Jump to content

உயர்வான எண்ணத்தை ஏற்படுத்த அமெரிக்க நிறுவனத்திற்கு பணம் கொடுத்து ஒப்பந்தம் - பாகிஸ்தான்


Recommended Posts

அமெரிக்க அரசிடமும், மக்களிடமும் தன் நாட்டின் மீது ஏற்பட்டுள்ள அவப்பெயரை நீக்கி, உயர்வான எண்ணத்தை ஏற்படுத்துவதற்காக  அமெரிக்காவை சேர்ந்த நிறுவனத்தை பாகிஸ்தான் பணம் கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் கடந்த 2017ம் ஆண்டு பதவியேற்ற பின், பாகிஸ்தான் உடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. தீவிரவாதத்தை கட்டுப்படுத்த தவறியதாகவும் அமெரிக்காவுக்கு துரோகம் இழைத்து விட்டதாகவும் பாகிஸ்தான் மீது அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார். இதனால், பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டு வந்த பல்லாயிரம் கோடி நிதியுதவியை கடந்த 2018 ஜனவரி முதல் நிறுத்தி விட்டார். இதனால், பாகிஸ்தானுக்கு பெரும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், 3 நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா வரும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் அதிபர் டிரம்ப்பை நாளை சந்திக்க இருக்கிறார். டிரம்ப் பதவியேற்று ஏறக்குறைய 4 ஆண்டுகள் முடியும் நிலையில், தற்போதுதான் பாகிஸ்தான் பிரதமரை சந்திக்க உள்ளார். 

இந்நிலையில், அமெரிக்க அரசிடமும், அதன் மக்களிடமும் தனது நாட்டை பற்றி ஏற்பட்டுள்ள தவறான எண்ணத்தை மாற்றவும், இவர்களிடம் தனது நட்டை  பற்றி உயர்வான எண்ணத்தை ஏற்படுத்தவும் ‘ஹாலண்ட் அண்ட் நைட்’ என்ற அமெரிக்க நிறுவனத்தின் உதவியை பாகிஸ்தான் நாடியுள்ளது. இது தொடர்பாக, இந்த நிறுவனத்தின் ஆலோசகர் ரெய்னால்ட்சுடன் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முகமது குரேஷி பேச்சுவார்த்தை நடத்தி, ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டு இருக்கிறார். இந்த ‘ஜால்ரா’ வேலையை செய்வதற்காக, அந்த நிறுவனத்துக்கு பாகிஸ்தான் அரசு கோடிக்கணக்கில் பணம் கொடுத்துள்ளது.

இது தொடர்பாக குரேஷி கூறுகையில், ``ஹாலண்ட் அண்ட் நைட் நிறுவனம் பாகிஸ்தான் தூதரகத்துடன் இணைந்து செயல்பட்டு, அமெரிக்கா மீது பாகிஸ்தான் வைத்திருக்கும் நல்லெண்ணத்தை திறம்பட எடுத்துரைக்கும்,’’ என்றார். இந்த நிறுவனத்தின் ஆலோசகர் ரெய்னால்ட்ஸ், நியூயார்க் நகரத்தின் முன்னாள் காங்கிரஸ் எம்பி.யாக இருந்தவர். அவர் கூறுகையில், ``எங்கள் நிறுவனத்தின் மீது முழு நம்பிக்கை வைத்து, இந்த பொறுப்பை ஒப்படைத்த பாகிஸ்தானுக்கு நன்றி தெரிவிக்கிறேன். பாகிஸ்தான்-அமெரிக்கா இடையிலான இருதரப்பு உறவு, புரிந்துணர்வு தொடர்பாக வலுவான நம்பிக்கையை உருவாக்கும் முயற்சிகளில் எங்கள் நிறுவனம் செயல்படும்,’’ என்று கூறினார்.

சவுதி இளவரசர் உதவி:
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றதில் இருந்தே அமெரிக்கா - பாகிஸ்தான் உறவு பாதித்துள்ளது. இந்த உறவை சீராக்கும் முயற்சியில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஈடுபட்டுள்ளார். இதற்கு, சவுதி இளவரசர் முகமது பின் சல்மானும் உதவி வருகிறார். டிரம்பின் மருமகன் ஜரேட் குஷ்னருடன் சல்மான் நெருங்கிய நட்பு வைத்துள்ளார். அவர் மூலமாகதான், டிரம்ப் - இம்ரான் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

தூதர் இல்லத்தில் தங்கல்:
பாகிஸ்தான் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதால், தனது நாட்டில் பல்வேறு செலவுகளை குறைப்பதற்கான சிக்கன நடவடிக்கைகளை இம்ரான் எடுத்துள்ளார். தனது அமெரிக்க பயணத்திலும் இதை அவர் பின்பற்றுகிறார். அமெரிக்காவில் அவர் நட்சத்திர ஓட்டலில் தங்கவில்லை. பாகிஸ்தான் தூதரின் இல்லத்திலேயே தங்குகிறார். 
 

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=511798

Link to comment
Share on other sites

அமெரிக்க தலைநகரில் ஆயிரக்கணக்கான பணத்திற்கு கொள்கையை வென்றெடுக்கும் நிறுவனங்கள் உள்ளன. ஆங்கிலத்தில் இவை ' லோபியிங்' (lobbying) என அழைக்கப்படும். சகல மேற்குலக நாடுகளில் கூட இப்படியான அமைப்புக்கள் இருந்தாலும் உலகின் மிக்வும் பொருளாதார இராணுவ மற்றும் அரசியல் செல்வாக்குகள் காரணமாக அமெரிக்க தலைநகர் வாசிங்டனில் தான் இவை அதிகம்.  (https://www.hklaw.com/en

உள்ளூர் நிறுவனங்கள் உட்பட பல வெளிநாட்டு அரசுகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களும் கூட தமது கொள்கை மாற்ற உதவிக்கு இவ்வாறு அணுகுவதுண்டு. 

சிங்கள அரசு கூட இவ்வாறு  முன்னர் இழந்த ஜி.எஸ். பி. வரி சலுகையை மீளப்பெற ஒரு அமைப்பை பணம் கொடுத்து அணுகி இருந்தது. 

ஆக, பணம் இருந்தால் எமது மீது உள்ள தடைகள் மட்டுமல்ல தனி நாடு இல்லாவிட்டாலும் ஒரு சுயாட்சியை கூட இலங்கையில் தமிழர்கள் பெறலாம். தமிழர்களிடம் அதற்கான பணமும், கொடுக்கும் மனமும் உள்ளது என .நம்பலாம். ஆனால், அதற்கான தலைமை தான் இல்லை.  

Link to comment
Share on other sites

அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்க பயணிகள் விமானத்தில் பறந்த இம்ரான்கான்

பாகிஸ்தானில் தற்போதைய பிரதமராக பதவி வகிப்பவர் இம்ரான்கான். இவர் 3 நாள் பயணமாக நேற்று அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அங்கு அதிபர் டிரம்பை சந்திக்க இருக்கிறார். பொதுவாக ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு செல்லும் தலைவர்கள் ராணுவ விமானத்திலோ அல்லது தனி விமானத்திலோ பயணம் செய்வது வழக்கம். ஆனால், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானோ பயணிகள் விமானமான ‘கத்தார் ஏர்வேசில்’ பயணம் செய்தார். சிக்கன நடவடிக்கையாக, பயணிகள் விமானத்தில் இம்ரான்கான், பயணத்தை மேற்கொண்டு இருக்கிறார். அவரது இந்த மூன்று நாள் சுற்றுப்பயணத்தில் அமெரிக்க எம்.பி.க்களையும், ‘கார்பரேட்’ தலைவர்களையும், அமெரிக்க வாழ் பாகிஸ்தான் மக்களையும் சந்திக்க இருக்கிறார்.

இந்த பயணத்தில், பிரதமர் இம்ரான்கானுடன் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா மெக்மூத் குரேஷி, தலைமை ராணுவ தளபதி குவாமர் ஜாவீத் பாஜ்வா மற்றும் ஐ.எஸ்.ஐ. தலைமை இயக்குனர் ஆகியோர் பயணம் செய்தனர். அமெரிக்க அதிபர் டிரம்பும், இம்ரான்கானும் முதல் முறையாக அமெரிக்காவில் சந்தித்து பேசுகிறார்கள். அத்துடன் பாகிஸ்தானின் இரு ராணுவ உயர் அதிகாரிகள், பிரதமருடன் அமெரிக்கா சென்று இருப்பது இதுவே முதல் முறை ஆகும்.

http://thinakkural.lk/article/32066

Link to comment
Share on other sites

பின்லேடனைப் பிடிக்க உதவியவரின் விடுதலை: இம்ரானிடம் வலியுறுத்த டிரம்ப் திட்டம்

அல்-காய்தா தலைவர் பின்லேடனின் இருப்பிடத்தைக் கண்டறிய உதவிய பாகிஸ்தான் மருத்துவரை சிறையிலிருந்து விடுவிக்குமாறு அமெரிக்கா வரும் பிரதமர் இம்ரான் கானிடம் வலியுறுத்த அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.pin.jpg

இதுகுறித்து வெள்ளை மாளிகை அதிகாரிகள் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். அதிபர் டொனால்ட் டிரம்ப்பை அவர் திங்கள்கிழமை சந்தித்துப் பேசவிருக்கிறார்.

அப்போது, பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மருத்துவர் ஷகீல் அஃப்ரிடியை விடுவிக்குமாறு இம்ரானிடம் டிரம்ப் வலியுறுத்துவார்.

அல்-காய்தா தலைவர் பின்லேடன் பதுங்கியிருந்த இடத்தைக் கண்டறிய அமெரிக்க உளவுத் துறையான சிஐஏ-வுக்கு உதவிய ஷகீல் அஃப்ரிடி சிறையில் அடைக்கப்பட்டுள்ளது அதிபர் டிரம்ப்புக்கும்  அமெரிக்க மக்களுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னையாகும்.

நியாயமற்ற முறையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அஃப்ரிடியை விடுவிப்பதன் மூலம்  தனது பிராந்திய தலைமைப் பண்பை சர்வதேச சமுதாயத்திடம் பாகிஸ்தான் நிரூபிக்க முடியும் என்றார் அவர்.

கடந்த 2001-ஆம் ஆண்டில் நியூயார்க் இரட்டை கோபுரத் தாக்குதலை நடத்திய அல்-காய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் பின்லேடன், பாகிஸ்தானின் அபோட்டாபாதில் பதுங்கியிருந்ததை அமெரிக்க சிஐஏ உளவுத் துறை பத்து ஆண்டுகளுக்குப் பிறகு கண்டறிந்தது.

அதனைத் தொடர்ந்து, பின்லேடனின் இருப்பிடத்துக்குள் கடந்த 2011-ஆம் ஆண்டு நுழைந்த அமெரிக்க கடற்படை சிறப்பு அதிரடி வீரர்கள், அவரை சுட்டுக் கொன்றனர்.

பின்லேடனின் பதுங்குமிடத்தை சிஐஏ கண்டறிவதற்கு, மருத்துவர் ஷகீல் அஃப்ரிடி முக்கியமான உதவிகளைச் செய்தார்.

மருத்துவப் பணியாளராக பின்லேடனின் இருப்பிடத்துக்குச் சென்ற அவர், நோய் பரிசோதனை செய்வதாகக் கூறி பின்லேடனின் குழந்தைகளது ரத்த மாதிரிகளை சேகரித்தார். அந்த மாதிரிகளை மரபணு பரிசோதனை செய்த சிஐஏ, பின்லேடன் அங்கு பதுங்கியிருப்பதை உறுதி செய்தது.

இந்த நிலையில், பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டதற்குப் பிறகு ஷகீல் அஃப்ரிடிக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் தேசத்துரோகக் குற்றச்சாட்டின் கீழ் 33 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

பின்லேடனைப் பிடிப்பதற்கு உதவியதற்காக இந்த தண்டனை வழங்கப்பட்டதாக பரவலாகக் கருதப்பட்டாலும், உள்ளூர் பயங்கரவாத அமைப்புக்கு உதவியதாகக் கூறி அவருக்கு அந்த தண்டனை விதிக்கப்பட்டது. அதுமட்டுமன்றி, 8 ஆண்டுகளுக்கு முன்னர் ஷகீல் அஃப்ரிடியின் நோயாளி ஒருவர் இறந்தது தொடர்பாக, அவர் மீது கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது, தாம் ஆட்சிக்கு வந்தால் மருத்துவர் ஷகீல் அஃப்ரிடியை பாகிஸ்தான் சிறையிலிருந்து விடுவிப்பதாக டிரம்ப் வாக்குறுதி அளித்திருந்தார். இந்த நிலையில், அமெரிக்கா வரும் இம்ரான் கானிடம் இதுகுறித்து டிரம்ப் பேசவிருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

http://thinakkural.lk/article/32087

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.