Jump to content

அமெரிக்க தூதுவரின் முகநூல் கலந்துரையாடல்


Recommended Posts

அமெரிக்க தூதுவரின் முகநூல் கலந்துரையாடல்

 

Alaina-Teplitz-300x200.jpg

சர்ச்சைகளைக் கிளப்பியுள்ள அமெரிக்க உடன்பாடுகள் தொடர்பாக, சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் நேற்று முன்தினம், முகநூல் ஊடாக நடத்திய கலந்துரையாடலின் தொகுப்பு.

அமெரிக்க – சிறிலங்கா ஒத்துழைப்பு அல்லது வேறு எந்த விடயம் பற்றி,  பரப்புரை  செய்யப்படும்,   தவறான தகவல்கள்  மற்றும்  தவறான தகவல்களை அடையாளம் காண்பது குறித்தும், எவ்வாறு ஒன்றிணைந்து செயற்பட முடியும் என்பது குறித்தும்,  கலந்துரையாட விரும்புகிறேன்.

அமெரிக்கா- சிறிலங்கா இடையிலான மூன்று ஒத்துழைப்பு உடன்பாடுகள் தொடர்பான அண்மைய ஊடக அறிக்கைகளுக்கு பதிலளிப்பதில்  இருந்து ஆரம்பிக்கலாம்.

இந்த உடன்பாடுகளில் ஒன்று, வருகைப் படைகள் உடன்பாடு, இது இன்னமும் பேசப்பட்டு வருகிறது. இன்னமும் இறுதி செய்யப்படவில்லை.

இன்னொன்று கையகப்படுத்தல் மற்றும் குறுக்குச் சேவைகள் உடன்பாடு. இது 2007இல் கையெடுத்திடப்பட்டு, 2017இல், புதுப்பிக்கப்பட்டது.  இது இராணுவ ஒத்துழைப்பை  – குறிப்பாக, கூட்டு பயிற்சிகள், இடர் மீட்பு போன்ற விடயங்களில், வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கத்தைக் கொண்டது.

மூன்றாவது, சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க, மிலேனியம் சவால் நிறுவனத்தின், 480 மில்லியன் டொலர் அபிவிருத்தி உதவி பொதியை  உள்ளடக்கியது.

இவை தொடர்பான, சில அடிப்படை உண்மைகளை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இராணுவ தளத்தை அமைப்பது, அல்லது சிறிலங்காவில் நிரந்தர இராணுவ இருப்பை நிறுவுவது தொடர்பாக அமெரிக்காவுக்கு எந்த நோக்கமும் கிடையாது. அதேபோல,  மிலேனியம் சவால் நிறுவனம் மூலம் அமெரிக்கா எந்த நில உரிமையைப் பெறவோ,  கட்டுப்பாட்டை பேணவோ முனையவில்லை.

சிறிலங்கா அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே  சிறிலங்கா மக்களுக்கு அமெரிக்கா ஆதரவையும் உதவிகளையும் வழங்கும்.

அமெரிக்க – சிறிலங்கா படைகளுக்கு இடையிலான பொருட்கள் மற்றும் சேவைகளை பரிமாறிக் கொள்ளும் போது, அந்த பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான கட்டணம் செலுத்துவதற்கான ஒரு சட்ட கட்டமைப்பை வழங்குவதற்கே, கையகப்படுத்தல் மற்றும் குறுக்கு சேவைகள் உடன்பாடு வடிவமைக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் தற்காலிகமாக சிறிலங்காவில் பயிற்சிகள் அல்லது  அதிகாரப்பூர்வ கடமைக்கு வரும்,  அமெரிக்க படையினர் மற்றும் பாதுகாப்புத் திணைக்களத்தின்  சிவில் பணியாளர்களின் நிலையை வருகைப் படைகள் உடன்பாடு விபரிக்கிறது.

Alaina-Teplitz.jpg

மிலேனியம் சவால் நிறுவன உடன்பாட்டுக்கும், வருகைப் படைகள் உடன்பாடு மற்றும் கையகப்படுத்தல் மற்றும் குறுக்கு சேவைகள் உடன்பாட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை.  அது ஒரு இராணுவ உடன்பாடும் கிடையாது.

மிலேனியம் சவால் நிதிய கொடை, பொருளாதார வளர்ச்சியை ஆதரிப்பதற்கான ஒரு அபிவிருத்தி  உதவி உடன்பாடு ஆகும்.இது அமெரிக்க மக்களிடமிருந்து கிடைத்த பரிசே தவிர,  கடன் அல்ல.

இந்த உடன்பாடுகளைப் பற்றி அதிகம் பேசுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

எனது பார்வையில், தவறான தகவல்கள், குறிப்பாக சமூக ஊடகங்களில் பரவும் தவறான கருத்துகள், எமது ஜனநாயக நாடுகளின் ஒருமைப்பாடு மீதான நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும்.

நாங்கள் பேச்சு நடத்துகின்ற வருகைப் படைகள் உடன்பாட்டில்,  பயிற்சி, ஒத்திகைகள், மற்றும் இரண்டு நாடுகளுக்கும் நன்மையளிக்கக் கூடிய பரிமாற்றங்களுக்கான பரஸ்வர வசதிகளை அளிக்கிறது. அதன் அர்த்தம், தளங்களை அமைப்பதோ, அமெரிக்க படையினரின் நிரந்தர பிரசன்னமோ அல்ல.

சிறிலங்கா தனது எல்லை மற்றும் பிராந்திய நீர் அல்லது வான் வெளியில் அமெரிக்க படையினர், கப்பல்கள் மற்றும் விமானங்களின் நுழைவு அல்லது வெளியேறுவதற்கான  ஒப்புதலை அளிப்பதற்கும், மறுப்பதற்குமான அனைத்து இறைமை உரிமைகளையும் கொண்டிருக்கும்.

வருகை படைகள் உடன்பாடு குறித்து சிறிலங்கா அரசாங்கத்துடன்  நாங்கள் இன்னமும் பேச்சு நடத்தி வருகிறோம்.

இடர் மீட்பு, கூட்டுப் பயிற்சிகள் போன்ற சூழல்களில், நடைமுறைகளை முன்கூட்டியே உருவாக்கி, வசதிகளை ஏற்படுத்தலாம். வருகைப் படைகள் உடன்பாட்டின் கீழ், எந்தவொரு படையினரும், சரியான ஆவணங்கள் இன்றியோ, முறையான அனுமதியைப் பெறாமலோ,  சிறிலங்காவுக்குள் நுழைய முடியாது.

பலமான, இறைமை கொண்ட, சுதந்திரமான சிறிலங்காவுக்கே அமெரிக்கா ஆதரிக்கிறது. இந்தோ-பசுபிக் பாதுகாப்புக்கு  சிறிலங்காவின் பங்களிப்பை  நாங்கள் மதிக்கிறோம்.

சிறிலங்கா இந்த விடயத்தில் இன்னும் திறமையாக இருக்க உதவுவதே, வருகை படைகள் உடன்பாடு குறித்து நாங்கள்  பேச்சு நடத்துவதில் ஆர்வம் கொண்டுள்ளதற்குக் காரணம் ஆகும்.

சீனாவுக்கும் வருகை படைகள் உடன்பாட்டுக்கும்  எந்த தொடர்பும் இல்லை; இது சிறிலங்காவுடனான நீண்டகால இருதரப்பு கூட்டு பற்றியது.

சிறிலங்காவின் நீதித்துறையில் அமெரிக்கா தலையீடு செய்வதாக அண்மையில் ஊடகங்களில் நிறைய தவறான தகவல்கள் வந்துள்ளன. சிறிலங்காவின் நீதித்துறையில் அமெரிக்கா தலையிடவோ, அல்லது தலையீடு செய்யப் போவதோ அல்லது நேரடியாக ஈடுபடவோ இல்லை.

சிறிலங்கா அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில் சிறிலங்கா நீதிபதிகள் மற்றும் சட்டவாளர்களுக்கு எமது நாடு பயிற்சி அளித்துள்ளது. இந்தப் பயிற்சியில் நிதிமோசடி எதிர்ப்பு மற்றும் பயங்கரவாத நிதியுதவி போன்ற-  புதிய வகை குற்றங்கள் குறித்த சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதை உள்ளடக்கியது.

ஒரு வலுவான மற்றும் சுயாதீன நீதித்துறை, ஒரு வலுவான ஜனநாயகத்தின் தூண் ஆகும். அமெரிக்க சட்டவாளர் சங்கத்தின் கிளையை சிறிலங்காவில் அமைக்கும் நோக்கம் ஏதும் கிடையாது.

சிறிலங்கா மக்களே தற்போதைய அரசாங்கத்தை உருவாக்கினார்கள். இன்னும் சில மாதங்களில் புதிய அரசாங்கத்தை தெரிவு செய்வார்கள். மக்களின் விருப்பங்களை அமெரிக்கா ஆதரிக்கிறது. எந்த அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவர்களுடன் பணியாற்ற தயாராக உள்ளது.

சிறிலங்காவுக்கு நாங்கள் ஒரு ஆண்டுக்கு 40 மில்லியன் டொலர் அபிவிருத்தி உதவிகளை வழங்குகிறோம், பெரும்பாலும் யுஎஸ் எய்ட் மூலம் இந்த உதவிகள் வழங்கப்படுகின்றன. இது ஒரு அமெரிக்க அரசாங்கத்தின் அபிவிருத்தி உதவி வழங்கும் நிறுவனமாகும்.

மிலேனியம் சவால் நிறுவனம் மற்றொரு உதவி வழங்குநராகும்.

எமது திட்டங்கள் அனைத்தும் சிறிலங்கா அரசாங்கத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையிலானவை. பால்பண்ணைத் தொழிலின் விருத்திக்கு ஆதரவு அளிப்பது தொடக்கம், அமெரிக்கன் கோணர்களில் ஆங்கில வகுப்புகளை நடத்துவது வரை, பல உதவி முயற்சிகளை உள்ளடக்கியது.

அமெரிக்க படையினர் சிறிலங்காவில் குற்றமிழைக்கும் போது, இங்கு தண்டனை வழங்கப்பட முடியாது என்ற கரிசனையை எழுப்பியதற்கு நன்றி. கடினமான மற்றும் சோகமான சூழ்நிலைகள் கூட ஏற்படலாம்.

வருகைப் படைகள் அல்லது சோபா  போன்ற ஒரு உடன்பாட்டைக் கொண்டிருப்பதற்கு ஒரு காரணம், அவற்றை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து முன்கூட்டியே ஏற்றுக் கொள்வது தான்.

பல நாடுகளில் ஒரு குறிப்பிட்ட சட்டத்தை, குறிப்பிட்ட சூழ்நிலைகளில் பயன்படுத்த வேண்டிய உடன்பாடுகள் உள்ளன.

உதாரணமாக, வெளிநாடுகளில் உள்ள சிறிலங்கா படையினர்  குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டபோது, அவர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டு, சிறிலங்கா சட்டத்தின் கீழ் விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டனர். இத்தகைய நிகழ்வுகள் மிகவும் அரிதானவை.

சிறிலங்காவின் பன்முகத்தன்மையையும், நாட்டின் இறையாண்மையையும் அமெரிக்கா மதிக்கிறது. அந்த மதிப்பு எமது பாதுகாப்பு ஒத்துழைப்பின் இதயத்தில் இருக்கிறது. அமெரிக்காவின் சிறந்த வலுவான இறைமையுள்ள பங்காளராகவே சிறிலங்கா இருக்கிறது.

ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பின்னர், சிறிலங்கா அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய, தாக்குதல்கள் குறித்த விசாரணைக்கு எவ்பிஐ அமைப்பின் ஆதரவை வழங்கினோம்.

எதிர்காலத்தில் தாக்குதல்களைத் தடுப்பதற்கு சிறிலங்காவின் சட்டத்தை நடைமுறைப்படுத்தும், மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களுடன் கூட்டு சேருவதற்கு இன்னும் பல வழிகளைத் தேடுவோம்.

எல்லா நாடுகளையும் அச்சுறுத்தும் ஒரு புதிய வகையான பயங்கரவாதம் சிறிலங்காவில் உள்ளது.

நீண்டகால ஒத்துழைப்பு மற்றும்  ஜனநாயகத்தைப் பின்பற்றுவதன் ஊடாக, வலுவான ஒத்துழைப்புகள், சட்டத்தின் ஆட்சி, சிவில் சுதந்திரங்களுக்கு தொடர்ந்து மதிப்பளிப்பதன் மூலம் மட்டுமே பயங்கரவாதத்தை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்பதை நாங்கள் அறிவோம்.

பொருளாதார ரீதியில், சிறிலங்காவின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாக அமெரிக்கா விளங்குகிறது.  ஆண்டுதோறும் சிறிலங்கா ஏற்றுமதி செய்யும் 11.7 பில்லியன் டொலர் பொருட்களில், கிட்டத்தட்ட 3 பில்லியன் டொலர் பொருட்கள் அமெரிக்க சந்தைகளுக்கே அனுப்பப்படுகின்றன.

சிறிலங்காவில் இருந்து அமெரிக்கா பெரும்பாலும் ஆடைகளைளே இறக்குமதி செய்கிறது. இறப்பர், தொழில்துறை பொருட்கள், இரத்தினக் கற்கள், தேயிலை மற்றும் வாசனைத்ப் பொருட்களும் இறக்குமதி செய்யப்படுகின்றன.

சிறிலங்காவுக்கான அமெரிக்க ஏற்றுமதியில் விலங்கு தீவனங்கள், மருத்துவ உபகரணங்கள், சோயா பீன்ஸ், பிளாஸ்டிக், பால் பொருட்கள், கோதுமை, துணி மற்றும் ஆடைகள் ஆகியன அடங்கும்.

http://www.puthinappalakai.net/2019/07/19/news/39055

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி Published By: DIGITAL DESK 7   16 APR, 2024 | 02:42 PM   நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் அவரின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திக்கு இன்று வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லவுள்ள ஊர்தியானது இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்ட பந்தலுக்கு முன்பாக அஞ்சலிக்காக கொண்டுவரப்பட்டது. இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்க தலைவி கா. ஜெயவனிதா ஈகைச்சுடரினை ஏற்றி வைத்ததுடன் மற்றும் தாயார் மலர்மாலை அணிவித்து அடுத்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/181216
    • Published By: DIGITAL DESK 3    16 APR, 2024 | 12:07 PM யாழ்ப்பாணத்தில் இருந்து புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசிக்கும் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி சுமார் 50 இலட்ச ரூபாயை மோசடி செய்ததாக பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.  யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசித்து வருகின்றார். அவருக்கு திருமணமாகி பிள்ளைகள் உள்ள நிலையில் சுவிஸ் நாட்டில் கணவனை பிரிந்து பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றார்.  இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் குறித்த பெண் யாழ்ப்பாணம் வந்திருந்த போது, பெண்ணின் பூர்வீக சொத்துக்கள் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடுகள் தொடர்பில் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்ய சென்று இருந்தார்.  முறைப்பாடு செய்ய சென்ற நேரத்தில் பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த தமிழ் பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.  அந்த பழக்கம் பெண் வெளிநாடு சென்ற பின்னரும் தொடர்ந்து உள்ளது. ஒரு கட்டத்தில் அது காதலாக மலர்ந்துள்ளது. அதனை அடுத்து சுவிஸ் நாட்டு பெண், இங்குள்ள பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு பணம், நகை என்பவற்றுடன் அன்பளிப்பு பொருட்கள் என பலவற்றை வழங்கி வந்துள்ளார்.  ஒரு கட்டத்தில் பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தரை சுவிஸ் நாட்டிற்கு எடுப்பதற்கான முயற்சிகளையும் அப்பெண் மேற்கொண்டுள்ளார். அதற்கு பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தர் மறுப்பு தெரிவித்து, தான் நாட்டை விட்டு வர மாட்டேன் என கூறியுள்ளார்.  அதனால் அப்பெண் மீண்டும் யாழ்ப்பாணம் வந்து தன்னை திருமணம் செய்யுமாறு வற்புறுத்திய வேளை , அதற்கு அவர் உடன்படாத நிலையில், அது தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார்.  அதனை அடுத்து, இப்பெண்ணிடம் இருந்து பெற்றுக்கொண்ட ஒரு தொகை நகை, பணம் என்பவற்றை மீள அளித்துள்ளார். மிகுதியை சிறு கால இடைவெளியில் மீள கையளிப்பதாக உறுதி அளித்துள்ளார்.  அதன் பிரகாரம் உரிய காலத்தில் மிகுதி பணம் நகையை மீள கையளிக்காததால், அப்பெண் குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார். https://www.virakesari.lk/article/181215
    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 11:19 AM   கொவிட் தொற்று பற்றிய உலக சுகாதார நிறுவனம் மற்றும் இலங்கை சுகாதார அமைச்சின் ஆலோசனைகள் தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெளிவுபடுத்தியுள்ளார். யாழ் மாவட்டத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் கொவிட்தொற்று காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளநிலையில், மக்கள் மத்தியில் தேவையற்ற சந்தேகங்களை தீர்க்கும்வகையில் குறித்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதன்படி 2023 ஒக்டோபர் 10ம் திகதி முதல் கீழ்வரும் 7 விடயங்கள் சுகாதார அமைச்சினால் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டு பின்பற்றப்படுகிறது. 1. கொவிட் தொற்று ஏற்பட்டவர்களுக்கு ஏனைய சுவாசத் தொற்று நோய்கள் ஏற்பட்டவர்களுக்கு வழங்கப்படுகின்ற அதே உரிய பாதுகாப்பும் பராமரிப்பும் வழங்கப்பட வேண்டும். பொருத்தமான சிகிச்சையும் வைத்தியசாலையில் வழங்கப்படும்.  (பொதுவாக சுவாச தொற்று வருத்தம் இன்னொருவருக்கு இலகுவாக பரவலாம். ஆகவே சுவாசத் தொற்று உடையவர்கள் உரிய அடிப்படை சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறே தொற்று உடையவருக்கு அருகில் இருப்பவர்கள் மற்றும் பராமரிப்பவர்கள் உரிய சுகாதார பழக்கவழக்கங்களைப்  பேண வேண்டும்.) 2. எதாவது நோய் ஒன்றின் சிகிச்சைக்கு முன்னர் அல்லது சத்திர சிகிச்சை ஒன்றிற்கு முன்னர்  கொவிட் தொற்றும் இருக்கின்றதா என பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 3. கொவிட் தொற்று உடையவரிற்கு அருகில் இருந்தவர்களிற்கு அல்லது அவருக்கு அருகில் சென்று சிகிச்சை அளித்தவர்களுக்கு கோவிட் தொற்று இருக்கின்றதா என பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. 4. இருமல் மற்றும் தடிமன் போன்ற சுவாசத் தொற்று ஏற்பட்டவர்கள் இன்னொருவருக்கு தொற்று ஏற்படாத வகையில் உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக அதிகளவில் ஒன்றுகூடும் இடங்களில் உரிய முறையில் நடந்து கொள்ள வேண்டும். 5. கொவிட் இறப்பு ஏற்படும் போது உரிய சுகாதார விதிகளைக் கடைப்பிடித்து வீடுகளில் இறுதிச் சடங்கை செய்யமுடியும். 6. சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவின் அறிவுறுத்தலின் அடிப்படையில் சமுதாயத்தில் கொவிட் தொற்று இருக்கின்றதா என பலருக்கு பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 7. தனியார் சிகிச்சை நிலையங்களும் இந்த நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். https://www.virakesari.lk/article/181205
    • இது யாழ்ப்பாணத்தில் இல்லை.  பூந்கரிக்குத் தெற்கே, பூநகரி மன்னார் வீதியில் ஜெயபுரத்திற்கு(சந்தி ) மேற்கே 7/8 Km ல் இருக்கிறது.    https://www.aloeus.com/devils-point-veravil/
    • தகவலுக்கு நன்றி  இந்த ஊர்  யாழ்பாணத்தில் எங்கே இருக்கின்றது என்பதே எனக்கு தெரியாது.தெரிந்தவர்கள் சொன்னதை வைத்தே சொன்னேன். முன்பு யாழ்கள உறவு தனிஒருவன் சொன்னவர் வீட்டு திட்டம் வந்த போதும் எதிர்ப்பு தெரிவித்து வீடும் கிடைக்காமல் போய்விட்டது.இங்கே உள்ளவர்கள் சென்றுவந்தவர்களும் அப்படியே  சொன்னவர்கள். இப்படியே தொழில்சாலை வேண்டாம் வீடு வேண்டாம் எதிர்த்து கொண்டிருந்தால் தமிழர்கள் வாழ்வதற்கு சிங்கள பிரதேசங்களுக்கு சென்று தான் குடியேறுவார்கள்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.