Jump to content

கிழக்கின் அரசியலுக்கான நேர்மைத்தனம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கின் அரசியலுக்கான நேர்மைத்தனம்

Editorial / 2019 ஜூலை 16 செவ்வாய்க்கிழமை, பி.ப. 05:22 Comments - 0

-தீர்த்தன்

நாட்டில் மீண்டும் மீண்டும் நம்பிக்கையில்லாப் பிரேரணைகளும் ஆட்சிக் கவிழ்ப்புக்கான முயற்சிகளுமே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.  

அரசாங்கத்துக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை, கட்சி பேதமற்ற முறையில், சிறுபான்மைக் கட்சிகளின் பலத்துடன் மீண்டும் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. இது தேசிய அரசியலின் நிலைமை. தேசிய அரசியலிலும் தேர்தலுக்கான ‘சருகு புலி விளையாட்டுகள்’ தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன.   

நமது கிழக்கைப் பொறுத்தவரையில், இலங்கையின் வடக்கு, கிழக்கு இணைப்பு, அதனூடான செயற்பாடுகளுக்கான முன்னெடுப்புகள் குறித்து நடைபெற்று வருகின்ற வேலைத்திட்டங்களுக்கு, நேரெதிராகக் கிழக்கைப் பிரித்து வைக்கின்ற, பிரிந்து நிற்கின்ற வகையிலான, குழப்பகரமான திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டவாறே இருக்கின்றன.   

இருதரப்பு, முத்தரப்பு, பல தரப்பு என நடைபெற்று வரும் இவ்வாறான ‘சுற்றிவளைப்பு’களின் நோக்கங்கள், நிறைவேறுமா என்பதுதான் கேள்விக்குரியது.   
இப்போதைக்கு, கிழக்குத் தமிழர் ஒன்றியம், கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு, கிழக்கின் தமிழர் கூட்டணி என மூன்று தரப்புகளின் முயலுகைகள் வெளிப்படையாகவே நடைபெறுகின்றன. தொடர்ந்தும் இதற்கான முயலுகைகள் நடைபெற்றாலும், பயன் என்ன கிடைத்திருக்கிறது என்றால், ஒன்றுமில்லை என்பதுதான் பதிலாகக் கிடைக்கிறது.   

இந்த நிலையில், மட்டக்களப்பில் கடந்து ஞாயிற்றுக்கிழமை (14) கிழக்கில் ஒரு புதிய கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில், ‘ஈழத் தமிழர் பேரவை’ எனும் புதியதோர் அமைப்பு இறங்கியிருக்கிறது. இதன் தொனிப்பொருள், கிழக்கு மாகாணத்தில் பலமில்லாத தமிழர் தலைமைத்துவத்தின் இடைவெளிகளை நிரப்புதல் ஆகும்.  

image_fcb38e0e17.jpg 

ஈழத் தமிழர் பேரவையின் தலைவர், பிலிப் முருகையா தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி, தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், ஈழவர் ஜனநாயகக் கட்சி, ஜனநாயகப் போராளிகள் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம், முற்போக்குத் தமிழர் அமைப்பு, மக்கள் முன்னேற்றக் கட்சி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 

முக்கியமாக, இக்கலந்துரையாடலில் பங்கு கொண்டவர்கள் பற்றிப் பார்ப்போமானால், ஈழத் தமிழர் பேரவையின் தலைவர் பிலிப் முருகையா, திருகோணமலையில் ஆங்கில ஆசிரியராகக் கடமையாற்றி, அரச சார்பற்ற நிறுவனங்களில் பணியாற்றுவதற்காகப் பணியைத் துறந்தவர். ஆங்கிலப் புலமையும் பேச்சுத்திறமையும் நிதிகளைப் பெறுவதற்காக திட்டங்களைத் தயாரிப்பதிலும் கெட்டிக்காரர். திருமலையை விட்டு மட்டக்களப்புக்கு வந்து, கிழக்குக்கு புதியதொரு கூட்டணியைத் தொடக்க, ஏன் முயல்கிறார் என்ற கேள்வி எழுகிறது.   

அடுத்து, கிழக்குத் தமிழர் ஒன்றியத்தை உருவாக்கிய செங்கதிரோன் கோபாலகிருஷ்ணன், ‘தமிழர் மகா சபை’ என்னும் கட்சியைச் சேர்ந்தவர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கப்பல் சின்னத்தில் போட்டியிட்டுத் தோல்விகண்டவர். இதற்கு முன்னரும் பல தடவைகளில் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் பல தேர்தல்களில் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவிக் கொண்டவர். கிழக்கில் அரசியலுக்கான முயற்சியில், ஏற்கெனவே பலரும் இணைந்து உருவாக்க முனைந்த அழுத்தக் குழுவொன்றை முன்னெடுக்க முடியாமல் போனதைத் தொடர்ந்து, சில வருடங்களின் பின்னர், ‘கிழக்குத் தமிழர் ஒன்றியத்தை’ சட்டத்தரணி சிவநாதனுடன் இணைந்து உருவாக்கினார். அந்த முயற்சியில் உருவான கட்சியாக, கிழக்குத் தமிழர் கூட்டமை’ப்பைச் சொல்கிறார்.   

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி’யின் பொதுச் செயலாளர் வ.கமலதாஸ், அடிப்படையில் சிறப்பானதோர் ஆங்கில ஆசிரியராக இருந்து, மட்டக்களப்பில் ‘அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையம்’ என்ற அமைப்பை ஆரம்பிப்பதில் மும்முரமாக இருந்து, அரச சார்பற்ற நிறுவனங்கள் பலவற்றில் பணியாற்றி, பல தடவைகள் தேர்தலில் போட்டியிட்டு, இப்போது கருணாவின் கட்சியில் இருக்கிறார்.   
அருண் தம்பிமுத்து, ‘மக்கள் முன்னேற்றக் கட்சி’ என்ற புதிய கட்சியொன்றை உருவாக்கியிருக்கிறார். இவருடைய தந்தையின் அரசியல் பாரம்பரியத்தில் இவருக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்புகள் காரணமாக, மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக இருந்தவேளை, அவருடைய கட்சியில் அமைப்பாளராக இருந்து, பல்வேறு பிரச்சினைகளுக்கு உட்பட்டு, இப்போது மீண்டும் புதியதொரு கட்சியைத் தொடங்கி, நகர்த்த முயல்கிறார். கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் சுயேட்சைக் குழுவொன்றைப் போட்டியிட வைத்து, மண்முனை மேற்கு பிரதேச சபையில் ஓர் உறுப்பினர் தெரிவாகி இருக்கிறார்.   

டெலோ சார்பில், மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதி மேயர் சத்தியசீலன், உறுப்பினர்களான ஜெயந்திரகுமார், முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன், அது தவிர நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனின், முற்போக்குத் தமிழர் அமைப்பின் பிரதிநிதி என்று, பலர் பற்றிய விபரிப்புகள் இருக்கின்றன.   

இந்த இடத்தில்தான், கிழக்கு மாகாணத்தில் பலமில்லாத தமிழர் தலைமைத்துவம் ஒன்று காணப்படுகிறது என்று அடையாளம் காணலும், அதன் இடைவெளியை நிரப்புவது என்பதும் ஒரு புதிய கூட்டமைப்பின் ஊடாகத்தான் நடைபெறவேண்டுமா என்ற வினா எழுகிறது.   

தற்போதைக்கு கிழக்கு மாகாணத்தின் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள் என்பதில், யாருக்கும் இருவேறு கருத்து இருக்கப்போவதில்லை. ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சொல்வது போன்று, “ஒரே இரவுக்குள் ஒன்றும் நடக்கப் போவதுமில்லை; கேட்டுக் கேட்டு கட்டியிருந்த வேட்டியும் போய், கோவணமும் இல்லா நிலைக்குத் தமிழர்கள் வந்துவிடவும் மாட்டார்கள்”.   

கடந்த வருடத்தில், கிழக்குத் தமிழர் ஒன்றியத்தால், கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு என்ற கட்சியை உருவாக்கும் முயற்சிகள் நடைபெற்ற போது, ஐந்து கட்சிகள் இணையவுள்ளதாகத் தெரிவித்து, கடைசியில் எல்லாம் கையை விரித்த நிலைமை ஏற்பட்டிருந்தது. ஆனால், அதன் ஏற்பாட்டாளர் கோபாலகிருஷ்ணனுடன் இப்போது சில இணைந்துள்ளன. ஏனையவை எதிர்காலத்தில் இணையலாம். ஆனால், கட்சி பதிவுக்குச் செல்கிறது என்று அறிவித்திருந்தார்.   

கிழக்கின் தமிழர் அரசியல் தொடர்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலின்போது, கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு என்ற ஒரு கட்சி அமைக்கப்பட்டுள்ள போது, மேலுமொரு கூட்டமைப்பு என்ற பெயருடன் கட்சியொன்றைப் புதிதாக அமைப்பது, மக்கள் மத்தியில் சலிப்புத் தன்மையை ஏற்படுத்தும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டிருக்கிறது. அப்படியானால், இதுவும் வலுவானதாக முடியவில்லை என்பது புலப்பட்டிருக்கிறது.   

ஏற்கெனவே, கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்ட வேளை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவருமான வி. ஆனந்தசங்கரி, தமது உதயசூரியன் சின்னத்தின் கீழ் ஒன்றிணைவோம் என்ற கருத்தை வெளியிட்டது போன்றே, இந்த முடிவும் இருக்கிறது.   

இலங்கையில், விடுதலைப் புலிகளின் ஆயுத ரீதியான போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர், உருவான ஜனநாயகச் சூழல், சரியாகப் பயன்படுத்தப்படுகிறதா என்று சந்தேகப்படுகின்ற அதேநேரத்தில், மக்களுக்கு வீணான மனஉழைச்சலை ஏற்படுத்தும் வேலைகள் நடைபெறுவது கவலையை ஏற்படுத்துகின்றது.   

அரசியல் கொள்கைகள், மக்களின் நலனுக்கானவை என்றாலும், அதைச் சரியாகப் பயன்படுத்துவதற்கு ஆயிரம் கட்சிகள் முளைப்பது எதற்காக என்ற கேள்வியை இந்த இடத்தில் முன்வைத்தால், மேலே சொன்னதற்கு மேலதிகமாக பணம் சம்பாதிக்கும் மனப்பான்மையே தலைவிரித்தாடுவது தௌிவாகத் தெரிகிறது.    

ஆரம்ப காலங்களில் மக்களின் நலனும் சமூக சேவைகளும் அரசியல்வாதிகளின் நோக்கங்களாக இருந்த நிலையில், இப்போது பிரபலமும் வருமானம் ஈட்டும் முயற்சிகளும் பழிவாங்கல்களுமே மிஞ்சியிருக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக உருவாகியிருக்கின்ற அரசியல் அலை, அதனை வீழ்த்திவிட வேண்டும் என்பதே தவிர, எல்லோரும் சொல்வது போன்று, கிழக்குத் தமிழர்களுக்கான பலமான அரசியல் அதிகாரம் இரண்டாம் பட்சம்தான் என்ற கருத்து நிலை, தமிழர்கள் மத்தியில் இப்போது பொதுமைப்பட்டிருக்கிறது.   

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் புளொட் அமைப்பு சார்பாகப் பட்டியலில் இணைந்து, பல்வேறு செயற்பாடுகளின் மூலம் தேர்தலில் வென்று, நாடாளுமன்றத்துக்குத் தெரிவான எஸ்.வியாழேந்திரன், அமைச்சுப் பதவிக்காக ஆரம்பத்திலிருந்தே முயன்றார்; அது நடைபெறவில்லை. திடீரென மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமராக அறிவிக்கப்பட்டவுடன் கிழக்கு அபிவிருத்திப் பிரதி அமைச்சராகப் பதவியை ஏற்றார். ஆனால் ஒரு வாரத்திலேயே அது இல்லாமல் போனது. அதனையடுத்து, தேர்தல் பட்டியலில் அவரை உள்ளடக்கும் வாய்ப்பு, மட்டக்களப்பில் எந்தக் கட்சியிடமும் சாத்தியப்படவில்லை. அதற்கு, வியாழேந்திரனுக்கு இருக்கும் மக்கள் ஆதரவு மட்டும் காரணமல்ல; அக்கட்சிகளின் மீதான நம்பிக்கையீனங்களும் காரணம் தான்.   

இவ்வாறான நிலைமையில், தமிழ்த் தேசிய எதிர்ப்புச் சிந்தனையுடன், தமிழ்த் தேசிய எதிர்ப்புக்காகவே முயலுகின்ற நிதியளிப்பாளர்களின் சிந்தனைகளுக்குள் சென்று செயற்படும் அமைப்புகளை யார் நம்பிக்கை கொள்வது என்பது புரியாத புதிராக இருக்கிறது. அதேநேரத்தில் ஒவ்வொருவருடைய பின்புலங்களும் தமிழர்களது நம்பிக்கையைச் சிதைப்பவையாகவே இருக்கின்றன என்பதும் உண்மை.   

ஜனநாயக வெளியில் நாம் எல்லோரும் எண்ணங் கொள்வதைப் போன்றல்லாது, யுத்தத்தின் முடிவுக்குப் பின்னர் ஏற்பட்ட ஜனநாயகச் சுதந்திரம் தமிழர்களைப் பொறுத்தவரையில் மனோநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி விடவில்லை. வெளிநாட்டுச் சக்திகளின் உந்துதல்களும், பெரும்பான்மைக் கட்சிகளின் முயற்சிகளும் பெரியளவான நிதி வழங்கல்களும் தமிழர்களைப் பிரித்தாழும் முயற்சிக்கு தொடர்ந்தும் நீர் ஊற்றிக்கொண்டே இருக்கும்.  

கடந்த யுத்த காலத்திலும் சரி, சுனாமிக்குப் பின்னரான காலங்களிலும் சரி இலங்கையில் இயங்கிய சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள், தேசிய, உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு கிடைத்த நிதிகள் அவ்வளவும் முழுமையாக மக்களின் அபிவிருத்திக்காகச் செலவு செய்யப்பட்டிருந்தால், நமது நாடு செல்வச் செழிப்புடன் ஜொலித்திருக்கும்.  

ஆனால், பணம் விழுங்கிகள் காரணமாக, அது இன்னமும் நிறைவேறவில்லை. அதே போன்றதுதான் அரசியலும்! ஆனால், ஒன்றும் நடைபெறப்போவதில்லை என்பது மட்டுமே உள்ளங்கை நெல்லிக்கனி. இதன் தொக்கல்தான், கிழக்கின் அரசியல் நேர்மைத்தனத்தை மக்களுக்குச் சொல்லும். சாதாரண மக்களின் சிந்தனைகளைப் புரிந்து, அவர்களுக்கான தேவைகளை நடுத்தர மக்கள் நிறைவேற்ற முயல்வதில்லை. அதே போன்றுதான், செல்வந்தர்கள் எனும் மேல் நிலையினரும்; இது அரசியலுக்கு அப்பாற்பட்டதா என்ன?    

கிழக்கின் தமிழர் கூட்டணி

தாயகத்தின் இதயபூமியான கிழக்கு என்றும் இல்லாதவாறு இடர்பாடுகளுடன் பயணித்துக் கொண்டிருக்கிறது. கால ஓட்டத்தின் அரசியல் மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, காரியமாற்றாவிடின் கிழக்கில் பரந்துவாழும் ஈழத்தமிழரின் இருப்பு, கேள்விக்குறியாகி விடும். நாம் அதிகமாய் நேசித்த இந்த இதயபூமி, அரசியல் பகடையாட்டங்களுக்குப் பலியாவதை எம்மால் சகித்துக்கொண்டிருக்க முடியாது.   

கிழக்கின் அரசியல் யதார்த்தமும் கலாசாரமும் தமிழர் அபிலாஷைகள் ஊடான செல்நெறிப்போக்கில் நின்று தடம் புரண்டுள்ளன. தமிழரின் பண்பாட்டியலும் மூத்த குடியின் நிலங்களும் அவர்கள் பொருண்மியமும் அபகரிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டுமானால் கிழக்கிலே பலமான தமிழர் அரசியல் கூட்டமைப்பு தேவைப்படுவதை உணர்ந்து, கிழக்கில் உள்ள புத்திஜீவிகள், செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், அரசியல் ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், பல்கலைக்கழக சமூகம், சிவில் சமூக அமைப்புகளை இணைத்து அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை ஈழத் தமிழர் பேரவை நிறைவேற்றியுள்ளது.  

ஈழப்போர் ஓய்வடைந்ததின் பின்னரான ஒரு தசாப்த காலத்துக்குள் கிழக்கின் தமிழர்கள் எதிர்கொண்டுள்ள சவால்களை மனதில் இருத்தியும் கடந்த ஒரு தசாப்த காலமாகக் கிழக்கின் தமிழர் சார் சமூகப் பொருளாதார, பண்பாட்டியல் மற்றும் அரசியல் நீரோட்டத்தில் ஏற்பட்டுள்ள துரதிர்ஷ்டவசமான நிலைமைகளைக் கவனத்திற்கொண்டும்,   

கிழக்கில் தமிழர்களுடைய அரசியல் தலைமைத்துவம் சம்பந்தமாகத் தற்போது ஏற்பட்டிருக்கின்ற விமர்சனங்களை மனதில் வைத்தும் 2009 ஆம் ஆண்டுக்குப் பின், ஈழத்தமிழினத்தின் அரசியல் தலைமைகள் என்று தம்மை அழைத்துக்கொள்வோரின் தான் தோன்றித்தனமான செயற்பாடுகளை இனங்கண்டும் இப்படியானதொரு நிலைமை கிழக்கில் வாழ்கின்ற ஈழத்தமிழர்களை மேலும் நிர்க்கதியாக்குவதோ டல்லாமல் தமிழினத்தின் சமூகப் பொருளாதார அரசியல் தளங்களில் ஏற்படுத்தப்போகும் ஏற்றுக்கொள்ளவியலாத விளைவுகளைக் கருத்திற் கொண்டும்,  

தனி மனித மற்றும் ஒற்றைக் கட்சி மேலாண்மையானது தமிழரின் ஜனநாயக இயங்குதளங்களில் ஏற்படுத்தியுள்ள பின்னடைவுகளை இனங்கண்டும்   தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான அரசியல் தீர்வு ஒன்று எட்டப்பட வேண்டுமானால் அத் தீர்வை நோக்கியதான செல்நெறிப் போக்கில் காத்திரமாக பயணிக்கக்கூடிய ஒரு தமிழ்த்தேசிய கட்டமைப்பை கிழக்கில் உருவாக்கும் நோக்கத்துடனும்,   

பல்லாண்டு காலமாக கிழக்கில் தமிழர்கள் எதிர்கொள்ளும் நில ஆக்கிரமிப்பு, அரசியல் ஓரவஞ்சனை காரணமாக நிலவும் அபிவிருத்தி யின்மை, வேலைவாய்ப்பின்மை, பண்பாட்டியல் சிதைப்பு போன்ற இடர்பாடுகளை நிவர்த்தி செய்யும் நோக்கத்துடனும், கிழக்கில் இடருற்ற மக்கள், முன்னாள் போராளிகள், அங்கவீனமுற்றவர்கள் போரினாலும் இயற்கை அனர்த்தங்களாலும் இன்னலுற்ற பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்வாதார மேம்பாடு கருதியும்,  

 கிழக்கில் சமகால தமிழர் அரசியலின் செல்நெறிப்போக்கு மற்றும் அரசியல் கலாசாரத்தை தீர்க்கமாகப் புரிந்து கொண்டு எதிர்காலத்தில் இணைந்து பணியாற்றக் கூடிய தமிழர் பரப்பின் அரசியல் கட்சிகளை இணைத்து, கிழக்கில் வாழும் ஈழத்தமிழர்களின் சமூகப் பொருளாதார, பண்பாட்டியல் இலக்குகளை அடைவதற்கான ஒரு பாரிய அரசியல் கூட்டமைப்பை உருவாக்கி, காத்திரமாகப் பயணிப்பதற்கான ஒர் பூர்வாங்க கலந்துரையாடலுக்காக தமிழர் தரப்பின் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.   

கிழக்கின் ஈழத்தமிழரின் அரசியற் போக்கை நெறிப்படுத்த தேசப்பற்றுள்ள அனைத்துக் கட்சிகளும் இணைந்து கொள்ளும் என கிழக்கின் தமிழர்கள் நம்புகிறோம்.    கிழக்கின் தமிழர் கூட்டணி தொடர்பில் மட்டக்களப்பில் 14.07.2019 ஆம் திகதி நடைபெற்ற கலந்துரையாடல் தொடர்பான அறிக்கை தேவை கருதி பிரசுரிக்கப்படுகிறது.    

 

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கிழக்கின்-அரசியலுக்கான-நேர்மைத்தனம்/91-235423

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • த‌மிழ் சிறி அண்ணா அந்த‌ 800ரூபாய் வீடியோ ப‌ழைய‌ வீடியோ அண்ணா அந்த‌ வீடியோ போன‌ வ‌ருட‌மே ரிக்ரோக்கில் பார்த்து விட்டேன்....................இதை ப‌ற்றி அல‌ட்ட‌ என்ன‌ இருக்கு 800ரூபாய் வீடியோ அடிச்சு சொல்லுறேன் அது போன‌ வ‌ருட‌த்தான் வீடியோ ம‌ற்ற‌ வீடியோ ப‌ற்றி நான் வாயே திற‌க்க‌ல‌...................எப்ப‌ பார்த்தாலும் எல்லாத்துக்கையும் என்னை கோத்து விடுவ‌தில் கோஷானுக்கு ஏதோ இன்ப‌ம் இருக்கிற‌ மாதிரி தெரியுது அவ‌ரின் இன்ப‌த்துக்கு அவ‌ர் என்னை எப்ப‌டியும் க‌ழுவி ஊத்த‌ட்டும் ஹா ஹா😂😁🤣.......................... 
    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
    • சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின் நிரந்தர விசா 18 APR, 2024 | 05:05 PM   பொன்டியின் வணிகவளாகத்தில் கத்திக்குத்திற்கு இலக்காகிய பாக்கிஸ்தானை சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு நிரந்தர விசாவை வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் பிரஜைக்கு அவுஸ்திரேலியா அவ்வாறான நிரந்தரவிசாவை வழங்கியுள்ள நிலையிலேயே அன்டனி அல்பெனிஸ்இதனை தெரிவித்துள்ளார். பொன்டி வணிகவளாக தாக்குதலின் போது துணிச்சலை வெளியிட்டவர்கள்அனைவரும் இருளின் மத்தியில் வெளிச்சமாக திகழ்ந்தவர்கள் என தெரிவித்துள்ள அன்டனி அல்பெனிஸ் அவர்கள் அவுஸ்திரேலியாவின் பாராட்டுகளை பெறவேண்டியவர்கள் என தெரிவித்துள்ளார். முகமட் டாஹாவிற்கு நிரந்தர வதிவிடத்தை அல்லது விசா நீடிப்பை வழங்குவது குறித்து  அரசாங்கம் சிந்திக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181371
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.