Jump to content

பேலியோ, மருத்துவர் சிவச்சந்திரன் சிவஞானத்தின் முகநூல் குறிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பேலியோ! 
இந்த உணவுமுறையில் ஏதோ உள்ளது. 
பாடசாலைக்காலத்தில் ஒவ்வொருநாளும் கிரிக்கெட் விளையாடுவேன். பல்கலைக்கழகம் முடியும் வரை சைக்கிளில்தான் பயணம். அந்தக்காலத்தில்கூட ஒருதடவை 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்குபற்றுவோமே என பயிற்சிக்குப்போய் அந்தத்தூரத்தை ஓடிமுடிக்கவே கஸ்டப்பட்டு கடைசியில் அந்த ஆசையைக்  கைவிட்டிருந்தேன்.

இப்போது 37 வயதில் உடல் நிறை குறைக்கவென பேலியோ உணவு முறைக்கு மாறினேன். ஒரு மாதம்முன் உணவு தொடங்கிய புதிதில் 100 மீட்டர் ஓடவே நாக்குத் தள்ளியது. அதிக தூரங்கள் நடந்துதான் பயிற்சி செய்தேன். 
இப்போது சரியாக ஒரு மாதமாகிவிட்டது. இன்று 5 கிலோமீட்டரை எந்தக் களைப்பும் இல்லாமல் ஓடிவிட்டு வந்தேன். வழமையாக அதிக தூரம் ஓடினால் கால் வலி தொடங்கமுன் மூச்சு முட்டத்தொடங்கும்.  சுவாசவீதம் அதிகரிக்கும். இதயத்துடிப்பு எகிறும்

ஆனால் 5 கிலோமீட்டர் ஓடியபின்பும் என் சுவாசவீதமும், இதயத்துடிப்பும் ஓய்வாக இருக்கும்போது இருக்கும் நிலையிலேயே இருந்தது. 

நாங்கள் படித்த உடற்தொழிற்பாட்டையே முற்றாக மாற்றிப்போட்டுவிட்டது இந்தப்பேலியோ உணவுமுறை.
 
தொழில்முறையான விளையாட்டு வீரர்கள் இந்த உணவுமுறைக்கு மாறினால் பல சாதனைகளை இலகுவாகச் செய்யலாமென நினைக்கிறேன்.

இந்த உணவுமுறை பற்றிய மேலதிக தகவல்களை விரைவில் ஆறாவதறிவு இணையத்தளத்தில் எழுதுகிறேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏராளன் ,இவருடைய மு.பு இருந்தால் சொல்லுங்கோ. இவர் ஒரு முட்டாள் தனமான முயற்சியில் இறங்கி இருக்கிறார் என்று...உடம்பை குறைக்க வேண்டும் என்றால் சோத்தையும்,காப்பையும்,சீனியையும் குறைத்தாலே உடம்பு தானாக குறையும்...எந்த டயட்டும் எடுத்தவுடன் 3,5 கிலோ குறையும்...உடம்பை குறைக்கிறேன் பேர் வழி இன்னும் கொஞ்ச காலத்தில் பார்த்தாள் கிழவன் மாதிரி இருப்பார்...நிறைய மரக்கறி,மீன் ,இல்லை குழைகளோடு ஒரு சொட்டு சாதம் சாப்பிடலாம்...அத்தோடு உடற் பயிற்சியும் செய்ய வேண்டும்...அதை விடுத்து இலங்கையில் இருந்து கொண்டு பேலியோ ,மண்ணாங்கட்டி என்று கொண்டு 😐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரதி said:

ஏராளன் ,இவருடைய மு.பு இருந்தால் சொல்லுங்கோ. இவர் ஒரு முட்டாள் தனமான முயற்சியில் இறங்கி இருக்கிறார் என்று...உடம்பை குறைக்க வேண்டும் என்றால் சோத்தையும்,காப்பையும்,சீனியையும் குறைத்தாலே உடம்பு தானாக குறையும்...எந்த டயட்டும் எடுத்தவுடன் 3,5 கிலோ குறையும்...உடம்பை குறைக்கிறேன் பேர் வழி இன்னும் கொஞ்ச காலத்தில் பார்த்தாள் கிழவன் மாதிரி இருப்பார்...நிறைய மரக்கறி,மீன் ,இல்லை குழைகளோடு ஒரு சொட்டு சாதம் சாப்பிடலாம்...அத்தோடு உடற் பயிற்சியும் செய்ய வேண்டும்...அதை விடுத்து இலங்கையில் இருந்து கொண்டு பேலியோ ,மண்ணாங்கட்டி என்று கொண்டு 😐

நீங்கள் சொல்ற உணவு முறை தான், பெயர் தான் பேலியோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஏராளன் said:

நீங்கள் சொல்ற உணவு முறை தான், பெயர் தான் பேலியோ.

தவறு ஏராளன்! பேலியோ டயற் என்பது உணவில் மாச்சத்தைக் குறைப்பது மட்டுமல்ல,  இறைச்சியையும் கொழுப்பு வகைகளையும் அதிகமாகச் சேர்த்துக் கொள்வதுமாகும்! இறைச்சியிலும் இதயத்திற்கு ஆபத்தான சிவப்பிறைச்சிகளையும், ஆரோக்கியம் அற்ற தேங்காய் எண்ணை போன்ற நிரம்பிய கொழுப்பமிலங்களையும் உண்ணுமாறு வலியுறுத்துவது தான் பேலியோ உணவு முறையை ரதி சொன்ன முறைகளில் இருந்து வேறுபடுத்துகிறது. கலோரியை எரிக்கும் உடற்பயிற்சியையும் பேலியோ உணவு முறை வலியுறுத்துவதில்லை! 

18 hours ago, ரதி said:

ஏராளன் ,இவருடைய மு.பு இருந்தால் சொல்லுங்கோ. இவர் ஒரு முட்டாள் தனமான முயற்சியில் இறங்கி இருக்கிறார் என்று...உடம்பை குறைக்க வேண்டும் என்றால் சோத்தையும்,காப்பையும்,சீனியையும் குறைத்தாலே உடம்பு தானாக குறையும்...எந்த டயட்டும் எடுத்தவுடன் 3,5 கிலோ குறையும்...உடம்பை குறைக்கிறேன் பேர் வழி இன்னும் கொஞ்ச காலத்தில் பார்த்தாள் கிழவன் மாதிரி இருப்பார்...நிறைய மரக்கறி,மீன் ,இல்லை குழைகளோடு ஒரு சொட்டு சாதம் சாப்பிடலாம்...அத்தோடு உடற் பயிற்சியும் செய்ய வேண்டும்...அதை விடுத்து இலங்கையில் இருந்து கொண்டு பேலியோ ,மண்ணாங்கட்டி என்று கொண்டு 😐

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

3 hours ago, Justin said:

தவறு ஏராளன்! பேலியோ டயற் என்பது உணவில் மாச்சத்தைக் குறைப்பது மட்டுமல்ல,  இறைச்சியையும் கொழுப்பு வகைகளையும் அதிகமாகச் சேர்த்துக் கொள்வதுமாகும்! இறைச்சியிலும் இதயத்திற்கு ஆபத்தான சிவப்பிறைச்சிகளையும், ஆரோக்கியம் அற்ற தேங்காய் எண்ணை போன்ற நிரம்பிய கொழுப்பமிலங்களையும் உண்ணுமாறு வலியுறுத்துவது தான் பேலியோ உணவு முறையை ரதி சொன்ன முறைகளில் இருந்து வேறுபடுத்துகிறது. கலோரியை எரிக்கும் உடற்பயிற்சியையும் பேலியோ உணவு முறை வலியுறுத்துவதில்லை! 

 

அண்ணை சொல்றன் என்று குறை நினைக்காதேங்கோ, ஆரோக்கியம் & நல்வாழ்வு முகப்புத்தக குழுவில் தான் நிறைய வாசித்து புரிந்துகொண்டேன். அவர்கள் உடற்பயிற்சியை கட்டாயமாக செய்ய வற்புறுத்துகின்றார்கள், குறைந்தது பத்தாயிரம் தப்படி நடைபயிற்சி.

இன்னொன்று மிக முக்கியமானது குறைமாவு நிறை கொழுப்பு உணவு முறைக்கு மாறும் முன்னர் இரத்த பரிசோசதனை கட்டாயம் செய்ய சொல்கிறார்கள், பின்னர் 30/60/100 நாட்களின் பின் இரத்தப் பரிசோதனை எடுத்து ஒப்பிடும் போது நல்ல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது.

முக்கியமான இன்னொன்று புரதம் எடுக்கும் போது எ.கா 60kg எடையுடைய ஒருவருக்கு 60g புரதம் ஒரு நாளைக்கு போதுமானது, 2/3 மடங்கு(100g-180g) எடுக்கலாம் என்று கூறப்படுகிறது.
குளுக்கோசில் (காபோஹைதரேற்றில்) இயங்கும் உடலை கீற்றோனில் (கொழுப்பில்) சிறப்பாக இயங்க வைக்கலாம் என்று கூறுகிறார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் பயனடைந்துள்ளதாக பதிவிடுகிறார்கள்.

எனது சகோதரர் இவ்வுணவு முறைமூலம் உடல் எடை குறைப்பு மற்றும் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்தி உள்ளார்.

யாழிலுள்ள நீரிழிவு நோயாளிகளிற்கான சிறப்பு மருத்துவர் அரவிந்தனிடம் சென்ற நண்பருக்கு மருந்துகளிற்கு கட்டுப்படாத நிலைக்கு நீரிழிவு அதிகரித்து காணப்பட்டதை அடுத்து அவரை பேலியோ உணவு முறைகளை முயலுமாறு கூறி அனுப்பியுள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ஏராளன் said:

நீங்கள் சொல்ற உணவு முறை தான், பெயர் தான் பேலியோ.

என்னால முடியல்ல ஏராளான்...நான் சொன்னது ஒவ்வொருவரும்,ஒவ்வொரு நாளும் சாப்பிடும் முறை பற்றி… பேலியோ டயட்டில் எது சாப்பிடோணும்/கூடாது என்பது பற்றியே உங்களுக்கு தெரியலை...யாழில் நவீனன்  இணைச்ச திரியை போய் வாசித்து பாருங்கோ...யார் எந்த டயட் இருந்தால் எனக்கென்ன?...வருத்தம் வந்தால் எனக்கென்ன?...சொன்னால் விளங்கிக் கொள்பவர்களுக்கும்/விளங்க முயற்சிப்பவர்களுக்கும் மட்டும் தான் சொல்லலாம்.

பி;கு நீங்களே டொக்டர் சிவச்சந்திரன்😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

 

அண்ணை சொல்றன் என்று குறை நினைக்காதேங்கோ, ஆரோக்கியம் & நல்வாழ்வு முகப்புத்தக குழுவில் தான் நிறைய வாசித்து புரிந்துகொண்டேன். அவர்கள் உடற்பயிற்சியை கட்டாயமாக செய்ய வற்புறுத்துகின்றார்கள், குறைந்தது பத்தாயிரம் தப்படி நடைபயிற்சி.

இன்னொன்று மிக முக்கியமானது குறைமாவு நிறை கொழுப்பு உணவு முறைக்கு மாறும் முன்னர் இரத்த பரிசோசதனை கட்டாயம் செய்ய சொல்கிறார்கள், பின்னர் 30/60/100 நாட்களின் பின் இரத்தப் பரிசோதனை எடுத்து ஒப்பிடும் போது நல்ல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது.

முக்கியமான இன்னொன்று புரதம் எடுக்கும் போது எ.கா 60kg எடையுடைய ஒருவருக்கு 60g புரதம் ஒரு நாளைக்கு போதுமானது, 2/3 மடங்கு(100g-180g) எடுக்கலாம் என்று கூறப்படுகிறது.
குளுக்கோசில் (காபோஹைதரேற்றில்) இயங்கும் உடலை கீற்றோனில் (கொழுப்பில்) சிறப்பாக இயங்க வைக்கலாம் என்று கூறுகிறார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் பயனடைந்துள்ளதாக பதிவிடுகிறார்கள்.

எனது சகோதரர் இவ்வுணவு முறைமூலம் உடல் எடை குறைப்பு மற்றும் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்தி உள்ளார்.

யாழிலுள்ள நீரிழிவு நோயாளிகளிற்கான சிறப்பு மருத்துவர் அரவிந்தனிடம் சென்ற நண்பருக்கு மருந்துகளிற்கு கட்டுப்படாத நிலைக்கு நீரிழிவு அதிகரித்து காணப்பட்டதை அடுத்து அவரை பேலியோ உணவு முறைகளை முயலுமாறு கூறி அனுப்பியுள்ளார்.

தம்பி, நான் ஏன் குறை நினைக்கிறேன்? ஆனால் முகநூலில் மருத்துவம் பார்க்கும் நலவாழ்வுக் குழுவினர் இதயத்தசைக்கும் சிவப்பு இறைச்சிக்கும் வித்தியாசம் தெரியாத ஆட்களாக இருக்கும் போது அவர்கள் மேற்கொண்டு சொல்லும் எதையும் நான் அறிவியல் சார்ந்ததாக ஏற்றுக் கொள்ளப் போவதில்லை! அதை விடுங்கள், எதையும் நம்புவதும் தொடர்வதும் உங்கள் விருப்பம்! 

பேலியோ, கீற்றோ இரண்டிலும் உள்ள பிரச்சினைகளை நான் பல தடவைகள் எழுதி விட்டேன்! மாச்சத்தைக் குறைத்து கொழுப்பை கூட்டினால் கீற்றோன் கூடும், அதனால் உடலில் குளூக்கோஸ் கூடாது, குளூக்கோஸ் கூடா விட்டால் இன்சுலின் சுரந்தாலும் சுரக்கா விட்டாலும் பிரச்சினையில்லை! எனவே நீரிழிவு கட்டுப்பாட்டில் இருக்கும் என்பது சரியே! ஆனால், சாப்பிடும் கொழுப்பில் இருக்கும் கொழுப்பமிலங்கள் எங்கே போய் படியும் என்றும் யோசிக்க வேண்டும். இதனால் தான் கொழுப்பு, அதுவும் LDL ஐக் கூட்டும் என அறியப் பட்ட நிரம்பிய கொழுப்பான தேங்காய் எண்ணை போன்றவற்றை நீண்ட காலம் எடுத்தால் நீரிழிவு குறைந்தாலும் இதய குருதிக்கலன் நோய்களில் இருந்து தப்ப இயலாது! இந்த நோய்கள் ஒரு மாதத்தில் வரும் நோய்கள் அல்ல, சில ஆண்டுகள் கழித்துத் தான் வெளித்தெரிபவை. 

இதை விட இங்கு சொல்ல எதுவும் இல்லை, என் உடற்பருமன் மருத்துவக் குறிப்புகள் சில நாட்களில் தொடரும் போது நிரூபிக்கப் பட்ட அடிப்படை விடயங்களை எழுதுகிறேன். மற்ற படி சிறந்த மகப்பேற்று மருத்துவரான சிவச்சந்திரனின் அனுபவம் என்பது தனிநபர் அனுபவம் மட்டுமே! விஞ்ஞானம் இன்னும் அவரது கருத்துகளை நிரூபிக்க ஆரம்பிக்கக் கூட இல்லை! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரதி said:

என்னால முடியல்ல ஏராளான்...நான் சொன்னது ஒவ்வொருவரும்,ஒவ்வொரு நாளும் சாப்பிடும் முறை பற்றி… பேலியோ டயட்டில் எது சாப்பிடோணும்/கூடாது என்பது பற்றியே உங்களுக்கு தெரியலை...யாழில் நவீனன்  இணைச்ச திரியை போய் வாசித்து பாருங்கோ...யார் எந்த டயட் இருந்தால் எனக்கென்ன?...வருத்தம் வந்தால் எனக்கென்ன?...சொன்னால் விளங்கிக் கொள்பவர்களுக்கும்/விளங்க முயற்சிப்பவர்களுக்கும் மட்டும் தான் சொல்லலாம்.

பி;கு நீங்களே டொக்டர் சிவச்சந்திரன்😀

பேலியோ உணவு என்னென்ன என்று சொல்லுங்கோ?
நான் அவரில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Justin said:

தம்பி, நான் ஏன் குறை நினைக்கிறேன்? ஆனால் முகநூலில் மருத்துவம் பார்க்கும் நலவாழ்வுக் குழுவினர் இதயத்தசைக்கும் சிவப்பு இறைச்சிக்கும் வித்தியாசம் தெரியாத ஆட்களாக இருக்கும் போது அவர்கள் மேற்கொண்டு சொல்லும் எதையும் நான் அறிவியல் சார்ந்ததாக ஏற்றுக் கொள்ளப் போவதில்லை! அதை விடுங்கள், எதையும் நம்புவதும் தொடர்வதும் உங்கள் விருப்பம்! 

பேலியோ, கீற்றோ இரண்டிலும் உள்ள பிரச்சினைகளை நான் பல தடவைகள் எழுதி விட்டேன்! மாச்சத்தைக் குறைத்து கொழுப்பை கூட்டினால் கீற்றோன் கூடும், அதனால் உடலில் குளூக்கோஸ் கூடாது, குளூக்கோஸ் கூடா விட்டால் இன்சுலின் சுரந்தாலும் சுரக்கா விட்டாலும் பிரச்சினையில்லை! எனவே நீரிழிவு கட்டுப்பாட்டில் இருக்கும் என்பது சரியே! ஆனால், சாப்பிடும் கொழுப்பில் இருக்கும் கொழுப்பமிலங்கள் எங்கே போய் படியும் என்றும் யோசிக்க வேண்டும். இதனால் தான் கொழுப்பு, அதுவும் LDL ஐக் கூட்டும் என அறியப் பட்ட நிரம்பிய கொழுப்பான தேங்காய் எண்ணை போன்றவற்றை நீண்ட காலம் எடுத்தால் நீரிழிவு குறைந்தாலும் இதய குருதிக்கலன் நோய்களில் இருந்து தப்ப இயலாது! இந்த நோய்கள் ஒரு மாதத்தில் வரும் நோய்கள் அல்ல, சில ஆண்டுகள் கழித்துத் தான் வெளித்தெரிபவை. 

இதை விட இங்கு சொல்ல எதுவும் இல்லை, என் உடற்பருமன் மருத்துவக் குறிப்புகள் சில நாட்களில் தொடரும் போது நிரூபிக்கப் பட்ட அடிப்படை விடயங்களை எழுதுகிறேன். மற்ற படி சிறந்த மகப்பேற்று மருத்துவரான சிவச்சந்திரனின் அனுபவம் என்பது தனிநபர் அனுபவம் மட்டுமே! விஞ்ஞானம் இன்னும் அவரது கருத்துகளை நிரூபிக்க ஆரம்பிக்கக் கூட இல்லை! 

வழக்கமான உணவு முறையில் குறைவாக LDL உள்ளதா? பேலியோ/குறைமாவு நிறை கொழுப்பு உணவு எடுக்கும்போது HDL அதிகரிக்கிறதே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/21/2019 at 9:28 PM, ரதி said:

ஏராளன் ,இவருடைய மு.பு இருந்தால் சொல்லுங்கோ. இவர் ஒரு முட்டாள் தனமான முயற்சியில் இறங்கி இருக்கிறார் என்று...உடம்பை குறைக்க வேண்டும் என்றால் சோத்தையும்,காப்பையும்,சீனியையும் குறைத்தாலே உடம்பு தானாக குறையும்...எந்த டயட்டும் எடுத்தவுடன் 3,5 கிலோ குறையும்...உடம்பை குறைக்கிறேன் பேர் வழி இன்னும் கொஞ்ச காலத்தில் பார்த்தாள் கிழவன் மாதிரி இருப்பார்...நிறைய மரக்கறி,மீன் ,இல்லை குழைகளோடு ஒரு சொட்டு சாதம் சாப்பிடலாம்...அத்தோடு உடற் பயிற்சியும் செய்ய வேண்டும்...அதை விடுத்து இலங்கையில் இருந்து கொண்டு பேலியோ ,மண்ணாங்கட்டி என்று கொண்டு 😐

மொட்டைக்கறுப்பன் புழுங்கல் அரிசிச்சோறு விக்கனம் இல்லை எண்டுறாங்கள் தங்கச்சி!
 உங்கடை ஒப்பீனியன்/அட்வைஸ் என்ன தங்கச்சி? 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஏராளன் said:

வழக்கமான உணவு முறையில் குறைவாக LDL உள்ளதா? பேலியோ/குறைமாவு நிறை கொழுப்பு உணவு எடுக்கும்போது HDL அதிகரிக்கிறதே!

ஏராளன்,

பேலியோ டயற் பற்றிய எந்த விஞ்ஞான முறைப்படியான ஆய்வும் இது வரை 6 மாதத்திற்கு மேல் பின் தொடரப் படவில்லை!  உடல் எடை குறைதல், நீரிழிவு மறைதல் என்பன அந்த குறுகிய காலத்தில் நடக்கின்றன. நீங்கள் சொல்லும் HDL அதிகரிப்பும் இந்த குறுகிய கால ஆய்வுகளில் எல்லாவற்றிலும் நிரூபிக்கப் படவில்லை! ஏனெனில் உண்ணும் கொழுப்பின் வகையைப் பொறுத்தே இந்த LDL, HDL அதிகரிப்பு நிகழ்கிறது. பேலியோ முறையிலும் சிலர் ஆரோக்கியமான கொழுப்பு வகைகளை மட்டும் எடுப்பதால் HDL அதிகரிக்கலாம். ஆனால், அதிகம் சிவப்பு இறைச்சியும் ஆரோக்கியமற்ற எண்ணை வகைகளையும் உள்ளெடுப்போர் தங்கள் இதய குருதிக்கலன்களில் கொழுப்புத் திட்டுகளை (atheroma) நீண்ட காலப் போக்கில் உருவாக்கிக் கொள்வர். இது 1948 இல் இருந்து ஆயிரக்கணக்கான நபர்களில், இன்றும் மூன்றாம் தலைமுறையாகத் தொடரும் ஆய்வுகளில் நிரூபிக்கப் பட்டுள்ள மருத்துவ உண்மை. இதை மறுக்கும் தகுதியான ஆய்வு எதுவும் நான் காணவில்லை! முகநூல் அனுபவங்கள் சாட்சியங்கள் ஆய்வு என்று நான் எடுத்துக் கொள்வதில்லை!

நான் LDL அதிகரிக்க காரணம் என்று சொன்னது தேங்கயெண்ணை போன்ற நிரம்பிய கொழுப்பு எடுக்கலாம் என்றும் சிவப்பு இறைச்சி தாராளமாகச் சாப்பிடலாம் என்றும் பேலியோ சொல்வதால். 70 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நிரம்பிய கொழுப்பும் மிருகக் கொழுப்பும் LDL, TG ஐ அதிகரிப்பதுடன் இதய குருதிக் கலன் நோய்களோடு நேரடியான தொடர்புடையவாக அடையாளம் காணப்பட்ட காரணிகள். இந்தத் தகவலை நிராகரிக்கும் எந்த முறைப்படி செய்யப் பட்ட ஆய்வையும் நான்  காணவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றியண்ணை கருத்து பகிர்வுக்கு.
மேலும் சந்தேகங்கள் வந்தால் கேட்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎7‎/‎23‎/‎2019 at 5:48 AM, ஏராளன் said:

பேலியோ உணவு என்னென்ன என்று சொல்லுங்கோ?
நான் அவரில்லை.

ஏன் நீங்கள் தானே யஸ்டினின் திரியில் நவீனன் இணைத்த பேலியோ சம்மந்தமான கட்டுரையை கொண்டு வந்து இணைத்தீர்கள். வாசிக்கேல்லையா? 

On ‎7‎/‎23‎/‎2019 at 12:50 PM, குமாரசாமி said:

மொட்டைக்கறுப்பன் புழுங்கல் அரிசிச்சோறு விக்கனம் இல்லை எண்டுறாங்கள் தங்கச்சி!
 உங்கடை ஒப்பீனியன்/அட்வைஸ் என்ன தங்கச்சி? 😎

என்னைப் பொறுத்த வரை நீங்கள் சொன்ன அரிசியில் சமைத்த சோறு செமிபாடு  அடைய அதிக நேரம் எடுக்கும் ... அநேகமாய் இங்கு வேலை முடிந்து போய் பின்னேரம் அல்லது இரவு உதை சாப்பிட்டால் செமிக்காது ...நான் பாசுமதி தான். ஆனால் இடைக் கிடை வரகு,சாமை,தினை  போன்றவற்றில் தான் சோறு சமைப்பது.
என்ட  சித்தப்பா ஒருவர் இங்கு லண்டனுக்கு வந்து 30 வருசத்துக்கு மேல் இருக்கும்...குத்தரிசி மட்டும் தான் சாப்பிடுவார்...சாப்பாட்டில் வலு கவனம்...ஆனால், உலகத்தில் இல்லாது வியாதி எல்லாம் அவருக்கு இருக்கு...இத்தனைக்கும் குடி, சிகரெட் ஒன்றும் இல்லை...அவருக்கு பெரிதாய் உடம்பும் இல்லை.

நான் நினைக்கிறன் இலங்கை போன்ற வெப்ப வலய நாடுகளில் அதிக வியர்வை வெளியேறுவதால் செமிபாடு அடைவது விரைவாக இருக்கும்...அத்தோடு சீனியும் உறிஞ்சி எடுக்கப்பட்டு விடும் 

இது ஏன் எனறு எனக்கும் விளங்கவில்லை ...யாராவது மருத்துவம் தெரிந்தவர்கள் தான் பதில் சொல்லோணும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

ஏன் நீங்கள் தானே யஸ்டினின் திரியில் நவீனன் இணைத்த பேலியோ சம்மந்தமான கட்டுரையை கொண்டு வந்து இணைத்தீர்கள். வாசிக்கேல்லையா? 

என்னைப் பொறுத்த வரை நீங்கள் சொன்ன அரிசியில் சமைத்த சோறு செமிபாடு  அடைய அதிக நேரம் எடுக்கும் ... அநேகமாய் இங்கு வேலை முடிந்து போய் பின்னேரம் அல்லது இரவு உதை சாப்பிட்டால் செமிக்காது ...நான் பாசுமதி தான். ஆனால் இடைக் கிடை வரகு,சாமை,தினை  போன்றவற்றில் தான் சோறு சமைப்பது.
என்ட  சித்தப்பா ஒருவர் இங்கு லண்டனுக்கு வந்து 30 வருசத்துக்கு மேல் இருக்கும்...குத்தரிசி மட்டும் தான் சாப்பிடுவார்...சாப்பாட்டில் வலு கவனம்...ஆனால், உலகத்தில் இல்லாது வியாதி எல்லாம் அவருக்கு இருக்கு...இத்தனைக்கும் குடி, சிகரெட் ஒன்றும் இல்லை...அவருக்கு பெரிதாய் உடம்பும் இல்லை.

நான் நினைக்கிறன் இலங்கை போன்ற வெப்ப வலய நாடுகளில் அதிக வியர்வை வெளியேறுவதால் செமிபாடு அடைவது விரைவாக இருக்கும்...அத்தோடு சீனியும் உறிஞ்சி எடுக்கப்பட்டு விடும் 

இது ஏன் எனறு எனக்கும் விளங்கவில்லை ...யாராவது மருத்துவம் தெரிந்தவர்கள் தான் பதில் சொல்லோணும் 

ரதி  ,

பாசுமதி, மற்றும் தீட்டிய அரிசிகளை விடவும் தீட்டாத குத்தரிசி, மொட்டைக்கறுப்பன் அரிசிகள் ஆரோக்கியமானவை. (ஆனால் இவற்றையும் கூட அதிகமாக உட்கொண்டால் அது மிகையான மாச்சத்தை உள்ளெடுப்பதாகவே அமையும்). தீட்டாத அரிசிகளில் இருக்கும் முக்கியமான நன்மைகள்:

1. நார்த்தன்மை அதிகம் என்பதால் சமிபாடடைய அதிக நேரம் எடுக்கும். இதனால் உடலில் குளூக்கோஸ் உடனடியாக அதிகரிக்காது, இதனால் நீரிழிவு நிலைமைகள் ஏற்படாது. மாச்சத்துள்ள உணவுகள் எவ்வளவு வேகமாக குளூக்கோசை அதிகரிக்கின்றன என்று கணிக்கும் அளவீட்டை கிளைசீமிக் இண்டெக்ஸ் (Glycemic Index - GI) என்று அழைப்பர்.GI 55 இற்குக் கீழ் உள்ள மாப்பொருட்கள் நீரிழிவு வரும் வாய்ப்பைச் சிறிது குறைக்கின்றன. தீட்டிய வெள்ளை அரிசியின் GI 79, தீட்டாத அரிசியின் GI 55. வெள்ளை பாஸ்மதி அரிசியை விட பிறவுண் நிறமான தீட்டாத பாஸ்மதி அரிசி GI ஐப் பொறுத்த வரை ஆரோக்கியமானது. அதுவும் ஏறத்தாழ GI 55 தான்.  

2. தீட்டாத அரிசியில் இருக்கும் நார்த்தன்மை உணவோடு சேர்ந்து எமக்குள் உள்நுழையக் கூடிய நச்சுத் தன்மையான பொருட்கள் குடலினால் உறிஞ்சப் படுவதைக் குறைக்கும். இதனால் பெருங்குடல் புற்று நோய் (colon cancer) போன்ற நோய்கள் வரும் வாய்ப்புக் குறையும். நார்த்தன்மை குறைவான உணவுகளோடு அதிகம் இறைச்சியையும் உண்பதால் மேற்கு நாடுகளில்  பெருங்குடல் புற்று நோய் ஒரு பரவலான புற்று நோயாக உருவாகி வருகிறது.  

3. இது இன்னும் ஆய்வில் இருக்கும் ஒரு விடயம்: நார்த்தன்மையான உணவுகளால் குடலில் இருக்கும் சில  பற்றீரியாக்கள் பெருகி நன்மையடைவதால் எங்கள் உடலின் பல்வேறு உறுப்புகளிலும் விளைவுகள் ஏற்படும். அனேகமாக நன்மையான விளைவுகளே! Probiotic yogurt என்று வெளிநாடுகளில் விற்கிறார்கள். அதில் இருப்பது இப்படியான நல்ல விளைவுகள் தரும் குடல் பக்ரீரியாக்கள் தான். நார்த்தன்மையான தீட்டாத அரிசியும் ஏனைய மரக்கறி பழ வகைகளும்  போதியளவு உட் கொண்டால் probiotic yogurt அவசியமில்லை.

ஆனால் நீங்கள் சொல்வது போல, வெள்ளை அரிசி சாப்பிடும் அதே அளவில்  குத்தரிசி சாப்பிட முடியாது! என் அனுபவத்தில் பாஸ்மதியின் மூன்றிலொரு பங்கு குத்தரிசி சாப்பிட்டால் வயிறு நிரம்பி விடும். அது நல்லதும் தானே?   முயற்சி அதிகமற்ற உணவுக் கட்டுப் பாடு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Justin said:

ரதி  ,

பாசுமதி, மற்றும் தீட்டிய அரிசிகளை விடவும் தீட்டாத குத்தரிசி, மொட்டைக்கறுப்பன் அரிசிகள் ஆரோக்கியமானவை. (ஆனால் இவற்றையும் கூட அதிகமாக உட்கொண்டால் அது மிகையான மாச்சத்தை உள்ளெடுப்பதாகவே அமையும்). தீட்டாத அரிசிகளில் இருக்கும் முக்கியமான நன்மைகள்:

1. நார்த்தன்மை அதிகம் என்பதால் சமிபாடடைய அதிக நேரம் எடுக்கும். இதனால் உடலில் குளூக்கோஸ் உடனடியாக அதிகரிக்காது, இதனால் நீரிழிவு நிலைமைகள் ஏற்படாது. மாச்சத்துள்ள உணவுகள் எவ்வளவு வேகமாக குளூக்கோசை அதிகரிக்கின்றன என்று கணிக்கும் அளவீட்டை கிளைசீமிக் இண்டெக்ஸ் (Glycemic Index - GI) என்று அழைப்பர்.GI 55 இற்குக் கீழ் உள்ள மாப்பொருட்கள் நீரிழிவு வரும் வாய்ப்பைச் சிறிது குறைக்கின்றன. தீட்டிய வெள்ளை அரிசியின் GI 79, தீட்டாத அரிசியின் GI 55. வெள்ளை பாஸ்மதி அரிசியை விட பிறவுண் நிறமான தீட்டாத பாஸ்மதி அரிசி GI ஐப் பொறுத்த வரை ஆரோக்கியமானது. அதுவும் ஏறத்தாழ GI 55 தான்.  

2. தீட்டாத அரிசியில் இருக்கும் நார்த்தன்மை உணவோடு சேர்ந்து எமக்குள் உள்நுழையக் கூடிய நச்சுத் தன்மையான பொருட்கள் குடலினால் உறிஞ்சப் படுவதைக் குறைக்கும். இதனால் பெருங்குடல் புற்று நோய் (colon cancer) போன்ற நோய்கள் வரும் வாய்ப்புக் குறையும். நார்த்தன்மை குறைவான உணவுகளோடு அதிகம் இறைச்சியையும் உண்பதால் மேற்கு நாடுகளில்  பெருங்குடல் புற்று நோய் ஒரு பரவலான புற்று நோயாக உருவாகி வருகிறது.  

3. இது இன்னும் ஆய்வில் இருக்கும் ஒரு விடயம்: நார்த்தன்மையான உணவுகளால் குடலில் இருக்கும் சில  பற்றீரியாக்கள் பெருகி நன்மையடைவதால் எங்கள் உடலின் பல்வேறு உறுப்புகளிலும் விளைவுகள் ஏற்படும். அனேகமாக நன்மையான விளைவுகளே! Probiotic yogurt என்று வெளிநாடுகளில் விற்கிறார்கள். அதில் இருப்பது இப்படியான நல்ல விளைவுகள் தரும் குடல் பக்ரீரியாக்கள் தான். நார்த்தன்மையான தீட்டாத அரிசியும் ஏனைய மரக்கறி பழ வகைகளும்  போதியளவு உட் கொண்டால் probiotic yogurt அவசியமில்லை.

ஆனால் நீங்கள் சொல்வது போல, வெள்ளை அரிசி சாப்பிடும் அதே அளவில்  குத்தரிசி சாப்பிட முடியாது! என் அனுபவத்தில் பாஸ்மதியின் மூன்றிலொரு பங்கு குத்தரிசி சாப்பிட்டால் வயிறு நிரம்பி விடும். அது நல்லதும் தானே?   முயற்சி அதிகமற்ற உணவுக் கட்டுப் பாடு!

நீங்கள் சொல்வது உண்மை...ஆனால் குத்தரிசி சாப்பிட்டுக் கொண்டு உடம்பில் கவனமாய் இருப்பவர்களுக்கும் இதயம் சம்மந்தமான  வருத்தம் வருகின்றதே!....அதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீங்கள்?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர் ஒருவரின் கேள்வி

"பேலியோல கீடோசிஸ்ல உடம்பு இருக்கு ஓகே.. அசிடோசிஸ் வந்து விடாதா என்று ஐயம் தெரிவித்தார். டயாபடிஸ் பேஷண்ட்க்கு பேலியோ கொடுத்தா கீட்டோ அசிடோசிஸ் வந்து கோமா போய்டுவாங்களே "என்றார்

எனது பதில் 

கீடோசிஸ்ல மூன்று நமக்கு தெரியும் 

ஒன்று 
நீரிழிவு நோயாளிக்கு 
ரத்த சர்க்கரை அளவுகள் கட்டுக்கடங்காமல் இருக்கும் போது உடலில் உள்ள கொழுப்பு உருகி கீடோன்கள்  ரத்தத்தில் அதிகமாகி விடும். உடலுக்கு எதை எரிபொருளாக உபயோகிப்பது என்ற குழப்பம் ஏற்பட்டு மூளை ஷட் டவுன் ஆகி கோமாவுக்கு போகிறார். இது டயாபடிக் கீடோ அசிடோசிஸ் அல்லது நீரிழிவு நோயாளிக்கு ஏற்படும் கீடோ அமிலத்தன்மை. உடனே கண்டுபிடித்து இன்சுலினும் பாட்டில் பாட்டிலாக க்ளூகோஸ் ஏற்றி காப்பாற்ற வேண்டும் 

இரண்டாவது கீடோசிஸ் 
நியூட்ரிசனல் கீடோசிஸ் அல்லது உணவு முறையால் வரும் கீடோசிஸ் 

நீங்கள் உங்கள் உணவில் மாவுச்சத்தை 70 சதவிகிதம் எடுப்பதற்கு பதில் கொழுப்பு உணவை எடுத்தால் மாவுச்சத்தை 5 சதவிகிதத்திற்கும் கீழ் குறைத்தால் உங்கள் உடல் கீடோன்கள் (90%) + ஃபேட்டி அமிலங்கள் + கொஞ்சூண்டு க்ளூகோஸ் கொண்டு இயங்க ஆரம்பித்து விடும். 
இதற்கு பெயர் " நியூட்ரிசனல் கீடோசிஸ் அல்லது உணவு முறையால் வரும் கீடோசிஸ்" 

இதில் நமது உடலுக்கு கீடோன்கள் எரிபொருளாகி விடுவதால் ரத்தத்தில் அபாயகர அளவுகளுக்கு செல்லாது. 

மூன்றாவது 
ஸ்டார்வேஷன் கீடோசிஸ் 
அல்லது பட்டினியில் வரும் கீடோசிஸ்

நீங்கள் தாய்லாந்து குகை போல எங்கோ சென்று மாட்டிக்கொண்டால் உங்களை காப்பாற்றுவது இது. உங்கள் உடலில் உள்ள கடைசி பொட்டு கொழுப்பும் புரதமும் இருக்கும் வரை உடல் இந்த கீடோசிஸில் இயங்கும். 
உண்மையில் உயிரை காக்கும் மகத்தான வேலையை இந்த கீடோசிஸ் செய்கிறது. 

நமது பாஷையில் சொல்ல வேண்டுமெனில் 

முதல் கீடோசிஸான 
டயாபடிக் கீடோ அசிடோசிஸ் என்பது 
சுனாமியில் ஸ்விம்மிங்கை போடுவது போல  

டேண்ஜரானது..

இரண்டாவது கீடோசிஸான 
நியூட்ரிசனல் கீடோசிஸ் 
சீசனில் குற்றாலத்தில் போடும் இதமான குளியலைப் போன்றது

அலாதி சுகமானது

மூன்றாவது கீடோசிஸான 
ஸ்டார்வேசன் கீடோசிஸ்

ஆள் அரவமற்ற புல் பூண்டு கூட இல்லாத பாலைவனத்தில் உங்களை காப்பாற்றும் பாலைவனப் பூஞ்சோலை போன்றது..

மூன்றிலுமே கீடோன்கள் / தண்ணீர் தான் இருக்கிறது 

ஆனால் இருக்கும் இடத்தை பொறுத்தும் அளவைப்பொறுத்தும் 

அபாயமாகவோ
அலாதி சுகமாகவோ
உயிர் காப்பதாகவோ அமைகிறது

நன்றி 
                                                             
Dr.ஃபரூக் அப்துல்லா,
பொது நல மருத்துவர்  
சிவகங்கை

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/25/2019 at 2:37 PM, ரதி said:

நீங்கள் சொல்வது உண்மை...ஆனால் குத்தரிசி சாப்பிட்டுக் கொண்டு உடம்பில் கவனமாய் இருப்பவர்களுக்கும் இதயம் சம்மந்தமான  வருத்தம் வருகின்றதே!....அதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீங்கள்?

 

ரதி, இதைப் பற்றி சில தடவைகள் கருத்தாடியிருக்கிறோம். ஊரில் உடம்பு வாசி என்று அழைக்கப் படுவது, உயிரியலில் ஜீன்களால் கட்டுப் படுத்தப் படும் பரம்பரையியல்பாக  (genotype) அடையாளம் காணப் பட்டிருக்கிறது. மனிதர்கள் விலங்குகள் போல குடும்பத்திற்குள் உறவுகளுக்குள் கூடி இனப்பெருக்கம் செய்யாத இனமாக இருப்பதால், மனித இனம் out-bred ஆக இருக்கிறது. இதனால் எங்கள் ஜீன்களில் பல்லினத் தன்மை (diversity) காணப்படுகிறது. இது பெரும்பாலும் மனித இனம் தப்பி வாழ உதவும் நல்ல விடயம் தான்! உதாரணமாக எச்.ஐ.வி வைரஸ் தொற்றினாலும் எயிட்ஸ் நோய் வராத மனிதர்கள் இருக்கிறார்கள்! கொலஸ்ட்ரோல் குருதியில் 300 ஐத் தாண்டினாலும் இதய நோய் வராத மனிதர்கள் இருக்கிறார்கள். இந்த ஜீன்களின் பல்லினத் தன்மையின் தீய பக்கம், சிலரில் ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள் மட்டுமே இதய குருதிக் கலன் நோய்களைத் தடுக்கப் போதுமானவையாக இருப்பதில்லை! இதனால் தான் உணவுக்கட்டுப்பாட்டுடன் மட்டும் நிற்காமல் உடற்பயிற்சி, மன அழுத்தம் குறைத்தல் என்பவற்றையும் கடைப்பிடிக்க வேண்டுமென்று மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்!   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/22/2019 at 3:34 PM, Justin said:

பேலியோ டயற் என்பது உணவில் மாச்சத்தைக் குறைப்பது மட்டுமல்ல,  இறைச்சியையும் கொழுப்பு வகைகளையும் அதிகமாகச் சேர்த்துக் கொள்வதுமாகும்! இறைச்சியிலும் இதயத்திற்கு ஆபத்தான சிவப்பிறைச்சிகளையும், ஆரோக்கியம் அற்ற தேங்காய் எண்ணை போன்ற நிரம்பிய கொழுப்பமிலங்களையும் உண்ணுமாறு வலியுறுத்துவது தான் பேலியோ உணவு முறையை ரதி சொன்ன முறைகளில் இருந்து வேறுபடுத்துகிறது. கலோரியை எரிக்கும் உடற்பயிற்சியையும் பேலியோ உணவு முறை வலியுறுத்துவதில்லை! 

சாவை வருந்தி அழைக்கும் செய்முறை.

எப்படி உணவு முறையானது?

On 7/24/2019 at 9:07 PM, Justin said:

பாசுமதி, மற்றும் தீட்டிய அரிசிகளை விடவும் தீட்டாத குத்தரிசி, மொட்டைக்கறுப்பன் அரிசிகள் ஆரோக்கியமானவை. (ஆனால் இவற்றையும் கூட அதிகமாக உட்கொண்டால் அது மிகையான மாச்சத்தை உள்ளெடுப்பதாகவே அமையும்). தீட்டாத அரிசிகளில் இருக்கும் முக்கியமான நன்மைகள்:

1. நார்த்தன்மை அதிகம் என்பதால் சமிபாடடைய அதிக நேரம் எடுக்கும். இதனால் உடலில் குளூக்கோஸ் உடனடியாக அதிகரிக்காது, இதனால் நீரிழிவு நிலைமைகள் ஏற்படாது. மாச்சத்துள்ள உணவுகள் எவ்வளவு வேகமாக குளூக்கோசை அதிகரிக்கின்றன என்று கணிக்கும் அளவீட்டை கிளைசீமிக் இண்டெக்ஸ் (Glycemic Index - GI) என்று அழைப்பர்.GI 55 இற்குக் கீழ் உள்ள மாப்பொருட்கள் நீரிழிவு வரும் வாய்ப்பைச் சிறிது குறைக்கின்றன. தீட்டிய வெள்ளை அரிசியின் GI 79, தீட்டாத அரிசியின் GI 55. வெள்ளை பாஸ்மதி அரிசியை விட பிறவுண் நிறமான தீட்டாத பாஸ்மதி அரிசி GI ஐப் பொறுத்த வரை ஆரோக்கியமானது. அதுவும் ஏறத்தாழ GI 55 தான்.  

2. தீட்டாத அரிசியில் இருக்கும் நார்த்தன்மை உணவோடு சேர்ந்து எமக்குள் உள்நுழையக் கூடிய நச்சுத் தன்மையான பொருட்கள் குடலினால் உறிஞ்சப் படுவதைக் குறைக்கும். இதனால் பெருங்குடல் புற்று நோய் (colon cancer) போன்ற நோய்கள் வரும் வாய்ப்புக் குறையும். நார்த்தன்மை குறைவான உணவுகளோடு அதிகம் இறைச்சியையும் உண்பதால் மேற்கு நாடுகளில்  பெருங்குடல் புற்று நோய் ஒரு பரவலான புற்று நோயாக உருவாகி வருகிறது.  

3. இது இன்னும் ஆய்வில் இருக்கும் ஒரு விடயம்: நார்த்தன்மையான உணவுகளால் குடலில் இருக்கும் சில  பற்றீரியாக்கள் பெருகி நன்மையடைவதால் எங்கள் உடலின் பல்வேறு உறுப்புகளிலும் விளைவுகள் ஏற்படும். அனேகமாக நன்மையான விளைவுகளே! Probiotic yogurt என்று வெளிநாடுகளில் விற்கிறார்கள். அதில் இருப்பது இப்படியான நல்ல விளைவுகள் தரும் குடல் பக்ரீரியாக்கள் தான். நார்த்தன்மையான தீட்டாத அரிசியும் ஏனைய மரக்கறி பழ வகைகளும்  போதியளவு உட் கொண்டால் probiotic yogurt அவசியமில்லை.

ஆனால் நீங்கள் சொல்வது போல, வெள்ளை அரிசி சாப்பிடும் அதே அளவில்  குத்தரிசி சாப்பிட முடியாது! என் அனுபவத்தில் பாஸ்மதியின் மூன்றிலொரு பங்கு குத்தரிசி சாப்பிட்டால் வயிறு நிரம்பி விடும். அது நல்லதும் தானே?   முயற்சி அதிகமற்ற உணவுக் கட்டுப் பாடு!

நீங்கள் சொல்லுவதும், இந்த ஆய்வும் ஏறத்தாழ ஒன்றா?

 

 

Link to comment
Share on other sites

On 7/24/2019 at 10:07 PM, Justin said:

பாசுமதி, மற்றும் தீட்டிய அரிசிகளை விடவும் தீட்டாத குத்தரிசி, மொட்டைக்கறுப்பன் அரிசிகள் ஆரோக்கியமானவை. (ஆனால் இவற்றையும் கூட அதிகமாக உட்கொண்டால் அது மிகையான மாச்சத்தை உள்ளெடுப்பதாகவே அமையும்). தீட்டாத அரிசிகளில் இருக்கும் முக்கியமான நன்மைகள்:

1. நார்த்தன்மை அதிகம் என்பதால் சமிபாடடைய அதிக நேரம் எடுக்கும். இதனால் உடலில் குளூக்கோஸ் உடனடியாக அதிகரிக்காது, இதனால் நீரிழிவு நிலைமைகள் ஏற்படாது. மாச்சத்துள்ள உணவுகள் எவ்வளவு வேகமாக குளூக்கோசை அதிகரிக்கின்றன என்று கணிக்கும் அளவீட்டை கிளைசீமிக் இண்டெக்ஸ் (Glycemic Index - GI) என்று அழைப்பர்.GI 55 இற்குக் கீழ் உள்ள மாப்பொருட்கள் நீரிழிவு வரும் வாய்ப்பைச் சிறிது குறைக்கின்றன. தீட்டிய வெள்ளை அரிசியின் GI 79, தீட்டாத அரிசியின் GI 55. வெள்ளை பாஸ்மதி அரிசியை விட பிறவுண் நிறமான தீட்டாத பாஸ்மதி அரிசி GI ஐப் பொறுத்த வரை ஆரோக்கியமானது. அதுவும் ஏறத்தாழ GI 55 தான்.  

மூல நோய் உள்ளவர்கள் நார்த்தன்மை அதிகமுள்ள உணவுப்பொருட்களை உண்டு விட்டு சிரமப்படுவார்கள்.

Link to comment
Share on other sites

On 7/22/2019 at 4:34 PM, Justin said:

ஆரோக்கியம் அற்ற தேங்காய் எண்ணை போன்ற நிரம்பிய கொழுப்பமிலங்களையும் 

ஊரிலுள்ளவர்கள் தேங்காயெண்ணையை தவிர்த்து நல்லெண்ணையை (எள்ளெண்ணை) பயன்படுத்தலாம்.

வெளிநாடுகளில் வசிப்போர் ஒலிவ் எண்ணையை பயன்படுத்தலாம். அல்லது சூரியகாந்தி எண்ணை, கொல்சா (கனோலா) எண்ணை போன்றவற்றை பயன்படுத்தலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொழுப்பு என்றால் என்ன? கொலஸ்டிரால் என்றால் என்ன? கொழுப்பு தான் மாரடைப்பிற்கு காரணமா?

https://doctorarunkumar.com/paleo-lchf-diet/fat-cholesterol-heart-disease-hypothesis/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ஏராளன் said:

கொழுப்பு என்றால் என்ன? கொலஸ்டிரால் என்றால் என்ன? கொழுப்பு தான் மாரடைப்பிற்கு காரணமா?

https://doctorarunkumar.com/paleo-lchf-diet/fat-cholesterol-heart-disease-hypothesis/

இணைப்பிற்கு  நன்றி ஏராளன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, ஏராளன் said:

கொழுப்பு என்றால் என்ன? கொலஸ்டிரால் என்றால் என்ன? கொழுப்பு தான் மாரடைப்பிற்கு காரணமா?

https://doctorarunkumar.com/paleo-lchf-diet/fat-cholesterol-heart-disease-hypothesis/

இணைப்புக்கு நன்றி ஏராளன்.

3 minutes ago, குமாரசாமி said:

இணைப்பிற்கு  நன்றி ஏராளன்.

நானும் இப்ப தான் பார்த்து முடித்து பதில் போட மேலே நீங்களும் பதில் போட்டிருக்கிறீர்கள்.சிரிப்பாக இருந்தது.வயதொற்றுமை போல இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

இணைப்புக்கு நன்றி ஏராளன்.

நானும் இப்ப தான் பார்த்து முடித்து பதில் போட மேலே நீங்களும் பதில் போட்டிருக்கிறீர்கள்.சிரிப்பாக இருந்தது.வயதொற்றுமை போல இருக்கும்.

இருக்கும்...இருக்கும்....வருத்தம் வயது எல்லா ஒற்றுமையும் இருக்கும்...😄

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.