Jump to content

இங்கிலாந்திடமிருந்து இலங்கை கற்கவேண்டிய பாடம் என்ன?குமார் சங்கக்கார


Recommended Posts

2023 இல் இந்தியாவில்  இடம்பெறவுள்ள உலக கிண்ண போட்டிகளிற்காக தயாராகும் இலங்கை இங்கிலாந்து பயணித்த பாதையை பின்பற்றவேண்டும் எனகுமார் சங்கக்கார  தெரிவித்துள்ளார்

கல்ப்நியுசிற்கான தனது வாராந்த கட்டுரையில் குமார் சங்கக்கார  இதனை தெரிவித்துள்ளார்.

2015 உலக கிண்ணப்போட்டிகளில் ஏற்பட்ட அவமானத்தின் பின்னர் இங்கிலாந்து அணி கடந்துவந்துள்ள பாதை எதிர்காலத்திற்காக திட்டமிட விரும்பும் எந்த அணிக்கும் ஒரு சிறந்த பாடம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

2019 உலக கிண்ணத்தை வெல்வதற்கு தாங்கள் விளையாடவேண்டிய விதத்தையும் அதற்கான வீரர்களையும் இங்கிலாந்து அணியினர் இனம்கண்டுகொண்டனர் எனவும் குமார் சங்கக்கார  தெரிவித்துள்ளார்.

2023 இல் இந்தியாவில்  இடம்பெறவுள்ள உலக கிண்ண போட்டிகளிற்காக தயாராகும் இலங்கை இங்கிலாந்து பயணித்த பாதையை பின்பற்றவேண்டும் என குமார் சங்கக்கார  தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் போட்டிகள் இடம்பெறவுள்ளதால் சூழ்நிலைகள் ஆடுகளங்கள் எங்களிற்கு சாதகமாகயிருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ள அவர் இலங்கை அணியிடம் திறமையுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் மிகவும் அவதானமாக திட்டமிட்டு முக்கிய குழுவை முன்னரே உருவாக்கவேண்டும் எனவும்குமார் சங்கக்கார  தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தின் வெற்றி மோர்கனின் தலைமைத்துவத்திற்கு கிடைத்த வெற்றி எனவும் குமார் சங்ககார குறிப்பிட்டுள்ளார்.

அவர் வீரர்களிற்கு நம்பிக்கையை வழங்கினார் வீரர்கள் தங்களிற்கு உரிய பாணியில் விளையாட அனுமதி வழங்கினார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/60785

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்க‌ ஓய்வோடு இல‌ங்கை அணி இருந்த‌ இட‌ம் தெரியாம‌ போய் விட்ட‌து / 

இனி இல‌ங்கை அணி ப‌ழைய‌ நிலைக்கு வ‌ரும் என்ப‌து க‌ற்ப‌னையில் தான் /

அப்கானிஸ் தான் அணியில் ப‌ல‌ வீன‌ம் ம‌ட்டை , அதையும் அந்த‌ அணி ச‌ரி செய்தா , ஆசியாவில் மூன்றாவ‌து பெரிய‌ அணி என்ர‌ பெருமையை அந்த‌ அணி பெரும் 😁😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உலக கிண்ணத்தில் இங்கிலாந்து அணியில் விளையாடியவர்களில் 4,5 பேர் இந்த நாட்டை சாராதவர்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, ரதி said:

இந்த உலக கிண்ணத்தில் இங்கிலாந்து அணியில் விளையாடியவர்களில் 4,5 பேர் இந்த நாட்டை சாராதவர்கள் 

இதே இல‌ங்கை நாட்டில் , ப‌ளைய‌ சேர்ந்த‌ த‌மிழ் இளைஞ‌ன் ம‌லிங்காவுக்கு நிக‌ரா ப‌ந்து வீச‌க் கூடிய‌வ‌ர் , இல‌ங்கை அணியில் அந்த‌ திற‌மையான‌ வீர‌னுக்கு இட‌ம் கிடைச்ச‌தா 😠/


இங்லாந் திற‌மையான‌ வீர‌ர்க‌ளுக்கு அணியில் வாய்ப்பு குடுக்குது / இல‌ங்கை அப்ப‌டியா , அருவ‌ருக்க‌ த‌க்க‌ நாய‌ல் சிங்க‌ள‌ காட்டு மிராண்டிய‌ல் 😉😁 /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

இந்த உலக கிண்ணத்தில் இங்கிலாந்து அணியில் விளையாடியவர்களில் 4,5 பேர் இந்த நாட்டை சாராதவர்கள் 

ரோய் பிறந்தது தென்னாபிரிக்கா

ஸ்டோக் பிறந்தது நியூசிலாந்து

மொயினும் ரசீதும் கஸ்மீர் வம்சாவளி

ஆச்சர் பிறந்தது மேற்கிந்தியத் தீவில்

முத்தாய்ப்பாக இயன் மோர்கன் முன்பு அயர்லாந்து அணிக்கே விளையாடியவர்.

ஆனால் இத்தனை பேரும் இங்கிலாந்துக்கு விளையாட விரும்பி, சட்டபூர்வமாக ஐசிசி விதிகளுக்கு அமைய வதிவிட உரிமை பெற்று விளையாடினார்கள்.

அவர்களை, நிற, இன, மத, நாட்டுக் குரோதம் இன்றி திறைமை ஒன்றை மட்டுமே அடிப்படியாக கொண்டு விளையாடவும் அனுமதித்தார்கள்.

இலங்கையில் செத்தாலும் இந்த அணுகுமுறை வருமா? முஸ்லீமாக பிறந்த மொகமெட் டில்சானே, திலகரட்ன டில்சான் ஆகவேண்டிய நிலைமை.

நீங்களாவது, இங்கிலாந்தின் அணுகுமுறைய பின்பற்றுவதாவது.

சங்கா ஒரு அற்புதமான மனிதன். இனவெறி துளியும் இல்லாத மனிதன். ஆனால் இனவாதம்/ஊழல் புரையோடியுள்ள இலங்கை கிரிகெட் ஆளும் வர்கத்துக்கு இது செவிடன் காதில் 🐚

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த‌வ‌ர் என்று தான் அண்மையில் ர‌சித்தின் பாகிஸ்தான் நாட்ட‌வ‌ர்க‌ளுட‌ன் யூடுப்பில் ஒரு காணொளி பார்த்தேன் 😁😉

தென் ஆபிரிக்காவில் பிற‌ந்து இங்லாந் அணியில் இட‌ம் பிடிச்ச‌ வீர‌ர்க‌ள் அதிக‌ம் /

அதே போல‌ சிம்பாவே நாட்டில் பிற‌ந்தும் இங்லாந் அணியில் இட‌ம் பிடிச்ச‌ வீர‌ர்க‌ளும் இருக்கின‌ம் /

நாச‌மாய் போன‌ இல‌ங்கை அணியில் சிங்க‌ள‌ நாய‌லை த‌விற‌ வேர‌ ஆட்க‌ளுக்கு இட‌ம் இல்லை / 

முர‌ளித‌ர‌ன்
டில்ஷான் 
அருன‌ல்ட் த‌மிழும் சிங்க‌ள‌மும் க‌ல‌ந்த‌வ‌ர் 😁😉/
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரசீத் மீர்பூரி - பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருக்கும் கஸ்மீரின் மீர்பூர் இவர் பூர்வீகம். மொயினும் அதே.

தெஆவில் பிறந்த வீரர்கள் அநேகருக்கு, பீட்டர்சன், டிரொட், ஸ்டிரெளஸ், ரோய் ... ஏதாவது ஒரு பெற்றோர் இங்கிலாந்தவராக இருப்பார்கள். எனவே இலகுவில் யூகே வாழ்வுரிமை பெற முடிகிறது.

ஸ்டோக்ஸ் நியூசிலாந்து பெற்றாருக்கு நியுசிலாந்தில் பிறந்தாலும், அவர் தந்தை இங்கிலாந்தில் ரக்பி கோச் வேலை பார்த்த போதே, சிறு பிராயம் முதல் இங்கேயே தங்கிவிட்டவர்.

ஆச்சர் மே இ தீ அணிக்கு 19 வயதுக்கு கீழபட்ட அணியில் விளையாடியவர். இவருக்கும் ஒரு பெற்றார் யூகே சிற்றிசன்.

மோர்கன் இரெட்டை குடியுரிமை உள்ளவர்.

ஆர்னல்ட் இருபக்கமும் தமிழர் - பூர்வீகம் மானிப்பாய். கொழும்பு சென் பீற்றர்ஸ் பள்ளி அணியை 94 இல் தலைமைதாங்கி ஜனாதிபதி கிண்ணத்தை வென்றவர். தெகிவளை பிரெசர் அவனிவுவில் அப்போது வசித்தர். அதே வீதியின் முடிவிலுள்ள மைதானத்தில் நானும் அவருடன் மென்பந்து ஆட்டம் ( சின்ன பையனாக) ஆடியுள்ளேன்.

ரவீந்திர புஸ்பகுமார, தாய் தமிழ், தந்தை சிங்களம்.

அஞ்செலோ மத்யூஸ்- தாய் சிங்களம், தந்தை தமிழ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி மேல் கொஞ்சம்,கொஞ்சமாய்  இலங்கையணியிலும் மாற்றம் வரும் என்று நம்புறன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

இனி மேல் கொஞ்சம்,கொஞ்சமாய்  இலங்கையணியிலும் மாற்றம் வரும் என்று நம்புறன் 

என்ன மாதிரியான மாற்றங்கள் வரும்.?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ஈழப்பிரியன் said:

என்ன மாதிரியான மாற்றங்கள் வரும்.?

திற‌மையான‌ த‌மிழ் வீர‌ர்க‌ளை ஓர‌ம் க‌ட்டி விட்டு , கிரிக்கெட் விளையாட‌ தெரியா முர‌ட்டு சிங்க‌ள‌ பாட‌சாலை ப‌ஸ்ச‌ங்க‌ளை ம‌னைதான‌த்துக்கை விடுவாங்க‌ள் , இது தான் அவா சொல்லுர‌ மாற்ற‌ம் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா 😁😉 /

 

Link to comment
Share on other sites

23 hours ago, goshan_che said:

 

ஆர்னல்ட் இருபக்கமும் தமிழர் - பூர்வீகம் மானிப்பாய். கொழும்பு சென் பீற்றர்ஸ் பள்ளி அணியை 94 இல் தலைமைதாங்கி ஜனாதிபதி கிண்ணத்தை வென்றவர். தெகிவளை பிரெசர் அவனிவுவில் அப்போது வசித்தர். அதே வீதியின் முடிவிலுள்ள மைதானத்தில் நானும் அவருடன் மென்பந்து ஆட்டம் ( சின்ன பையனாக) ஆடியுள்ளேன்.

ரவீந்திர புஸ்பகுமார, தாய் தமிழ், தந்தை சிங்களம்.

 

கோசான் நாங்கள் மிக நெருக்கமாக இருந்திருக்கிறோம் ஒருவரை ஒருவர் அறியாமல். தெகிவளை நூலகத்தின் பின்பகுதியில் பிறேசர் மைதானத்தில் நான் விளையாடி இருக்கிறேன். 6 அடித்தால் ரசல் வீட்டுக்குள் தான் போய்விழும். மாலை நேரங்களில் பொம்மேரியன் நாய்க்குட்டியுடன் உலாவருவார் (சில நேரங்களில் அவரின் மனைவியும் கூட). நான் சமனை சந்திக்க அடிக்கடி வருவதுண்டு.

ரவீந்திர புஸ்பகுமார சொய்சாபுர தொடர்மாடியில் தான் குடியிருந்தவர், அவரையும் அடிக்கடி நான் வீதியில் பார்ப்பதுண்டு.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

திற‌மையான‌ த‌மிழ் வீர‌ர்க‌ளை ஓர‌ம் க‌ட்டி விட்டு , கிரிக்கெட் விளையாட‌ தெரியா முர‌ட்டு சிங்க‌ள‌ பாட‌சாலை ப‌ஸ்ச‌ங்க‌ளை ம‌னைதான‌த்துக்கை விடுவாங்க‌ள் , இது தான் அவா சொல்லுர‌ மாற்ற‌ம் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா 😁😉 /

 

பணக்காரர்களாகவும் மந்திரிகளின் உறவும் தேவை பையா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஈழப்பிரியன் said:

பணக்காரர்களாகவும் மந்திரிகளின் உறவும் தேவை பையா.

இல‌ங்கை கிரிக்கெட்டில் அர‌சிய‌ல் விளையாடுவ‌து ப‌ல‌ருக்கு தெரிந்து இருந்தாலும் , தெரியாது போல் ந‌டிப்பார்க‌ள் /

இப்ப‌ இல‌ங்கை அணியில் விளையாடும் வீர‌ர்க‌ளை விட‌ ப‌ல‌ த‌மிழ் வீர‌ர்க‌ள் ந‌ல்லா விளையாடி திற‌மையை நிருபித்தும் அவ‌ர்க‌ளுக்கு அணியில் இட‌ம் இல்லை ,

இப்ப‌ இல‌ங்கை அணியில் இருக்கும் சிங்க‌ள‌ வீர‌ர்க‌ள் ப‌ல்லு இல்லாத‌ பாம்புக‌ள் 😁😉 /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, பகலவன் said:

கோசான் நாங்கள் மிக நெருக்கமாக இருந்திருக்கிறோம் ஒருவரை ஒருவர் அறியாமல். தெகிவளை நூலகத்தின் பின்பகுதியில் பிறேசர் மைதானத்தில் நான் விளையாடி இருக்கிறேன். 6 அடித்தால் ரசல் வீட்டுக்குள் தான் போய்விழும். மாலை நேரங்களில் பொம்மேரியன் நாய்க்குட்டியுடன் உலாவருவார் (சில நேரங்களில் அவரின் மனைவியும் கூட). நான் சமனை சந்திக்க அடிக்கடி வருவதுண்டு.

ரவீந்திர புஸ்பகுமார சொய்சாபுர தொடர்மாடியில் தான் குடியிருந்தவர், அவரையும் அடிக்கடி நான் வீதியில் பார்ப்பதுண்டு.

 

உண்மைதான் அண்ணா. சிலசமயம் உங்களை நேரில் கண்டால் அடையாளம் தெரியவும் கூடும்.

ஆர்னோல்ட் நேசனல் அணிக்கு ஆடத்தொடங்கிய சமயத்தில் நான் ப்ரேசர் கிரவுண்டுக்கு போறது குறைந்து விட்டது.

சொய்சாபுரவின் நடுவில் இருக்கும் சிறிய புல்வெளியிலும் விளையாடியுள்ளேன். ஆனா புஸ்பகுமார அங்கு இருந்த விடயம் தெரியாது. மஹேலவுடன் அணியில் இடம்பெற போட்டியிட்ட அவிஸ்க குணவர்தன அண்டெர்சன் தொடர்மாடியில் வசித்தார்.

ரசள் ஆர்னோல்டின் தமையன் யூகேயில்தான் வசிக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, பையன்26 said:

இல‌ங்கை கிரிக்கெட்டில் அர‌சிய‌ல் விளையாடுவ‌து ப‌ல‌ருக்கு தெரிந்து இருந்தாலும் , தெரியாது போல் ந‌டிப்பார்க‌ள் /

இப்ப‌ இல‌ங்கை அணியில் விளையாடும் வீர‌ர்க‌ளை விட‌ ப‌ல‌ த‌மிழ் வீர‌ர்க‌ள் ந‌ல்லா விளையாடி திற‌மையை நிருபித்தும் அவ‌ர்க‌ளுக்கு அணியில் இட‌ம் இல்லை ,

இப்ப‌ இல‌ங்கை அணியில் இருக்கும் சிங்க‌ள‌ வீர‌ர்க‌ள் ப‌ல்லு இல்லாத‌ பாம்புக‌ள் 😁😉 /

இதை நீங்கள் மேலோட்டமாக பாக்கிறீர்கள். இலங்கையில் இபோதெல்லாம் 40 பேர் குழாமில், 20 பேர் குழாமில் சில தமிழ் தலைகள் தென்படும். ஆனால் 15 க்குள் வர மாட்டார்கள். 

உண்மையை சொல்லப் போனால் 15க்குள் வரும் தகுதி எம் வீரர்களுக்கு இல்லை என்பதே உண்மை. ஆனால் திறமை இல்லாமல் இல்லை. வடகிழக்கில் இருக்கும் ஒரே டேர்வ் பிட்ச் யாழ் சம்பத்தரிசியர் பிட்ச் மட்டுமே. மிகுதி எல்லா பாடசாலைகளும் மெட்டின் விரித்தே ஆடுவர். இந்த இரு ஆட்டங்களுக்கும் பாரிய வேறுபாடு. 

யாழின் பல புகழ்பெற்ற கிரிகெட் ஆட்டக்காரர் எல்லாம் கொழுப்பில் சோபிக்க முடியாமல் போனதுண்டு. 

இப்போது கொழும்பில் உள்ளதை போல வசதிகள் எம்மண்ணில் வருமோ அப்போது தகுந்த திறைமை மட்டுமல்ல, தகுதியும் எம் வீரர்களுக்கு வரும். இலங்கையில் மாகாண மட்டத்தில் 1ஸ்ட் கிளாஸ் கிரிகெட் அணிகளை நிறுவி, ஒவ்வொறு மாகாணத்துக்கும் ஒரு அணியை அமைத்து, வளங்களை பகிர்ந்து போட்டிகளை  நடத்தும் போது, எம்மில் இருந்தும் திறைமையானவர்கள் வருவார்கள். ஆனால் இதை ஒரு போதும் இனவாதம் செய்யவிடாது.

1ஸ்ட் கிளாஸ் கிரிகெட்டை கொழும்பு, கண்டி, குருநாகல, களுத்துறை, காலி மாவட்டத்தில் உள்ள அணிகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தி, எமது பிரதேசத்தில் ஒரு வலுவான கிரிகெட் கட்டமைப்பே இல்லாமல் பார்த்துகொண்டால் -எந்த திறைமையான வீரனையும் 40க்குள் எடுத்துவிட்டு, 15க்குள் வர தகுதியில்லை என இலகுவில் கழித்துவிடலாம்.

தமிழ்நாட்டில் பிராமணர்கள் செய்வதும் இதைதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, goshan_che said:

இதை நீங்கள் மேலோட்டமாக பாக்கிறீர்கள். இலங்கையில் இபோதெல்லாம் 40 பேர் குழாமில், 20 பேர் குழாமில் சில தமிழ் தலைகள் தென்படும். ஆனால் 15 க்குள் வர மாட்டார்கள். 

உண்மையை சொல்லப் போனால் 15க்குள் வரும் தகுதி எம் வீரர்களுக்கு இல்லை என்பதே உண்மை. ஆனால் திறமை இல்லாமல் இல்லை. வடகிழக்கில் இருக்கும் ஒரே டேர்வ் பிட்ச் யாழ் சம்பத்தரிசியர் பிட்ச் மட்டுமே. மிகுதி எல்லா பாடசாலைகளும் மெட்டின் விரித்தே ஆடுவர். இந்த இரு ஆட்டங்களுக்கும் பாரிய வேறுபாடு. 

யாழின் பல புகழ்பெற்ற கிரிகெட் ஆட்டக்காரர் எல்லாம் கொழுப்பில் சோபிக்க முடியாமல் போனதுண்டு. 

இப்போது கொழும்பில் உள்ளதை போல வசதிகள் எம்மண்ணில் வருமோ அப்போது தகுந்த திறைமை மட்டுமல்ல, தகுதியும் எம் வீரர்களுக்கு வரும். இலங்கையில் மாகாண மட்டத்தில் 1ஸ்ட் கிளாஸ் கிரிகெட் அணிகளை நிறுவி, ஒவ்வொறு மாகாணத்துக்கும் ஒரு அணியை அமைத்து, வளங்களை பகிர்ந்து போட்டிகளை  நடத்தும் போது, எம்மில் இருந்தும் திறைமையானவர்கள் வருவார்கள். ஆனால் இதை ஒரு போதும் இனவாதம் செய்யவிடாது.

1ஸ்ட் கிளாஸ் கிரிகெட்டை கொழும்பு, கண்டி, குருநாகல, களுத்துறை, காலி மாவட்டத்தில் உள்ள அணிகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தி, எமது பிரதேசத்தில் ஒரு வலுவான கிரிகெட் கட்டமைப்பே இல்லாமல் பார்த்துகொண்டால் -எந்த திறைமையான வீரனையும் 40க்குள் எடுத்துவிட்டு, 15க்குள் வர தகுதியில்லை என இலகுவில் கழித்துவிடலாம்.

தமிழ்நாட்டில் பிராமணர்கள் செய்வதும் இதைதான்.

http://www.mathisutha.com/2019/07/tamileelam-cricket.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த போட்டியில் பங்கு பற்றியவர்கள் எல்லோரும் மேலே ஏராளன் இணைத்த கட்டுரையை ஒருதரம் படியுங்கள்.

ஏழு மாவட்டத்திலும் ஏழு ரேப்வ் மைதானம், ஏழு அணிகள் - ஒரு 1ம் தர போட்டி - எம்மால் உருவாக்க முடியாதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, goshan_che said:

இந்த போட்டியில் பங்கு பற்றியவர்கள் எல்லோரும் மேலே ஏராளன் இணைத்த கட்டுரையை ஒருதரம் படியுங்கள்.

ஏழு மாவட்டத்திலும் ஏழு ரேப்வ் மைதானம், ஏழு அணிகள் - ஒரு 1ம் தர போட்டி - எம்மால் உருவாக்க முடியாதா?

நான் வாசித்து என‌து க‌ருத்தையும் ப‌திவுட்டுள்ளேன் அந்த‌ திரியில் 😁😉 /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்தில் மாகாணங்கள்  (county) மட்டத்தில் U15 அணிக்காக ஒரு சில தமிழ் பிள்ளைகள் விளையாடிகினம். நானறிந்த மூன்று நாலு பேர் துவக்க ஆட்ட காரர்கள். இங்கிலாந்து கிரிக்கெட் சபை திறமைக்கு முதலிடம் கொடுக்கிறது.
http://buckscb.play-cricket.com/website/player_stats_widget/batting_stats/4178855?from=results&result_id=3737572&rule_type_id=179
http://ecbu15cup.play-cricket.com/website/player_stats_widget/batting_stats/3820213?from=results&result_id=3737599&rule_type_id=179
http://ecbu15cup.play-cricket.com/website/player_stats_widget/bowling_stats/4441974?from=results&result_id=3737586&rule_type_id=179
http://ecbu15cup.play-cricket.com/website/player_stats_widget/batting_stats/4092824?from=results&result_id=3737688&rule_type_id=179

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பையன்26 said:

நான் வாசித்து என‌து க‌ருத்தையும் ப‌திவுட்டுள்ளேன் அந்த‌ திரியில் 😁😉 /

எங்கே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

எங்கே?

விளையாட்டு திட‌லுக்கை போய் பாருங்கோ பிரோ / ஏராள‌ன் அங்கையும் இந்த‌ ப‌திவை இணைத்துள்ளார் 😁😉 /

Link to comment
Share on other sites

3 hours ago, goshan_che said:

 

சொய்சாபுரவின் நடுவில் இருக்கும் சிறிய புல்வெளியிலும் விளையாடியுள்ளேன். ஆனா புஸ்பகுமார அங்கு இருந்த விடயம் தெரியாது. மஹேலவுடன் அணியில் இடம்பெற போட்டியிட்ட அவிஸ்க குணவர்தன அண்டெர்சன் தொடர்மாடியில் வசித்தார்.

விளையாட்டு சம்பந்தமான திரியில் வேறு கதைக்க விரும்பவில்லை. நாங்கள் அடிக்கடி வீடியோ கடையடி சொய்சாபுர சலூன் அந்த  பெரிய புத்தர் சிலையடி, மைதானத்தின் பி புளக் பக்கம் இருக்கும் மரத்தடியில் தான் இருந்து கதைப்போம். கட்டாயம் உங்களை தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. அது ஒரு காலம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பதவி என்பது தோளில் கிடக்கும் துண்டு போல... மானம் என்பது இடுப்பில் கட்டியிருக்கும் வேட்டி போல." வேட்டி எப்பொழுதும் இடுப்பில் தான் கட்டலாம். வேண்டும் என்றால் உயர்த்தி கட்டலாம், மடித்து கட்டலாம் அல்லது கால் சட்டை போல் கட்டலாம் [கோவணம் /nஅரைக்கச்சை மாதிரி ]. எப்படியாயினும் அது இடுப்பின் கீழ் பகுதியை மறைத்து தான் கட்டப்படுகிறது. ஆகவே பொதுவாக மானம் காக்க என அதை கூறலாம். இடுப்பில் கட்டும் துணியான வேட்டியில் இருந்தது தான் "புடைவை, புடவை, அல்லது சேலை" வளர்ச்சி பெற்றது என சரித்திரம் கூறுகிறது . அதாவது பண்டைய காலத்தில் பெண்களும் இடுப்பை சுற்றி துண்டு ஒன்றை தான் கட்டினார்கள். தமது மானத்தை காக்க. உதாரணமாக நக்கீரர், புறநானுறு 189 இல்  "உண்பது நாழி, உடுப்பவையிரண்டே"  என கூறுகிறார். சால்வையை அல்லது மேல் துண்டை எடுத்து கொண்டால், அதை இடுப்பில் அணியும் வார் மாதிரி இடுப்பில் கட்டலாம், தோளில் போடலாம் அல்லது தலையில் தலைப்பாவாக [கிரீடம் மாதிரி] போடலாம். ஆகவே மேல் துண்டு பல விதமான பாவனையில் உள்ளது என்பது தெளிவாகிறது. இந்த பாவனை தான் பதவியைக்  காட்டுகிறது. ஒருவன் உயர்ந்த பதவியில் இருப்பவரிடம் போகும் போது அல்லது அப்படி பட்டவரை சந்திக்கும் போது மேல் துண்டை இடுப்பில் கட்டும் பழக்கம் இருந்துள்ளது. இப்பவும் இருக்கிறது. உதாரணமாக ஆலயத்திற்குள் போகும் போது நம்மவர்கள் இடுப்பில் சால்வை கட்டுவது அதன் தொடர்ச்சியே. அரசனை ஆண்டவனாய் கருதியவர்கள் நம் முன்னோர்கள். "நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே; மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;அதனால், யான்உயிர் என்பது அறிகை வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே. -புறநானுறு 186"  அரண்மனைக்குள் போகும் போது இடுப்பில் கட்டும் பழக்கம் அன்று தோன்றியது. அது உயர்ந்த பதவியில் இருப்பவரை,அரசனை மதிப்பதாக கருதப்பட்டது. குடும்ப விழாக்களில் எல்லோரும் தோளில் மேல் துண்டை போட்டபடி சாதாரணமாக பழகுவார்கள். காரணம் எல்லோரும் குடும்பத்திற்குள் சம பதவி என்பதே அதன் பொருள். என்றாலும் ஒரு வைபவத்தில் ஒருவர் தேங்காய் உடைத்து ஆரம்பிக்கும் போது, அந்த இடத்தில் அவர் ஒரு கௌரவ பதவி ஒன்றை பெறுவதால் , அந்த மேல் துண்டு தலையில் இடம் பிடிக்கிறது - ஒரு கிரீடம் போல். இதனால் தான் மேல் துண்டை பதவிக்கு உதாரணமாக கருதப்பட்டுகிறது போலும் - அதன் இடத்தை பொறுத்து பதவி அமைவதால். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]        
    • க‌ன‌டாவில் உணவு பொருட்க‌ளிலிருந்து எல்லாம் ச‌ரியான‌ விலை என்று கேள்வி ப‌ட்டேன் பொற்ரோல் விலையும் கூடினால்  ம‌க்க‌ளுக்கு இன்னும் சிர‌ம‌ம்.............................  
    • "பதவி உங்களுக்குப் பெருமை தருவதை விட நீங்கள் தான் அதைப் பெருமை படுத்த வேண்டும்." புறநானுறு 75. அரச பாரம்! [படியவர்: சோழன் நலங்கிள்ளி] "மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப் பால்தர வந்த பழவிறல் தாயம் எய்தினம் ஆயின், எய்தினம் சிறப்புஎனக் குடிபுரவு இரக்கும் கூரில் ஆண்மைச் 5 சிறியோன் பெறின்அது சிறந்தன்று மன்னே! மண்டுஅமர்ப் பரிக்கும் மதனுடை நோன்தாள் விழுமியோன் பெறுகுவன் ஆயின், ஆழ்நீர் அறுகய மருங்கின் சிறுகோல் வெண்கிடை என்றூழ் வாடுவறல் போல நன்றும் 10 நொய்தால் அம்ம தானே; மையற்று விசும்புஉற ஓங்கிய வெண்குடை முரசுகெழு வேந்தர் அரசுகெழு திருவே," பாடலின் பின்னணி: ஒரு சமயம் நலங்கிள்ளி தன் அரசவை அறிஞர்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருந்த பொழுது எத்தகைய அரசு முறை சிறந்தது என்பது பற்றிப் பேச்செழுந்தது. “பரம்பரை பரம்பரையாக மூத்தோர் இறக்க அதற்கு அடுத்து உள்ள இளையோர் அரசுரிமைப் பெற்று பதவி ஏற்க , பதவி பெறுவது ஒன்றும் பெருமை இல்லை . அது யார் கைக்கு வருகிறது என்பதை பொறுத்து தான் அந்த பதவிக்கே மரியாதை / பெருமை வருகிறது . ஆட்சித் திறனின்றி மக்களுக்கு வரிச் சுமையை அதிகமாக்கும் சிறியோனின் கைகளில் சேர்ந்தால் அது நலிவு அடைகிறது . ஆண்மையும் தகுதியும் உடையவன் கையில் வந்தால் அது பொலிவு பெறுகிறது " என்று தன் கருத்தை இப்பாடலில் நலங்கிள்ளி கூறுகிறான். "ஒரேயடியாக உச்சிக்குப் போய் விட வேண்டு மென்று முயற்சி தான் உலகின் பெரும் துன்பங்களுக்குக் காரணமாக அமைகிறது" உச்சிக்குப் போவது அவ்வளவு பெரிதான விடயம் அல்ல ! தொடர்ந்து முயற்சிக்கும் எவருமே உச்சிக்கு ஒரு நாள் போய்விட முடியும். ஆனால் கடினமானது எதுவென்றால், உச்சியிலே தொடர்ந்து இருக்க முயல்வது தான்! இந்த ஒரு கருத்தை நகைச்சுவையோடு தன்னுடைய புத்தகத்தில் "ஜான் மாக்ஸ்வெல்" சொல்லியிருப்ப தாகப் படித்துள்ளேன் அவர் சொல்லும் கதை இது. ஒரு நாள் ஒரு காட்டு வான்கோழியும், எருதும் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தன. எதிரே தெரிந்த உயரமான மரத்தை ஏக்கத்துடன் பார்த்துப் பெருமூச்சு விட்டுக் கொண்டே வான்கோழி சொன்னது: "அந்த மரத்தின் உச்சிக்குப் போய்விட வேண்டும் என்ற ஆசை எனக்கிருக்கிறது! ஆனால் அதற்குத் தேவையான சக்தியோ, சத்தோ என்னிடம் இல்லை." எருது சொன்னதாம்! "என்னுடைய சாணியை கொஞ்சம் சாப்பிட்டுத் தான் பாரேன்! அதில் ஏகப்பட்ட சத்து இருக்கிறது!" வான்கோழியும், நம்பிக்கையோடு சாணியைச் சாப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்ததாம்! எருது சொன்ன மாதிரியே அது ஊட்டச்சத்து மிகுந்ததாகத் தான் இருந்தது. மரத்தின் அடிவாரம் வரை போகக் கூடிய தெம்பு வந்து விட்டது. மறுநாள், இன்னும் கொஞ்சம் சாணியைச் சாப்பிட மரத்தின் கீழ்க் கிளை வரை போக முடிந்தது. அடுத்தநாள், அதற்கும் அடுத்த நாள் என்று சாணியைச் சாப்பிட்டு, நான்காவது நாள் ஒருவழியாக மரத்தின் உச்சிக் கிளைக்குப் போய் உட்கார முடிந்தது. உச்சிக்குப்போய் உட்கார்ந்த பெருமிதத்தோடு வான்கோழி சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே சந்தோஷத்தில் குரல் எழுப்பியதாம்!  காட்டில் வேட்டையாட வந்த ஒருவன் கண்ணில் பட, துப்பாக்கியால் சுட்டானாம்.. வான் கோழி பணால்! உயரத்திலேயிருந்து, ஒரே தோட்டாவில் கீழே வந்தாயிற்று! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]  
    • எல்லாம் ப‌ண‌த்துக்காக‌ தான் ஈழ‌ ம‌ண்ணில் சிங்க‌ள‌ ராணுவ‌ம் நாட்டு ப‌ற்றினால் போர் புரிந்த‌வையா இல்ல‌வே இல்லை எல்லாம் காசுக்காக‌ ஈழ‌ ம‌ண்ணில் வ‌ந்து ப‌ல‌ ஆயிர‌ம் சிங்க‌ள‌ இராணுவ‌ம் ப‌லி ஆனார்க‌ள்.........................   ர‌ஸ்சியா விவ‌கார‌த்தில் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ள் ர‌ஸ்சியா போகாம‌ல் இருப்ப‌து ந‌ல்ல‌ம்......................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.