Jump to content

5ஜி அலைக்கற்றை கோபுரம் அமைக்கும் செயற்பாடுகளை நிறுத்தக் கோரி போராட்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் 5ஜி அலைக்கற்றை கோபுரம் அமைக்கும் செயற்பாடுகளை நிறுத்தக் கோரி, மாநகர முதல்வரின் அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று போராட்டம் நடத்தப்பட்டது.

அத்துடன், யாழ்ப்பாணம் மாநகர சபையின் அமர்வைப் புறக்கணித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள், வெளிநடப்புச் செய்தனர்.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் அமர்வு இன்று (18) காலை 9 மணியளவில் ஆரம்பமாகவிருந்த நிலையில், பொது மக்கள் அணிதிரண்டு, மாநகர முதல்வரின் அலுவலகம் மற்றும் சபை வாயிலை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு உள்ளிட்ட பல்வேறு மக்கள் சார்ந்த அமைப்புக்கள், பொது மக்கள் எனப் பலரும், கண்டனத்தையும் எதிர்ப்பையும் வெளியிட்டனர்.

“யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளரின் ஒப்புதலின்றி, 5ஜி அலைக்கற்றைக் கோபுரம் அமைப்பது தொடர்பாக மாநகர முதல்வர் தன்னிச்சையாக செயற்படுகின்றார். பொது மக்களுக்கு 5ஜி அலைக்கற்றை தொடர்பான விழிப்புணர்வுகள் எதுவுமில்லை. போரால் பாதிக்கப்பட்ட எமக்கு 5ஜி அலைவரிசை கோபுரம் தேவையில்லை” என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் முதல்வருக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. போராட்டத்தின் போது, முதல்வர் தனது அறையில் இருந்ததுடன், போராட்டக்காரர்கள் வெளியில் வருமாறு அழைப்பு விடுத்த போதும், அவர் போராட்டக்காரர்களை சந்திக்க வெளியே வரவில்லை. 

http://globaltamilnews.net/2019/126790/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"போரால் பாதிக்கப் பட்ட எமக்கு 5ஜி தேவையில்லை...!" - போர்ப்பாதிப்பிற்கும் இதற்கும் என்ன தொடர்பு?  

ஆரோக்கியப் பாதிப்பென்றால் 4ஜியிலும் உண்டே? பழைய காலம் போல ரின்பால் பேணியில் கம்பி கட்டிய தொலைபேசிக்கு மாறினால் ஆரோக்கியப் பாதிப்பின்றி நீண்ட காலம் வாழலாம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Justin said:

"போரால் பாதிக்கப் பட்ட எமக்கு 5ஜி தேவையில்லை...!" - போர்ப்பாதிப்பிற்கும் இதற்கும் என்ன தொடர்பு?  

ஆரோக்கியப் பாதிப்பென்றால் 4ஜியிலும் உண்டே? பழைய காலம் போல ரின்பால் பேணியில் கம்பி கட்டிய தொலைபேசிக்கு மாறினால் ஆரோக்கியப் பாதிப்பின்றி நீண்ட காலம் வாழலாம்!

5 ஜி வருவதை தடுக்க முடியாது.
ஆனால் வளர்ந்த நாடுகளிலேயே இதன் பாதிப்பு பற்றி அதிகம் பேசுகிறார்கள்.
எமது மக்களும் பேசட்டுமன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஈழப்பிரியன் said:

5 ஜி வருவதை தடுக்க முடியாது.
ஆனால் வளர்ந்த நாடுகளிலேயே இதன் பாதிப்பு பற்றி அதிகம் பேசுகிறார்கள்.
எமது மக்களும் பேசட்டுமன்.

வளர்ந்த நாடுகளில் பேசுகிறார்கள், ஆய்வு செய்கிறார்கள். செய்த ஆய்வின் முடிவுகள் எல்லா மின்காந்தக் கதிர்வீச்சுகள் போலவே இதனால் சிறிய பாதிப்பு உண்டு, பயங்கரமாக எதுவும் இல்லை என்றும் காட்டுகின்றன.

எங்கள் மக்களோ, போரால் பாதிக்கப் பட்ட எங்களுக்கு இது தேவையில்லை என்று ஆர்ப்பாட்டம் மட்டும் தான் செய்கிறார்கள். அதென்ன போருக்கும் இதற்கும் தொடர்பென்று தான் கேட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

6 minutes ago, Justin said:

வளர்ந்த நாடுகளில் பேசுகிறார்கள், ஆய்வு செய்கிறார்கள். செய்த ஆய்வின் முடிவுகள் எல்லா மின்காந்தக் கதிர்வீச்சுகள் போலவே இதனால் சிறிய பாதிப்பு உண்டு, பயங்கரமாக எதுவும் இல்லை என்றும் காட்டுகின்றன.

எங்கள் மக்களோ, போரால் பாதிக்கப் பட்ட எங்களுக்கு இது தேவையில்லை என்று ஆர்ப்பாட்டம் மட்டும் தான் செய்கிறார்கள். அதென்ன போருக்கும் இதற்கும் தொடர்பென்று தான் கேட்டேன்.

பனையாலை விழுந்து கிடக்கிறம், மாட்டையும் மிதிக்க விடாதேங்கோ என்று சனம் சொல்லுதோ.

ஏற்கனவே யுத்த பாதிப்பால் ஏற்பட்ட உடல் உள தாக்கங்களில இருந்து விடுபட போராடும் மக்களுக்கு நவீன 5G தொழினுட்பத்தாலும் தாக்கம் வருமோ என்று பயப்பிடுகினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Justin said:

வளர்ந்த நாடுகளில் பேசுகிறார்கள், ஆய்வு செய்கிறார்கள். செய்த ஆய்வின் முடிவுகள் எல்லா மின்காந்தக் கதிர்வீச்சுகள் போலவே இதனால் சிறிய பாதிப்பு உண்டு, பயங்கரமாக எதுவும் இல்லை என்றும் காட்டுகின்றன.

மக்களைப் பற்றியே பேசுகிறீர்கள்.மற்ற உயிரினங்கள் நிலை என்ன?
உண்மையான தாக்கத்தைப் பற்றி வெளியே பேசுவதேயில்லை என்கிறார்கள்.

Link to comment
Share on other sites

1 hour ago, Justin said:

"போரால் பாதிக்கப் பட்ட எமக்கு 5ஜி தேவையில்லை...!" - போர்ப்பாதிப்பிற்கும் இதற்கும் என்ன தொடர்பு?  

போரால் பாதிக்கப்பட்ட தமக்கு வேறு உதவிகள் தேவைப்படுகின்றன, அவற்றை செய்யாமல் 5ஜி என்னத்துக்கு, அது தேவையில்லை என்ற ரீதியில் கூறப்பட்டிருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏராளன், ஈழப்பிரியன் அண்ணை,

 நான் இப்போது யாழில் விஞ்ஞானம் மருத்துவம் பற்றி எழுதுவதில்லை, இங்கே யுரியூப் வியாபாரிகள் விற்பது மட்டுமே அதிகம் எடுபடும் என்பதால் என் நேரத்தை வீணாக்குவதில்லை! கடைசி முயற்சியாக இந்த விடயத்தில் மட்டும் என் பங்களிப்பு. இதன் பின் எதுவும் எழுத இல்லை:

1. மின்காந்த கதிர்வீச்சினால் உயிரினங்களுக்குப் பாதிப்பு உண்டு. அது ஏற்கனவே நவீன வாழ்வில் நாம் எதிர் கொள்ளும் பாதிப்பை விட அதிகமா என்றால் இல்லை என்பது தான் பல முறையான வழியில் செய்யப் பட்ட ஆய்வுகள் சொல்லியிருக்கும் பதில். உதாரணமாக டீசல் புகை ஒரு நிரூபிக்கப் பட்ட புற்று நோய்க்காரணி. அந்த டீசல் புகையை ஏற்கனவே சுவாசித்துக் கொண்டு, 5ஜியும் 4 ஜியும் புற்று நோயை இனித் தான் கூட்டப் போகிறது என்று கதை பரப்புவது பயமுறுத்தும் செயல். மேலும் 5ஜியும் 4ஜியும் ஏனைய ரேடியோ அலைகளும் மனிதனின் தோலைத் தாண்டி உள்ளே சென்று டின்.ஏயைத் தாக்கும் சக்தியற்றவை. அதனால் தான் மூளைப் புற்று நோய்க்கும் செல்லிடப் பாவனைக்கும் இடையே தொடர்பு இல்லை என்று காட்டியிருக்கிறார்கள். வெறும் செல்களில் பரிசோதனை செய்து விட்டு தரமற்ற சஞ்சிகைகளில் அதை பிரசுரித்து விட்டு ரேடியோ அலைகள் புற்று நோயை உருவாக்கும் என்று கதை பரப்பும் அறிவியலாளர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு வேறு நோக்கங்கள் இருக்கக் கூடும், நான் அறியேன்.

2. மக்களுக்கு சரியான தகவல்களை வழங்கி விட்டு ஒதுங்கி நிற்பது தான் விஞ்ஞானிகள், மருத்துவர்கள் செய்ய வேண்டியது. அறிவியல் தகவல்களை உரிய ஒப்பீடுகளோடு மக்களிடம் சொல்லாமல் fear mongering செய்தால் என்ன நிகழும் என்பதை அழகாக ஒரு 2016  ஆய்வில் கண்டறிந்திருக்கிறார்கள்.  நெதர்லாந்தில் 15000 நபர்களை தேர்வு செய்து அவர்கள் செல்போன் கோபுரத்தில் இருந்து எவ்வளவு கதிர்வீச்சைப் பெறுகிறார்கள் என்று துல்லியமாக அளவிட்டார்கள் (modeled exposure) . பின்னர் அந்த நபர்களைப் பேட்டி கண்டு "எவ்வளவு செல் போன் கதிர் வீச்சுக்கு அவர்கள் ஆளாவதாக நினைக்கிறார்கள்" என்று கணக்கிட்டார்கள் (perceived exposure).பின்னர், இதே நபர்களின் சில ஆரோக்கிய அளவீடுகளை (health outcomes) மேற்கொண்டார்கள். ஆய்வு முடிவில், தாம் அதிகமாக செல் போன் கோபுரக் கதிர்வீச்சைப் பெறுவதாக நம்பும் நபர்களிடையே அதிகமாக  ஆரோக்கியக் குறைபாடுகள் இருப்பதையும் துல்லியமாக அளவிடப் பட்ட கதிர்வீச்சிற்கும் ஆரோக்கியக் குறைபாட்டிற்கும் தொடர்பில்லாதிருப்பதையும் கண்டறிந்தார்கள். இந்த மனப் பிராந்தியை சரியான ஆய்வு முடிவுகளை மக்களுக்குச் சொல்லாமல் வெறும் பயப் பிராந்தியை மட்டுமே உருவாக்கும் போலி அறிவியலாளர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.

இணைப்பு இதோ:   https://academic.oup.com/aje/article/186/2/210/3111638

3. 5ஜி யினால் யாழ் நகரம் smart city ஆக நவீன மயப்படுமென நான் நம்பவில்லை. ஆனால், 5ஜியினால் எவ்வளவோ நன்மைகள் கல்வித் துறைக்கும் மருத்துவ சேவைகளிலும் ஏற்பட வாய்ப்புண்டு. யாழ் பல்கலை உலக மட்டத்தில் தங்கள் வலைபின்னலை அதிகரிக்க இந்த தொழில் நுட்பம் உதவும். எங்கள் மருத்துவர்கள் யாழில் இருந்தே மேற்கு நாடொன்றில் நடக்கும் நவீன மருத்துவ ஆய்வு முயற்சிகளை, கூட்டங்களை ஏன் சத்திர சிகிச்சைகளைக் கூட பார்த்து நவீன திசை நோக்கி நகர வாய்ப்பிருக்கிறது. இந்த நன்மைகள் எல்லாம் ஒரு ஆதாரமில்லாத பயமூட்டும் தகவல்களால் கிடைக்காமல் போகும் என்பது துரதிர்ஷ்டம்!  

நன்றி.

Link to comment
Share on other sites

9 minutes ago, Justin said:

ஏராளன், ஈழப்பிரியன் அண்ணை,

 நான் இப்போது யாழில் விஞ்ஞானம் மருத்துவம் பற்றி எழுதுவதில்லை, இங்கே யுரியூப் வியாபாரிகள் விற்பது மட்டுமே அதிகம் எடுபடும் என்பதால் என் நேரத்தை வீணாக்குவதில்லை! !  

நன்றி.

தங்களைப்போன்ற துறைசார் நிபுணத்துவம் பெற்றவர்கள்  ஒதுங்குவது மூடத்தனங்களை  பரப்பும் யூரியூப் வியாபாரிகளுக்கு வரப்பிசாதமாக அமையும். அறிவியல் ரீதியான் ஆய்வுகளை விட பழமைவாத மூடத்தனத்தை நம்பும் மனவியாதி ஊரில் உள்ள படித்த சமூகம் என்று கூறுபவர்களிடமும் காலங்காலமாக  இருப்பதை அவதானிக்க முடியும். அறிவியிலால் கண்டு பிடிக்கப்பட்ட தற்போதைய தகவல் தொழிழ்நுட்ப வளர்ச்சி கூட எம்மவரால் மூடக்கொள்கைகளை பரப்பவே பெருமளவில் பயன்படுத்தப் படுகின்றது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் போராட எவ்வளவோ வேறு அத்தியாவசிய விடயங்கள் இருக்க உலகம் முழுக்க அதிவேகத்தில் பரவும் நாளைய தொழில் நுடப்பத்தை உள்வாங்கி ஒண்டும் புதிதாக செய்யபோவ தில்லை அங்கு ஆனால் இவ்வளவு மூர்க்கத்தனமாக எதிர்க்கும் அளவுக்கு அங்குள்ள சனத்தை உருக்கொள்ள வைத்த அந்த பெருமகனுக்கு கை கொடுக்கணும் .இங்கு மக்களின் விருப்பத்துக்கு விட்டுபிடிப்பது நல்லது பின்பு கொழும்பில் 5g செயல்படும் விதத்தை அறிந்து ஆறுதலா உள்வரட்டுக்கும் வளரும் உலகில் ஐந்தாவது தலைமுறை தொடர்பாடல் முக்கியமானது இன்றியமையாதது அப்படியே அந்த போராட்டத்தில் இருப்பவர்கள் மழை நீர் சேகரிப்புக்கு குளத்தை தூர் வார கூப்பிட்டால் உண்மை நிலை தெரியும் .😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

உலகில் ஐந்தாவது தலைமுறை தொடர்பாடல் முக்கியமானது இன்றியமையாதது அப்படியே அந்த போராட்டத்தில் இருப்பவர்கள் மழை நீர் சேகரிப்புக்கு குளத்தை தூர் வார கூப்பிட்டால் உண்மை நிலை தெரியும் .😀

அதுவே என் கருத்தும்
ஆனாலும் புதிய தொழில்நுட்பத்தில் அதீத ஆர்வம் காட்டும் அரசியல் வாதிகள்  அப்பாவி மக்களை பற்றி ஒரு துளியாவது சிந்திக்கவும்  வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விஞ்ஞான ஆய்வுகளும் வியாபாரம் ஆகிவிட்ட நிலையில்..

இந்த அலைக்கற்றைகளின் நீண்ட காலப் பாதிப்பு என்பதை அறியாமல்.. இவற்றை உள்வாங்குவது என்பது சிந்திக்கப்பட வேண்டிய விடயமே.

டீசலை பாவிக்கும் வரை பாவித்துவிட்டு... இப்போதுதான் அது புற்றுநோய் காரணின்னு விஞ்ஞானம் சொல்லுதாம் என்று வியாபாரிகள் சொல்கின்றனர்.

நெகிலியை பாவிக்கும் வரை பாவித்துவிட்டு.. அது நீண்ட கால ஒழுங்கில் ஏற்படுத்தி இருக்கும் சூழல் பாதிப்பை கண்டு இப்போதுதான் வியாபாரிகள் நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர்.

அதே போல் அசேதனப் பசளைப் பாவனை...

இப்படி அடுக்கிட்டே போகலாம்.. விஞ்ஞான ஆராய்ச்சிகளை தங்களின் வியாபாரத்தின் தேவைக்கு ஏற்ப காட்டுவதும் பின் நிராகரிப்பதும்.. நடந்து கொண்டே இருக்கிறது.

அதைத்தாண்டி.. விஞ்ஞானத்தை மனித குலத்தின் இயற்கையில் நலன்கருதி இதய சுத்தியோடு பாவிக்க வேண்டிய தேவை ஒன்றுள்ளதால்..

இந்த மின்காந்த அலைகளின் தாக்கம் குறித்த நீண்ட கால குறுகிய கால பாதிப்புக்கள் ஆராயப்பட வேண்டும்.

ஏலவே பறவைகள் மத்தியில் இவை செலுத்தி இருக்கும் தாக்கம்.. என்பது அவற்றின் வாழ்வியலை பாதித்திருக்கும் நிலையில்.. மனிதர்களில் இவற்றின் தாக்கம் குறித்து நடுநிலையான உண்மையான விஞ்ஞான பூர்வ ஆய்வுகள் அவசியமே தவிர.. வியாபாரிகளின் நலனுக்கு ஏற்ப ஆய்வுகளையும் ஆய்வு முடிவுகளையும் ஒப்பிக்கும் நடவடிக்கைகள் பெருகி உள்ள நிலை அவசியமில்லை.

அறிவியல் விஞ்ஞானம் ஆராய்ச்சி.. என்ற உச்சரிப்போடு பல மோசடிகள் நடக்கின்றன. 

அந்த வகையில்.. இது மக்களால் எதிர்க்கப்படுவது.. இந்த அலைப்பாவனை குறித்த கூடிய தெளிவு விளக்கம் மற்றும் பாதிப்புக்கள் குறித்த தேடலுக்கு ஆய்வுகளுக்கு வழிகோலும் எனலாம். அது மக்களுக்கும் பூமிக்கும் இயற்கைக்கும் நன்மையே ஆகும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, பெருமாள் said:

யாழில் போராட எவ்வளவோ வேறு அத்தியாவசிய விடயங்கள் இருக்க உலகம் முழுக்க அதிவேகத்தில் பரவும் நாளைய தொழில் நுடப்பத்தை உள்வாங்கி ஒண்டும் புதிதாக செய்யபோவ தில்லை அங்கு ஆனால் இவ்வளவு மூர்க்கத்தனமாக எதிர்க்கும் அளவுக்கு அங்குள்ள சனத்தை உருக்கொள்ள வைத்த அந்த பெருமகனுக்கு கை கொடுக்கணும் .இங்கு மக்களின் விருப்பத்துக்கு விட்டுபிடிப்பது நல்லது பின்பு கொழும்பில் 5g செயல்படும் விதத்தை அறிந்து ஆறுதலா உள்வரட்டுக்கும் வளரும் உலகில் ஐந்தாவது தலைமுறை தொடர்பாடல் முக்கியமானது இன்றியமையாதது அப்படியே அந்த போராட்டத்தில் இருப்பவர்கள் மழை நீர் சேகரிப்புக்கு குளத்தை தூர் வார கூப்பிட்டால் உண்மை நிலை தெரியும் .😀

இதில் உடன்பாடில்லை.

காரணம்.. இல்லாத ஒன்றை வியாபாரிகள் மக்களிடம் திணிக்கும் போது.. அதன் பாதிப்புக்கள் குறித்து மக்கள் சிந்திக்க வேண்டியது அவசியம். 

இருக்கிற பிரச்சனைகளை காட்டி.. வரப் போகும் பிரச்சனையை பற்றி சிந்திக்கவே கூடாது என்று சொல்வது நியாயமே அல்ல.

ஒரு காலத்தில் வைகோல்.. மற்றும்.. மீள்தகவு தாவர மூலப் பொருட்கள் சார்ந்து உருவான பேப்பர்களை கொண்டு உருவான பைகளின் பாவனையை நெகிலியால் பிரதியீடு செய்த போதும் மக்களின் வாயை அடைத்தார்கள். இப்போ அதே நெகிலிக்கு எதிராக போராடுகிறார்களாம்.. மக்களை நெகிலிப் பாவனைக்கு எதிராக உணர்வூட்டினமாம்.

இந்த நிலை இதிலும் வேண்டாமே என்று சிந்திக்க ஏன் மக்கள் சிந்திக்கக் கூடாது. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nedukkalapoovan said:

இதில் உடன்பாடில்லை.

காரணம்.. இல்லாத ஒன்றை வியாபாரிகள் மக்களிடம் திணிக்கும் போது.. அதன் பாதிப்புக்கள் குறித்து மக்கள் சிந்திக்க வேண்டியது அவசியம். 

இருக்கிற பிரச்சனைகளை காட்டி.. வரப் போகும் பிரச்சனையை பற்றி சிந்திக்கவே கூடாது என்று சொல்வது நியாயமே அல்ல.

ஒரு காலத்தில் வைகோல்.. மற்றும்.. மீள்தகவு தாவர மூலப் பொருட்கள் சார்ந்து உருவான பேப்பர்களை கொண்டு உருவான பைகளின் பாவனையை நெகிலியால் பிரதியீடு செய்த போதும் மக்களின் வாயை அடைத்தார்கள். இப்போ அதே நெகிலிக்கு எதிராக போராடுகிறார்களாம்.. மக்களை நெகிலிப் பாவனைக்கு எதிராக உணர்வூட்டினமாம்.

இந்த நிலை இதிலும் வேண்டாமே என்று சிந்திக்க ஏன் மக்கள் சிந்திக்கக் கூடாது. 

 

எனகென்னவோ இந்த 5g பிரச்சனையை விட அதிக முக்கியத்துவம் உள்ள பிரச்சனைகளை மக்கள் ஏன் எட்டிபார்க்காமல் நேரே போராட்டம் பண்ணுகினம் ? ஸ்ரீலங்கன் டெலிகொம் பாதி பங்குகள் வைத்திருக்கும் ஆனந்த கிருஸ்ணன் வாழும் நாட்டிலும் 5g உள்ளது இலங்கையை விட குறைவான மக்கள் தொகை உள்ள நாடுகள் தொலை தொடர்பில் விட்டுகொடுப்பு உள்ளது ஆனால் இலங்கையில் இன்னும் இணைய தொலைபேசி பாவனை தடையில் உள்ளது அல்லது மறைமுகமாக தடையில் உள்ளது இங்கு vonage எனப்படும் இணையவலை தொலைபேசி பெட்டி அதற்கு விரும்பிய நாட்டின் நம்பர் எடுக்கலாம் லண்டன் நம்பர் உடன் வந்த பாக்ஸ் ஒன்றை அனுப்ப அங்குள்ள சுங்கம் திருப்பி அனுப்பி விட்டார்கள் பின் அதே பொருளை வேறு பெயரில் நண்பனின் வீட்டுக்கு அனுப்பி தற்போது லண்டன் லோக்கல் நம்பர் யாழில்  வேலை செய்கிறது அதே போல் அவர்களும் 45 நாட்டுக்கு இலவசமாக யாழில் இருந்து எடுக்கலாம் இணையவலை போன் என்று நேரே போனால் ஏன் அங்குள்ள கஸ்டம்ஸ் திருப்பி அனுப்புகின்றது ? மற்றைய சிறு நாடுகள் கூட இணையவலை உலகில் இலவச சேவைக்கு வந்து கோல் சென்டர் போன்றவற்றில் பணம் பார்க்கின்றனர் இவ்வளவு இருந்தும் சிலோனுக்கு மாத்திரம் தொலைபேசி எங்களின் காசில் பெரிதாக குறையவில்லை ஏன் ?

இந்த கேள்விகளுக்கு விடை தேடினால் 5g க்கு ஏன் குத்தி முறியினம் என்றதுக்கு விடை கிடைக்கும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, பெருமாள் said:

எனகென்னவோ இந்த 5g பிரச்சனையை விட அதிக முக்கியத்துவம் உள்ள பிரச்சனைகளை மக்கள் ஏன் எட்டிபார்க்காமல் நேரே போராட்டம் பண்ணுகினம் ? ஸ்ரீலங்கன் டெலிகொம் பாதி பங்குகள் வைத்திருக்கும் ஆனந்த கிருஸ்ணன் வாழும் நாட்டிலும் 5g உள்ளது இலங்கையை விட குறைவான மக்கள் தொகை உள்ள நாடுகள் தொலை தொடர்பில் விட்டுகொடுப்பு உள்ளது ஆனால் இலங்கையில் இன்னும் இணைய தொலைபேசி பாவனை தடையில் உள்ளது அல்லது மறைமுகமாக தடையில் உள்ளது இங்கு vonage எனப்படும் இணையவலை தொலைபேசி பெட்டி அதற்கு விரும்பிய நாட்டின் நம்பர் எடுக்கலாம் லண்டன் நம்பர் உடன் வந்த பாக்ஸ் ஒன்றை அனுப்ப அங்குள்ள சுங்கம் திருப்பி அனுப்பி விட்டார்கள் பின் அதே பொருளை வேறு பெயரில் நண்பனின் வீட்டுக்கு அனுப்பி தற்போது லண்டன் லோக்கல் நம்பர் யாழில்  வேலை செய்கிறது அதே போல் அவர்களும் 45 நாட்டுக்கு இலவசமாக யாழில் இருந்து எடுக்கலாம் இணையவலை போன் என்று நேரே போனால் ஏன் அங்குள்ள கஸ்டம்ஸ் திருப்பி அனுப்புகின்றது ? மற்றைய சிறு நாடுகள் கூட இணையவலை உலகில் இலவச சேவைக்கு வந்து கோல் சென்டர் போன்றவற்றில் பணம் பார்க்கின்றனர் இவ்வளவு இருந்தும் சிலோனுக்கு மாத்திரம் தொலைபேசி எங்களின் காசில் பெரிதாக குறையவில்லை ஏன் ?

இந்த கேள்விகளுக்கு விடை தேடினால் 5g க்கு ஏன் குத்தி முறியினம் என்றதுக்கு விடை கிடைக்கும் .

இது உண்மையில் பல பில்லியன்கள் புரளும் வியாபாரம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. சொறீலங்கா போன்ற நாடுகளில்.. இவை அரசியல்வாதிகளிடம் இலஞ்ச வியாபாரம் பேரம் பேசல் வியாபாரம் என்பதும் சாத்தியமே.

அதை எல்லாம் தாண்டி.. நீண்ட கால ஒழுங்கில் இவற்றின் சமூகத்தாக்கம்.. சூழல் தாக்கம் என்ன என்பது குறித்து சிந்திக்க வேண்டியது அவசியமே.

தீ இலவசம் என்பதற்காக.. கட்டின்றி பயன்படுத்த முடியாது என்பது விளங்கப்பட்டது போல.. இவை மக்களிடம் விளங்கப்பட இப்படியான வாய்ப்புக்களை பாவிப்பது தவறில்லை. வியாபாரிகள்.... அரசியல் வியாபாரிகளின் நோக்கங்களுக்கு அப்பால். இதுதான் எங்கள் நோக்கம். 

Link to comment
Share on other sites

On 7/19/2019 at 12:44 AM, nedukkalapoovan said:

டீசலை பாவிக்கும் வரை பாவித்துவிட்டு... இப்போதுதான் அது புற்றுநோய் காரணின்னு விஞ்ஞானம் சொல்லுதாம் என்று வியாபாரிகள் சொல்கின்றனர்.

நெகிலியை பாவிக்கும் வரை பாவித்துவிட்டு.. அது நீண்ட கால ஒழுங்கில் ஏற்படுத்தி இருக்கும் சூழல் பாதிப்பை கண்டு இப்போதுதான் வியாபாரிகள் நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர்.

அதே போல் அசேதனப் பசளைப் பாவனை...

இந்த மின்காந்த அலைகளின் தாக்கம் குறித்த நீண்ட கால குறுகிய கால பாதிப்புக்கள் ஆராயப்பட வேண்டும்.

டீசல், நெகிலி, அசேதன பசளை ஆகியவற்றை நீண்ட காலம் பாவித்து அதன் மூலம் உண்டான பாதிப்புகள் பற்றிய தரவுகளை சேகரித்து அவற்றை ஆய்வு செய்து அந்த ஆய்வுகளின் முடிவுகள் தான் இப்போது நீங்கள் நீலிக் கண்ணீர் என்று சொல்லும் புற்று நோய், சூழல் மாசடைதல் பற்றிய அக்கறை. இந்த மின் காந்த அலைகளையும் நீண்டகாலம் பயன்படுத்தி தானே அவற்றின் நீண்டகால பாதிப்பை அறிய முடியும்? அதற்காக தான் இப்போதே ஆரம்பிக்கிறார்கள். அதற்குள் நீங்கள் இப்போதே நீலிக்கண்ணீர் வடிக்க ஆரம்பித்தால்?

Link to comment
Share on other sites

On 7/19/2019 at 2:00 AM, nedukkalapoovan said:

தீ இலவசம் என்பதற்காக.. கட்டின்றி பயன்படுத்த முடியாது என்பது விளங்கப்பட்டது போல.. இவை மக்களிடம் விளங்கப்பட இப்படியான வாய்ப்புக்களை பாவிப்பது தவறில்லை. 

5G  கட்டின்றி பயன்படுத்த படும் அலைக்கற்றைகள் அல்ல. அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் இந்த தொழில்நுட்பத்தை உருவாக்க முதல் சீனா உருவாக்கி உள்ளதால் உண்டான வணிக போட்டியின் விளைவாக  மக்கள் மத்தியில் பரப்பப்படும் பயம் காட்டும் கருத்துகளே இவை. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.