Jump to content

5ஜி அலைக்கற்றை கோபுரம் அமைக்கும் செயற்பாடுகளை நிறுத்தக் கோரி போராட்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் 5ஜி அலைக்கற்றை கோபுரம் அமைக்கும் செயற்பாடுகளை நிறுத்தக் கோரி, மாநகர முதல்வரின் அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று போராட்டம் நடத்தப்பட்டது.

அத்துடன், யாழ்ப்பாணம் மாநகர சபையின் அமர்வைப் புறக்கணித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள், வெளிநடப்புச் செய்தனர்.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் அமர்வு இன்று (18) காலை 9 மணியளவில் ஆரம்பமாகவிருந்த நிலையில், பொது மக்கள் அணிதிரண்டு, மாநகர முதல்வரின் அலுவலகம் மற்றும் சபை வாயிலை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு உள்ளிட்ட பல்வேறு மக்கள் சார்ந்த அமைப்புக்கள், பொது மக்கள் எனப் பலரும், கண்டனத்தையும் எதிர்ப்பையும் வெளியிட்டனர்.

“யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளரின் ஒப்புதலின்றி, 5ஜி அலைக்கற்றைக் கோபுரம் அமைப்பது தொடர்பாக மாநகர முதல்வர் தன்னிச்சையாக செயற்படுகின்றார். பொது மக்களுக்கு 5ஜி அலைக்கற்றை தொடர்பான விழிப்புணர்வுகள் எதுவுமில்லை. போரால் பாதிக்கப்பட்ட எமக்கு 5ஜி அலைவரிசை கோபுரம் தேவையில்லை” என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் முதல்வருக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. போராட்டத்தின் போது, முதல்வர் தனது அறையில் இருந்ததுடன், போராட்டக்காரர்கள் வெளியில் வருமாறு அழைப்பு விடுத்த போதும், அவர் போராட்டக்காரர்களை சந்திக்க வெளியே வரவில்லை. 

http://globaltamilnews.net/2019/126790/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"போரால் பாதிக்கப் பட்ட எமக்கு 5ஜி தேவையில்லை...!" - போர்ப்பாதிப்பிற்கும் இதற்கும் என்ன தொடர்பு?  

ஆரோக்கியப் பாதிப்பென்றால் 4ஜியிலும் உண்டே? பழைய காலம் போல ரின்பால் பேணியில் கம்பி கட்டிய தொலைபேசிக்கு மாறினால் ஆரோக்கியப் பாதிப்பின்றி நீண்ட காலம் வாழலாம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Justin said:

"போரால் பாதிக்கப் பட்ட எமக்கு 5ஜி தேவையில்லை...!" - போர்ப்பாதிப்பிற்கும் இதற்கும் என்ன தொடர்பு?  

ஆரோக்கியப் பாதிப்பென்றால் 4ஜியிலும் உண்டே? பழைய காலம் போல ரின்பால் பேணியில் கம்பி கட்டிய தொலைபேசிக்கு மாறினால் ஆரோக்கியப் பாதிப்பின்றி நீண்ட காலம் வாழலாம்!

5 ஜி வருவதை தடுக்க முடியாது.
ஆனால் வளர்ந்த நாடுகளிலேயே இதன் பாதிப்பு பற்றி அதிகம் பேசுகிறார்கள்.
எமது மக்களும் பேசட்டுமன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஈழப்பிரியன் said:

5 ஜி வருவதை தடுக்க முடியாது.
ஆனால் வளர்ந்த நாடுகளிலேயே இதன் பாதிப்பு பற்றி அதிகம் பேசுகிறார்கள்.
எமது மக்களும் பேசட்டுமன்.

வளர்ந்த நாடுகளில் பேசுகிறார்கள், ஆய்வு செய்கிறார்கள். செய்த ஆய்வின் முடிவுகள் எல்லா மின்காந்தக் கதிர்வீச்சுகள் போலவே இதனால் சிறிய பாதிப்பு உண்டு, பயங்கரமாக எதுவும் இல்லை என்றும் காட்டுகின்றன.

எங்கள் மக்களோ, போரால் பாதிக்கப் பட்ட எங்களுக்கு இது தேவையில்லை என்று ஆர்ப்பாட்டம் மட்டும் தான் செய்கிறார்கள். அதென்ன போருக்கும் இதற்கும் தொடர்பென்று தான் கேட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

6 minutes ago, Justin said:

வளர்ந்த நாடுகளில் பேசுகிறார்கள், ஆய்வு செய்கிறார்கள். செய்த ஆய்வின் முடிவுகள் எல்லா மின்காந்தக் கதிர்வீச்சுகள் போலவே இதனால் சிறிய பாதிப்பு உண்டு, பயங்கரமாக எதுவும் இல்லை என்றும் காட்டுகின்றன.

எங்கள் மக்களோ, போரால் பாதிக்கப் பட்ட எங்களுக்கு இது தேவையில்லை என்று ஆர்ப்பாட்டம் மட்டும் தான் செய்கிறார்கள். அதென்ன போருக்கும் இதற்கும் தொடர்பென்று தான் கேட்டேன்.

பனையாலை விழுந்து கிடக்கிறம், மாட்டையும் மிதிக்க விடாதேங்கோ என்று சனம் சொல்லுதோ.

ஏற்கனவே யுத்த பாதிப்பால் ஏற்பட்ட உடல் உள தாக்கங்களில இருந்து விடுபட போராடும் மக்களுக்கு நவீன 5G தொழினுட்பத்தாலும் தாக்கம் வருமோ என்று பயப்பிடுகினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Justin said:

வளர்ந்த நாடுகளில் பேசுகிறார்கள், ஆய்வு செய்கிறார்கள். செய்த ஆய்வின் முடிவுகள் எல்லா மின்காந்தக் கதிர்வீச்சுகள் போலவே இதனால் சிறிய பாதிப்பு உண்டு, பயங்கரமாக எதுவும் இல்லை என்றும் காட்டுகின்றன.

மக்களைப் பற்றியே பேசுகிறீர்கள்.மற்ற உயிரினங்கள் நிலை என்ன?
உண்மையான தாக்கத்தைப் பற்றி வெளியே பேசுவதேயில்லை என்கிறார்கள்.

Link to comment
Share on other sites

1 hour ago, Justin said:

"போரால் பாதிக்கப் பட்ட எமக்கு 5ஜி தேவையில்லை...!" - போர்ப்பாதிப்பிற்கும் இதற்கும் என்ன தொடர்பு?  

போரால் பாதிக்கப்பட்ட தமக்கு வேறு உதவிகள் தேவைப்படுகின்றன, அவற்றை செய்யாமல் 5ஜி என்னத்துக்கு, அது தேவையில்லை என்ற ரீதியில் கூறப்பட்டிருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏராளன், ஈழப்பிரியன் அண்ணை,

 நான் இப்போது யாழில் விஞ்ஞானம் மருத்துவம் பற்றி எழுதுவதில்லை, இங்கே யுரியூப் வியாபாரிகள் விற்பது மட்டுமே அதிகம் எடுபடும் என்பதால் என் நேரத்தை வீணாக்குவதில்லை! கடைசி முயற்சியாக இந்த விடயத்தில் மட்டும் என் பங்களிப்பு. இதன் பின் எதுவும் எழுத இல்லை:

1. மின்காந்த கதிர்வீச்சினால் உயிரினங்களுக்குப் பாதிப்பு உண்டு. அது ஏற்கனவே நவீன வாழ்வில் நாம் எதிர் கொள்ளும் பாதிப்பை விட அதிகமா என்றால் இல்லை என்பது தான் பல முறையான வழியில் செய்யப் பட்ட ஆய்வுகள் சொல்லியிருக்கும் பதில். உதாரணமாக டீசல் புகை ஒரு நிரூபிக்கப் பட்ட புற்று நோய்க்காரணி. அந்த டீசல் புகையை ஏற்கனவே சுவாசித்துக் கொண்டு, 5ஜியும் 4 ஜியும் புற்று நோயை இனித் தான் கூட்டப் போகிறது என்று கதை பரப்புவது பயமுறுத்தும் செயல். மேலும் 5ஜியும் 4ஜியும் ஏனைய ரேடியோ அலைகளும் மனிதனின் தோலைத் தாண்டி உள்ளே சென்று டின்.ஏயைத் தாக்கும் சக்தியற்றவை. அதனால் தான் மூளைப் புற்று நோய்க்கும் செல்லிடப் பாவனைக்கும் இடையே தொடர்பு இல்லை என்று காட்டியிருக்கிறார்கள். வெறும் செல்களில் பரிசோதனை செய்து விட்டு தரமற்ற சஞ்சிகைகளில் அதை பிரசுரித்து விட்டு ரேடியோ அலைகள் புற்று நோயை உருவாக்கும் என்று கதை பரப்பும் அறிவியலாளர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு வேறு நோக்கங்கள் இருக்கக் கூடும், நான் அறியேன்.

2. மக்களுக்கு சரியான தகவல்களை வழங்கி விட்டு ஒதுங்கி நிற்பது தான் விஞ்ஞானிகள், மருத்துவர்கள் செய்ய வேண்டியது. அறிவியல் தகவல்களை உரிய ஒப்பீடுகளோடு மக்களிடம் சொல்லாமல் fear mongering செய்தால் என்ன நிகழும் என்பதை அழகாக ஒரு 2016  ஆய்வில் கண்டறிந்திருக்கிறார்கள்.  நெதர்லாந்தில் 15000 நபர்களை தேர்வு செய்து அவர்கள் செல்போன் கோபுரத்தில் இருந்து எவ்வளவு கதிர்வீச்சைப் பெறுகிறார்கள் என்று துல்லியமாக அளவிட்டார்கள் (modeled exposure) . பின்னர் அந்த நபர்களைப் பேட்டி கண்டு "எவ்வளவு செல் போன் கதிர் வீச்சுக்கு அவர்கள் ஆளாவதாக நினைக்கிறார்கள்" என்று கணக்கிட்டார்கள் (perceived exposure).பின்னர், இதே நபர்களின் சில ஆரோக்கிய அளவீடுகளை (health outcomes) மேற்கொண்டார்கள். ஆய்வு முடிவில், தாம் அதிகமாக செல் போன் கோபுரக் கதிர்வீச்சைப் பெறுவதாக நம்பும் நபர்களிடையே அதிகமாக  ஆரோக்கியக் குறைபாடுகள் இருப்பதையும் துல்லியமாக அளவிடப் பட்ட கதிர்வீச்சிற்கும் ஆரோக்கியக் குறைபாட்டிற்கும் தொடர்பில்லாதிருப்பதையும் கண்டறிந்தார்கள். இந்த மனப் பிராந்தியை சரியான ஆய்வு முடிவுகளை மக்களுக்குச் சொல்லாமல் வெறும் பயப் பிராந்தியை மட்டுமே உருவாக்கும் போலி அறிவியலாளர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.

இணைப்பு இதோ:   https://academic.oup.com/aje/article/186/2/210/3111638

3. 5ஜி யினால் யாழ் நகரம் smart city ஆக நவீன மயப்படுமென நான் நம்பவில்லை. ஆனால், 5ஜியினால் எவ்வளவோ நன்மைகள் கல்வித் துறைக்கும் மருத்துவ சேவைகளிலும் ஏற்பட வாய்ப்புண்டு. யாழ் பல்கலை உலக மட்டத்தில் தங்கள் வலைபின்னலை அதிகரிக்க இந்த தொழில் நுட்பம் உதவும். எங்கள் மருத்துவர்கள் யாழில் இருந்தே மேற்கு நாடொன்றில் நடக்கும் நவீன மருத்துவ ஆய்வு முயற்சிகளை, கூட்டங்களை ஏன் சத்திர சிகிச்சைகளைக் கூட பார்த்து நவீன திசை நோக்கி நகர வாய்ப்பிருக்கிறது. இந்த நன்மைகள் எல்லாம் ஒரு ஆதாரமில்லாத பயமூட்டும் தகவல்களால் கிடைக்காமல் போகும் என்பது துரதிர்ஷ்டம்!  

நன்றி.

Link to comment
Share on other sites

9 minutes ago, Justin said:

ஏராளன், ஈழப்பிரியன் அண்ணை,

 நான் இப்போது யாழில் விஞ்ஞானம் மருத்துவம் பற்றி எழுதுவதில்லை, இங்கே யுரியூப் வியாபாரிகள் விற்பது மட்டுமே அதிகம் எடுபடும் என்பதால் என் நேரத்தை வீணாக்குவதில்லை! !  

நன்றி.

தங்களைப்போன்ற துறைசார் நிபுணத்துவம் பெற்றவர்கள்  ஒதுங்குவது மூடத்தனங்களை  பரப்பும் யூரியூப் வியாபாரிகளுக்கு வரப்பிசாதமாக அமையும். அறிவியல் ரீதியான் ஆய்வுகளை விட பழமைவாத மூடத்தனத்தை நம்பும் மனவியாதி ஊரில் உள்ள படித்த சமூகம் என்று கூறுபவர்களிடமும் காலங்காலமாக  இருப்பதை அவதானிக்க முடியும். அறிவியிலால் கண்டு பிடிக்கப்பட்ட தற்போதைய தகவல் தொழிழ்நுட்ப வளர்ச்சி கூட எம்மவரால் மூடக்கொள்கைகளை பரப்பவே பெருமளவில் பயன்படுத்தப் படுகின்றது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் போராட எவ்வளவோ வேறு அத்தியாவசிய விடயங்கள் இருக்க உலகம் முழுக்க அதிவேகத்தில் பரவும் நாளைய தொழில் நுடப்பத்தை உள்வாங்கி ஒண்டும் புதிதாக செய்யபோவ தில்லை அங்கு ஆனால் இவ்வளவு மூர்க்கத்தனமாக எதிர்க்கும் அளவுக்கு அங்குள்ள சனத்தை உருக்கொள்ள வைத்த அந்த பெருமகனுக்கு கை கொடுக்கணும் .இங்கு மக்களின் விருப்பத்துக்கு விட்டுபிடிப்பது நல்லது பின்பு கொழும்பில் 5g செயல்படும் விதத்தை அறிந்து ஆறுதலா உள்வரட்டுக்கும் வளரும் உலகில் ஐந்தாவது தலைமுறை தொடர்பாடல் முக்கியமானது இன்றியமையாதது அப்படியே அந்த போராட்டத்தில் இருப்பவர்கள் மழை நீர் சேகரிப்புக்கு குளத்தை தூர் வார கூப்பிட்டால் உண்மை நிலை தெரியும் .😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

உலகில் ஐந்தாவது தலைமுறை தொடர்பாடல் முக்கியமானது இன்றியமையாதது அப்படியே அந்த போராட்டத்தில் இருப்பவர்கள் மழை நீர் சேகரிப்புக்கு குளத்தை தூர் வார கூப்பிட்டால் உண்மை நிலை தெரியும் .😀

அதுவே என் கருத்தும்
ஆனாலும் புதிய தொழில்நுட்பத்தில் அதீத ஆர்வம் காட்டும் அரசியல் வாதிகள்  அப்பாவி மக்களை பற்றி ஒரு துளியாவது சிந்திக்கவும்  வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விஞ்ஞான ஆய்வுகளும் வியாபாரம் ஆகிவிட்ட நிலையில்..

இந்த அலைக்கற்றைகளின் நீண்ட காலப் பாதிப்பு என்பதை அறியாமல்.. இவற்றை உள்வாங்குவது என்பது சிந்திக்கப்பட வேண்டிய விடயமே.

டீசலை பாவிக்கும் வரை பாவித்துவிட்டு... இப்போதுதான் அது புற்றுநோய் காரணின்னு விஞ்ஞானம் சொல்லுதாம் என்று வியாபாரிகள் சொல்கின்றனர்.

நெகிலியை பாவிக்கும் வரை பாவித்துவிட்டு.. அது நீண்ட கால ஒழுங்கில் ஏற்படுத்தி இருக்கும் சூழல் பாதிப்பை கண்டு இப்போதுதான் வியாபாரிகள் நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர்.

அதே போல் அசேதனப் பசளைப் பாவனை...

இப்படி அடுக்கிட்டே போகலாம்.. விஞ்ஞான ஆராய்ச்சிகளை தங்களின் வியாபாரத்தின் தேவைக்கு ஏற்ப காட்டுவதும் பின் நிராகரிப்பதும்.. நடந்து கொண்டே இருக்கிறது.

அதைத்தாண்டி.. விஞ்ஞானத்தை மனித குலத்தின் இயற்கையில் நலன்கருதி இதய சுத்தியோடு பாவிக்க வேண்டிய தேவை ஒன்றுள்ளதால்..

இந்த மின்காந்த அலைகளின் தாக்கம் குறித்த நீண்ட கால குறுகிய கால பாதிப்புக்கள் ஆராயப்பட வேண்டும்.

ஏலவே பறவைகள் மத்தியில் இவை செலுத்தி இருக்கும் தாக்கம்.. என்பது அவற்றின் வாழ்வியலை பாதித்திருக்கும் நிலையில்.. மனிதர்களில் இவற்றின் தாக்கம் குறித்து நடுநிலையான உண்மையான விஞ்ஞான பூர்வ ஆய்வுகள் அவசியமே தவிர.. வியாபாரிகளின் நலனுக்கு ஏற்ப ஆய்வுகளையும் ஆய்வு முடிவுகளையும் ஒப்பிக்கும் நடவடிக்கைகள் பெருகி உள்ள நிலை அவசியமில்லை.

அறிவியல் விஞ்ஞானம் ஆராய்ச்சி.. என்ற உச்சரிப்போடு பல மோசடிகள் நடக்கின்றன. 

அந்த வகையில்.. இது மக்களால் எதிர்க்கப்படுவது.. இந்த அலைப்பாவனை குறித்த கூடிய தெளிவு விளக்கம் மற்றும் பாதிப்புக்கள் குறித்த தேடலுக்கு ஆய்வுகளுக்கு வழிகோலும் எனலாம். அது மக்களுக்கும் பூமிக்கும் இயற்கைக்கும் நன்மையே ஆகும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, பெருமாள் said:

யாழில் போராட எவ்வளவோ வேறு அத்தியாவசிய விடயங்கள் இருக்க உலகம் முழுக்க அதிவேகத்தில் பரவும் நாளைய தொழில் நுடப்பத்தை உள்வாங்கி ஒண்டும் புதிதாக செய்யபோவ தில்லை அங்கு ஆனால் இவ்வளவு மூர்க்கத்தனமாக எதிர்க்கும் அளவுக்கு அங்குள்ள சனத்தை உருக்கொள்ள வைத்த அந்த பெருமகனுக்கு கை கொடுக்கணும் .இங்கு மக்களின் விருப்பத்துக்கு விட்டுபிடிப்பது நல்லது பின்பு கொழும்பில் 5g செயல்படும் விதத்தை அறிந்து ஆறுதலா உள்வரட்டுக்கும் வளரும் உலகில் ஐந்தாவது தலைமுறை தொடர்பாடல் முக்கியமானது இன்றியமையாதது அப்படியே அந்த போராட்டத்தில் இருப்பவர்கள் மழை நீர் சேகரிப்புக்கு குளத்தை தூர் வார கூப்பிட்டால் உண்மை நிலை தெரியும் .😀

இதில் உடன்பாடில்லை.

காரணம்.. இல்லாத ஒன்றை வியாபாரிகள் மக்களிடம் திணிக்கும் போது.. அதன் பாதிப்புக்கள் குறித்து மக்கள் சிந்திக்க வேண்டியது அவசியம். 

இருக்கிற பிரச்சனைகளை காட்டி.. வரப் போகும் பிரச்சனையை பற்றி சிந்திக்கவே கூடாது என்று சொல்வது நியாயமே அல்ல.

ஒரு காலத்தில் வைகோல்.. மற்றும்.. மீள்தகவு தாவர மூலப் பொருட்கள் சார்ந்து உருவான பேப்பர்களை கொண்டு உருவான பைகளின் பாவனையை நெகிலியால் பிரதியீடு செய்த போதும் மக்களின் வாயை அடைத்தார்கள். இப்போ அதே நெகிலிக்கு எதிராக போராடுகிறார்களாம்.. மக்களை நெகிலிப் பாவனைக்கு எதிராக உணர்வூட்டினமாம்.

இந்த நிலை இதிலும் வேண்டாமே என்று சிந்திக்க ஏன் மக்கள் சிந்திக்கக் கூடாது. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nedukkalapoovan said:

இதில் உடன்பாடில்லை.

காரணம்.. இல்லாத ஒன்றை வியாபாரிகள் மக்களிடம் திணிக்கும் போது.. அதன் பாதிப்புக்கள் குறித்து மக்கள் சிந்திக்க வேண்டியது அவசியம். 

இருக்கிற பிரச்சனைகளை காட்டி.. வரப் போகும் பிரச்சனையை பற்றி சிந்திக்கவே கூடாது என்று சொல்வது நியாயமே அல்ல.

ஒரு காலத்தில் வைகோல்.. மற்றும்.. மீள்தகவு தாவர மூலப் பொருட்கள் சார்ந்து உருவான பேப்பர்களை கொண்டு உருவான பைகளின் பாவனையை நெகிலியால் பிரதியீடு செய்த போதும் மக்களின் வாயை அடைத்தார்கள். இப்போ அதே நெகிலிக்கு எதிராக போராடுகிறார்களாம்.. மக்களை நெகிலிப் பாவனைக்கு எதிராக உணர்வூட்டினமாம்.

இந்த நிலை இதிலும் வேண்டாமே என்று சிந்திக்க ஏன் மக்கள் சிந்திக்கக் கூடாது. 

 

எனகென்னவோ இந்த 5g பிரச்சனையை விட அதிக முக்கியத்துவம் உள்ள பிரச்சனைகளை மக்கள் ஏன் எட்டிபார்க்காமல் நேரே போராட்டம் பண்ணுகினம் ? ஸ்ரீலங்கன் டெலிகொம் பாதி பங்குகள் வைத்திருக்கும் ஆனந்த கிருஸ்ணன் வாழும் நாட்டிலும் 5g உள்ளது இலங்கையை விட குறைவான மக்கள் தொகை உள்ள நாடுகள் தொலை தொடர்பில் விட்டுகொடுப்பு உள்ளது ஆனால் இலங்கையில் இன்னும் இணைய தொலைபேசி பாவனை தடையில் உள்ளது அல்லது மறைமுகமாக தடையில் உள்ளது இங்கு vonage எனப்படும் இணையவலை தொலைபேசி பெட்டி அதற்கு விரும்பிய நாட்டின் நம்பர் எடுக்கலாம் லண்டன் நம்பர் உடன் வந்த பாக்ஸ் ஒன்றை அனுப்ப அங்குள்ள சுங்கம் திருப்பி அனுப்பி விட்டார்கள் பின் அதே பொருளை வேறு பெயரில் நண்பனின் வீட்டுக்கு அனுப்பி தற்போது லண்டன் லோக்கல் நம்பர் யாழில்  வேலை செய்கிறது அதே போல் அவர்களும் 45 நாட்டுக்கு இலவசமாக யாழில் இருந்து எடுக்கலாம் இணையவலை போன் என்று நேரே போனால் ஏன் அங்குள்ள கஸ்டம்ஸ் திருப்பி அனுப்புகின்றது ? மற்றைய சிறு நாடுகள் கூட இணையவலை உலகில் இலவச சேவைக்கு வந்து கோல் சென்டர் போன்றவற்றில் பணம் பார்க்கின்றனர் இவ்வளவு இருந்தும் சிலோனுக்கு மாத்திரம் தொலைபேசி எங்களின் காசில் பெரிதாக குறையவில்லை ஏன் ?

இந்த கேள்விகளுக்கு விடை தேடினால் 5g க்கு ஏன் குத்தி முறியினம் என்றதுக்கு விடை கிடைக்கும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, பெருமாள் said:

எனகென்னவோ இந்த 5g பிரச்சனையை விட அதிக முக்கியத்துவம் உள்ள பிரச்சனைகளை மக்கள் ஏன் எட்டிபார்க்காமல் நேரே போராட்டம் பண்ணுகினம் ? ஸ்ரீலங்கன் டெலிகொம் பாதி பங்குகள் வைத்திருக்கும் ஆனந்த கிருஸ்ணன் வாழும் நாட்டிலும் 5g உள்ளது இலங்கையை விட குறைவான மக்கள் தொகை உள்ள நாடுகள் தொலை தொடர்பில் விட்டுகொடுப்பு உள்ளது ஆனால் இலங்கையில் இன்னும் இணைய தொலைபேசி பாவனை தடையில் உள்ளது அல்லது மறைமுகமாக தடையில் உள்ளது இங்கு vonage எனப்படும் இணையவலை தொலைபேசி பெட்டி அதற்கு விரும்பிய நாட்டின் நம்பர் எடுக்கலாம் லண்டன் நம்பர் உடன் வந்த பாக்ஸ் ஒன்றை அனுப்ப அங்குள்ள சுங்கம் திருப்பி அனுப்பி விட்டார்கள் பின் அதே பொருளை வேறு பெயரில் நண்பனின் வீட்டுக்கு அனுப்பி தற்போது லண்டன் லோக்கல் நம்பர் யாழில்  வேலை செய்கிறது அதே போல் அவர்களும் 45 நாட்டுக்கு இலவசமாக யாழில் இருந்து எடுக்கலாம் இணையவலை போன் என்று நேரே போனால் ஏன் அங்குள்ள கஸ்டம்ஸ் திருப்பி அனுப்புகின்றது ? மற்றைய சிறு நாடுகள் கூட இணையவலை உலகில் இலவச சேவைக்கு வந்து கோல் சென்டர் போன்றவற்றில் பணம் பார்க்கின்றனர் இவ்வளவு இருந்தும் சிலோனுக்கு மாத்திரம் தொலைபேசி எங்களின் காசில் பெரிதாக குறையவில்லை ஏன் ?

இந்த கேள்விகளுக்கு விடை தேடினால் 5g க்கு ஏன் குத்தி முறியினம் என்றதுக்கு விடை கிடைக்கும் .

இது உண்மையில் பல பில்லியன்கள் புரளும் வியாபாரம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. சொறீலங்கா போன்ற நாடுகளில்.. இவை அரசியல்வாதிகளிடம் இலஞ்ச வியாபாரம் பேரம் பேசல் வியாபாரம் என்பதும் சாத்தியமே.

அதை எல்லாம் தாண்டி.. நீண்ட கால ஒழுங்கில் இவற்றின் சமூகத்தாக்கம்.. சூழல் தாக்கம் என்ன என்பது குறித்து சிந்திக்க வேண்டியது அவசியமே.

தீ இலவசம் என்பதற்காக.. கட்டின்றி பயன்படுத்த முடியாது என்பது விளங்கப்பட்டது போல.. இவை மக்களிடம் விளங்கப்பட இப்படியான வாய்ப்புக்களை பாவிப்பது தவறில்லை. வியாபாரிகள்.... அரசியல் வியாபாரிகளின் நோக்கங்களுக்கு அப்பால். இதுதான் எங்கள் நோக்கம். 

Link to comment
Share on other sites

On 7/19/2019 at 12:44 AM, nedukkalapoovan said:

டீசலை பாவிக்கும் வரை பாவித்துவிட்டு... இப்போதுதான் அது புற்றுநோய் காரணின்னு விஞ்ஞானம் சொல்லுதாம் என்று வியாபாரிகள் சொல்கின்றனர்.

நெகிலியை பாவிக்கும் வரை பாவித்துவிட்டு.. அது நீண்ட கால ஒழுங்கில் ஏற்படுத்தி இருக்கும் சூழல் பாதிப்பை கண்டு இப்போதுதான் வியாபாரிகள் நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர்.

அதே போல் அசேதனப் பசளைப் பாவனை...

இந்த மின்காந்த அலைகளின் தாக்கம் குறித்த நீண்ட கால குறுகிய கால பாதிப்புக்கள் ஆராயப்பட வேண்டும்.

டீசல், நெகிலி, அசேதன பசளை ஆகியவற்றை நீண்ட காலம் பாவித்து அதன் மூலம் உண்டான பாதிப்புகள் பற்றிய தரவுகளை சேகரித்து அவற்றை ஆய்வு செய்து அந்த ஆய்வுகளின் முடிவுகள் தான் இப்போது நீங்கள் நீலிக் கண்ணீர் என்று சொல்லும் புற்று நோய், சூழல் மாசடைதல் பற்றிய அக்கறை. இந்த மின் காந்த அலைகளையும் நீண்டகாலம் பயன்படுத்தி தானே அவற்றின் நீண்டகால பாதிப்பை அறிய முடியும்? அதற்காக தான் இப்போதே ஆரம்பிக்கிறார்கள். அதற்குள் நீங்கள் இப்போதே நீலிக்கண்ணீர் வடிக்க ஆரம்பித்தால்?

Link to comment
Share on other sites

On 7/19/2019 at 2:00 AM, nedukkalapoovan said:

தீ இலவசம் என்பதற்காக.. கட்டின்றி பயன்படுத்த முடியாது என்பது விளங்கப்பட்டது போல.. இவை மக்களிடம் விளங்கப்பட இப்படியான வாய்ப்புக்களை பாவிப்பது தவறில்லை. 

5G  கட்டின்றி பயன்படுத்த படும் அலைக்கற்றைகள் அல்ல. அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் இந்த தொழில்நுட்பத்தை உருவாக்க முதல் சீனா உருவாக்கி உள்ளதால் உண்டான வணிக போட்டியின் விளைவாக  மக்கள் மத்தியில் பரப்பப்படும் பயம் காட்டும் கருத்துகளே இவை. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவர் அறிக்கை! தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா அறிக்கையொன்றை விடுத்துள்ளார். தற்போதைய அரசியல், பொருளாதார சூழலில் தமிழ் மக்கள் தமது இருப்பை நிலைநிறுத்தவும் உரிமைக் கோரிக்கைக்கான ஒரு குரலாகவும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயத்தை முன்வைப்பது பொருத்தமாக இருக்கும் என கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் முன்னிறுத்தப்படுவதனூடாக, தமிழர்கள் சிங்கள ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கையிழந்து விட்டார்கள் என்பதையும் தமிழ் மக்களின் உரிமைக்காக ஒன்றுபட்டமையை பொது வேட்பாளருக்கு திரளாக வாக்களிப்பதன் மூலம் உணர்த்த முடியும் எனவும் அவர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் பொது வேட்பாளர் என்ற எண்ணக்கருவை எதிர்ப்பவர்கள் பேரினவாத ஆட்சியாளர்கள் வெல்வதற்கே துணை செய்கிறார்கள் எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா கூறியுள்ளார். -(3)   http://www.samakalam.com/தமிழ்-பொது-வேட்பாளர்-தொட/
    • நன்றி @கந்தப்பு நீங்களும் கலந்துகொள்ளவேண்டும்😀 @முதல்வன், 19 ஆவது கேள்விக்கு அணியின் பெயரைத் தாருங்கள் அல்லது RR என்று போட்டுக்கொள்ளவா?
    • இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் தொடர்பில் வெளியான தகவல்கள்! 16 APR, 2024 | 11:03 AM   இலங்கையின் தென் கடற்பரப்பில் கடந்த 12ஆம் திகதி  இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட  சுமார் 380 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள், துபாயில் உள்ள இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரால் அனுப்பப்பட்டமை  ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு நடவடிக்கையின்போது இலங்கை கடலோரக் காவல்படையின் ‘சமுத்ரரக்க்ஷா’ என்ற கப்பலினால் 133 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் இந்த ஹெரோயின் மற்றும் ஐஸ்  கைப்பற்றப்பட்டுள்ளன.   கைப்பற்றப்பட்ட போதைப்பொருளில் 179 கிலோ 906 கிராம் ஐஸ் மற்றும் 83 கிலோ 582 கிராம் ஹெரோயின் அடங்குகின்றன. அத்துடன், இந்தப் போதைப்பொருளைக் கொண்டு வந்த மீன்பிடிப் படகு கைப்பற்றப்பட்டதுடன் 6 பேரையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். https://www.virakesari.lk/article/181204
    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 10:39 AM   பல முக்கிய நீர் மற்றும் எரிசக்தி திட்டங்களை திறந்து வைப்பதற்காக இம் மாதம் 24 ஆம் திகதி ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டயரபா மற்றும் புஹுல்பொல ஆகிய இரண்டு அணைக்கட்டுகளை உள்ளடக்கிய உமா ஓயா பல்நோக்கு திட்டம் மற்றும் 25 கிலோ மீற்றர் நீர்ப்பாசன  சுரங்கப்பாதையும்  ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.  இந்தத் திட்டத்தில் தலா 60 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு பெரிய நீர்மின் நிலையங்களும் நிர்மாணிக்கபட்டுள்ளன. உமா ஓயா பல்நோக்கு திட்டம் இலங்கையில் ஈரானிய நிறுவனங்களின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சேவை திட்டங்களில்  ஒன்றாக கருதப்படுகிறது. இந்த திட்டம் இலங்கையின் தென்கிழக்கில் கொழும்பு நகரிலிருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. 5,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கான நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவதும், 145 மில்லியன் கனமீற்றர் நீரினை நீரினை கொண்டு செல்லல், ஒரு வருடத்தில் 290 மெகாவோட்  மின்சாரத்தை உற்பத்தி செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். https://www.virakesari.lk/article/181192
    • கல்முனை வடக்கு பிரதேச செயலகம் : பிரதமர் தினேஷுக்கு கஜேந்திரன் எம்.பி. கடிதம் 15 APR, 2024 | 04:09 PM ஆர்.ராம் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சம்பந்தமாக பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் எம்.பி. கடிதமொன்றை அனுப்பியுள்ளார். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாகப் பிரச்சினைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது தொடர்பாகவும், கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகத்தில் முறைகேடுகளால் பொது மக்கள் முகங்கொடுக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளை கவனத்துக்குக் கொண்டு வருவதற்காகவும் அக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மூன்று தசாப்தங்களாக கல்முனை வடக்கு தமிழ் சமூகம் தீர்க்கப்படாத சவால்களை எதிர்கொண்டுள்ளது. இது அவர்களின் அத்தியாவசிய அரசாங்க சேவைகளைப் பெறுவதற்கான திறனை கணிசமாகத் தடுக்கிறது. இதனால் அவர்களின் அன்றாட வாழ்க்கையில் நெருக்கடியான நிலைமைகளை எதிர்கொள்கின்றனர். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பகுதி மக்கள் பல தசாப்தங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்களும் அவ்வாறே நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றோம். இருந்தும் கணக்காளர் நியமனம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. காலங்காலமாக எமது கோரிக்கைகள் மதிக்கப்படாத நிலையில், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரமிறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரம் தாழ்த்துவதற்கான நோக்கத்தினாலும் கல்முனை தெற்கு பிரதேச செயலாளரின் ஜனநாயக விரோத மற்றும் சட்ட விரோதமான செயற்பாடுகளினாலும் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் முறுகல் நிலை உருவாகியுள்ளது. கல்முனை தெற்கு பிரதேச செயலகச் செயற்பாடுகளுக்கு உரிய அதிகாரிகள் அனுசரணையாக செயற்படுவதால் தமிழ் சமூகம் மத்தியில் அச்சமும் பதற்றமும் அதிகரித்துள்ளது. கல்முனை வடக்கு பிரதேசத்தில் உள்ள 29 கிராம சேவையாளர் பிரிவுகளில் வசிக்கும் தமிழ் மக்கள், கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கோரியும், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமிறக்குவதை நிறுத்துமாறு கோரியும் தொடர்ச்சியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைதியான போராட்டத்தின் மூலம் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண அவர்கள் தொடர்ந்து முயற்சித்து வந்த போதிலும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அவர்கள் 20 நாட்களைக் கடந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், எந்தவொரு அரச அதிகாரியும் அங்கு செல்லவில்லை அல்லது அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நிலைமையை சீர்செய்ய உடனடியாக தாங்கள் தலையிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் வினைத்திறனான அரச சேவைகளுக்கான அணுகல் இல்லாமை, முறையான நிர்வாக ஆதரவைப் பெறுவதற்கான அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதைப் பிரதிபலிக்கிறது. இவ்விடயத்தில் தாங்கள் உடனடி கவனம் செலுத்துமாறும் கல்முனை வடக்கில் வசிப்பவர்களின் குறைகளுக்கு முன்னுரிமை வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன். எங்கள் சமூகத்தின் நல்வாழ்வையும் செழிப்பையும் உறுதி செய்வதில் உங்கள் தலையீடு முக்கியமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181136
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.