Jump to content

பிரதமரின் கூற்று சாத்தியமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரதமரின் கூற்று சாத்தியமா?

 

எட்­டாக்­க­னி­யாக உள்ள அர­சியல் தீர்வை இன்னும் இரண்டு வரு­டங்­க­ளுக்குள் எட்­டி­விட முடியும்  என்ற பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் அறி­விப்பு, சில­ருக்கு காதில் தேன் வந்து பாய்ந்­தது போன்ற உணர்வை ஏற்­ப­டுத்தி இருக்­க லாம். 

ranil.jpg

ஏழு தசாப்­தங்­க­ளாகப் புரை­யோடிப் போயுள்ள இனப்­பி­ரச்­சி­னை­யினால் நாடு எண்­ணற்ற பிரச்­சி­னை­க­ளுக்கு முகம் கொடுத்­தி­ருக்­கின்­றது. நாட்டின் பொரு­ளா­தாரம், மக்­களின் சீரான வாழ்­வியல், பல்­லின மக்­க­ளி­டை­யே­யான நல்­லி­ணக்கம், நல்­லு­றவு, சுக­வாழ்வு, ஐக்­கியம் போன்ற பல பிரச்­சி­னை­க­ளுக்கு நாளாந்தம் முகம் கொடுக்க வேண்­டிய நிலை­மைக்கு மக்கள் ஆளா­கி­யி­ருக்­கின்­றார்கள். 

தீர்க்­கப்­ப­டாத இனப்­பி­ரச்­சி­னையை முத­லீ­டாகக் கொண்டும், அதனைப் பல்­வேறு வழி­களில் திரித்தும், வகுத்தும், பெருப்­பித்தும் சந்­தர்ப்­ப­வாத அர­சி­யல்­வா­திகள் சுய­லாப அர­சி­யலை வெற்­றி­க­ர­மாக முன்­னெ­டுத்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காண்­ப­தற்­கான முயற்­சிகள் மணிக்­கூட்டைப் போன்று ஒரு வட்டம் சுற்றி மீண்டும் சாத்­வீகப் போராட்ட நிலை­மைக்குள் வந்து சிக்கி நிற்­கின்­றன. ஆனால் இனப்­பி­ரச்­சி­னையை முடி­வுக்குக் கொண்டு வரு­வ­தற்­கான அர­சியல் தீர்வு காண்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் சாண் ஏற முழம் சறுக்­கிய நிலை­மை­யிலும் மோச­மான நிலை­மை­யி­லுமே காணப்­ப­டு­கின்­றன.

இந்த நிலையில் அர­சியல் தீர்வை எட்­டி­விட்டோம். இன்னும் இரண்டு வரு­டங்­களில் அது சாத்­தி­ய­மா­கி­விடும் என்ற பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் அறி­விப்பு பல­ருக்கும் இனிப்­பான செய்­தி­யாக இருக்­கும்­தானே? ஆனால் அது மெய்­யா­கவே இனிப்­பான செய்­தியா என்ற கேள்­வியும் இருக்­கத்தான் செய்­கின்­றது.

அர­சியல் தீர்வு என்­பது தமிழ் மக்கள் இந்த நாட்டின் தேசிய இனம், அவர்­களின் தாயகக் கோட்­பாட்டின் அடிப்­ப­டையில் பெரும்­பான்மை இனத்­த­வ­ரா­கிய சிங்­கள மக்­க­ளுக்கு இணை­யான இறை­மையும் உரி­மை­களும் உடை­ய­வர்­க­ளாக வாழ வழி­வ­குக்கும் வகையில் அமைய வேண்டும் என்­பதே சிறு­பான்மை இன மக்­களின் நீண்­ட­கால எதிர்­பார்ப்­பாகும். 

சாத்­தி­யமா......?

ஆனால் இது­கால வரை­யிலும் மேற்­கொள்­ளப்­பட்டு, முளை­யி­லேயே கருகிப் போன அர­சியல் தீர்­வுக்­கான முயற்­சிகள் தமிழ் மக்­களின் தேசிய இனம், தாயகக் கோட்­பாடு என்ற அடிப்­படை நிலைப்­பா­டு­களைப் புறந்­தள்­ளி­ய­தா­கவே அமைந்­தி­ருக்­கின்­றன.

தமிழ் மக்­களின் தேசிய இனம், வடக்கும் கிழக்கும் இணைந்த தாயகக் கோட்­பாடு என்ற பேச்சே பேரின அர­சி­யல்­வா­தி­க­ளுக்கும், சிங்­கள பௌத்த தேசிய மேலாண்மைக் கோட்­பாட்டைக் கொண்­டுள்ள பேரின தீவி­ர­வா­தி­க­ளுக்கும் வேப்­பங்­கா­யாகக் கசக்­கின்­றது. மறு­பு­றத்தில் ஏதோ பேயைக் கண்ட அர­சியல் ரீதி­யான அச்ச உணர்வும் அவர்­களை ஆக்­கி­ர­மிக் கத் தவ­ற­வில்லை.

இது சிங்­க­ள­வர்­களின் நாடு. இங்கு சிங்­கள பௌத்த தேசி­யமே மேலோங்கி இருக்க வேண்டும். ஏனைய இனத்­த­வர்­களும் இங்கு வாழலாம். ஆனால் அவர்கள் சிங்­கள பௌத்­தர்­க­ளுக்கு சம­மாக வாழ முடி­யாது. சிங்­கள மொழியும், பௌத்த மதமும் முன்­னு­ரிமை பெற்­றி­ருக்க வேண்டும். 

சிங்­க­ளமும் பௌத்­தமும், ஏனைய மொழி­க­ளையும் மதங்­க­ளை­யும்­விட அதி­கப்­ப­டி­யான உரி­மை­க­ளையும் சலு­கை­க­ளையும் கொண்­ட­வை­யாக உன்­னத நிலையில் இருக்க வேண்டும். சிங்­கள மொழியும், பௌத்த மதமும், சிங்­கள மக்­களும் நாட்டின் எந்தப் பிர­தே­சத்­திலும் தங்கள் விருப்பம் போல வாழலாம். புத்தர் சிலை­களை நிறு­வியும், பௌத்த விகா­ரை­களை அமைத்தும் இஸ்­டம்­போல வழி­பாடு செய்­யலாம். அதற்கு எவ­ராலும் தடை­யேற்­ப­டுத்த முடி­யாது. 

அந்த வகை­யி­லான முன்­னு­ரி­மையும் உன்­ன­த­மான நிலையும் சட்­ட­ரீ­தி­யா­கவும் செயற்­பாட்டு ரீதி­யா­கவும் உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்­பதே சிங்­கள பௌத்த தேசிய தீவி­ர­வா­தி­க­ளி­னதும், அவர்­களின் வழி­ந­டத்­தலில் அணி­சேர்ந்­துள்ள சிங்­கள மக்­க­ளி­னதும், பௌத்த பிக்­கு­க­ளி­னதும் நிலைப்­பா­டாகும். 

இது தமிழ் மக்கள் எதிர்­பார்க்­கின்ற அவர்­களின் வர­லாற்று வாழ்­வியல் பின்­ன­ணியைக் கொண்ட பகி­ரப்­பட்ட இறை­யாண்மை, தாயகக் கோட்­பாட்டின் அடிப்­ப­டை­யி­லான அர­சியல் தீர்­வுக்கு முற்­றிலும் முர­ணா­னது. இந்த நிலையில் இன்னும் இரண்டு வரு­டங்­களில் அர­சியல் தீர்வை எட்­டி­வி­டலாம் என்ற பிர­த­மரின் கூற்று சிக்­க­லா­ன­து­தானே...?

அதி­காரப் பகிர்வு

தமிழ் மக்கள் எதிர்­பார்க்­கின்ற அர­சியல் தீர்வு அதி­கார பலத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்­டது. மீளப் பெற முடி­யாத காணி உரித்­து­டைய பிராந்­திய ஆட்சி நிர்­வாக உரிமை சார்ந்­தது. அதனை அவர்கள் சமஷ்டி முறை­யி­லா­னதோர் அர­சியல் தீர்­வாக குறிப்­பி­டு­கின்­றார்கள். 

ஆனால் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உள்­ளிட்ட பேரின அர­சி­யல்­வா­திகள் ஒற்­றை­யாட்­சி­யையே அர­சியல் தீர்­வுக்­கான அடிப்­படை கொள்­கை­யாகக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். சமஷ்டி என்ற பேச்­சுக்கே இட­மில்லை என்­பது அவர்­களின் நிலைப்­பாடு. ஒற்றை ஆட்­சியின் கீழ் தமிழ் மக் கள் எதி­ர்பார்க்­கின்ற அதி­காரப் பகிர்வு சாத்­தி­ய­மற்­றது. 

பல்­லின மக்கள் பல மதங்­களைச் சார்ந்­த­வர்கள் வாழ்­கின்ற நாடு என்ற வகையில் பலரும் இந்த நாட்டைத் தமது தாய்­நா­டாக உரிமை கொள்­ளத்­தக்க வகை­யி­லான அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­பட வேண்டும். அந்த பல்­லி­னத்­தன்­மைக்­கான இணக்­கப்­பாட்டை எட்­டு­வதில் பல சிக்­கல்­களை எதிர் கொள்ள வேண்டி இருக்­கின்­றது. 

பெரும்­பான்மை இனம் என்ற மேலா­திக்க எண்­ணமும், மேலாண்மை அர­சியல் போக்கும் பேரின அர­சி­யல்­வா­தி­களை ஏனைய இன மக்­களின் உரி­மை­களை மதித்துச் செயற்­ப­டு­வ­தற்­கான தடைக்­கற்­க­ளாக இருக்­கின்­றன. இந்தத் தடைக்­கற்­களைக் கடந்து வர­வேண்டும் என்ற பரந்த மனப்­பான்மை கொண்­ட­வர்­களை பேரின அர­சி­யல்­வா­திகள் மத்­தியில் காண முடி­ய­வில்லை. 

சுய அர­சியல் இலா­பத்­திற்­காக சிறு­பான்மை இன மக்­களை வசப்­ப­டுத்­து­வ­தற்­கான கப­டத்­த­ன­மான அர­சியல் போக்கைக் கடைப்­பி­டிக்­கின்ற அர­சியல் தலை­வர்­களே ஆட்சிப் பொறுப்பில் காணப்­ப­டு­கின்­றார்கள். பௌத்த சிங்­கள பேரின தேசி­ய­வா­தத்தில் மீள முடி­யாத வகையில் ஊறிப் போயுள்ள பௌத்த மத பீடா­தி­ப­தி­களின் தயவில் ஆட்சி நடத்­து­கின்ற அர­சாங்­கங்­களே வாழை­யடி வாழை­யாக ஆட்சிக் கட்­டிலைக் கைப்­பற்றி வரு­கின்­றன. பௌத்த பீடங்­களின் கொள்கை வழியைப் புறந்­தள்ளிச் செயற்­ப­டு­வ­தற்கு எந்­த­வொரு ஜனா­தி­ப­தியும் அல்­லது எந்­த­வொரு பிர­த­மரும் இது­வ­ரையில் தயா­ரா­க­வில்லை. 

இத்­த­கைய ஒரு பின்­ன­ணி­யில்தான், அதி­காரப் பகிர்வு தொடர்பில் ஒரு நிலைப்­பாட்டை எட்­டு­வ­தற்கு நெருங்­கி­விட்டோம் என்றும், ஆகவே இன்னும் இரண்டு வரு­டங்­களில் அர­சியல் தீர்வு சாத்­தி­ய­மா­கி­விடும் என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கூறி­யி­ருக்­கின்றார். இது எந்த வகையில் சாத்­தியம் என்­பதை அவர் விப­ரிக்­க­வில்லை. 

பிர­த­மரின் இரண்டு வரு­டங்கள்.....

தற்­போது அதி­கா­ரத்தில் உள்ள பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் தலை­மை­யி­லான அர­சாங்கம் 2020 ஆம் ஆண்டு கிட்­டத்­தட்ட நவம்பர் மாதம் வரை­யி­லேயே பத­வியில் இருக்க முடியும். ஏனெனில் 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முத லாம் திக­திக்கு முன்னர் அடுத்த பொதுத் தேர்தல் நடத்­தப்­பட வேண்டும் என்­பது அர­சி­ய­ல­மைப்பின் விதி­யாகும். 

நாட்டின் அர­சி­ய­ல­மைப்­புக்கு மாறான வகையில் 2018ஆம் ஆண்டு அக்­டோபர் மாதம் 26ஆம் திகதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவைத் திடீ­ரென அவ­ரு­டைய பிர­தமர் பத­வியில் இருந்து நீக்­கிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான மஹிந்த ராஜ­பக்­ ஷவை புதிய பிர­த­ம­ராக நிய­மித்தார். 

தனக்­குள்ள நிறை­வேற்று அதி­கா­ரத்தின் பலத்தைக் கொண்டு அர­சி­ய­ல­மைப்­புக்கு உட்­பட்ட வகையில் இந்த நட­வ­டிக்­கையை மேற்­கொண்­ட­தாகக் கூறிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பாரா­ளு­மன்றக் கூட்டத் தொடரை ஒத்தி வைத்தார். புதிய அமைச்­ச­ர­வை­யொன்­றையும் உரு­வாக்­கினார். 

பின்னர் நவம்பர் மாதம் 9ஆம் திகதி பாராளு­மன்­றத்தைக் கலைத்து, 2019ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 5 ஆம் திகதி பொதுத் தேர்­த­லுக்­கான நாளைக் குறித்து, அதற்­கான பிர­க­ட­னத்­தையும் செய்தார். அவ­ரு­டைய இந்த நட­வ­டிக்­கை­யினால் நாட்டில் பெரும் அர­சியல் நெருக்­கடி ஒன்று உரு­வா­கி­யது. 

அர­சி­ய­ல­மைப்­புக்கு விரோ­த­மான முறை யில் அவர் செயற்­பட்­ட­தாகக் கூறி கண்­டனக் குரல்கள் எழுந்­தன. உச்ச நீதி­மன்­றத்தின் கவ­னத்­திற்கு இந்த விவ­காரம் கொண்டு செல்­லப்­பட்­டது. ஜனா­தி­ப­தி யின் நட­வ­டிக்­கைகள் அர­சி­ய­ல­மைப்­புக்கு முர­ணா­னது என விளக்­க­ம­ளித்த உச்ச நீதி­மன்றம், பாரா­ளு­மன்­றத்தைக் கலைப்­ப­தற்­கான உத்­த­ரவைத் தடை செய்­தது. 

பொதுத் தேர்­த­லுக்­கான அறி­விப்பை நிறுத்­து­வ­தற்கும் உத்­த­ர­விட்டு, 2015ஆம் ஆண்டு நடை­பெற்ற பொதுத் தேர்­தலின் அடிப்­ப­டையில் அடுத்த பொதுத் தேர்தல் 2020ஆம் ஆண்­டி­லேயே நடை­பெற வேண்டும் என்ற தீர்ப்­பையும் வழங்­கியது. 

அந்த வகையில் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் அர­சாங்கம் அடுத்த வரு­டத்­துடன் முடி­வ­டைந்­து­விடும். அடுத்த பொதுத் தேர்­தலில் புதிய அர­சாங்கம் தெரிவு செய்­யப்­படும். அந்த அர­சாங்கம் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வு­டைய அர­சாங்­க­மாக இருக்­குமா என்­பதை உறு­தி­யாகக் கூற முடி­யாது. இந்த நிலையில் இன்னும் இரண்டு வரு­டங்­களில் அர­சியல் தீர்வு காணப்­பட்­டு­விடும் என்ற அவ­ரு­டைய கூற்று சாத்­தி­ய­மா­னதா என்ற கேள்வி இயல்­பா­கவே எழு­கின்­றது. இரண்டு வரு­டங்­களில் அர­சியல் தீர்வு என்­பதை, அவ­ரு­டைய எதிர்­பார்ப்­பா­கவே கருத வேண்­டி­யுள்­ளது. அந்த எதிர்­பார்ப்பும் நிறை­வே­றுமா என்­ப­தையும் முன்­கூட்­டியே நிச்­ச­ய­மாகக் கூற முடி­யா­துள்­ளது.

உட்­க­ருத்து

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மற்றும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆகி­யோரின் தலை­மை­யி­லான நல்­லாட்சி அர­சாங்கம் இரு­வ­ருக்கும் இடையில் எழுந்­துள்ள அதி­காரப் போட்டி கார­ண­மாக ஆட்டம் காண்­கின்ற நிலை­யி­லேயே உள்­ளது. இந்த அர­சாங்­கத்­திற்கு எதி­ராக ஜே.வி.­பி.­யி­னரால் கொண்டு வரப்­பட்ட நம்­பிக்கை இல்லாப் பிரே­ரணை தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் ஆத­ரவு கார­ண­மா­கவே தோற்­க­டிக்­கப்­பட்டு, அர­சாங்கம் ஆட்­சியில் நிலைத்­துள்­ளது. 

இந்த நம்­பிக்கை இல்லாப் பிரே­ரணை என்ற அர­சியல் கண்­டத்தில் இருந்து தன்னைக் காப்­பாற்­றி­ய­தற்­காக தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­புக்கும், தமிழ் மக்­க­ளுக்கும் நன்றி தெரி­விக்கும் வகை­யி­லான ஓர் அர­சியல் உத்­த­ர­வா­த­மா­கவே இன்னும் இரண்டு வரு­டங்­களில் அர­சியல் தீர்வு சாத்­தியம் என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கூறி­யி­ருக்­கலாம். அவ­ரு­டைய இந்தக் கூற்று இன்­னு­மொரு விட­யத்­தையும் வெளிச்­ச­மிட்டுக் காட்­டி­யுள்­ளது என்­பதை இங்கு குறிப்­பிட வேண்­டி­யுள்­ளது. 

நம்­பிக்கையில்லாப் பிரே­ர­ணையை ஆத­ரித்­தி­ருந்தால், தமிழ் மக்­களின் நலன்­க­ளுக்குப் பாத­க­மான மஹிந்த ரரா­ஜ­பக்­ஷவின் அர­சாங்கம் ஆட்சி அதி­கா­ரத்தைக் கைப்­பற்­றி­விடும் என்­ப­தற்­கா­கவே ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை ஆத­ரித்து, பிரே­ர­ணைக்கு எதி­ராக வாக்­க­ளித்­த­தாகக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் தன்­னிலை விளக்கம் அளித்­தி­ருந்தார். அது மட்­டு­மல்­லாமல், இந்த அர­சாங்­கத்தைக் கவிழ்த்­து­விட்டு அடுத்­த­தாக என்ன செய்­வது என்ற கேள்­வி­யையும் அவர் எழுப்­பி­யி­ருந்தார் என்­பதும் கவ­னத்­திற்­கு­ரி­யது. 

தற்­போ­தைய அர­சியல் சூழலில் தமிழ்த் தரப்பு ஐக்­கிய தேசியக் கட்­சியைச் சார்ந்­தி­ருக்க வேண்­டிய நிர்ப்­பந்­தத்தில் சிக்­கி­யுள்­ளது. வரப்­போ­கின்ற தேர்­தல்­களில் மஹிந்த ராஜ­பக் ஷவை அல்­லது மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஆத­ரிப்­பதன் மூலம் அர­சியல் ரீதி­யாக எந்­த­வித நன்­மை­யையும் அடைய முடி­யாது என்­பதே அர­சியல் யதார்த்தம். 

ஐக்­கிய தேசிய கட்சி தமிழ்த் தரப்­புடன் மென்­போக்கு கொள்­கையைக் கடைப்­பி­டித்து வரு­வ­தனால், ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் பேச்­சுக்கள் நடத்தி குறைந்த பட்­சத்­தி­லா­வது பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணலாம் என்ற நிலைப்­பாடும் காணப்­ப­டு­கின்­றது. இத்­த­கைய ஒரு பின்­ன­ணியில் - அடுத்­த­டுத்து தேர்­தல்­களை எதிர்­கொண்­டுள்ள ஓர் அர­சியல் சூழலில் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பை நம்­பி­யி­ருக்க வேண்­டிய நிலை­மைக்கு ரணில் விக்­கி­ர­ம­சிங்க தள்­ளப்­பட்­டுள்­ள­தையும் கவ­னத்திற் கொள்ள வேண்டி இருக்­கின்­றது. 

மறை­மு­க­மான கோரிக்­கையா.....?

அர­சியல் தீர்­வுக்­கான காலம் கனிந்து வரு­கின்­றது என்­பதை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கொழும்பில் அல்­லது நாட்டின் தென்­ப­கு­தியில் ஓரி­டத்தில் கூற­வில்லை. மாறாக நம்­பிக்கை இல்லாப் பிரே­ர­ணையில் தப்­பிய சூட்­டோடு சூடாக யாழ்ப்­பா­ணத்தில் வைத்து இதனை அவர் கூறி­யுள்ளார். அர­சியல் தீர்­வுக்­கான அதி­காரப் பகிர்வு தொடர்பில் ஒரு நிலைப்­பாட்டை எட்­டு­வ­தற்கு நெருங்­கி­விட்டோம் என அவர் கூறி­யுள்­ளதன் மூலம் வரப்­போ­கின்ற ஜனா­தி­பதி தேர்­தலில் ஐக்­கிய தேசிய கட்­சியை தமிழ் மக்கள் ஆத­ரிக்க வேண்டும் என்று குறிப்­பு­ணர்த்­தி­யுள்­ள­தாகக் கூட கரு­து­வ­தற்கு இட­முண்டு. அத்­துடன் ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் இணக்­க­மான அர­சியல் போக்கைக் கொண்­டுள்ள தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­பையே அடுத்த பொதுத் தேர்­தலில் தமிழ் மக்கள் ஆத­ரிக்க வேண்டும் என்று சூச­க­மாக அவர் கோரிக்கை விடுத்­தி­ருக்­கின்­றாரோ என்ற எண்ணம் எழு­வ­தையும் தவிர்க்க முடி­யா­துள்­ளது. 

தமிழ் மக்­களைப் பொறுத்­த­ளவில் இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காண்­ப­தற்­காக காலம் கால­மாக ஐக்­கிய தேசிய கட்­சியை நம்பிச் செயற்­பட்ட போக்­கையே வர­லாற்றில் அதி­க­மாகக் காண முடி­கின்­றது. ஆனாலும், ஐக்­கிய தேசிய கட்­சியின் ஆட்­சியில் தமிழ் மக்கள் எந்த அள­வுக்கு நன்­மைகள் அடைந்­துள்­ளார்கள் என்ற கேள்­விக்கு சாத­க­மாக – சாதா­ர­ண­மா­கக்­கூட பதி­ல­ளிக்க முடி­யா­துள்­ளது.

மறு­த­லை­யாக எழுந்­துள்ள கேள்வி

ஐக்­கிய தேசிய கட்­சியின் ஆட்­சி­யில்தான் 1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழ் மக்கள் மோச­மான இன அழிப்பு தாக்­கு­தல்­க­ளுக்கு ஆளா­கி­னார்கள். அந்த கறுப்பு ஜூலைதான் தென்­னி­லங்­கையில் கிளை­ப­ரப்பி படர்ந்­தி­ருந்த தமிழ் மக்­களின் பொரு­ளா­தாரம் அடித்து நொருக்­கப்­பட்­டது. 

முள்­ளி­வாய்க்­காலின் ஊழிக்­கால அழி­வுக்கு வித்­திட்ட ஆயுதப் போராட்டம் தீவி­ர­ம­டை­வ­தற்கும் அந்த 83 கறுப்பு ஜூலைதான் உத்­வேகம் அளித்­தி­ருந்­தது. 

ஆயுதப் போராட்டம் உச்ச கட்­டத்தை எட்­டி­யி­ருந்த நிலையில் 2002 ஆம் ஆண்டு போர்­நி­றுத்த ஒப்­பந்தம் செய்­யப்­பட்டு நோர்வே அரசின் மத்­தி­யஸ்­தத்­து­ட­னான சமா­தானப் பேச்­சு­வார்த்­தைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டதும், சர்­வ­தேச நாடு­களின் பல இடங்­களில் நடை­பெற்ற அந்தப் பேச்­சு­வார்த்­தை­களின் பின்­ன­ணி­யி­லேயே விடு­த­லைப்­ பு­லி­களின் முன்னாள் முக்கிய தளபதியாகிய கருணா அம்மான் அந்த அமைப்பில் இருந்து விலகியதும், தொடர்ந்து அந்த அமைப்பின் கட்டுக் கோப்பு பாதிக்கப்பட்ட அவலமும் ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியிலேயே நடை பெற்றது. 

நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கு வதற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியுள்ள போதிலும், ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான அதிகாரப் போட்டியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங் கவையே ஆதரிக்க வேண்டிய நிலை மைக்கு கூட்டமைப்பு ஆளாகிய பின்ன ணியில் ஜனாதிபதியின் அரசியல் ரீதி யான கோபத்திற்குக் கூட்டமைப்பு ஆளாகவும் நேர்ந்துள்ளது. 

இந்த கோபத்தின் வெளிப்பாடாகவே திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று புராதன பிள்ளையார் கோவிலைத் தகர்த்து புதிய விகாரை ஒன்றை நிர்மா ணிப்பதற்கான நேரயடியான உத்தரவு ஜனாதிபதி செயலகத்தில் இருந்து தொல் பொருள் திணைக்களத்தின் பணிப்பாள ருக்குப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இது மட்டுமல்லாமல் இதுபோன்று தமிழர் பிரதேசங்களில் புத்தர் சிலைக ளையும் பௌத்த விகாரைகளையும் நிர்மாணிப்பதற்கான அத்துமீறிய ஆக்கி ரமிப்பு நடவடிக்கைகள் அரசாங்கத்தி னால் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. 

இரண்டு வருடங்களுக்குள் அரசியல் தீர்வு சாத்தியம் என்று உறுதியளித்துள்ள – தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நிபந்தனையற்ற ஆதரவைப் பெற்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இத்தகைய பகிரங்கமான அரச ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்துவதற்கு ஏன் உடனடி நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது என்ற கேள்வி இயல்பாகவே எழு கின்றது.  இந்தக் கேள்வி அரசியல் தீர்வு கனிந்து வருகின்றது என்ற பிரதமரின் இனிப்பான செய்திக்கு மறுதலையாக எழுந்து நிற்கின்றது.

(பி.மாணிக்கவாசகம்)

 

https://www.virakesari.lk/article/60581

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்கச் சென்ற வயதான வாக்காளரின் பெயர், இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்ததால், வாக்களிக்க முடியாமல் அதிர்ச்சியடைந்து திரும்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.   ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி, பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், திமுக கூட்டணி சார்பில் நவாஸ்கனியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் விருவிருப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 3 மணி வரை ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 52.46 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க சென்ற வயது முதிர்ந்த பெண் ஒருவரின் பெயர், இறந்தபோன வாக்காளர் லிஸ்ட்டில் இடம்பெற்றிருந்தததால் வாக்களிக்க முடியாமல் திரும்பினார். துளசிபாவா மடம் பகுதியை சேர்ந்த காளியம்மாள் (65) என்பவர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் சிலிப்புடன் தனது பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க சென்றுள்ளார்.         வாக்குப்பதிவு மையம் உ.பாண்டி     வாக்குச்சாவடி உ.பாண்டி வரிசையில் காத்திருந்த காளியம்மாள் வாக்குப்பதிவு மையத்தினுள் சென்று தனது பூத் சிலிப்பைக் கொடுத்துள்ளார். அதனை வாங்கிப் பார்த்த தேர்தல் பணியாளர், வாக்காளர் பட்டியலில் தேடி பார்த்தபோது, காளியம்மாளின் பெயர் இறந்தவர்களின் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து காளியம்மாளிடம் கூறிய தேர்தல் பணியாளர், அவரை வாக்களிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார். உயிரோடு இருந்து ஓட்டுப்போட ஆர்வத்தோடு வந்த தன்னை, இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்த்திருப்பதை அறிந்த காளியம்மாள் அதிர்ச்சியடைந்ததுடன், வாக்களிக்க முடியாமல் போன வேதனையுடனும் வாக்குப்பதிவு மையத்திலிருந்து வெளியேறினார். `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! | name in the dead voters list ramanathapuram woman failed to cast her vote - Vikatan
    • ஓமண்ணை…. பெரிய அநியாயம்….எனக்கெல்லாம் வாழ்க்கையின் பேக்ரவுண்ட் மியூசிக் அது. 70% க்கு மேல இப்ப wok style தாச்சிதான்.
    • மத்திய அரசுக்குச் சொந்தமான ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி, தனது இந்திச் செய்தி சேனலான 'டிடி நியூஸ்'-இன் பிராண்டிங், செட் டிசைன், போன்றவற்றில் மாற்றம் செய்துள்ளதாகக் கடந்த 16ம் தேதி அன்று சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது அதன் லோகோவை சிவப்பு நிறத்திலிருந்து காவி நிறுத்துக்கு மாற்றியிருக்கிறது.    டிடி நியூஸ் பா.ஜ.க. அரசு பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் தனது கட்சி நிறமான காவியைப் புகுத்தி வருவதற்கு ஏற்கெனவே எதிர்க்கட்சிகள் கண்டனங்களைத் தெரிவித்து வரும் நிலையில் டிடி நியூஸ் சேனலின் லோகோவையும் காவி நிறத்துக்கு மாற்றியுள்ளதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக வலைதளப் பயனாளர்கள் பலரும் கடும் அதிருப்தியும், கண்டனங்களும் தெரிவித்து வருகின்றனர். கடந்த 2012 முதல் 2016 வரை பிரசார் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஜாஹர் சிர்கார், டிடி நியூஸ் சேனல் லோகோ மாற்றம் குறித்து கூறுகையில், “இது பிரச்சார் பாரதி அல்ல. பிரசார பாரதி. அனைத்து மத்திய அரசு நிறுவனங்களையும் காவி மயமாக்கும் நடவடிக்கை நடந்துவருகிறது.   டிடி நியூஸ் புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்குள் நுழைந்தால், அதன் நிறங்கள் காவி நிறமாக மாற்றப்பட்டுள்ளன. மக்களவை, மாநிலங்களவை ஊழியர்களில் பாதி பேர் இப்போது காவி நிற சீருடைகளை அணிந்துள்ளனர்" என்று விமர்சித்திருக்கிறார். Doordarshan: காவி நிறத்துக்கு மாறிய தூர்தர்ஷன் லோகோ; வலுக்கும் கண்டனங்கள்! பின்னணி என்ன? | DD News logo changes to saffron colour (vikatan.com)
    • கொத்து என்றால்.... தகரத்தில் அடிக்கும் கொத்துதான் கெத்து. 😂 அந்தச் சத்தமே.... வாயில் இருந்து உணவுக் குழாய் வரை குதூகலிக்கும் சத்தம் அது. தாச்சியில்... அதுகும்  இலங்கையில்  கொத்து செய்வதை இப்போதான் கேள்விப்படுகின்றேன்.
    • 🤣 இந்த நுளம்பு கூட்டத்தை அவர்கள் பாணியில் சில ஒபாமாக்கள், விஜி களை ஏவி எதிர்கொள்ளுவதுதான் புத்திசாலித்தனம். அல்லது நீர்யோக நகரம், கொஸ்டரீக்கா போன்றனவற்றையும் கையில் எடுக்கலாம். சீரியசாக எடுத்தால் எமக்கு மண்டை காய்ந்து விடும். ————— உண்மையில் ஓரளவுக்கு சாத்தியமான எடுகோள், பலூசிஸ்தான் போலான் கணவாய் வழி மேற்கே இருந்து ஈயுரேசியர், பேர்சியன்ஸும், வடக்கே கைபர் கணவாய் வழி வந்த மத்திய ஆசியர், மங்கோலியர், பிராமணரும் (வேதங்களை நம்பியோர்)….. சிந்து சமவெளியில் இருந்த திராவிட/தொன் தமிழ் நாகரீகத்தை பிரதியீடு செய்ய, திராவிட/தொல் தமிழர் விந்திய மலைக்கு தெற்கே ஒதுங்கினர். இங்கே திராவிடம் எனப்படுவது தொல் தமிழையே.  இன்று தென்னிந்தியாவில் காணப்படும் மக்களின், மொழிகளின், பண்பாடுகளின் தோற்றுவாய். அலர்ஜி உபாதைகள் இருப்போர் திராவிட என்பதற்கு பதில் தொந்தமிழ் என்றோ அல்லது X நாகரீகம் எனவோ அழைத்துக்கொள்ளலாம். ஆனால் X பெர்சியாவில் இருந்து வந்தது என்பது - சந்தேகமே இல்லாமல் - product of Costa Rica தான்🤣.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.