Jump to content

குவேனியின் கதை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அவள் மரத்தடியில் நூல் நூற்றுக் கொண்டிருந்தாள்.. 
கைகள் தறியில் லயித்திருந்தாலும்,
மனம் முழுதும் மாறனே வியாபித்திருந்தான். உள்ளத்தில் அவன் நினைப்பு வர உதட்டில் புன்னகை அரும்பியது!
பால்யவயதுத் தோழன் தான், எனினும் பருவ வயது வந்தவுடன் தான் அந்த மாற்றம் புரிந்தது!
அவனைப் பார்த்ததும் எங்கிருந்தோ அவளுக்கு வெட்கம் வந்துவிடும்,
சொற்கள் இடம்மாறும்!
கால்கள் தடுமாறும்!!
பக்கத்து வீட்டு வள்ளி சொல்லித்தான் தெரிந்தது இது "அது" தான் என்று...
கிட்டத்தட்ட 10 வருடங்கள்... 
10 இன்பமயமான வருடங்கள்... 
அவனுக்காக காத்திருப்பதிலும், கதை பேசுவதிலும் அத்தனை இன்பம் அவளுக்கு...!
இடையிடையே கைபிடிப்புகள், கட்டியணைப்புகளும் இடம்பெறத் தவறுவதில்லை.
அரசகுமாரி அவள்..
அரண்மனை தோட்டகாரன் மகன் அவன்..! காதலுக்கு தெரியுமா சாதி பேதம்...
மொட்டாகி முகிழ்ந்து மாலையாக காத்திருந்தது அவர்களது காதல்....
அன்றைய சந்திப்பு அதிவிசேசமானது!
அவளது தந்தையிடம் அனுமதி பெறவென்று அவன் சென்றிருந்தான்.
தாயிடம் அவள் ஏலவே சொல்லியிருந்தாளாயினும் தந்தையின் கோபம் அவள் அறியாததல்ல..
மனம் படபடக்க காத்திருந்தாள்!
ஆஹ் . 
அதோ இலை அசைகிறது, 
அவன் வந்து விட்டான் என எழுந்... 
அய்யோ அது வள்ளி அல்லவா.. 
வள்ளியின் நடையில் ஏன் அவசரம், கண்ணில் கலவரம்?
நடக்கக் கூடாதது ஏதோ நடந்து விட்டது, 
" முருகா " .........
என்றவளின் குரல் முருகனுக்கு கேட்டிருந்தால் ஒருவேளை முள்ளிவாய்க்காலில் மூன்று லட்சம் பேர் இறந்திருக்க தேவையில்லாமல் இருந்திருக்கும்! 
அந்தோ,! 
இடியை இறக்கினாள் தோழி!
அவள் மாறனின் தலை தந்தையின் வாள்வீச்சில் தனியாகி விட்டாதாம்...
அதிர்ச்சியில் உறைந்தாள்..
அழுகை வரவில்லை..
உணர்ச்சிகள் திடீரென மரத்துவிட்டன அவளுக்கு...
அடக்கிய உணர்ச்சிகள் யாவும் தந்தையின் மீதும், தன்னை வாழவிடாத அந்த ராஜ்ஜியத்தின் மீதும் அனலாய் திரும்பியது..
கண்ணகியல்லவே அவள் கனலாய் பொழிந்து அந்த மண்ணை அழிக்க..
காத்திருந்தாள்..!
அன்றிலிருந்து சரியாக ஒரு மாதம் கழிந்து....
********************

.... அவள் அந்த மரத்தடியில் நூல் நூற்றுக் கொண்டிருந்தாள்...
தூரத்தில் வந்து கொண்டிருந்தது, அந்த இளவரசனையும், அவனது எழுநூறு தோழர்களையும் ஏற்றிய கப்பல்...
அவனது பெயர் விஜயன்.!!
பின்னுரை!
மாறனின்_தலை_அவனது உடலிலேயே அன்று இருந்திருப்பின், இலங்கையின் இன்றைய சனாதிபதி சம்பந்தராகவும்,🤣 பிரதமர் சுமந்திரனாகவும் 😂இருந்திருக்கக் கூடும்!!🙄

 

ஆக்கம் பேரின்பராஜா சஜிதன்  மூலம் முகப்புத்தகம் 
 

இந்த கதையை வாசிக்கவே கண்ணைக் கட்டுதே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெண்ணின் தனிப்பட்ட குரோதம் காலம் கடந்தும் ஒரு இனத்தையே பலியெடுத்துக் கொண்டிருக்கு......!   🤨

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ரதி said:

முருகா " .........
என்றவளின் குரல் முருகனுக்கு கேட்டிருந்தால் ஒருவேளை முள்ளிவாய்க்காலில் மூன்று லட்சம் பேர் இறந்திருக்க தேவையில்லாமல் இருந்திருக்கும்! 

எதற்கெடுத்தாலும் யாராக இருந்தாலும் அழிவுகள் என்று வரும் போது சைவக் கடவுள்களை சாடுறது மிகவும் வலிக்கிறது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

கேள்வி: சங்கம் எனும் வார்த்தைக்கும் இடைச்சங்கம் கடைச்சங்கம் போன்றவற்றிற்கும் தொடர்புண்டா?

கௌத்தம சன்னா: சங்கம் என்கிற வார்த்தையே தமிழ் கிடையாது. சங்கம் வைத்து தமிழ் வளர்த்ததை செய்தவர்கள் பிக்குகள்தான். பிற்காலத்தில் சைவர்கள் அதனை கழகங்களாக மாற்றினார்கள். சங்கம் என்பது பாலி சொல்.ஒரு வேளை ஆதி தமிழ்ச்சொல்லாககூட நாம் வைத்துக்கொள்ளலாம். அதற்கு உள்ளே இருந்தவர்கள் யாரென்றால் பௌத்தர்கள்தான். முதன் சங்கத்தை சிவன் உருவாக்கியதாகவும்  இரண்டாம் சங்கத்தை முருகன் உருவாக்கியதாகவும்,  மூன்றாம் சங்கத்தை பாண்டியன் உருவாக்கியதாகவும் சொல்லப்படுவது பின்னாளில் உருவாக்கிவிட்ட கதைகள்தான்.

பௌத்தம் தமிழர்கள் ஆதியில் பின்பற்றிய மதம். தமிழர்களால்தான் உலகம் முழுவதற்கும் பௌத்தம் சென்று சேர்ந்தது என்பதையே நம்ப மறுக்கிறார்கள். இதனை மட்டுமாவது தமிழர்கள் புரிந்துக்கொண்டால்தான் இந்த உலகத்துடன் போட்டிப்போட முடியும். ஆசியாவின் பண்பாடு பௌத்ததின் மூலமாக தமிழர்கள் கொண்டு சேர்த்தார்கள். இது எவ்வளவு முக்கியமான ஓர் தகவல்.

 

தமிழர்கள் பெளத்த மதத்தைப் பரப்பி சிங்கள இனைத்தையே உருவாக்கி இன்று அவர்களாலேயே அழிக்கப்படுகின்றார்கள் என்பது வினோதமாக/விசித்திரமாக உள்ளது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களது அழிவுக்கு,அழிந்து கொண்டு இருப்பதற்கு  யாருடைய சாபம் தான் காரணமாய் இருக்க வேண்டும்...அது குவேனியாய் இருக்கலாம் அல்லது வேறு யாராகவும் இருக்கலாம் 

 

4 hours ago, ஈழப்பிரியன் said:

எதற்கெடுத்தாலும் யாராக இருந்தாலும் அழிவுகள் என்று வரும் போது சைவக் கடவுள்களை சாடுறது மிகவும் வலிக்கிறது.

 

விரும்பினாலும்,விரும்பா விட்டாலும் தமிழர்களும்,சைவ கடவுளும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை.
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.