Jump to content

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் இன்று அவசர சந்திப்பு


Recommended Posts

இந்து ஆலயங்கள் இருக்கும் இடங்களில் பலவந்தமாக பௌத்த விகாரைகளை அமைக்கும் முயற்சிகள் அதிகரித்துள்ள நிலையில், அது குறித்து ஜனாதிபதியுடன் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று அவசர சந்திப்பு ஒன்றை நடத்தவிருக்கின்றனர்.

அமைச்சர் மனோகணேசனின் ஏற்பாட்டில் இந்த சந்திப்பு இன்று முற்பகல் 11 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. இதுகுறித்த விபரங்களை அமைச்சர் மனோகணேசன் எமது செய்தி சேவைக்கு வழங்கினார்.

அதேநேரம், கல்முனை வடக்கு தமிழ் பிரதேச சபை குறித்த தீர்மானமிக்க கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் பிரதமர் தலைமையில் அலரிமாளிகையில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

கிழக்கு மாகாணத்தின் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.

ஏற்கனவே நேற்றையதினம் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று மாலை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து இதுதொடர்பாக கலந்துரையாடி இருந்தனர். இதன்அடிப்படையில் இன்றையதினம் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

http://www.hirunews.lk/tamil/220521/தமிழ்-நாடாளுமன்ற-உறுப்பினர்கள்-ஜனாதிபதியுடன்-இன்று-அவசர-சந்திப்பு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.