Jump to content

5 ஜி அலைக்கற்றை உடல்நலனுக்கு தீங்கு விளைவிக்குமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

5 ஜி அலைக்கற்றை உடல்நலனுக்கு தீங்கு விளைவிக்குமா?

உண்மை பரிசோதிக்கும் குழுபிபிசி
Woman looking at her smart phoneபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இங்கிலாந்தில் சில நகரங்களில் செல்போன்களுக்கான 5 ஜி அலைக்கற்றை நெட்வொர்க் சேவை பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்தப் புதிய தொழில்நுட்பம் உடல் நலனுக்கு ஆபத்து எதையும் ஏற்படுத்துமா என்பது தொடர்பாக பல கேள்விகள் எழுந்துள்ளன.

எனவே கவலைப்பட வேண்டிய அம்சங்கள் என்ன, அதற்கான ஆதாரங்கள் என்ன?

5 ஜி பற்றி வித்தியாசமான அம்சம் என்ன?

முந்தைய செல்போன் தொழில்நுட்பங்களைப் போல, 5 ஜி நெட்வொர்க் சேவை ரேடியோ அலைகள் மூலம் எடுத்துச் செல்லப்படும் சிக்னல்களைக் கொண்டு செயல்படுகிறது. இது மின்காந்த அலைக்கற்றையின் ஓர் அங்கமாக இருக்கிறது. உயர்கோபுரங்களுக்கும் உங்களுடைய செல்போனுக்கும் இடையில் அந்த அலைக்கற்றைப் பரிமாற்றம் நடைபெறுகிறது.

எல்லா நேரத்திலும் மின்காந்த கதிர்வீச்சுகள் நம்மைச் சுற்றி உள்ளன. தொலைக்காட்சி, வானொலி சிக்னல்கள், செல்போன்கள் உள்பட எல்லா வகையான தொழில்நுட்பங்கள் மூலம் உருவாகும் சிக்னல்கள், சூரிய ஒளி போன்ற இயற்கை ஆதாரங்கள் மூலமான கதிர்வீச்சுகள் நம்மைச் சுற்றி உள்ளன.

ஏற்கெனவே உள்ள செல்போன் உயர் கோபுரங்களைவிட அதிக அதிர்வெண் கொண்ட சிக்னல்களை 5 ஜி தொழில்நுட்பம் பயன்படுத்துகிறது. தற்போதுள்ளதைவிட இன்னும் அதிக எண்ணிக்கையிலான செல்போன்கள் மூலம் இன்டர்நெட் சேவையை ஒரே நேரத்தில், இன்னும் அதிகமான வேகத்தில் பயன்படுத்துவதற்கு இது வகை செய்கிறது.

இந்த அலைகள் தரைப்பகுதியில் குறுகிய தொலைவுக்கு தான் பயணிக்கும். எனவே 5 ஜி நெட்வொர்க் சேவைக்கு, முந்தைய தொழில்நுட்பங்களைவிட அதிக அளவிலான உயர்கோபுரங்கள், தரைப் பரப்புக்கு நெருக்கமாக அமைக்கப்பட வேண்டும்.

கவலைக்குரிய அம்சங்கள் என்ன?

எல்லா செல்போன் தொழில்நுட்பங்களிலும் பயன்படுத்தப்படும் மின்காந்தக் கதிர்வீச்சு, சில வகை புற்றுநோய் உள்பட உடல் நலனுக்கு தீங்கு ஏற்படுத்துகிறது என்று சிலர் கவலைப்படுகிறார்கள்.

2014 ஆம் ஆண்டில், ``செல்போன் பயன்பாட்டால் உடல் நலனுக்கு கேடு ஏற்படுத்தும் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை'' என்று உலக சுகாதார நிறுவனம் கூறியது.

இருந்தபோதிலும், ரேடியோ அலைவரிசைக் கதிர்வீச்சுகள் (செல்போன் சிக்னல்கள் இதில் அடங்கும்) `புற்றுநோயை உருவாக்கும் சாத்தியம்' கொண்டவை என்று உலக சுகாதார நிறுவனமும், சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி முகமையும் (IARC) வகைப்படுத்தியுள்ளன.

``இந்தக் கதிர்வீச்சுக்கு ஆளாகும் மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் என்ற முடிவுக்கு வருவதற்கு ஓரளவுக்கு ஆதாரம் இருப்பதால்'' இந்த வகைப்பாட்டில் சேர்க்கப் பட்டுள்ளது.

பதப்படுத்திய காய்கறிகளை சாப்பிடுவது, முகத்துக்கு பவுடர் பூசுவது ஆகியவையும் இதே அளவுக்கு உடல் நலனுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியவை.

மது பானங்களும், பதப்படுத்திய மாமிசமும் அதிக ஆபத்துள்ளவையாக வகைப்படுத்தப் பட்டுள்ளன.

5G equipment in Seoulபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

அமெரிக்க சுகாதாரத் துறை 2018 ஆம் ஆண்டில் வெளியிட்ட நச்சியல் குறித்த அறிக்கையில், அதிக அளவில் ரேடியோ அலைவரிசை கதிர்வீச்சுக்கு உட்படுத்தப்பட்ட ஆண் எலிகளுக்கு இருதயத்தில் புற்றுநோய் கட்டிகள் உருவாவது தெரிய வந்திருக்கிறது என தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த கதிர்வீச்சு குறித்து கவலை தெரிவிக்கும் நிபுணர்களும் இதே கருத்தைக் கூறியுள்ளனர்.

இந்த ஆய்வுக்காக, எலிகளின் முழு உடலும் செல்போன்களின் கதிர்வீச்சுக்கு தினமும் ஒன்பது மணி நேரம் உட்படுத்தப்பட்டன. பிறப்பதற்கு முன்பிருந்து இரண்டு ஆண்டுகள் வரை இவ்வாறு செய்யப்பட்டது.

ஆய்வு மேற்கொண்டவற்றில் பெண் எலிகளுக்கு புற்றுநோய்க்கான தொடர்பு எதுவும் காணப்படவில்லை. கதிர்வீச்சுக்கு உட்படுத்தப்பட்ட எலிகள், மற்ற கட்டுப்பாட்டில் கவனிக்கப்பட்ட எலிகளைவிட அதிக காலம் உயிர் வாழ்ந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

``எலிகளுக்கு பயன்படுத்தப்பட்ட கதிர்வீச்சின் அளவை, செல்போன் பயன்படுத்தும் மனிதர்கள் மீது ஏற்படும் கதிர்வீச்சு அளவுடன் ஒப்பிட முடியாது'' என்று ஆய்வில் பங்கேற்ற மூத்த விஞ்ஞானி ஒருவர் தெரிவித்தார். அதிக அளவில் செல்போன் பயன்படுத்துபவர்களுக்கும் இது பொருந்தும் என்றார் அவர்.

``அதிக அளவில் செல்போன் பயன்படுத்துபவர்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்து அதிகமாக உள்ளது என்று புள்ளியியல் தகவல்கள் தெரிவித்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டிய அளவுக்கு இதை நிரூபிக்கப் போதிய ஆதாரங்கள் ஏதும் இல்லை'' என்று செல்போன் பாதுகாப்பு குறித்து அரசுக்கு ஆலோசனைகள் அளிக்கும் பொறுப்பில் உள்ள டாக்டர் பிராங்க் டி வோச்சிட் கூறியுள்ளார்.

இருந்தபோதிலும், 5 ஜி அலைக்கற்றை சேவை தொடங்குவதை நிறுத்தி வைக்குமாறு கோரி ஐரோப்பிய யூனியனுக்கு விஞ்ஞானிகள் மற்றும் டாக்டர்கள் குழுவினர் கடிதம் எழுதியுள்ளனர்.

ரேடியோ அலைகள் அயனிகளை உருவாக்காது

செல்போன் சேவைகளில் பயன்படுத்தப்படும் - ரேடியோ அலைக்கற்றைகள் - அயனிகளை உருவாக்காது. ``அதாவது டி.என்.ஏ.க்களில் பாதிப்பை ஏற்படுத்தி செல்களில் பாதிப்பை ஏற்படுத்தும் சக்தி அதற்கு இல்லை''

என்பது இதன் அர்த்தம் என்று மருத்துவரும், புற்றுநோய் ஆராய்ச்சியாளருமான டேவிட் ராபர்ட் கிரிம்ஸ் கூறியுள்ளார்.

செல்போன்களில் பயன்படுத்துவதைவிட அதிக அலைவரிசையில், மின்காந்த அலைக்கற்றைகளுக்கு அதிக காலம் ஆட்பட நேர்ந்தால், நிச்சயமாக ஆரோக்கியக் கேடுகள் வருவதற்கான ஆபத்துகள் உள்ளன.

5 ஜி அலைக்கற்றை உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்குமா?

சூரியனின் புறஊதாக் கதிர்கள், இந்தப் பாதிப்புக்கு உள்பட்ட பிரிவில் வருகின்றன. தோலில் புற்றுநோயை உருவாக்கும் வாய்ப்பு உண்டு.

மருத்துவ சிகிச்சையில் எக்ஸ்ரே மற்றும் காமா கதிர்வீச்சுகள் போன்ற அதிக சக்திமிக்க கதிர்வீச்சு அளவுகள் குறித்து கடுமையான ஆலோசனை வரம்புகள் இருக்கின்றன. இவை இரண்டுமே உடலுக்குள் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை.

``புற்றுநோய்க்கான ஆபத்தை நாம் அதிகரித்துக் கொள்கிறோமா என்று மக்கள் கவலைப்படுகிறார்கள். அது புரிந்து கொள்ளக் கூடியதுதான். ஆனால் தினமும் நாம் பார்க்கும், ஒளியில் உள்ளதைவிட ரேடியோ அலைகளின் சக்தி குறைவானது தான்'' என்கிறார் டாக்டர் கிரிம்ஸ்.

``செல்போன்கள் அல்லது வயர்லெஸ் சேவைகள் ஆரோக்கியப் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன என்பதைக் காட்டும் வகையில், ஏற்கத்தக்க ஆதாரங்கள் ஏதும் இல்லை'' என்று அவர் கூறினார்.

5 ஜி சிக்னல் உயர்கோபுரங்கள் பற்றி நாம் கவலைப்பட வேண்டுமா?

5 ஜி தொழில்நுட்பத்துக்கு நிறைய உயர்கோபுரங்கள் தேவைப்படும். அதில் இருந்து தான் செல்போன் சிக்னல்கள் கொடுத்து வாங்கப் படுகின்றன.

ஆனால், உயர்கோபுரங்கள் அதிகமாக இருந்தால், முந்தைய 4 ஜி உயர்கோபுரங்களைவிட குறைவான சக்தியில் ரேடிலோ அலைகள் பரிமாற்றம் இருக்கும். எனவே கதிர்வீச்சு அளவும் குறைவாக இருக்கும்.

மக்கள் புழங்கும் இடங்களில் ரேடியோ அலைவரிசைக் களங்கள், வழிகாட்டுதல் அளவைக் காட்டிலும் பல மடங்கு குறைவாக உள்ளன என்று செல்போன் உயர் கோபுரங்களுக்கான பிரிட்டன் அரசின் வழிகாட்டுதல்கள் தெரிவிக்கிறது.

வெப்பமாதல் ஆபத்துகள் எப்படி?

அனுமதிக்கப்பட்ட 5 ஜி அலைக்கற்றைக்கான சர்வதேச வழிகாட்டுதல்கள், மைக்ரோ அலை அலைக்கற்றைக்கும் குறைவாகவே உள்ளன.

மைக்ரோ அலைகள் தாம் பாயும் பொருட்களில் வெப்பத்தை உருவாக்கும்.

இருந்தபோதிலும், 5 ஜி சேவைக்கு பயன்படுத்தும் அளவு (முன்பு செல்போன் தொழில்நுட்பங்களில் பயன்படுத்தும் அளவு), இதனால் ஏற்படும் வெப்பம் பாதிப்பு ஏற்படுத்தும் அளவுக்கு இருக்காது என்று அயன் உருவாக்காத கதிர்வீச்சுப் பாதுகாப்புக்கான சர்வதேச ஆணையத்தின் ஆலோசகர்களில் ஒருவரான பேராசிரியர் ரோட்னி கிராப்ட் தெரிவித்துள்ளார்.

``5 ஜி சேவை மூலம் (அல்லது பொதுவான பகுதிகளில் வேறு எந்த சிக்னல்கள் மூலம்) இருக்கும் அதிகபட்ச ரேடியோ அலைவரிசை அளவு, வெப்பத்தை அதிகரிக்கும் அளவுக்கு அதிகமாக இல்லை'' என்று அவர் கூறியுள்ளார். இதுவரை அப்படி கண்டறியப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

கதிர்வீச்சுக்கு ஆளாவதன் வரையறை

``இப்போதைய சேவைகளுடன் 5 ஜி சேவை தொடங்கப்படும் போது, ரேடியோ அலைகளுக்கு ஆட்படும் அளவு சிறிதளவு அதிகரிக்கும் என்றாலும், அதிகமாக ஆட்படுதல் என்பது இருக்காது'' என்று பிரிட்டன் அரசு கூறியுள்ளது.

அறிமுகம் செய்யப்பட்டுள்ள 5 ஜி சிக்னல்களுக்கான அலைவரிசை அளவு, மின்காந்த அலைக்கற்றையை அயனிமயமாக்கும் அளவுக்கும் கீழே தான் உள்ளது. ஐ.சி.என்.ஐ.ஆர்.பி.யால் ஆபத்து உருவாக்கும் அளவு என நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவைவிட இது குறைவாகவே உள்ளது.

``5 ஜி அலைக்கற்றையால் உருவாக்கப்படும் தாக்கம் குறித்து ஐ.சி.என்.ஐ.ஆர்.பி.யால் ஆழமாக ஆய்வு செய்யப்பட்டது. பாதிப்பை ஏற்படுத்தும் என்று குறிப்பிடப்பட்ட அளவைக் காட்டிலும் மிகவும் குறைவாகவே இதற்கு அனுமிக்கப் பட்டுள்ளது'' என்று பேராசிரியர் கிராப்ட் கூறியுள்ளார்.

ஐ.சி.என்.ஐ.ஆர்.பி. வழிகாட்டுகல்களில் பரிந்துரைக்கப்பட்ட அளவைக் காட்டிலும் குறைவான அலைவரிசையில் மின்காந்த அலைவரிசைக்கு ஆட்படுவதால், ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் என்பதாகத் தெரியவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

Presentational grey line Reality Check branding Presentational grey line

https://www.bbc.com/tamil/india-48996940

Link to comment
Share on other sites

இந்த 5ஜி தொழில்நுட்பத்தை ஐரோப்பிய ஒன்றியம் அனுமதித்து இருந்தால் அது பாதுகாப்பானதாக இருக்கும் என கருதலாம். 

வட அமெரிக்காவிலும் சீனாவிலும் அரசுகள் பெரிய நிறுவனங்களின் இசைக்கு ஏற்பவே ஆடும் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.