Jump to content

’தமிழ் தெரியாதது குறைபாடு’


Recommended Posts

இனங்களுக்கு இடையில் புரந்துணர்வை ஏற்படுத்த, வெவ்வேறு மொழிகளைப் பேசும் திறன் முக்கியமானது என்று தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ளாதது, தன்னிடமுள்ள பெரும் குறைபாடு என்றும் தெரிவித்துள்ளார்.

வெவ்வேறு மொழிகளைப் பேசும் திறன் இன்மையே, யுத்த சூழ்நிலைக்கு வழிவகுத்து என்றும் அவர் கூறினார்.

மொழிப் பிரச்சினையால் புரிந்துணர்வு இல்லாமற்போகும் போது அது முரண்பாட்டிற்கு வழிவகுக்கும் என சுட்டிக்காட்டியுள்ள பிரதமர், அந்தக் காலத்தில் தாங்கள் தமிழ் மொழியைக் கற்றுக் கொள்ளவில்லை எனவும் அது தனது குறைபாடு என்றும் குறிப்பிட்டார்.

எனினும் அப்போது ஆங்கில மொழியைக் கற்றுக் கொண்டதாக தெரிவித்த அவர், தமது ஊர்ப் பகுதிகளில் பெரும்பாலான மக்கள் ஒரு மொழியை மாத்திரமே கற்றுக் கொண்டதாகவும், பேசியதாகவும் தெரிவித்ததுடன், இப்போது ஏனைய மொழிகளின் அவசியத்தையும் உணர்வதாக தெரிவித்தார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/தமிழ்-தெரியாதது-குறைபாடு/175-235595

மும்மொழி  திட்டத்தை  வெற்றியடைய செய்வதே பிரதான  இலக்கு  : மனோ கணேசன் 

மொழி விருத்தியின் ஊடாகவே தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப முடியும். பல்லின சமூகம் வாழும் நாட்டில்  ஒருவர் பிறிதொரு மொழியிலும் தேர்ச்சிப் பெற்றிருப்பது  கட்டாயமாகும்.

mano.jpg

பொதுமொழியான  ஆங்கிலத்திலும் தேர்ச்சிப் பெற்றால் உலகையே வெல்லலாம் . மும்மொழி  திட்டத்தை வெற்றியடைய    செய்வதே எமது பிரதான  இலக்கு என தேசிய ஒருமைப்பாடு அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும்  இந்து சமய  அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையில் இரண்டாம் மொழி  பாடங்களில்  சித்தியடைந்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று  அலரி மாளிகைளில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இடம்  பெற்றது. இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 கல்வி பொதுத்தராதர   சாதாரண தர பரீட்டையில் இரண்டாம் மொழிகளான தமிழ், சிங்கள மொழிகளில்  கடந்த வருடத்தை  விட இந்த வருடம்  அதிகமான மாணவர்கள் சித்தியடைந்துள்ளார்கள். அரச  கரும மொழிகள் அமைச்சு தேசிய மட்டத்தில்  முன்னெடுத்த செயற்திட்டங்களின் பெறுபேறாகவே  இந்த வெற்றிக் காணப்படுகின்றது  என அவர் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/60792

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது போன்ற கருத்துகளை முக்கிய அரசியல் தலைவர்கள் நாடாளுமன்றம் போன்ற அரசியல் அரங்குகளில்தான் வெளியிடவேண்டும். கண்ணுக்கு எதிரில் உள்ள யதார்த்தமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை நோக்கமாக கொள்ளவேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.