Jump to content

கிழக்கில் சுமார் 300 தமிழ் கிராமங்கள், முஸ்லிம் கிராமங்களாக மாறியுள்ளதாக விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு


Recommended Posts

தன்னாட்சி, தட்சார்பு, தன்னிறைவு என்ற கோட்பாடுகளுக்கு ஏற்பவே தான் செயற்பட்டு வருவதாக தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டார். 

கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் முஸ்லிம் மயமாக்கல் தொடர்பில் அத்துரலிய ரத்தன தேரர் தனக்கு கூறியவற்றை அவர் இவ்வாறு விபரித்தார். கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் பலவிதமாக பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க நேரிட்டது.  சுமார் 300 தமிழ் கிராமங்கள் முஸ்லிம் கிராமங்களாக மாறியுள்ளன.

கிழக்கு மாகாணத்தில் ஒன்பதினாயிரம் தமிழ் பெண்கள், இஸ்லாத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக அத்துரலிய ரத்தின தேரர் என்னிடம் தெரிவித்தார். இந்த செயற்பாடு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

எனவே எமது காணிகள், எமது பெண்கள், உரிமைகள் என்பன பறிபோகின்றன என தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளாா்.

http://www.hirunews.lk/tamil/220709/கிழக்கில்-சுமார்-300-தமிழ்-கிராமங்கள்-முஸ்லிம்-கிராமங்களாக-மாறியுள்ளதாக-விக்னேஸ்வரன்-குற்றச்சாட்டு  
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை கிழக்கு மாகாணம்: 300 தமிழர் கிராமங்கள், முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளன - முன்னாள் முதலமைச்சர் விக்னேஷ்வரன்

விக்னேஷ்வரன்

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் சுமார் 300 தமிழர் கிராமங்கள், முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளருமான சி.வி. விக்னேஷ்வரன் குற்றம்சாட்டியுள்ளார்.

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு பிரதேசத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசியபோது இதனை அவர் கூறினார்.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் 9000 தமிழ் பெண்கள், இஸ்லாத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக, தன்னிடம் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பௌத்த பிக்குவுமான அத்துரலியே ரத்ன தேரர் கூறியதாகவும் இதன்போது விக்னேஷ்வரன் குறிப்பிட்டார்.

"எமது காணிகள் மற்றும் உரிமைகள் பறிபோவதோடு, எமது பெண்களும் பறிபோகின்றனர்" என்றும் இதன்போது அவர் விக்னேஷ்வரன் தெரிவித்தார்.

இதனையடுத்து, 300 தமிழர் கிராமங்கள் முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டமையை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் உங்களிடம் உள்ளனவா என்று, முன்னாள் முதலமைச்சர் விக்னேஷ்வரனிடம் பிபிசி தமிழ் வினவியது. அதற்கு அவர் பதிலளிக்கையில், பத்திரிகையொன்றில் சில வருடங்களுக்கு முன்னர் வெளியான தொடர் கட்டுரைகளின் மூலம் இதனை தான் அறிந்து கொண்டதாக கூறியதோடு; "ஆதாரங்களை நீங்களே தேடிப்பார்க்க வேண்டும்" என்றார்.

"தமிழர் - முஸ்லிம் மக்களுக்கிடையில் முறுகல் நிலை ஏற்பட்டுவிடும் என்பதற்காக, இந்த உண்மையை சொல்லாமல் இருக்க முடியாது" என்றும் அவர் பிபிசி யிடம் கூறினார்.

எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா

இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் விக்னேஷ்வரன் கூறியுள்ள இந்த விடயமானது, தமிழர் - முஸ்லிம் நல்லுறவை பாதிக்கும் என, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா கவலை தெரிவித்துள்ளார்.

விக்னேஷ்வரன் கூறுகின்றமை போல் தமிழர் கிராமங்கள் முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டிருந்தால், அது தொடர்பில் ஆராய்ந்து அந்தக் கிராமங்களை முடியுமான வரை தமிழர்களிடம் ஒப்படைக்க வேண்டிய தேவை தமிழர், முஸ்லிம் மக்களின் தலைமைகளுக்கு உள்ளதாகவும் ஹிஸ்புல்லா சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, "பல முஸ்லிம் கிராமங்கள் தமிழர் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளதாக, முஸ்லிம் தரப்பினரும் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்" எனவும் ஹிஸ்புல்லா குறிப்பிட்டுள்ளார்.

"முன்னாள் முதலமைச்சர் விக்னேஷ்வரன் தன்னிடத்தில் முழுமையான ஆதாரங்கள் இல்லாமல், இந்த விடயத்தைக் கூறியிருக்க மாட்டார் என்று நம்புகிறேன். ஆகவே, அவர் குறிப்பிட்ட 300 தமிழர் கிராமங்களும் எந்த மாவட்டத்தில் உள்ளன என்ற விவரத்தினை அவசரமாக ஊடகங்கள் மூலமாக தெரியப்படுத்த வேண்டும்" என்றும் ஹிஸ்புல்லா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-49069613

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறுபான்மைக்குள் பிளவுகளை ஏற்படுத்தி பெரும்பான்மைகளின் கைகூலியாக சீ.வீ. செயற்படுகின்றாரா ?

HRS_6839.JPG

 

-எம்.ரீ. ஹைதர் அலி -
சிறுபாண்மைக்குள் பிளவுகளை ஏற்படுத்தி பெரும்பாண்மைகளின் கைகூலியாக சீ.வீ. செயற்படுகின்றாரா
என்ற சந்தேகம் தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் தோன்றியுள்ளது - பொறியியலாளர் ஷிப்லி பாறுக்

அரசியல் அதிகாரங்களை பெறுவதற்குரிய மிகப்பெரிய மூலதனமாக இனவாதம் மாறிவிட்டதென்பதற்கு சீ.வி. விக்னேஸ்வரன் விலக்கல்ல என்பதை 300 தமிழ் கிராமங்கள் முஸ்லிம்களால் அபகரிக்கப்பட்டது என்கின்ற ஆதாரமற்ற மிகப்பெரும் குற்றச்சாட்டினை முன்வைத்திருந்தார் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், இன்னாள் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பினூடாக முதலமைச்சராகிய சீ.வீ. அவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் முரண்பட்டு வெளியேறியதற்குப்பின் தனெக்கென ஒரு அரசியல் இருப்பை இனவாத்த்தினூடாக தக்கவைக்க முயற்சிப்பது அவர் வகித்திருந்த ஆதாரபூர்வமான உண்மையின் பக்கம் மாத்திரம் நீதி செலுத்தும் உயர் நீதியரசர் என்கின்ற பதவிக்கு இவர் தகுதியற்றவராக இருந்திருப்பாரோ என எண்ணத்தோன்றுகிறது.

நல்லிணக்கம், ஒற்றுமை, சமாதானம், சகவாழ்வு என்று இந்த நாட்டில் எத்தனையோ விடயங்கள் பேரின சக்திகளால் கேள்விக்குட்படுத்தப்பட்டு வருகின்ற இக்கால கட்டத்தில் சக சகோதர சிறுபாண்மை மீது இவ்வாறான ஆதாரமற்ற கருத்துக்களை வெளியிட்டதை முஸ்லிம் சமூகம் மிக வன்மையாக கண்டிக்கின்றது.

கடந்த யுத்த காலத்தின்போது யுத்தத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்குகொண்டிராத முஸ்லிம் சமூகம் எண்ணில் அடங்காத உயிர்ச் சேதங்களையும், பாரிய பொருளாதார இழப்பையும், தமது வாழ்வுரிமைகளையும் தமிழ் போராட்டக்காறர்களால் இழந்து வட, கிழக்கில் துன்பப்பட்டதை சீ.வீ. அவர்கள் மறந்துவிட்டு பேசுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

21/4 தாக்குதலுக்கு பின்னரான காலத்தில் முஸ்லிம் சமூகம் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் இவ்வாறான அபாண்டமான கருத்துக்கள் முஸ்லிம் சமூகம் மீதான சந்தேகப் பார்வையை மேலும் அதிகரிக்கும் விதமாக மாறியுள்ளது.

நாட்டில் பேரினவாதம் சிறுபாண்மைகளை ஓரம்கட்டி தனிச் சிங்கள இராச்சியத்தை உருவாக்க வேண்டும் என்ற கோசத்துடன் ஒரு பன்சலையினூடாக ஒரு ஆயிரம் வாக்கு என்ற முன்னெடுப்புக்களை முன்னெடுத்து 7,000,000 பேரின் வாக்கினால் நாட்டினுடைய தலைவரை தேர்வு செய்ய முயற்சிக்கும் மிக ஆபத்தான சூழலில் சிறுபாண்மைக்குள் பிளவுகளை ஏற்படுத்தி பெரும்பாண்மைகளின் கைகூலியாக சீ.வீ. செயற்படுகின்றாரா என்ற பலத்த சந்தேகம் தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் தோன்றியுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு அன்றி வேறு எவராலும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது என்கின்ற மிகப்பெரும் உண்மையை சீ.வீ. வருகின்ற தேர்தலில் தோற்கடிக்கப்பட்டு அரசியலில் இருந்து வெளியேற்றப்படும் அந்தநாளில் புரிந்துகொள்வார்.

ஆக மொத்தத்தில் சீ.வீ. அவர்கள் இனவாத அரசியலை கைவிட்டுவிட்டு ஜனநாயக நீரோட்டத்தில் இன நல்லிணக்கத்தை முன்னிலைப்படுத்தி அரசியல் செய்கின்ற நல்ல சிந்தனையுடன் எதிர்காலத்தில் பயணிக்க சிறுபான்மை சமூகம் சார்பாக வேண்டிக் கொள்கின்றேன் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், இன்னாள் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்துள்ளார்.

https://www.madawalaenews.com/2019/07/scv.html

 

Link to comment
Share on other sites

ஷிப்லி பாறுக்  முஸ்லிம் இனவாதி கிஸ்புல்லா பற்றி ஒரு வார்த்தை பேசாத இவரின் கூற்றை எப்படி உண்மையாக எடுக்க முடியும்??

Link to comment
Share on other sites

விக்கியின் கூற்றுக்கு முஸ்லீம் மதவெறியர்களின் பதிலிலுள்ள பதற்றம் அவரது கூற்றை உண்மையாக்குகிறது.

நல்ல முஸ்லிம்களுடன் இன ஐக்கியத்தை ஏற்படுத்த, கள்ளக்காணி பிடிக்கும் முஸ்லீம் காடையர்களின் செயல்களை பகிரங்கமாக அம்பலப்படுத்துவது பெரிதும் உதவும்.

கிழக்குமாகாண பிரதிநிதியான சம்மந்தன் தனது வீட்டுக்கு கிட்ட இருக்கும் கன்னியா பறிபோவது கூடத் தெரியாமல் இருக்கும் நிலையில் இந்த விடயத்தில் விக்கியின் செயல்கள் பாராட்டப்பட வேண்டியவை.

Link to comment
Share on other sites

Quote

கடந்த யுத்த காலத்தின்போது யுத்தத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்குகொண்டிராத முஸ்லிம் சமூகம் எண்ணில் அடங்காத உயிர்ச் சேதங்களையும், பாரிய பொருளாதார இழப்பையும், தமது வாழ்வுரிமைகளையும் தமிழ் போராட்டக்காறர்களால் இழந்து வட, கிழக்கில் துன்பப்பட்டதை சீ.வீ. அவர்கள் மறந்துவிட்டு பேசுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

போரில் அரசுக்கு முண்டு கொடுத்தே  முஸ்லிம்கள் தான். அது உளவு படையில் இருந்து தமிழ் கிராமங்களை அழிப்பது வரை.

Link to comment
Share on other sites

விக்னேஸ்வரன் ஐயா 300 கிராமங்கள் என்று இலக்கம் குறித்து பேசும்போது பொத்தாம் பொதுவாக ஆய்வு இல்லாமல் பேசுவது சரியல்ல. கிழக்கில் மொத்தமாகவே 300 முஸ்லிம் கிராமங்கள் இல்லையே என முஸ்லிம் தரப்பில் இருந்து எழுப்பபட்ட கேழ்விக்கு விக்னேஸ்வரன் ஐயா பதில் சொல்ல வேண்டும். உண்மையிலேயே பொது எல்லைகலைக் கொண்ட 300 தமிழ் மற்றும் முஸ்லிம் கிராமங்கள் கிழக்கில் இல்லையென்பதுதான் உண்மை. 

Link to comment
Share on other sites

"கிழக்கில் மொத்தமாகவே 300 முஸ்லிம் கிராமங்கள் இல்லையே என முஸ்லிம் தரப்பில் இருந்து எழுப்பபட்ட கேழ்விக்கு விக்னேஸ்வரன் ஐயா பதில் சொல்ல வேண்டும்"

விக்கினேஸ்வரன் ஐயா அவர்களின் கருத்து ஆதரமில்லாதது என்றால், இங்கே மறுதலிக்கும் தரப்பு அதை ஆதாரத்துடன் மறுப்பதே  பண்பானது.

முஸ்லீம் தரப்பு கிழக்கில் எத்தனை தமிழ் கிராமங்களை 1948இல் இருந்து முஸ்லீம் கிராமங்களாக மாற்றி உள்ளார்கள் என ஆதாரத்துடன் சேர்ப்பிக்க உரிமை உள்ளது. 

எத்தனை வேற்று மத மக்களை இஸ்லாம் மதத்திற்கு மாற்றி  உள்ளார்கள் என்ற புள்ளி விபரமும் தெரியப்படுத்தப்படலாம். அதுவும் அவர்களின் சனநாயக உரிமை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/23/2019 at 11:19 AM, colomban said:

தமிழ் தேசியக் கூட்டமைப்பு அன்றி வேறு எவராலும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது என்கின்ற மிகப்பெரும் உண்மையை..

tenor.gif

அதிகபடியா அவையளுக்கு இறங்கி போகினமா ..? 😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Asmy.jpg

தனது தமிழ் சமூகத்திலிருந்து எவரோ ஒருவர் சொன்ன வாய் பேச்சை வைத்து தன் சமூகம் பாதிக்கப்படுவதாகவும் தன் சமூகத்தின் உரிமைகள், இருப்புக்கள், வாழ்வாதாரம் பறி போவதாகவும் பகிரங்கமாக ஆதாரங்கள் இல்லை என்று தெரிந்தும் தமிழர் தரப்பின் முக்கிய அரசியல்வாதிகளில் ஒருவராக இருக்கும் முன்னாள் வட மாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான க.வி.விக்னேஸ்வரன் தன் சமூகம் சார்ந்து சொன்ன கருத்துக்களை முந்தியடித்துக் கொண்டு ஊடக அறிக்கைகள் மூலம் விமர்சிக்கும் நாம் இழந்து போயுள்ள எமது உரிமைகள், நிலபுலங்களை, பிரதேச எல்லைகளை மீட்க என்ன முன்னெடுப்புகளை செய்துள்ளோம் என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் கே.எல்.அஸ்மி கேள்வி எழுப்புகிறார்.
 
வட மாகாண முதலமைச்சரின் கருத்துக்கு முஸ்லிம் தலைமைகள் அறிக்கை விடுவதையிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்சொன்னவாறு தெரிவித்துள்ளார்.
 
அவ்வறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது-
 
முன்னூறு கிராமங்களும் வீதிகளும் முஸ்லிம் மயப்படுத்தப்பட்டுள்ளதையும் தமிழ்ப் பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆதராமில்லாமல் பொறுப்பு வாய்ந்த தமிழ் தலைவர்களில் ஒருவரான விக்னேஸ்வரன் ஊடங்களில் பகிரங்கமாக சொன்ன அபாண்டங்களை அவர் சமூகம் சார்ந்தும் அவரது எதிர்கால அரசியல் சர்ந்ததாகவும்  அதன் பின்னாலுள்ள சக்திகள் பின்னணிகள் குறித்தும் நாம் சிந்திக்க வேண்டுமே தவிர வெறுமனே அவருக்கெதிரான ஊடக அறிக்கைகளால் எதனையும் நாம் சாதித்து விடமுடியாது.
 
நாம் இழந்துள்ளத்தை பகிரங்கமாகப் பேசி, அதற்காகப் போராடததன் விளைவுகள் தான் இவ்வாறான அறிக்கைகளுக்கு காரணம் எனலாம். கோறளைப்பற்று மேற்கில் பறி கொடுக்கப்பட்ட காணிகள் மீட்கப்படவில்லை. வாழைச்சேனைக்கான தனியான பிரதேச சபை உருவாக்கம் இழுபறி நிலையில் உள்ளதமையால் இப்பிரதேச மக்கள் எதிர்நோக்கும் அவலங்களை கண்டும் காணாமல் இருக்கிறோமா? மீனவர்களின் வாழ்வாதாரம் இழக்கப்பட்டுள்ளது. அதற்கான சரியான தீர்வுகள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. வயற்காணிகள் தொடர்பில் எழும் பிரச்சினைகள் என அடுக்கிக் கொண்டே போகுமளவிற்கு எம் சமூகத்தின் பிரச்சினைகள் நிறைந்துள்ளன.
 
நாம் இதையெல்லாம் பகிரங்கமாக எடுத்துரைத்து தீர்வு காண்பதை விட்டு விட்டு அறிக்கைகள் விடுவதால் ஆன பயன் என்பதயும் நாம் அலச வேண்டியுள்ளது. கருத்துச் சுதந்திரம் இருக்கிறது என்பதற்கான முன்னாள் நீதிபதி ஒருவர் ஆதாரமற்ற செய்திகளை விட்டு இன முரண்பாடுகள் தோற்றுவிக்கும் செயற்பாடுகளை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும். எமது சமூகம் கடந்த கால யுத்த சூழலிலும் அதன் பின்னரான காலப்பகுதிகளிலும் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் பேசப்படுவது தான் இவ்வாறான கருத்துக்ளுக்கு பதிலாக அமையும்.
 
வடக்கில் முஸ்லிம்கள் பலவந்தமாக துரத்தப்பட்டு பல கிராமங்கள் இழக்கப்பட்டுள்ளன. அதே நிலைமை கிழக்கிலும் குறிப்பாக எமது பிரதேசத்தில் குஞ்சான்குளம், காயங்குளம் பகுதிகளிலும் தமிழ் அதிகாரிகள், அரசியல்வாதிகளின் தலையீடுகளும் தொடர்ச்சியாக இருந்து வருகிறது.
 
எமது பிரதேசத்தில் எழும் காணிப்பிரச்சனைகளின் போது கூட தமிழ் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் களத்தில் நின்று போராடி கையகப்படுத்தும் நிலை தொடர்கிறது. இதையெல்லாம் நாம் கண்டுகொள்ளாமல் இருந்து விட்டு அறிக்கையூடாக அரசியல் செய்து விட்டுப்போவதால் சமூகம் அடையப்போகும் நன்மை தான் என்ன?
 
பிரதேசத்திலுள்ள காணி எல்லைப் பிரச்சினைகளை தீர்க்க எமது பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதேச செயலாளராக வரமுடியாத நிலை தொடர்ந்து கொண்டே இருக்கும் அதே வேளை, எமக்கு கிடைக்கிற திறமையான அதிகாரிகளையும் இழந்தே வருகின்றோம்.
 
அண்மையில் வழங்கப்பட்ட காணி உறுதிப்பத்திரங்கள் வழங்களில் கூட விரல் விட்டு எண்ணக்கூடிய அளவானவையே வழங்கப்பட்டன. இந்த விடயத்தில் கூட அரசியல்வாதிகளும் பிரதேச செயலாளர்களும் மேற்கொண்ட ஆக்கபூர்வமான முயற்சிகள், முன்னெடுப்புக்கள் என்ன?
 
ஆகக்குறைந்து குறித்த பிரதேச எல்லைக்குள் வருகின்ற காணிப் பிரச்சனைகளை தீர்க்க நீதி மன்றங்களை நாடுகின்ற போது குறித்த காணி தமது ஆளுகைக்குட்பட்ட பிரதேச செயலக எல்லைக்குள் உள்ளதென்பதைக் கூட ஊர்ஜிதப்படுத்தி ஆவணங்கள், கடிதங்களை வழங்க முடியாத அரச அதிகாரிகளை பெற்றுமுள்ளமை எமது சமூகம் பெற்றுள்ள துர்ப்பாக்கி நிலை என்று சொல்வதை விட வேறில்லை.
 
தமிழ் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் அவர்கள் சமூகம் சார்ந்து குரல் கொடுப்பதையும் அதிகார ரீதியாக முன்னெடுக்கும் நடவடிக்கைகளையும் இனவாத நடவடிக்கையாக நாம் விமர்சிக்க முடியாது. அது அவர்கள் இனம் சார்ந்த நடவடிக்கையாகும். இதற்கெதிராக அறிக்கை விட்டு எமது கையாலாகாத தனத்தை வெளிக்காட்டிக் கொள்கிறோமே தவிர ஆக்கபூர்வமான எந்த செயற்பாடுகளும் எம்மிடம் இல்லை.
 
அரசியல்வாதிகள் தமக்கான வாக்கு வங்கியை இலக்காகக் கொண்டு செயற்படுவதனால் இவ்வாறான சூழ்நிலைகளில் பேச முடியாதவர்கள் இருக்கும் அதேவேளை அரச அதிகாரிகளாவது அவர்களது கடமைகளையும் சமூகம் அவர்களிடம் எதிர்பார்க்கும் தீர்வுகளையும் பெற்றுக் கொடுப்பதில் பின் நிற்பதாகவே தோன்றுகிறது. அரசியல் இயந்திரம் அவ்வாறு என்றால் அரச இயந்திரமும் இது விடயங்களில் மெத்தன போக்கையே கடைப்பிடிக்கின்றன.
 
இன்னும் எவ்வளவு எமது காணிப்பிரச்சினை தேர்தல் கால கோசங்களாக இருக்கப் போகிறது? எவ்வளவு காலம் இதையே காட்டி இரு கட்சிகளும் அரசியல் செய்யப் போகிறீர்கள்? என அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • நீங்க‌ள் சொல்லுவ‌து புரியுது அண்ணா இந்த‌ திரியில் நேற்றே நான் எழுதி விட்டேன் பிஜேப்பி த‌மிழ் நாட்டில் வ‌ள‌ந்தால் அது ஒட்டு மொத்த‌ த‌மிழ் நாட்டுக்கே ஆப‌த்து என்று த‌மிழ் நாட்டின் விச‌ச் செடி பிஜேப்பி..................இவ‌ர்க‌ள் ஊழ‌ல காட்டி மிர‌ட்டி தான் பாம‌காவை கூட்ட‌ணியில் சேர்த்த‌வை...............ம‌ருத்துவ‌ர் ஜ‌யா ராம‌தாஸ் போன‌ வ‌ருட‌ம் சொன்னார் த‌மிழ் நாட்டில் பிஜேப்பிக்கு   பூச்சிய‌த்துக்கு கீழ‌ என்று  அதாவ‌து த‌மிழ் நாட்டில் பிஜேப்பிக்கு ம‌க்க‌ள் ஆத‌ர‌வு இல்லை என்று........... ப‌ல‌ வ‌ருட‌மாய் நோட்டாவுக்கு கீழ‌ நின்று கொண்டு இருந்த‌ பிஜேப்பி த‌மிழ் நாட்டில் ம‌ற்ற‌ க‌ட்சிக‌ளை உடைச்சு முன்னுக்கு வ‌ருவ‌து த‌மிழ் நாட்டுக்கு ஆப‌த்து கோவையில் வ‌ட‌ நாட்டானின் ஆதிக்க‌ம்  அதிக‌ம் த‌மிழ‌ன் மாத‌ம் 18ஆயிர‌ம் ரூபாய்க்கு வேலை செய்த‌ இட‌த்தில் வ‌ட‌க்க‌னின் வ‌ருகைக்கு பிற‌க்கு த‌மிழ‌ர்க‌ளுக்கு வேலை இல்லை வ‌ட‌க்க‌ன் மாத‌ம் 9ஆயிர‌த்துக்கு  வேலை செய்வான்  த‌மிழ‌னே த‌மிழ‌னை நீக்கி விட்டு வ‌ட‌க்க‌னை வேலைக்கு அம‌த்தின‌ம் கார‌ண‌ம் வ‌ட‌க்க‌ன் குறைந்த‌ ச‌ம்ப‌ல‌த்துக்கு வேலை செய்வான்............................வ‌ட‌ நாட்டில் வேலை இல்லாம‌ தான் ஹிந்தி கார‌ங்க‌ள் அதிக‌ம் த‌மிழ் நாட்டுக்கு ப‌டை எடுத்து வ‌ருகின‌ம்😮 ஆனால் ஹிந்தி ப‌டிச்சா வேலை கிடைக்கும் என்று பிஜேப்பி கூட்ட‌ம் பொய் ப‌ர‌ப்புரைய‌ த‌மிழ் நாட்டில் அவுட்டு விட்ட‌வை 5வ‌ருட‌த்துக்கு முத‌ல்.........................த‌மிழ‌ர் அல்லாத‌வ‌ர்க‌ள் த‌மிழ் நாட்டில் ஒரு கோடி பேர் வாழுகின‌ம் அதில் அதிக‌ம் வ‌ட‌க்க‌ன் இதுவும் த‌மிழ‌ர்க‌ளுக்கு ஆவ‌த்தில் போய் முடியும்..................... சீமானுக்கு அர‌சிய‌லில் எதிர் கால‌ம் இருக்கு ப‌ய‌ணிக்க‌ நீண்ட‌ தூர‌ம் இருக்கு அண்ணா சீமான் கூட்ட‌னி வைச்சா க‌ட‌சியில் விஜ‌ய‌காந்துக்கு ந‌ட‌ந்த‌து தான் ந‌ட‌க்கும்.......................ச‌ம‌ர‌ச‌ம் செய்யாம‌ எவ‌ள‌வு கால‌ம் தேர்த‌ல‌ ச‌ந்திக்கிறாரோ அவ‌ள‌வ‌த்துக்கு சீமானுக்கும் க‌ட்சிக்கும் ந‌ல்ல‌ம்........................சீமான் போட்ட‌ விதையை அவ‌ரின் த‌ம்பிக‌ள் ச‌ரி செய்வார்க‌ள் ..................... என‌து க‌ணிப்பு நாம் த‌மிழ‌ர் க‌ட்சி இந்த‌ பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் 7/9 ச‌த‌வீத‌ம்  பெற‌ அதிக‌ வாய்ப்பு..................... ச‌கோத‌ரி காளிய‌ம்மாள் போட்டியிட்ட‌ தொகுதியில் ஒரு ஆளுக்கு 2000ரூபாய் ஆளும் அர‌சு கொடுக்குது அப்ப‌டி வீஜேப்பி ஆதிமுக்கா என்று இந்த‌ மூன்று க‌ட்சியும் ஓட்டுக்கு காசு கொடுக்கின‌ம் காசு கொடுக்காம‌ தேர்த‌ல‌ ச‌ந்திக்கும் ஒரே க‌ட்சி நாம் த‌மிழ‌ர் க‌ட்சிம‌ட்டும் தான் 🙏🥰......................................................
    • அதுக்கு நன்றி கடனாக சின்னத்தை முடக்கி மாற்றாக கேட்ட சின்னங்களையும் தேர்தலில் போட்டியிடாத சுயேட்சைகளுக்கு ஒதுக்கி தனது புலனாய்வுப்பிரிவை வீட்டுக்கு அனுப்பி  வாக்கு எந்திரத்தில் சின்னத்தை மங்கலாக்கி மைக் சின்னத்துக்கு மேலையே விவசாயி சின்னத்தை வைத்து தாம் கொஞ்சம் மெருகேற்றி வரைந்து கேட்ட விவசாயி சின்னத்தை போனவாட்டி சமதிக்காமல் இந்த வாட்டி போட்டியிடாத சுயேட்சைக்கு அதே வரைந்த சின்னத்தை அப்படியே கொடுத்து நன்றிக்கடனை சீமானுக்கு பிஜேபி செய்துள்ளது.... அடேங்கப்பா எவ்வளா ஒரு அன்பு பிஜேபிக்கு...
    • தங்களது கவி வரிகளில் வாழ்கிறது எமதுபோராட்டமும் வாழ்வும் வலியும். அதற்கேற்ற படங்களும்... பாராட்டுகள் உரித்தாகுக. 
    • திங்கள் முதல் நானும் கவனித்தேன். எண்ணை விலை வீழ்ந்துகொண்டே போகிறது. பிட்காயின்ஸ் விலை வீழ்ச்சியோடு தொடர்பிருக்குமோ தெரியவில்லை.
    • 5 ஓ…. 8 ஓ…. 10 ஓ….. சும்மா வாய்க்கு வந்தபடி அண்ணைனை ஏசுவதில் எனக்கும் உடன்பாடில்லை. அவர் தன் குறிக்கோளில் தெளிவாக இருக்கிறார்…… முடிந்தளவு, அதிமுக+, திமுக+ வாக்குகளை பிரித்து…..அமித்ஷாவின் 5 டார்கெட் தொகுதிகளிலாவது பிஜேபி யை வெல்ல வைப்பது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.