Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கம் கடன் முகாமைத்துவ விவகாரத்தில் தோல்வியடைந்துள்ளதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் கப்பரால் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

மீட்க முடியாத அளவிற்கு நாடு அபாய நிலைமையை நோக்கி நகர்ந்து செல்கின்றது.

வெகு விரைவில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால் நாடு பாரிய கடன் பொறியில் சிக்குவதனை தவிர்க்க முடியாது.

கடந்த 2014ம் ஆண்டு இலங்கையின் கடன் தொகை 7 ட்ரில்லியன் ரூபாவாக காணப்பட்டதாகவும் தற்பொழுது 13 ட்ரில்லியன் ரூபாவாக உயர்வடைந்துள்ளது.

நாட்டை மீளக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் கடன் முகாமைத்துவத்தை சீரிய முறையில் மேற்கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

https://www.tamilwin.com/community/01/220933?ref=home-top-trending

Link to comment
Share on other sites

5 hours ago, பெருமாள் said:

கடந்த 2014ம் ஆண்டு இலங்கையின் கடன் தொகை 7 ட்ரில்லியன் ரூபாவாக காணப்பட்டதாகவும் தற்பொழுது 13 ட்ரில்லியன் ரூபாவாக உயர்வடைந்துள்ளது.

சாண்  என்ன முழம் என்ன !

இலங்கையில் பௌத்தம் மட்டும் இருக்கவேண்டும், 
சிங்களம் மட்டும் பேசப்படல் வேண்டும்,
சிறுபான்மை இனமக்கள் அழிக்கப்படல் வேண்டும்,
ஒற்றையாட்சி மட்டும் நீடிக்க வேண்டும்  

இதற்காக எவ்வளமும் கடன் படலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

கடந்த 2014ம் ஆண்டு இலங்கையின் கடன் தொகை 7 ட்ரில்லியன் ரூபாவாக காணப்பட்டதாகவும் தற்பொழுது 13 ட்ரில்லியன் ரூபாவாக உயர்வடைந்துள்ளது.

அமெரிக்காவே இவ்வளவு கடன் தான் வைத்திருக்கு அதுவும் டாலரில்.
அதைப்பற்றி எவனும் பேசுறானில்லை.
நம்ம கடனைப்பற்றியே பேசுகிறான்.

இப்படிக்கு

இலங்கை.

Link to comment
Share on other sites

6 hours ago, பெருமாள் said:

கடந்த 2014ம் ஆண்டு இலங்கையின் கடன் தொகை 7 ட்ரில்லியன் ரூபாவாக காணப்பட்டதாகவும் தற்பொழுது 13 ட்ரில்லியன் ரூபாவாக உயர்வடைந்துள்ளது.

இவனுகள் சொல்றதை நம்ப முடியுமோ?
யார் அதிக கடன் வாங்கினவை என்டு எல்லாருக்கும் தெரியும் தானே!

2014 இல் 11 ட்ரில்லியன் ரூபாவாக காணப்பட்டதாகவும் தற்பொழுது 13 ட்ரில்லியன் ரூபாவாக உயர்வடைந்துள்ளது என்றால் ஓரளவு நம்பலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மறைந்த அற்புதன் தினமுரசு பத்திரிகையில் இந்திய தேர்தல் ஒன்றில் கணிப்பீடுகளை துல்லியமாக தினமுரசுவில் அறிவித்து இருந்தார் தேர்தல் முடிந்தபின் ஒரு வாசகர் கேள்வி கேட்கிறார் எப்படி உங்களால் இவ்வளவு துல்லியமாக நான்கு மாதம்களுக்கு முன்பே சொல்ல முடிந்தது பதில் எனக்கு பிடிக்காதா ஆட்களின் வெற்றி தோல்வி நிலவரம்களை வெளியில் நின்று அலசி ஆராய்ந்து முடிவுகளை அறிவித்தன் அதாவது பிடிக்காத  ஆளை வெல்லும் உண்மையான சந்தர்பங்களை பார்த்தார் பிடித்த வைகோ போன்றவர்களின் பலவீனமான பக்கம்களையும் சேர்த்தார் விளைவு துல்லியமான எதிர்வு கூறல் செய்ய அவரால் முடிந்தது .

ஆனால் இங்கு இலங்கையரசு கடனில் மிதக்குது என்றவுடன் ஈழப்பிரியன் உங்களை அல்ல வல்லரசு நாடுகளும் கடன் வாங்குது என்று அறிவிருந்தும் தங்கள்  மனசின் விருப்பத்தை பூர்த்தி செய்ய சிலர் விளைகின்றனர் முடிவு எப்படி என்று இப்ப உங்களுக்கு புரிந்து இருக்கும் . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் உறவுகள் அங்கே இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். நாங்கள் பிறந்த நாடு அதுஎன்பதை மறந்து எப்படா விழும் ஏறி மிதிக்கலாம் என்று சிலர் காத்துக் கிடக்கின்றனர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

எங்கள் உறவுகள் அங்கே இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். நாங்கள் பிறந்த நாடு அதுஎன்பதை மறந்து எப்படா விழும் ஏறி மிதிக்கலாம் என்று சிலர் காத்துக் கிடக்கின்றனர்

உறவுகள் வாழ்வதால் தான் இங்கு சொல்கிறம் இவ்வளவு கடனை வைத்துகொண்டு தமிழர் வாழ்ந்த பூமியை இடையில் வந்த சிங்களவர் ஆட்சி புரிகிரம் என்று தாங்களும் கடனாளியாகி தமிழரையும் கடனாளி ஆக்கி மதனமுத்தா கூத்து அடிக்கினம் எங்கையோ போகவேண்டிய நாட்டை இனதுவேசத்தால்  சொறிலங்கா ஆக்கி வைத்திருக்கும் பெருமை இனவாத சிங்களவர்களையே சாரும் . இவ்வளவு பட்டும் திருந்துவதுக்கு எந்த வழி வகையும் இல்லாமல் தொடர்ந்து நாட்டை நாசம் பண்ணிக்கொண்டு இருக்கினம் அபிவிருத்தி என்பது துளியும் யோசிக்காது பானின் விலையை ஏத்தி போட்டு இப்போதைக்கு இறக்கி வைத்து இருக்கலாம் கிட்டடியில் ஒரேயடியா ஏத்த வேண்டி வரும் இதை பார்த்து விட்டு கொஞ்சம்  பானின் விலை க்கும் கடனுக்கும் என்ன சம்பந்தம் என்று கம்பு சுழட்ட வருவினம் காத்து கொண்டு இருக்கிறன் . 

Link to comment
Share on other sites

ஒரு நாள் சிங்கப்பூர் இலங்கையை பார்த்து வியந்தார்கள். இன்று, உலகமே சிங்கையூரை பார்த்து வியக்கின்றது!

உலகின் மிகவும் வளம் படைத்த நாடுகளில் ஒன்று வெனிசுவேலா. இன்று கடன், பிழையான வழி நடத்தல் என்பன காரணமாக மிகவும் வறுமை நாடாக மாறியுள்ளது. சிம்பாவே இன்னொரு உதாரணம்.

இலங்கை எந்தப்பாதையில் செல்கின்றது என்பது தெளிவு. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • https://online.srilankaevisa.lk/ யாராவது முயற்சி செய்து பார்த்தீர்களா? எனக்கு சரிவர வேலை செய்யவில்லை.
    • சர்கரை இல்லாங்கால்லிலுப்பை அஃதுபோல் சொல் ஒன்றின்றி நகைக்க லொல். உடான்ஸ்சுவாமி உரை எவ்வாறு சர்க்கரை இல்லாதவிடத்து, இனிப்பு சுவைக்கு இலுப்பை உபயோகிக்கப்படுகிறதோ, அதே போல,  சிரிப்பதை, நகைப்பு என சொல்லால் எழுதாமல், குறியீடாக லொல் எனவும் எழுதலாம்.  
    • வீசா பெறுவது இலகுவாக்கபடுவது முக்கியம். இழுபறி கூடாது. மற்றும்படி கட்ணங்கள் சம்மந்தமாக குறை சொல்ல ஏதும் இல்லை. அது எல்லாருக்கும் பொதுவானது தானே.  ஆனால் இங்கே என்ன கவனிக்கப்படவேண்டும் என்றால் நாங்கள் வீசா பெற்று சென்று இறங்கும்போது விமானநிலையத்தில் இலங்கை குடிவரவுப்பகுதி கையூட்டு/கைவிசேடம் கேட்டு எங்களுக்கு கரைச்சல் தரக்கூடாது. 
    • ஓம்….இடையிடே இச்சையின்றி வரும் yeah, தோள் குலுக்கல், கண் மேலே உருட்டல், பிறகு கடையில் வாய்தவறி £இல் விலை கேட்பது… எதையும் 100% மறைக்க முடியாது…. ஆனால் அப்பட்டமாய் ஜொலி ஜொலித்தால்…..ஏமாறும் சதவிகிதம் எகிறும். அதே போல் வெளிநாடு என தெரிந்தாலும், ஏமாற்ற முடியாது, விசயம், விலை தெரியும் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதும் கைகொடுக்கும். எந்த வளர்முக நாட்டுக்கு போனாலும் உதவும் உத்திகள்தானே இவை.     நன்றி🙏
    • நான் இதன் மறுவளமாகவே பார்க்கிறேன். அங்கே மண்னெணை, முதல், மா, சகலதும் மானிய விலையில்தான் மக்களுக்கு தரப்படுகிறது.  ஏன் என்றால் அதை விட கூட விலைக்கு விற்றால் அந்த மக்களால் வாங்க முடியாது. அதே போலவே வடையும். அங்கே இவற்றுக்கான விலை அந்த மக்களின் வாங்கு திறனை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் நாம் ஒரு பிரிதானியா வாங்கு திறனோடு போய், இலங்கை வாங்குதிறனுக்குரிய விலையில் பொருட்களை வாங்குவது - ஒரு வகையில் அந்த மக்களிடம் அடிக்கும் கொள்ளையே. ஆனால் எம் அந்நிய செலவாணி வரவால் அதை விட அதிகம் கொடுக்கிறோம் என்பதால் நன்மையே அதிகம். இது எல்லா 3ம் உலக நாட்டுக்கும் பொருந்தும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.