Jump to content

நிக்கரகுவா புரட்சியின் 40 ஆண்டுகள்: சான்டினிஸ்டாகளின் கதை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நிக்கரகுவா புரட்சியின் 40 ஆண்டுகள்: சான்டினிஸ்டாகளின் கதை

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 ஜூலை 18 வியாழக்கிழமை, மு.ப. 07:17Comments - 0

சில கதைகள் சொல்லப்படாமல், தூசி மறைத்துக் கிடக்கின்றன. வரலாற்றின் விந்தையும் அதுவே. சில கதைகள் திரும்பத் திரும்பச் சொல்லப்படுகின்றன. சில கதைகள் சொல்லப்படுவதற்காகக் காத்துக் கிடக்கின்றன. சில கதைகள் சொல்லப்படாமல் மறைக்கப்படுகின்றன. இன்றும் சில கதைகள் சொல்லப்பட இயலாமல் அந்தரிக்கின்றன. இவ்வாறு கதைகள் எங்கும் நிறைந்திருக்கின்றன.   

அவ்வாறு சொல்லப்படுவதற்காய் காத்திருக்கும் கதைகளைச் சொல்வதற்கான காலமும் களமும் முக்கியமானவை. களமும் காலமும் பொருந்திவரும் போது சொல்லப்படும் கதைகள் பெறுமதிமிக்கனவாகின்றன. இன்று சொல்லப்போகும் கதையும் காலமும் களமும் பொருந்திவந்த கதைதான்.   

இன்றைக்குச் சரியாக 40 ஆண்டுகளுக்கு முன்னர், மத்திய அமெரிக்காவின் சின்னஞ்சிறிய நாடுகளில் ஒன்றான நிக்கரகுவாவில் நீண்டகாலப் புரட்சியின் விளைவால், சர்வாதிகார ஆட்சி ஒழிக்கப்பட்டது.   

கியூபப் புரட்சிக்குப் பிறகு, இலத்தீன் அமெரிக்காவில் (மத்திய அமெரிக்கா, தென்னமெரிக்கா இரண்டும் இணைந்த) இன்னொரு புரட்சிக்குச் சாத்தியமே இல்லை எனச் சொல்லப்பட்ட நிலையில், இந்தப் புரட்சி சாத்தியமானது. தனக்கெனத் தனித்தன்மைகளைக் கொண்ட இப்புரட்சி நினைவுகூரப்பட வேண்டியது.  

image_57cf179533.jpg 

மத்திய அமெரிக்காவின் மிகப் பெரிய நாடாக நிக்கரகுவா, வடக்கே ஹெண்டூரஸ்ஸையும் தெற்கே கோஸ்டரீகாவையும் மேற்கே பசுபிக் கடலையும் கிழக்கே கரீபியக் கடலையும் எல்லைகளாகக் கொண்டது. ஆறு மில்லியன் மக்கள் தொகையையுடைய நாடு; முதலில் ஸ்பானியர்களின் கொலனியாதிக்கத்துக்கு உட்பட்டது.   

20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவின் நேரடியான கட்டுப்பாட்டுக்குள் வந்த நிக்கரகுவா, 1979இல் புரட்சியினூடாகச் சர்வாதிகாரி துரத்தப்படும் வரை, அமெரிக்காவின் கைப்பாவை அரசாகவே இருந்தது.   

சான்டினிஸ்டாப் புரட்சியின் கதை  

மிக நீண்ட காலமாக நிக்கரகுவா, ஒரு பரம்பரை ஆட்சியில் சிக்கித் தவித்தது. 20ஆம் நூற்றாண்டின் தொடக்கம் தொட்டு, பல இலத்தீன் அமெரிக்க நாடுகளைக் குடும்ப ஆட்சிகள் தலைமுறை தலைமுறையாக ஆண்டன. அதைப்போலவே, நிக்கரகுவாவில் ‘சமோசா’ பரம்பரையின் ஆட்சி, 1936 முதல் இருந்தது.   

தனியார் சொத்துடைமைக்கும் தனிச் சொத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து, சந்தைப் பொருளாதாரத்தையும் பரந்துபட்ட வணிக நோக்கிலான விவசாய முறையையும் அடிப்படையாக இந்த ஆட்சி கொண்டிருந்தது. அதிகாரம் படைத்த ஒரு சிறு குழு, நாட்டின் பெரும்பான்மையான பொருளாதார வளங்களைக் கட்டுப்படுத்தி, அதன் பலன்களை அனுபவிப்பதற்கு ஏற்ற வகையில், நிக்கரகுவாவில் கொள்கைகள் அமைந்திருந்தன.   

இதில் குறிப்பாக, நிலச் சொந்தக்காரர்களாக ஒரு சிலரே இருந்தார்கள். அவர்கள் கோப்பி, பருத்தி, சீனி, புகையிலை போன்றவற்றை உற்பத்தி செய்யும் பாரிய பண்ணைகளை நடத்தி வந்தார்கள். கால்நடைகளும் பெரிய பண்ணைகளில் வளர்க்கப்பட்டன. இவை அனைத்தும் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதைப் பிரதான நோக்கமாகக் கொண்டிருந்தன.   

வெளியிலிருந்து பார்க்கும்போது, நிக்கரகுவா ஒரு வெற்றிகரமான சந்தைப் பொருளாதார மாதிரியைக் கொண்டிருப்பதாகவும் இதன் பலன்களை மக்கள் அனுபவிக்கிறார்கள் போன்றதுமான ஒரு தோற்றம் ஏற்படுத்தப்பட்டது. இதையே, 1960களிலும் 1970களிலும் பத்திரிகைகளும் ஆய்வாளர்களும் எழுதினார்கள். ஆனால் நிக்கரகுவாவின் கதையோ வேறு.   

இங்கு பெரும்பான்மையான மக்களுக்கு நிலம் சொந்தமாக இருக்கவில்லை. கிராமப்புறங்களில் 90 சதவீதத்துக்கும்  மேற்பட்டவர்கள் நிலமற்றவர்கள்; நிலமின்மையும் வாழ்வாதாரங்களுக்கான வழியின்மையும் மோசமான வறுமைக்கு வழிவகுத்தன.   

இவை 1950களின் இறுதிப் பகுதியிலும் 1960களின் தொடக்ககாலத்திலும் ‘சமோசா’ குடும்ப ஆட்சிக்கெதிரான சிந்தனைகளுக்கு வித்திட்டிருந்தன. 1959இல் கியூப்பப் புரட்சியின் வெற்றி, நிக்கரகுவாவின் பல்கலைக்கழகங்களில் பயின்று கொண்டிருந்த இளைஞர்களுக்கு மிகப்பெரிய உத்வேகத்தைக் கொடுத்தது. 

1961ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் திகதி, ‘சான்டினிஸ்டா தேசிய விடுதலை முன்னணி’ (FSLN) உருவாக்கப்பட்டது. 18 ஆண்டுகளின் பின்னர், 1979ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் திகதி, சர்வாதிகாரி ‘சமோசா’ நாட்டைவிட்டு ஓட, FSLN ஆட்சியைப் பிடித்தது. இந்தப் புரட்சியானது 42 ஆண்டுகால ‘சமோச’ குடும்பத்தின் சர்வாதிகார ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது.   

20ஆம் நூற்றாண்டின் தொடக்கில், நிக்கரகுவா மீதான அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்ப்பியக்கத்தைக் கட்டியெழுப்பித் தலைமை தாங்கியவர் ஓகஸ்டோ சான்டினோ. அவர், நிக்கரகுவா இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது நினைவாகவே, ‘சான்டினிஸ்டா’ என்ற பெயர், புரட்சியாளர்களால் தமது அமைப்புக்குச் சூட்டப்பட்டது.   

நிலச்சீர்திருத்தத்தின் பயன்கள்   

சமோசாவின் ஆட்சிக்காலத்தில் 70 சதவீதமான விவசாயிகள் வெறும் நான்கு சதவீதமான நிலத்திலேயே விவசாயம் செய்தார்கள். அதிகாரத்தில் உள்ள நிக்கரகுவாவின் 2,000 பேர், நிக்கரகுவாவின் மொத்த நிலத்தில் 50 சதவீதமான நிலத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். 85 சதவீதமான மக்களுக்குச் சொந்தமாக இருந்தது வெறும் ஐந்து சதவீதமான நிலம் மட்டுமே.  

image_e865e5288f.jpg

1979இல் புரட்சியில் வெற்றி பெற்று, சான்டனிஸ்டாவின் தலைவர் டானியல் ஒட்டேகாவும் அவரது ஒன்பது தளபதிகளும் சமோசா ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து, அதிகாரத்தைக் கைப்பற்றியவுடன் நிலச் சீர்திருத்தத்தை அறிமுகம் செய்தார்கள்.   

FSLN புரட்சியின் மிக முக்கியமான அம்சங்களில், விவசாயச் சீர்திருத்தம் முக்கியமானது. ஏனெனில், நிலப் பங்கு கிடைக்கும் நிலை, மற்றவர்களுக்கான நிலப் பலன்களை முதன்மைப்படுத்தியதாக விவசாயச் சீர்திருத்தம் ஒருபுறம், பல்லாயிரக்கணக்கான மக்களை வறுமையிலிருந்து மீட்டதோடு, இன்னும் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு நிலங்களையும் நீண்ட காலத்துக்கான வாழ்வாதாரத்தையும் அவர்களுக்கான அடிப்படை உரிமைகளையும் மீட்டுக் கொடுத்தது.   

அவ்வகையில், ஏராளமான நிக்கரக்குவா நாட்டினர் இன்றும் சண்டினீஸ்டா புரட்சிக்கும் அதை சாத்தியமாக்கியவர்களுக்கும் நன்றி உடையவர்களாக இருக்கிறார்கள். அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் இருந்த மத்திய அமெரிக்க நாடுகளில் ஒரு புரட்சியை செய்து, அமெரிக்கா சார்பான ஒரு சர்வாதிகாரியை பதவியில் இருந்து அகற்றுவது என்பது, மிகவும் கடினமான காரியம் என்பதை வரலாற்றை அறிந்தவர்கள் நன்கு அறிவர்.   

அதேவேளை 1959இல் கியூபப் புரட்சியின் பின்னர், தனது கொல்லைப்புறத்தில் இவ்வாறானதொரு புரட்சி நடைபெற்று விடக்கூடாது என்பதில் அமெரிக்கா கண்ணும் கருத்துமாக இருந்தது. இவ்விரண்டு தடைகளையும் தாண்டிய 1979இல் நிக்கரகுவாவில் siddhargal ஒரு புரட்சியைச் செய்து சர்வாதிகாரியைத் துரத்தி, ஆட்சியைக் கைப்பற்றி நிலச் சீர்திருத்தங்களை மேற்கொண்டார் என்பது, அந்தப் புரட்சியின் மகத்துவத்தைச் சொல்லப் போதுமானது.   

ஆட்சியைப் பிடித்த சில நாள்களிலேயே சண்டினிஸ்டா நிலச்சீர்திருத்தத்துக்கான நிக்கரகுவா நிறுவனத்தை உருவாக்கினார்கள். அதன் மூலம் நில உரிமையை எவ்வாறு பரந்துபட்ட ஜனநாயகம் ஆக்குவது தொடர்பான கொள்கை முடிவுகளையும் நடைமுறைகளையும் சிந்திப்பதற்கான வழியை அமைத்தார்கள்.   

அதைத் தொடர்ந்து, 1981ஆம் ஆண்டு விவசாயிகளுக்கும் பயிர் செய்பவருக்குமான தேசிய கூட்டமைப்பை உருவாக்கினார்கள். இதன் மூலம் விவசாய சீர்திருத்தத்தை, நிலப்பங்கீடு மூலம் முன்னெடுப்பதற்கான கூட்டு முயற்சி அரசாங்கத்தினதும் விவசாயிகளினதும் நிலச் சொந்தக்காரர்கள் அனைவரினதும் ஒத்துழைப்புடன் நடத்தப்பட்டது.   

இதன் விளைவால், பயிர் செய்யப்படாமல் தரிசு நிலங்களாகக் கிடந்த ஏராளமான நிலங்கள், பயிர் செய்யப்பட்டன. 1990ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்து, சண்டினிஸ்டா பதவியை இழந்த போது, பயிர் செய்யக்கூடிய மொத்த நிலப்பரப்பில் 40 சதவீதமான நிலங்கள் விவசாய சீர்திருத்தத்தின் மூலம் பகிர்ந்தளிக்கப்பட்டு, நிலமற்ற ஏழை விவசாயிகளின் கைகளில் இருந்தன. இது சண்டினிஸ்டா அப்புரட்சி தனது பத்தாண்டு கால ஆட்சி காலத்தில் நிகழ்த்திய முக்கியமான மாற்றம். இந்த மாற்றம் வெறுமனே ஒரு பொருளாதார மாற்றமாக மட்டுமன்றி நிக்கராகுவா சமூகத்தின் அடிப்படைகளை மாற்றி அமைத்த ஒரு செயற்பாடு என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.   

நிகரகுவாவில் ஏற்பட்ட புரட்சியைத் தாங்க இயலாத அமெரிக்கா, அதற்கு எதிராகப் பல கூலிப்படைகளை ஏவி ஆட்சியைக் கவிழ்ப்பதற்கும் தலைவர்களைக் கொலை செய்வதற்கும் ஏராளமான முயற்சிகளை எடுத்தது. இதன் விளைவால் ஒருபுறம் இந்தக் கூலிப் படைகளுடன் போரிட்ட வண்ணமே தங்கள் ஆட்சியை நடத்தி வந்தார்கள். இது பொருளாதார, சமூக ரீதியாக அரசாங்கத்துக்கு மிகப்பெரிய சவாலாக இருந்த அதே நேரம், அவர்களால் செய்யக் கூடியது என நினைத்த பல விடயங்களைச் செய்ய இயலாமல் போவதற்கு முக்கிய காரணியாக அமைந்தது. ஆட்சியில் இருந்த 10 ஆண்டுகளில் பாரிய நெருக்கடிகளுக்குள்ளும் சென்றுவிட்டார்கள். தங்களால் இயலுமான மாற்றங்களை செய்தார்கள் என்பதை மறக்க முடியாது.  

நிக்கரகுவாவின் புரட்சியைப் பற்றிப் பேசுகின்ற போது, இரண்டு விடயங்கள் மிகவும் முக்கியமாகப் பேசப்பட வேண்டும். 

அதில் முதன்மையானது, புரட்சியில் பெண்களின் பங்களிப்பு. போராளிகளாகவும் செயற்பாட்டாளர்களாகவும் அவர்களின் பங்கு பெரிது. அதிலும் குறிப்பாகப் போராடும் பெண்கள், எழுதிய கவிதைகள் வாழ்வையும் போராட்டத்தையும் அவற்றின் பிரிக்கமுடியாத இயல்பையும் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்துபவை.   

அதேபோல, நிக்கரகுவாவில் புரட்சிக்குப் பங்களித்த விடுதலை இறையியல் கோட்பாடும் அதை முன்தள்ளி, தேவாலயங்களைப் புரட்சிகரப் போராட்டத்தில் பங்காளியாக்கிய தன்மையும் கவனிப்புக்குரியவை. 

விடுதலை இறையியலை முன்னெடுத்து, போராட்டத்துக்கு முக்கிய பங்களிப்பு வழங்கியவர் பாதிரியாரும் கவிஞருமாகிய ஏர்னெஸ்டோ கார்டினல். சான்டினிஸ்டா ஆட்சியில், பண்பாட்டுத்துறை அமைச்சராகவும் இருந்தவர்.   

நிக்கரகுவாவின் புரட்சியை நினைவுகூரும் போது, மூன்று விடயங்களைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியுள்ளது. முதலாவது, பெண்களின் பங்களிப்பு; இரண்டாவது, விடுதலை இறையியலும் பண்பாட்டுத்தளத்தில் அதன் புரட்சிகர பங்களிப்பும் ஆகும். மூன்றாவது நிலப்பங்கீடு ஏற்படுத்திய மாற்றம்.   

புரட்சியை ஏன் நினைவுகூர வேண்டும் என்ற வினாவுக்கான பதிலை இலகுவாகச் சொல்வதென்றால், சான்டினிஸ்டாகள் தேர்தலில் தோல்வியடைந்து, 20 ஆண்டுகளின் பின்னர், நிலைமைகள் தலைகீழாக மாறியுள்ளன. 

இப்போது 40சதவீதமான நிக்கரகுவா விவசாயிகள் மீண்டும் நிலமற்றவர்களாக மாறியுள்ளனர். உணவுப்பாதுகாப்பும் வறுமையும் முக்கிய பிரச்சினைகளாக உள்ளன. வெளிநாட்டு முதலாளிகள் நிலச் சொந்தக்காரராகி உள்ளனர். மீண்டும் கட்டற்ற சுரண்டலும் நிலப்பறிப்புகளும் நடந்துள்ளன. இவையே சான்டினிஸ்டப் புரட்சியின் சாதனைகளையும் தலைமுறை தாண்டியும் தக்க வைக்கும்.     

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/நிக்கரகுவா-புரட்சியின்-40-ஆண்டுகள்-சான்டினிஸ்டாகளின்-கதை/91-235497

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.