Jump to content

கட்டுநாயக்கவில் மற்றொரு அமெரிக்க சரக்கு விமானம்


Recommended Posts

கட்டுநாயக்கவில் மற்றொரு அமெரிக்க சரக்கு விமானம்

 

Mc-Donnel-Douglas-11-300x200.jpgகட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய மற்றொரு அமெரிக்க சரக்கு விமானம் நேற்று அதிகாலை புறப்பட்டுச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெஸ்ரேன் குளோப் எயர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான McDonnell Douglas 11 வகையைச் சேர்ந்த இந்த விமானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.50 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியது.

நேற்று அதிகாலை 2.50 மணியளவில் இந்த சரக்கு விமானம், ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள புஜாரா விமான நிலையம் நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளது.

இந்த விமானம், பசுபிக் தீவாக குவாமில் உள்ள அமெரிக்காவின் அன்டர்சன் விமானப்படை தளத்தில் இருந்தே, கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்தது.

கடந்தவாரமும், வெஸ்ரேன் குளோப் எயர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான McDonnell Douglas விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியிருந்தது.

அந்த விமானம் எரிபொருள் தேவை மற்றும் விநியோக சேவைகளை பெற்றுக் கொள்வதற்காகவே கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியதாக சிறிலங்கா அரசாங்கம் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும், அக்சா உடன்பாட்டுக்கு அமைய, சிறிலங்காவை அமெரிக்கா விநியோக தளமாக பயன்படுத்த ஆரம்பித்திருப்பதாக சந்தேகங்கள் கிளம்பியுள்ளன.

http://www.puthinappalakai.net/2019/07/17/news/39034

Link to comment
Share on other sites

5 minutes ago, nunavilan said:

எனினும், அக்சா உடன்பாட்டுக்கு அமைய, சிறிலங்காவை அமெரிக்கா விநியோக தளமாக பயன்படுத்த ஆரம்பித்திருப்பதாக சந்தேகங்கள் கிளம்பியுள்ளன.

அக்சா உடன்பாட்டுக்கு அமைய ஏற்கனவே அமெரிக்க விமானங்கள், கப்பல்கள் இலங்கைக்கு வந்து தரித்து நின்று சென்றிருக்கிறது. இப்ப தான் முதல் முதலா வாற மாதிரி செய்தி வெளியிடுகிறார்கள். 😊

அதே உடன்பாட்டிற்கமைய இலங்கை இராணுவத்துக்கு அமெரிக்கா பயிற்சிகளும் வழங்கியிருந்தது. இனியும் தொடரும். அமெரிக்க படையினருடன் இலங்கை படையினர் இணைந்த பயிற்சிகளை மேற்கொள்ளவும் முடியும். 😎

Link to comment
Share on other sites

36 minutes ago, Lara said:

அக்சா உடன்பாட்டுக்கு அமைய ஏற்கனவே அமெரிக்க விமானங்கள், கப்பல்கள் இலங்கைக்கு வந்து தரித்து நின்று சென்றிருக்கிறது. இப்ப தான் முதல் முதலா வாற மாதிரி செய்தி வெளியிடுகிறார்கள். 😊

அதே உடன்பாட்டிற்கமைய இலங்கை இராணுவத்துக்கு அமெரிக்கா பயிற்சிகளும் வழங்கியிருந்தது. இனியும் தொடரும். அமெரிக்க படையினருடன் இலங்கை படையினர் இணைந்த பயிற்சிகளை மேற்கொள்ளவும் முடியும். 😎

உடன்பாட்டுக்கு வந்தால் தான் சோபாவில் கையெழுத்து – ரணில்

ranil-wickremesinghe-prime-minister-of-s

இலங்கையின்  கருத்துக்களுக்கு அமெரிக்கா ஒப்புக் கொண்டால் மட்டுமே, சோபா மற்றும் கையகப்படுத்தல் மற்றும் குறுக்கு சேவைகள் (அக்சா) உடன்பாடுகளில் கையெழுத்திடப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று அனுரகுமார திசநாயக்க, பந்துல குணவர்த்தன ஆகியோர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

‘சிறிலங்காவின் இறைமையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் மீறுகின்ற எதையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது.

ஊடகங்களில் கூறப்படுவதைப் போன்று தற்போது சோபா உடன்பாடு எதுவும் செய்து கொள்ளப்படவில்லை.

1995 ஆம் ஆண்டு வெளிவிவகார அமைச்சுக்கும், இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கும் இடையில் பரிமாறிக் கொள்ளப்பட்ட கடிதங்களைத் தவிர,அமெரிக்காவுடன் எந்தவொரு சோபா உடன்பாட்டிலும் அரசாங்கம் கையெழுத்திடவில்லை.

சில ஊடகங்கள் 2017இல் சோபா உடன்பாடு கையெழுத்திடப்பட்டதாக தவறாக வழிநடத்துகின்றன. அவ்வாறு 2017இல் சோபா உடன்பாடு கையெழுத்திடப்பட்டிருந்தால் அது சட்டவிரோதமானது. போலியானதாகும்.

அத்தகைய ஆவணம் இருந்தால், அதன் பிரதியை என்னிடம் ஒப்படைக்குமாறு ஊடகங்களை நான் கேட்டுக்கொள்கிறேன். இது குறித்து பொலிஸாரை விசாரிக்க நான் கோருவேன்.

அமெரிக்க அரசு பல முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளது, ஆனால் அவற்றுக்கு அரசாங்கம் இன்னும் ஒப்புக் கொள்ளவில்லை, அந்த முன்மொழிவுகள் பரிசீலிக்கப்பட உள்ளன.

இலங்கையில் அமெரிக்கா இராணுவ முகாம்களை அமைப்பது குறித்து எந்த கேள்விக்கும் இடமில்லை. அமெரிக்காவிடம் உள்ள இராணுவ தளபாடங்களை கருத்தில் கொள்ளும்போது, இங்கு தளம் அமைப்பது சாத்தியமில்லை.

விமானம் தாங்கி கப்பலான ‘றொனால்ட் றீகன்’ 90 விமானங்களை ஏற்றிச் செல்லக் கூடியது. அவ்வாறு 90 விமானங்களை கையாளக் கூடிய இடம் இலங்கையில் இல்லை.

படைகள் நவீன கெலிக்கொப்டர்கள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றனர்.

கடந்த காலங்களில் போர்த்துகீசியர்கள் குழுக்களை கொண்டு வந்ததைப் போல அவர்கள் துருப்புக்களைக் கொண்டு வரவில்லை.

ஜப்பான், தென்கொரியா மற்றும் டியேகோ கார்சியா ஆகிய இடங்களில் ஏற்கனவே தளங்களைக் கொண்டிருப்பதால், சிறிலங்காவில் தளம் அமைக்க வேண்டிய தேவை அமெரிக்காவுக்கு இல்லை.

புதிதாக முன்மொழியப்பட்ட அக்சா உடன்பாட்டு வரைவில், அமெரிக்கா தொடர்பு புள்ளிகளை அதிகரித்துள்ளது. இலங்கை இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை தலைமையகங்கள் இதில் உள்ளடங்கியுள்ளன.

இதுபற்றி நாங்கள் எதுவும் செய்ய முடியாது, இலங்கைக்கு முன்மொழியப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சுடன் தான் அமெரிக்கா இதுபற்றி இணங்க வேண்டும்.

அமெரிக்கா பல்வேறு நாடுகளுடன் கையெழுத்திட்டுள்ள சோபா உடன்பாடுகள் ஒன்றுக்கொன்று வேறுபட்டவை.

1995 இல் கையெழுத்திடப்பட்ட உடன்பாடு, பரஸ்பர பாதுகாப்பு உடன்பாடு அல்ல. ஆனால் அது, பொதுவாக அமெரிக்க இராணுவத்தினர், வெளிநாட்டு ஒன்றில் செயற்படும் கட்டமைப்பை நிறுவும் வகையிலானது.

வெளிவிவகார அமைச்சர் அமெரிக்காவிற்குச் சென்றது அமெரிக்க அரசாங்கத்துடன் சோபா உடன்பாடு குறித்து பேசுவதற்காக அல்ல.

இரு நாடுகளுக்கும் இடையிலான அனைத்து உடன்பாடுகள் குறித்தும் விவாதிக்கவே அவர் அங்கு சென்றிருந்தார். இது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும், வழக்கமான செயல்முறையாகும்.

மகிந்த ராஜபக்ச ஆட்சியின் போது, கையகப்படுத்தல் மற்றும் குறுக்கு சேவை உடன்பாடு அமெரிக்காவுடன் கையெழுத்திடப்பட்டது.

இந்த உடன்பாட்டின் கீழ், இலங்கையில் பணியாற்றும் அமெரிக்கப் படையினரும், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சின் சிவில் பணியாளர்களும் இராஜதந்திர சலுகைகளை அனுபவிக்கிறார்கள் .

திருகோணமலை துறைமுகத்தை அல்லது வேறெந்த துறைமுகத்தையும், இந்தியாவுக்கு பாதகமான வகையில், இராணுவ பயன்பாட்டுக்காக எந்தவொரு நாட்டு இராணுவத்துக்கும் வழங்குவதில்லை என்று, இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் செய்து கொண்ட உடன்பாட்டில் முன்னாள் அதிபர் ஜே.ஆர். ஜெயவர்த்தன உறுதியளித்துள்ளார்.

எனவே, அமெரிக்காவுக்கோ, சீனாவுக்கோ, பிரித்தானியாவுக்கோ அல்லது வேறெந்த நாட்டுக்கோ, துறைமுகங்கள் கிடையாது, ஆனால், அவர்கள் வந்து போகலாம்.’ என்றும் அவர் தெரிவித்தார்.

www.yaldv.com/உடன்பாட்டுக்கு-வந்தால்...
 
Link to comment
Share on other sites

ரணில் சொல்வதை உண்மை என நம்புகிறீர்களா? மக்களை ஏமாற்ற அவர் சொல்லும் கருத்து அது. 😀

ஏற்கனவே நான் இன்னொரு திரியில் இவை பற்றி எழுதியிருந்தேன்.

1995 இல் சந்திரிகா ஆட்சியின் போது சோபா உடன்படிக்கையில் முதலில் கையெழுத்திட்டார்கள். அது பழைய உடன்படிக்கை என்பதால் இப்பொழுது மேலும் பல விடயங்களை உள்ளடக்கி நீட்டித்து புதுப்பித்து கையெழுத்திட நிற்கிறார்கள். அதை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் கூட உறுதிப்படுத்தியிருந்தார். பழைய ஒப்பந்தம் இன்னும் கைவசம் உள்ளது என்றும் கூறியிருந்தார்.

2007 ஆம் ஆண்டு மகிந்த ஆட்சியின் போது கோத்தாவும் ரொபேட் ஓ பிளேக்கும் அக்சாவில் கையெழுத்திட்டார்கள். அது 10 வருட காலத்திற்கானது. அது பற்றி அமெரிக்காவே செய்தி வெளியிட்டிருந்தது. 5 March 2017 உடன் அது காலாவதியானதும் அதில் மேலும் பல விடயங்களை உள்ளடக்கி நீட்டித்து புதுப்பித்து 4 August 2017 இல் மைத்திரி-ரணில் அரசு இரகசியமாக கையெழுத்திட்டது. 2017 இல் கையெழுத்திடப்பட்டது சோபா அல்ல அக்சா.

அமெரிக்கா அக்சாவையே சோபாவாக மாற்றியமைக்க கேட்டு இலங்கை அதற்கு சம்மதிக்கவில்லை. அதனால் இப்போதைக்கு இரண்டும் தனித்தனியாக உள்ளது. 

Link to comment
Share on other sites

எனது முன்னைய கருத்தில் நான் கூறியது அக்சா உடன்படிக்கையின் படி ஏற்கனவே நடைபெற்ற விடயங்கள்.

Link to comment
Share on other sites

அத்துடன் 2007 அக்சா உடன்படிக்கை 10 வருட கால வரையறையை கொண்டிருந்தது போலல்லாமல் 2017 அக்சா உடன்படிக்கை கால வரையறையை கொண்டிருக்கவில்லை என்றும் வாசித்திருக்கிறேன். எனவே ஒப்பந்தத்திற்கு முடிவு இல்லை. முடிவுக்கு கொண்டு வருவதானால் இரு பகுதியும் தமக்குள் இணங்க வேண்டும். (அல்லது ஒரு பகுதி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதாக இருந்தால் 6 மாத கால அவகாசம் கொடுக்க வேண்டும்).

2017 அக்சாவில் மேலும் திருத்தங்களை கொண்டுவர விரும்பினால் அதை மீண்டும் புதுப்பிக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை மகாபாரதகதை போல சூழ்ச்சிக்குள் அகப்பட்டு சின்னாபின்னமாகிறது.

ம் தமிழன் சுதந்திரமாக வாழாத இடம் எப்படிப் போனால் இனியென்ன என்று எண்ணத் தோன்றுகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூர்ந்து கவனிப்பதா அறிக்கை வரும்..

mqdefault.jpg

யாரென்று சொல்லி வேலை இல்லை..☺️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொப்ன சுந்தரியின் காரை இப்ப யார் வைத்து இருக்கிறார்கள் ?

 சைனாவா ? அமெரிக்காவா ?

Link to comment
Share on other sites

8 hours ago, nunavilan said:

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய மற்றொரு அமெரிக்க சரக்கு விமானம் நேற்று அதிகாலை புறப்பட்டுச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது சிங்களவர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்துவதில் வியப்பில்லை!

அமெரிக்க பிரசன்னம் தங்களது சிங்கள-பௌத்த இனமதவெறிச் செயல்களுக்கு தடையாக மாறிவிடுமோ என்ற பயம் தான் காரணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nunavilan said:

உடன்பாட்டுக்கு வந்தால் தான் சோபாவில் கையெழுத்து – ரணில்

 

ranil-wickremesinghe-prime-minister-of-s

 

திருகோணமலை துறைமுகத்தை அல்லது வேறெந்த துறைமுகத்தையும், இந்தியாவுக்கு பாதகமான வகையில், இராணுவ பயன்பாட்டுக்காக எந்தவொரு நாட்டு இராணுவத்துக்கும் வழங்குவதில்லை என்று, இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் செய்து கொண்ட உடன்பாட்டில் முன்னாள் அதிபர் ஜே.ஆர். ஜெயவர்த்தன உறுதியளித்துள்ளார்.

 

www.yaldv.com/உடன்பாட்டுக்கு-வந்தால்...
 

ஒரு காலத்தில் இந்தியாவுக்கும் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவின் அனுபவங்களையும் ஆற்றலையும் நாட்டுமக்களும் கட்சிகளும் மரியாதை செய்துகொள்ள பழகிக்கொள்ளவேண்டும்.

ஒரு நாட்டின் பிரதமராக இருப்பதே இந்த காலத்தில் எவ்வளவு கஷ்டம், தெற்காசியாவின் துணைக்கண்டமான இந்தியாவிற்கும்,அதற்கு கீழே அன்னாசி பழம்போல தொங்கிகிட்டிருக்கும் இலங்கைக்கும் சேர்த்து ஒரு மனிதன் பிரதமராயிருப்பது என்பது சாதாரண விஷயமில்லை என்பதை அனைவரும் புரிந்துகொளோளவேண்டும்ம் நன்றி www.yaldv.com தங்கள் பணி மகத்தானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

சொப்ன சுந்தரியின் காரை இப்ப யார் வைத்து இருக்கிறார்கள் ?

 சைனாவா ? அமெரிக்காவா ??

சொப்பன சுந்தரி உங்களுக்கு சொந்தமில்லை...யார் வைச்சு இருந்தால் என்ன? வித்தால் என்ன ?

Link to comment
Share on other sites

1 hour ago, valavan said:

ஒரு காலத்தில் இந்தியாவுக்கும் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவின் அனுபவங்களையும் ஆற்றலையும் நாட்டுமக்களும் கட்சிகளும் மரியாதை செய்துகொள்ள பழகிக்கொள்ளவேண்டும்.

ஒரு நாட்டின் பிரதமராக இருப்பதே இந்த காலத்தில் எவ்வளவு கஷ்டம், தெற்காசியாவின் துணைக்கண்டமான இந்தியாவிற்கும்,அதற்கு கீழே அன்னாசி பழம்போல தொங்கிகிட்டிருக்கும் இலங்கைக்கும் சேர்த்து ஒரு மனிதன் பிரதமராயிருப்பது என்பது சாதாரண விஷயமில்லை என்பதை அனைவரும் புரிந்துகொளோளவேண்டும்ம் நன்றி www.yaldv.com தங்கள் பணி மகத்தானது.

😂😂😂

ராஜீவ் காந்தி பெயருக்கு பதிலாக ரணில் விக்ரமசிங்கவின் பெயரை போட்டு விட்டார்கள். :grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்திற்கு மற்றுமொரு தினம்!       சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்திற்கு மற்றுமொரு தினத்தை வழங்குவதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது. இதன்படி, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. மேலும், விவசாயிகளின் நெல் கொள்வனவு தொடர்பான பிரச்சினைகள் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு விவாதத்தை எதிர்வரும் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் இன்று (19) பாராளுமன்றத்தில் ஆரம்பமானது. இதற்கமைய, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=185353
    • தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பா. மன்றின் நடுவில் 8 பேரின் விடுதலை வேண்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
    • ஆமாம் .....40 ஆயிரமாகத் தான் இருக்கும்   ஆனால் இது மிகவும் குறைவு   கொஞ்சம் கூட கேட்டிருக்கணும் 🤣🤣🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.