Jump to content

பிரிட்டனின் எண்ணெய் கப்பலை கைப்பற்றியது ஈரான்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டனின் எண்ணெய் கப்பலை கைப்பற்றியது ஈரான்

 

பிரிட்டனிலும் லைபீரியாவிலும் பதிவு செய்யப்பட்ட இரு எண்ணெய் கப்பல்களை ஈரான் கைப்பற்றியுள்ளதை தொடர்ந்து வளைகுடாவில் பதற்றநிலை அதிகரித்துள்ளது.

பிரிட்டனில் பதிவு செய்யப்பட்ட பிரிட்டிஸ் கொடியுடன் காணப்பட்ட ஸ்டெனா இம்பெரோ என்ற எண்ணெய் கப்பலை 23 மாலுமிகளுடன் கைப்பற்றியுள்ள ஈரான் குறிப்பிட்ட கப்பல் கடல்சார் விதிமுறைகளை மீறியுள்ளது என குறிப்பிட்டுள்ளது.

குறிப்பிட்ட கப்பலை ஈரானிய கடற்படையினர் பன்டர் அபாஸ் துறைமுகத்திற்கு எடுத்துசென்றுள்ளனர் என தெரிவித்துள்ள  ஈரானிய செய்திச்சேவையொன்று மாலுமிகள் கப்பலிலேயே உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.

ஈரானின் மீன்பிடிப்படகொன்றுடன் இடம்பெற்ற விபத்தை தொடர்ந்தே குறிப்பிட்ட கப்பல் கைப்பற்றப்பட்டது என ஈரானிய செய்திச்சேவை தெரிவித்துள்ளது.

இதேவேளை ஹார்முஸ் ஜலசந்திப்பகுதியில் கப்பலை சிறிய படகுகளும் ஹெலிக்கொப்டரும் சுற்றி வளைத்ததாக கப்பலின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச கடற்பரப்பில் இந்த சம்பவம் இடம்பெற்றதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை லைபீரிய கொடியுடன் காணப்பட்ட பிரிட்டனில் இருந்து இயங்கிய மற்றொரு எண்ணெயக்கப்பலையும் ஈரான் கைப்பற்றியுள்ளதாக தகவலகள் வெளியாகியுள்ளன.

britan_iol_tanker_july_20.jpg

மெஸ்டர் என்ற இந்த கப்பலை சிறிது நேரம் தடுத்து வைத்திருந்துவிட்டு பின்னர் அதனை ஈரானிய அதிகாரிகள் விடுவித்துள்ளனர் என அந்தநாட்டின் செய்திச்சேவையொன்று தெரிவித்துள்ளது.

 

https://www.virakesari.lk/article/60815

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈரானைப் பொறுத்த வரை ட்ரம்பின் வாலைப் பிடித்துக் கொண்டு பிரிட்டன் தனக்குத் தானே ஆப்பு வைத்துக் கொள்கிறது என்று தான் கருதுகிறேன். சில நாட்கள் முன்பு ஜிப்ரால்ரரில் ஒரு ஈரானிய எண்ணைக் கப்பலை பிரிட்டன் கைப்பற்றியது. அதற்குப் பேரம் பேச வசமாக இதைப் பிடித்திருக்கிறார்கள். இனி வாலைக் குழைத்துக் கொண்டு ஈரானுடன் பேச வேண்டியது தான். குச்சொழுங்கை மாதிரி இருக்கும் ஹொர்முஸ் நீரிணை ஊடாகத் தான் மேற்கிற்கு ஒரு பகுதி எண்ணை கப்பலில் வரவேண்டும் என்று தெரிந்து கொண்டும் பிரிட்டன் என்ன நோக்கத்தில் ஈரானுடன் முரண்பட நினைக்கிறது என விளங்கவில்லை! 

Link to comment
Share on other sites

à®à®°à®¾à®©à¯

உலகம் முழுதாக மசகு எண்ணெய் விலை கூட அதிகரிக்கலாம். இதை ட்ரம்ப் விரும்பமாட்டார் .

ஈரான் மீது கைவைக்க பயமும் உள்ளது. 

இதில் சவூதியை முடிச்சுவிட மேற்குலகம் விரும்பலாம். 

 

சௌதிக்கு படை அனுப்பும் அமெரிக்கா: இரானுக்கு பதிலடி

அதிகரித்து வரும் அச்சுறுத்தலில் இருந்து அமெரிக்காவின் நலன்களை பாதுகாத்து கொள்வதற்காக அமெரிக்க படைப்பிரிவுகள் சௌதி அரேபியாவுக்கு அனுப்பப்பட்டு வருவதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

வளைகுடா கப்பல் போக்குவரத்து பாதைகளில் பாதுகாப்பு தொடர்பாக இரானோடு அதிகரித்து வருகின்ற பதற்றங்களின் மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிரதேச பாதுகாப்பையும், நிரந்தரத்தையும் உறுதிப்படுத்தி கொள்வதற்கான இந்த நடவடிக்கைக்கு சல்மான் அரசர் அனுமதி வழங்கியுள்ளதை சௌதி அரேபியா உறுதி செய்துள்ளது.

இராக் போர் முடிந்த பின்னர் அமெரிக்க படைகள் வெளியேறிய 2003ம் ஆண்டிலிருந்து அமெரிக்க படைப்பிரிவுகள் சௌதி அரேபியாவில் கால்பதிக்கவில்லை.

இராக் குவைத் நாட்டை ஆக்கிரமித்தபோது, 1991ம் ஆண்டு 'பாலைவன புயல்' நடவடிக்கையோடு சௌதி அரேபியாவில் அமெரிக்க படைகள் தங்க தொடங்கியது.

பிபிசியின் வட அமெரிக்க செய்தியாளர் பீட்டர் பௌவ்ஸ் இது பற்றி தெரிவிக்கையில், "சௌதி அரேபியாவிலுள்ள பிரின்ஸ் சுல்தான் விமான தளத்தில் 500 சிப்பாய்களை அனுப்பி, பேட்ரியாட் வான்வழி தாக்குதல் தடுப்பு அமைப்பை அமெரிக்கா நிறுவ இருப்பதாக தெரிகிறது" என்கிறார்.

 

"அமெரிக்க படைப்பிரிவை சௌதி அரேபியாவுக்கு வழங்குவது, கூடுதல் தடுப்பு நடவடிக்கையாக இருக்கும். அந்த பகுதியில் இருந்து எழுகின்ற அச்சுறுத்தல்களில் எமது படைப்பிரிவுகளின் மற்றும் பிரதேச நலன்களை தற்காத்து கொள்ளும் திறன்களை உறுதி செய்வதாகவும் இது அமையும் என்று அமெரிக்க தளபதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

2015 அணுசக்தி ஒப்பந்தம்

2015-ல் இரானுடன் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜெர்மனி, ஃபிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகியவை ஒரு ஒப்பந்தத்தை எட்டின. இரான் மீதான தடைகளை நீக்குவதற்கு கைமாறாக இரான் தனது அணுசக்தி திட்டத்தில் சில குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே அந்த ஒப்பந்தம்.

தங்களுக்கு சாதகமாக இல்லை என்று கூறி, டொனால்டு டிரம்ப் அதிபரான பின், இரான் அணு ஒப்பந்தத்தில் இருந்து 2018ஆம் ஆண்டு அமெரிக்கா விலகியது. அதனை தொடர்ந்து இரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதித்தது அமெரிக்கா.

இரான் வான்பரப்பின் இறையாண்மையை மீறிவிட்டதாக கூறி, கடந்த மாதம் ஹோர்முஸ் நீரிணையின் மேல் பறந்த அமெரிக்க கண்காணிப்பு ஆளில்லா விமானத்தை இரான் சுட்டு வீழ்த்தியது.

ஆனால், இந்த ஆளில்லா விமானம் சுடப்பட்டபோது, சர்வதேச கடல் பரப்பில்தான் இருந்தது என்று அமெரிக்கா கூறியது. இரானின் இந்த நடவடிக்கை கோபமூட்டும் செயல் என்று அமெரிக்கா கண்டித்திருந்தது.

12 பேருடன் பனாமா நாட்டு கொடியை தாங்கி பயணம் மேற்கொண்ட எண்ணெய் கப்பலை விடுவிக்க வேண்டுமெனவும் அமெரிக்கா கேட்டு கொண்டுள்ளது.

கடற்படை ரோந்து நேரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரானிய படையால் தடுக்கப்பட்ட இந்த எண்ணெய் கப்பல் எரிபொருள் கடத்தியதாக இரான் தெரிவித்துள்ளது.

மிகவும் நெருங்கி வந்த இரானின் ஆளில்லா விமானத்தை அமெரிக்க போர்க்கப்பல் சுட்டு வீழ்த்தியதாக வியாழக்கிழமை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.

ஆனால், தங்களின் ஆளில்லா விமானத்தை இழந்ததை இரான் மறுத்துள்ளது.

https://www.bbc.com/tamil/global-49057397

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.