசின் வழிகாட்டுதல்கள் தெரிவிக்கிறது.

வெப்பமாதல் ஆபத்துகள் எப்படி?

அனுமதிக்கப்பட்ட 5 ஜி அலைக்கற்றைக்கான சர்வதேச வழிகாட்டுதல்கள், மைக்ரோ அலை அலைக்கற்றைக்கும் குறைவாகவே உள்ளன.

மைக்ரோ அலைகள் தாம் பாயும் பொருட்களில் வெப்பத்தை உருவாக்கும்.

இருந்தபோதிலும், 5 ஜி சேவைக்கு பயன்படுத்தும் அளவு (முன்பு செல்போன் தொழில்நுட்பங்களில் பயன்படுத்தும் அளவு), இதனால் ஏற்படும் வெப்பம் பாதிப்பு ஏற்படுத்தும் அளவுக்கு இருக்காது என்று அயன் உருவாக்காத கதிர்வீச்சுப் பாதுகாப்புக்கான சர்வதேச ஆணையத்தின் ஆலோசகர்களில் ஒருவரான பேராசிரியர் ரோட்னி கிராப்ட் தெரிவித்துள்ளார்.

``5 ஜி சேவை மூலம் (அல்லது பொதுவான பகுதிகளில் வேறு எந்த சிக்னல்கள் மூலம்) இருக்கும் அதிகபட்ச ரேடியோ அலைவரிசை அளவு, வெப்பத்தை அதிகரிக்கும் அளவுக்கு அதிகமாக இல்லை'' என்று அவர் கூறியுள்ளார். இதுவரை அப்படி கண்டறியப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

கதிர்வீச்சுக்கு ஆளாவதன் வரையறை

``இப்போதைய சேவைகளுடன் 5 ஜி சேவை தொடங்கப்படும் போது, ரேடியோ அலைகளுக்கு ஆட்படும் அளவு சிறிதளவு அதிகரிக்கும் என்றாலும், அதிகமாக ஆட்படுதல் என்பது இருக்காது'' என்று பிரிட்டன் அரசு கூறியுள்ளது.

அறிமுகம் செய்யப்பட்டுள்ள 5 ஜி சிக்னல்களுக்கான அலைவரிசை அளவு, மின்காந்த அலைக்கற்றையை அயனிமயமாக்கும் அளவுக்கும் கீழே தான் உள்ளது. ஐ.சி.என்.ஐ.ஆர்.பி.யால் ஆபத்து உருவாக்கும் அளவு என நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவைவிட இது குறைவாகவே உள்ளது.

``5 ஜி அலைக்கற்றையால் உருவாக்கப்படும் தாக்கம் குறித்து ஐ.சி.என்.ஐ.ஆர்.பி.யால் ஆழமாக ஆய்வு செய்யப்பட்டது. பாதிப்பை ஏற்படுத்தும் என்று குறிப்பிடப்பட்ட அளவைக் காட்டிலும் மிகவும் குறைவாகவே இதற்கு அனுமிக்கப் பட்டுள்ளது'' என்று பேராசிரியர் கிராப்ட் கூறியுள்ளார்.

ஐ.சி.என்.ஐ.ஆர்.பி. வழிகாட்டுகல்களில் பரிந்துரைக்கப்பட்ட அளவைக் காட்டிலும் குறைவான அலைவரிசையில் மின்காந்த அலைவரிசைக்கு ஆட்படுவதால், ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் என்பதாகத் தெரியவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

Presentational grey line Reality Check branding Presentational grey line

https://www.bbc.com/tamil/india-48996940

Link to comment
Share on other sites

இந்த 5ஜி தொழில்நுட்பத்தை ஐரோப்பிய ஒன்றியம் அனுமதித்து இருந்தால் அது பாதுகாப்பானதாக இருக்கும் என கருதலாம். 

வட அமெரிக்காவிலும் சீனாவிலும் அரசுகள் பெரிய நிறுவனங்களின் இசைக்கு ஏற்பவே ஆடும் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.