Jump to content

பாடப் புத்தகங்களில் இருந்து கல்வி கற்றல்..


Recommended Posts

பாடப் புத்தகங்களில் இருந்து கல்வி கற்றல்

நீங்கள் பள்ளிப் பாடப்புத்தகம் படிக்கும்போது என்ன செய்கின்றீர்கள்? எவ்வாறு படிக்கின்றீர்கள்?

நீங்கள் பாடப்புத்தகம் படிப்பதற்கும், மற்றைய புத்தகங்களை உதாரணமாக பொழுதுபோக்கு சஞ்சிகைகளை வாசிக்கும் போதும் உள்ள வித்தியாசங்கள் எவை?

நீங்கள் பாடப்புத்தகம் படிக்கும்போது கடினமாக இருந்தால், அவ்வாறு அது கடினமாகத் தோன்றுவதற்கான காரணங்கள் என்ன?

கீழே பாடப்புத்தகங்களை எப்படி படிப்பது என்பது சம்மந்தமாக சில விடயங்கள் பேசப்படுகின்றது.

1. படிப்பதற்கு ஆயத்தமாகுதல்

2. மனதை ஒருமுகப்படுத்தி படித்தல்

3. படித்தபின் படித்தவற்றை மனதினுள் ஒழுங்குபடுத்துதல்

இவற்றின் நோக்கங்கள்

நீங்கள் வாசிப்பதைபற்றி மேலதிகமாக அறிந்துகொள்ள உதவுதல்

நீங்கள் உங்கள் நினைவாற்றலைப் பெருக்க உதவுவதோடு பாடப்புத்தகத்தில் படித்தவற்றை விளங்கிக்கொள்ள உதவுதல்

1. படிப்பதற்கு ஆயத்தமாகுதல்

* மனதை பாடப்புத்தகத்தில் ஒருமுகப்படுத்தி வையுங்கள்

* நீங்கள் பாடப்புத்தகத்தில் உங்கள் மனதை ஒருமுகப்படுத்துகின்றீர்கள் என்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள்

* படிப்பதற்கு சாதகமான புறச்சூழ்நிலையை உருவாக்கிகொள்ளுங்கள் - அமைதி, சுத்தம்...

* படிப்பதற்கு தேவையான உங்கள் தனிப்பட்ட தேவைகளை அறிந்துகொள்ளுங்கள்

* படிக்கும் கால அளவை திட்டமிட்டுக் கொள்ளுங்கள்

* படிப்பதற்கு உற்சாகமூட்டும் விடயங்களை செய்யுங்கள் - படிக்கும் மேசையை துப்பரவாக வைத்திருத்தல், குடிப்பதற்கு அருகில்தேனீர் வைத்திருத்தல்

இலக்கை தீர்மானித்தல்

SQ3R (கணிப்புக்கள், கேள்விகள், வாசிப்பு, மூளையினுள் பதிதல்/ மீளநினைவுபடுத்தல், மீளவும் திரும்பப் பார்த்தல் ) முறையை பயன்படுத்துங்கள்

குறிப்பு: SQ3R stands for Survey, Question, Read, Recite and Review

ஏன் கணிப்புக்கள் தேவை?

இது உங்கள் கவனத்தை சரியான திசையில் செலுத்த உதவும்

இது முக்கிய குறிப்புகளை அறிந்து கொள்ள உதவும்

இது உங்களை நிலைப்படுத்திக் கொள்ள உதவும்

உங்கள் பாடப்புத்தகத்தை வாசிக்கக்கூடிய சிறிய பகுதிகளாகப் பிரித்து கொள்ளுங்கள் (பந்திகளை அல்லது பிரிவுகளை வழிகாட்டியாக வைத்திருங்கள்)

1. கணிப்புக்கள்

இது clue களை கண்டுபிடிப்பது போன்றதாகும், அதாவது கீழ்வருவனவற்றை கொண்டது...

Titles, Headings, & Subheadings

Learning Objectives

Preview/Review/Summary Statements

Graphic Highlighting (bold, italics)

Visuals/Graphs/Charts

Examples & Textboxes

இவ்வாறு இன்னும் பல....

2. கேள்விகள்

ஏன் கேள்விகள் தேவை?

ஆர்வத்தை உருவாக்குவதற்கு

அடிப்படை விளக்கத்தை உருவாக்குவதற்கு

பன்முகத் தன்மையை உருவாக்குவதற்கு

மனதை ஒருமுகப்படுத்தி பாடத்தினுள் கொண்டு செல்வதற்கு

எப்படி கேள்விகள் கேட்பது?

Use titles, headings, and subheadings to create questions

பாடப்புத்தகம் அல்லாத வேறு மூலங்களில் இருந்தும் கேள்விகளை தயார் செய்யுங்கள்

வாசிக்கும் போது வரும் கேள்விகளை எழுதுங்கள்

கேள்விகளை இலக்கை அடைவதற்குரிய குறியாக அமைத்தல்

Stick to your time limits for the session

Pay attention to the visual layout

Use questions help with focus

Use highlighting sparingly

3. வாசிப்பு

பாடப்புத்தத்தின் அலகுகளை சிறிய பகுதிகளாக பிரித்து படியுங்கள்

வாசித்த பகுதியை விளங்கிக் கொண்டபின்பே அடுத்த புதிய பகுதியினுள் வாசிப்பதற்கு செல்லுங்கள்

வாசிக்கும் போது பாடம் சம்மந்தமாக உங்கள் மனதினுள் எழும் வினாக்களிற்க்கு உங்களால் பதில் கூறக்கூடியதாக இருக்க வேண்டும்

தற்போது நீங்கள் வாசித்த பகுதியை/பந்தியை முன்னம் நீங்கள் வாசித்த பகுதியுடன்/பந்தியுடன் உங்களால் தொடர்புபடுத்தக் கூடியதாக இருக்கவேண்டும்

4. மூளையினுள் ஒழுங்காக பதிதல்/ மீள்நினைவூட்டுதல் ***மீள்நினைவூட்டுதல் மிக முக்கியம்***

நீங்கள் என்ன வாசித்தீர்கள் என்பதை உங்கள் சொந்த மொழிநடையில் உங்களுக்கு விளங்கப்படுத்துங்கள்

உங்களால் எந்தவகையில் நினைவுபடுத்துவது உங்கள் மூளைக்கு இலகுவாக இருக்கின்றதோ அந்த வழியில் படிக்கும் விடயங்களை உங்கள் மூளையினுள் பதியுங்கள்

ஒரு குறிப்பிட்ட அலகின் வெவ்வேறு பகுதிகள் ஒன்றுடன் ஒன்று எவ்வாறு தொடர்புபட்டுள்ளது என்பதை உங்களுக்கு விபரியுங்கள்

உங்களிற்கு எழும் கேள்விகளிற்கு விடை அளியுங்கள்

5. மீளவும் திரும்பிப் பார்த்தல் (வாசித்த பிற்பாடு) ***மிக முக்கியம்***

நீங்கள் குறிப்பிட்ட ஒரு பகுதியை வாசித்து முடித்ததும் செய்யவேண்டும்

பேராசிரியரினால் தரப்படும் விரிவுரையுடன் பாடப்புத்தகத்தில் படித்ததை ஒருங்கிணைத்து பார்க்கக்கூடியதாய் இருக்க வேண்டும்

உங்கள் பேராசிரியரிடம் கேட்பதற்கு கேள்விகளின் பட்டியலை தயார் செய்யுங்கள்

நீங்கள் என்ன வாசித்தீர்கள் என்பதை பற்றிய ஒரு சுருக்கத்தை எழுதுங்கள்

SQ3R பயிற்சி:

ஒரு பந்தியை வாசித்து அதில் clue களை தேடுங்கள்

இலக்கு: குறிப்பிட்ட பந்தியில் கூறப்படும் அடிப்படை விடயத்தை கண்டுபிடியுங்கள்

பாடப்புத்தக தகவல்களை கட்டுக்கோப்பாக கொண்டுவருவதற்கான நுணுக்கங்கள்:

குறிப்பு எடுத்தல்

வரைபடங்களை பாவித்தல் - Flow Charts/Concept Maps

தொடர்ச்சியான காலக் கணிப்பை பின்பற்றல் - Continuums/Time Lines

அடிப்படை தத்துவத்தை விளக்கும் ஒரு வரைபடத்தை உருவாக்கல் - Sample Concept Map

ஒரு விடயத்திற்கு குறிப்பு எடுக்கும் போது பின்வரும் கேள்விகளை கேட்டுக் கொள்ளுங்கள், உதாரணமாக சூழல் மாசடைதல் என வைத்துக்கொண்டால்

அப்படியென்றால் என்ன?

அதை ஏற்படுத்துவது எவை?

அதைத் தடுப்பதற்குரிய வழிவகைகள் எவை?

சுய பரிசோதனை

நான்கு விதமான கேள்விகளிற்கான படிமுறைகள்:

படிமுறை ஒன்று - தரவுகள், தேற்றங்கள்

SWOT என்றால் என்ன? இதை எப்போது, யார் அறிமுகப்படுத்தினார்?

படிமுறை இரண்டு - ஆராய்தல்

எவ்வாறு SWOT முடிவுகள் எடுக்கும் தீர்மானத்தில் உதவுகின்றது?

படிமுறை மூன்று - எடுகோள்

SWOT விளக்கம் மூலம் நான் எவ்வாறு எனது கம்பனியின் விற்பனை அளவை அதிகரிக்க முடியும்?

படிமுறை நான்கு - மதிப்பீடு

SWOT விளக்கத்தை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் எவை?

அடிப்படை திட்டம்

* கல்விகற்பதில் உங்கள் இலக்குகளை உருவாக்குங்கள்

* எதை கற்கக் போகின்றீர்கள் என்பதை தீர்மானியுங்கள்

* கற்றலுக்குரிய ஒரு திட்டத்தை உருவாக்குங்கள்

* எப்படி கற்கப் போகின்றீர்கள் என்பதை தீர்மானியுங்கள்

* கற்ற விடயங்களை அளவுகோலிடுவதற்கு வழிகள் தேடுங்கள்

* உங்கள் கற்றல் திட்டம் எப்படி வேலை செய்கின்றது என்பதை கண்டறியுங்கள்

கீழ்க்கண்ட சில பிரச்சனைகளிற்கு தீர்வு கண்டு நீங்களே உங்கள் கற்றலுக்கான ஒரு நிபுணராக இருங்கள்

பிரச்சனை 01: ஒவ்வொரு முறையும் பாடப்புத்தகத்தை கற்கும் போது உங்களுக்கு தூக்கம் வருதல்

பிரச்சனை 02: உங்களால் ஒரு பாடப்புத்தகத்தில் உள்ள தனித்தனி அலகுகளின் முடிவில் கேட்கப்படும் கேள்விகளிற்கு விடைகூறக்கூடியதாக இருத்தல். ஆனால், முழு அலகுகளையும் இணைத்து அல்லது ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தி கேட்கப்படும் கட்டுரை வினாக்களிற்கு பதில் அளிக்க முடியாது இருத்தல்

பிரச்சனை 03: பாடப்புத்தகத்தை வாசிக்கும்போது படிக்கும் விடயங்கள் உடனடியாக மறந்துபோதல்

பிரச்சனை 04: படிக்கும்போது மனம் அலைபாய்தல்

பிரச்சனை 05: ஒரு விடயத்தை படிப்பதற்கு அல்லது விளங்கிக்கொள்வதற்கு நீண்டநேரம் எடுத்தல்

பாடசாலை அல்லது பல்கலைக்கழக பாடப்புத்தகங்களை வாசிக்கும் போது நீங்கள் பாவிக்கும் நுணுக்கங்களை, இது சம்மந்தமான பிரச்சனைகளை மற்றும் சந்தேகங்களை மற்றைய கள உறவுகளுடன் பரிமாறிக்கொள்ளவும். மேலும் மேலே கூறப்பட்டுள்ள கருத்துக்களில் பிழைகள் இருந்தாலும் சுட்டிக் காட்டவும். நன்றி!

Link to comment
Share on other sites

படிப்பு என்றால் இங்கு சூனியம் மாதிரி இருக்கு? :blink: யாராவது ஏதாவது எழுதி விடயத்தை சூடாக்குங்கோ! யாழ் களத்தில் உள்ள சக மாணவர்களிற்காக இன்னொரு மாணவனால் இந்த தலைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாராவது ஆசிரியர்கள் இங்கு இருந்தால் மாணவர்களாகிய எமக்கு உற்சாகம் தரவும். :P

Link to comment
Share on other sites

மாப்பி இந்த கட்டுரையை மோகண் அண்ணாவிடம் கொடுத்து யாழ் சிறுவர் பக்கத்தில் இணைக்கலாம்

Link to comment
Share on other sites

இந்த கட்டுரை பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், சிறுவர்களிற்கும் உதவக்கூடும்.

Link to comment
Share on other sites

இந்த கட்டுரை பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், சிறுவர்களிற்கும் உதவக்கூடும்.

எமக்காகவா? லெக்ஷர் நேரத்திலையே பாடத்தை படிப்பதில்லை அதை விட்டு விட்டு புத்தகத்தில் எல்லாம் நாம் படிக்கப் போகின்றோமா :blink:

Link to comment
Share on other sites

எமக்காகவா? லெக்ஷர் நேரத்திலையே பாடத்தை படிப்பதில்லை அதை விட்டு விட்டு புத்தகத்தில் எல்லாம் நாம் படிக்கப் போகின்றோமா :lol:

அப்படி போடுங்கோ அரிவாள,மாப்பிக்கு என்ன ஆச்சு

மாப்பி நாங்க புத்தகத்தை தொடுறதே இல்லை,லெக்சர்ஸ் நேரமும் எங்கன்ட பாடு ஆனால் டியூரோரியல்க்கு மட்டும் ஒழுங்கா சென்று அவை தாறது எல்லாத்தையும் படிப்போம்,

அது நம்மளை டிஸ்சின்சன் எடுக்க பண்ணிடும்

:P

Link to comment
Share on other sites

நீங்கள் சொன்ன முறையில் படித்தால் 60 + எடுத்து சோதனை பாஸ் செய்வதே பெரிய திண்டாட்டமாக இருக்குமே? அப்பா, அம்மா தரும் காசிலும், கடன் எடுத்தும் படித்துக்கொண்டு இப்படி துரோகம் செய்யலாமா?

Link to comment
Share on other sites

மாப்பி என்னொடு படிப்பவர்கள் இங்கே அப்படி தான் படிக்கிறார்கள் இங்கே வந்த புதிதில் எனக்கு மிகவும் கடினமா தான் இருந்தது,ஏனுடைய சீனியர்கள் தான் இந்த வழியை பின்பற்ற சொன்னவர்கள்

மற்றும் புத்தகத்திலும் லெக்சர் சொல்லுவார் மார்க் பண்ண சொல்லி அதையும் தான் நான் படித்து போன செமிஸ்டர் எனக்கு 5பாடதிலும் டிஸ்சின்சன் கிடைத்தது ஒரு பாடம் கிரடிட் கிடைத்தது ஆகவே முழுக்க புத்தகத்தை நாங்கள் இங்கே பார்ப்பது இல்லை அது ஒரு 10% தான் நான்.சிட்னியில் கனபேர் இவ்வாறு தான் படிப்பார்கள் வேண்டுமென்றா கேட்டுபாருங்கோ இதை தான் எங்களுக்கு யூனியில சொல்லி தருவீனம்

Link to comment
Share on other sites

ஆனால் நீங்கள் பாடப்புத்தகத்தை படிக்காது, புள்ளி பெறுவதை மையப்படுத்தி மட்டும் படிக்கும் போது அது உங்களுக்குத்தான் கூடாது. அதாவது அந்த அந்த செமஸ்டர் முடிந்ததும் உங்களுக்கு ஒரு செமஸ்டரில், அதாவது மூன்று மாதங்களில் என்ன படித்தீர்கள் என்பது விரைவில் மறந்து போகும். எனவே, எதிர்காலத்தில் தொழிலில் அல்லது அடுத்த கட்ட படிப்பில் இவற்றை பிரயோகிப்பது மிகக்கடினமாக இருக்கும். உந்த பாலாய்ப் போன சீனியர்கள் தான் இந்த நல்ல பிள்ளைகளை பழுதாக்குவது! சீனியர் மாணவர்களின் தலையில் ரெண்டு போடு போட்டால் தான் மற்றையவர்கள் உருப்படுவார்கள். :angry:

Link to comment
Share on other sites

மனுசனை யுனிலதான் வாத்திமர் களுத்தறுக்கிறாங்கள் என்று யாழ் வந்தால் இந்த மாப்பி ஓவர கழுத்தறுக்குது :angry:

Link to comment
Share on other sites

ஆனால் நீங்கள் பாடப்புத்தகத்தை படிக்காது, புள்ளி பெறுவதை மையப்படுத்தி மட்டும் படிக்கும் போது அது உங்களுக்குத்தான் கூடாது. அதாவது அந்த அந்த செமஸ்டர் முடிந்ததும் உங்களுக்கு ஒரு செமஸ்டரில், அதாவது மூன்று மாதங்களில் என்ன படித்தீர்கள் என்பது விரைவில் மறந்து போகும். எனவே, எதிர்காலத்தில் தொழிலில் அல்லது அடுத்த கட்ட படிப்பில் இவற்றை பிரயோகிப்பது மிகக்கடினமாக இருக்கும். உந்த பாலாய்ப் போன சீனியர்கள் தான் இந்த நல்ல பிள்ளைகளை பழுதாக்குவது! சீனியர் மாணவர்களின் தலையில் ரெண்டு போடு போட்டால் தான் மற்றையவர்கள் உருப்படுவார்கள். :angry:

மாப்பி தொழில் செய்யும் போது அதுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை,நான் படிக்கிறது முகாமைத்துவமும்,கணக்கியலும் அதை நாங்கள் ஓரளவு பிரயோகித்தாலே காணும் என்பது எனது அபிப்பிராயம்,சீனியர்சை பற்றி தப்பா சொல்லதயுங்கோ அவை தான் சரியான உதவி

:angry:

மனுசனை யுனிலதான் வாத்திமர் களுத்தறுக்கிறாங்கள் என்று யாழ் வந்தால் இந்த மாப்பி ஓவர கழுத்தறுக்குது :angry:

அது தான் மாப்பியும் வாத்தியோ தெறியாது

:P

Link to comment
Share on other sites

அட அப்படியா? அவுஸ்திரேலியாவில் முகாமைத்துவம், கணக்கியல் படிப்பவர்கள் பாடப்புத்தகம் படிக்கத் தேவையில்லையா? நல்ல விடயம்! :rolleyes:

இங்கு முகாமைத்துவம், கணக்கியல் புத்தகங்கள் கிலோ கணக்கான பாரமாக இருக்கும். முகாமைத்துவம் பாடத்தில் பொதுவாக பரீட்சை என்றால் சுமார் 100 M.C.Q கேள்விகள் பாடப்புத்தகத்தில் இருந்து கேட்கப்படும். பாடப்புத்தகம் ஒழுங்காக படிக்காவிட்டால் நிலமை அம்போதான்.

கணக்கியல் பிரக்க்டிகலாக இருந்தாலும் பாடப்புத்தகத்தை ஒருமுறை வாசித்தால் தான் ஒழுங்காக பிழையின்றி கணக்கு போட முடியும் என்பதோடு, ஒரு பதிவை இடும் போது ஏன் அவ்வாறு செய்கின்றீர்கள் என்ற விளக்கமும் தெரியும். அடிப்படை விளக்கம் தெரியாமல் சோதனையை மாத்திரம் மனதில் வைத்து இப்படியென்றால் அப்படிப் பதிவு, அப்படியென்றால் இப்படிப் பதிவு என்று சும்மா கடைக்கணக்கு பதிவது போல் பதிந்து சோதனையில் நல்ல புள்ளிகள் பெறுவதில் பிரயோசனம் இல்லை.

ஏதோ உங்கள் மூளை போன போக்கில், உங்கள் சீனியர்களின் குறுக்கு வழிகாட்டலில் உங்களுக்கு தெரிந்தமாதிரி பாடத்தை நடத்துங்கோ! வாழ்த்துக்கள்! :lol:

Link to comment
Share on other sites

மாப்பு ஒருவருக்கு ஒவ்வொரு வழி இலகு உங்களுக்கு புத்தகத்தை முழுவதும் வாசிப்பதால் முடியுது மற்றைய சில மேலோட்டமாக பார்த்துவிட்டு செய்வார்கள்,ஆகவே முகாமைத்துவம் படிக்கிறவர்கள் புத்தகத்தை மட்டும் நம்பி பரீட்சைக்கு போவார்களாயின் நிச்சயம் அவர்கள் பெயில் விடுவார்கள் என்பதை நான் சொல்லவில்லை என்னுடைய லெக்சரர் தான் சொல்லுவார்,ஆகவே உங்களுக்கு தனிபட்ட ஆளுமை திறமை முகாமைத்துவத்தில் இருக்கும் போது நான் சொன்ன 10% படிப்பும் தேவையில்லை போய் பரீட்சையில் இலகுவாக சித்தி அடையலாம்

ஆனால் ஆளுமை திறமை உங்களிடம் இல்லாம புத்தகத்தை நம்பி தாம் முகாமைத்துவ பரீட்சை எடுக்க போறீங்க என்றா நான் சொல்லுவேன் அந்த பரீட்சையில் கிரடிக்கு மிஞ்சி நீங்க அடைய போவது வேறோன்றுமில்லை,இதை நான் உங்களுடன் வாதாட வேண்டும் என்று சொல்லவில்லை நான் இந்த பாடத்தை 2வருடமாக கற்கிறவன் என்ற முறையிலும் லெக்சர்ஸ் சொன்னதையும் மனதில் வைத்து சொன்னேன்

Link to comment
Share on other sites

அதாவது நான் கூறவருவது என்னவென்றால் முகாமைதுவ பாட புத்தகத்தை கட்டாயம் படிக்க வேண்டும் என்பதேயொழிய, பாடப்புத்தகத்தை மாத்திரம்தான் படிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. வெறும் புத்தகப்படிப்பு மூலம் பயன் இல்லை. இதைத்தான் ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்று கூறினார்கள். ஆனால், அடிப்படை புத்தக அறிவு இல்லாமல் வெறும் லெக்சர் நோட்ஸ் மற்றும் சீனியர்கள் தரும் குறுக்குவழிகளை வைத்து முகாமைத்துவம் படிப்பது நல்லதல்ல. இங்கு முகாமைத்துவம் சோதனையில் Mid Term, Final Exam களில் சுமார் 75, 100 M.C.Q கேள்விகள் கேட்கப்படும். இவற்றுக்கு 20 + 40 = 60 புள்ளிகள் பொதுவாக ஒதுக்கப்படும். ஆனால், மிகுதி 40 புள்ளிகள் பிரக்டிக்கல் ஆக இருக்கும். அதாவது, நான் கூறவரும் விடயம் என்னவென்றால் பாடப்புத்தகதை -Text Book- எவ்வாறு திறமையாக படிப்பது என்பதாகும்.

அப்ப, நீங்கள் சோதனைக் காலத்தில் மட்டும்தான் பாடப்புத்தகத்தை தூக்கிப் பார்ப்பீங்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட ஜம்மு சொல்லுற மாதிரி அவையின்ட குரூப்பில இருக்கிற 10 ஊற்சுற்றுற ஆட்களுக்கு சரி,

பரீட்சையில் கேள்விகளுக்கு பிழை விடும்போது மைனஸ்சில மார்கஸ் போகும் ஆகவே வடிவா புத்தகத்தை படித்து இருந்தால் தான் நல்ல புள்ளிகளை எடுக்க முடியும்,இல்லாவிடில் மைனசில் மார்கஸ் போய் கொண்டே இருக்கும்.

ஆனால் ஜம்மு கோஷ்டி ஊர் சுற்றி புத்தகத்தை கடைசி கிழமை எடுத்து இரவு இரவா லைபரியில இருந்து படித்து எங்களை விட மார்க்ஸ் எடுப்பார்கள் அது எப்படி என்று தான் விளங்கவில்லை,நாங்கள் கஷ்டபட்டு படித்து கிரடிட்டில தான் வந்து இருக்கும்

ஆனால் அந்த வழியை பின்பற்றுவது கலைஞன் சொல்வது மாதிரி மிகவும் பிழையானது

:blink:

Link to comment
Share on other sites

ஓம் நீங்கள் சொல்வது சரி, நிறையப் பாடங்கள் குறிப்பாக மருத்துவம், உயிரியல் செய்பவர்கள் முழுப்புத்தகக்தையும் கரைத்துக் குடிக்க வேண்டி இருக்கும். இதில் M.C.Q இல் பிழையான விடைகளிற்கு மைன்ஸ் புள்ளிகள் வழங்கப்படும். எனவே, இதைத் தவிர்ப்பதற்குரிய ஒரே ஒரு முறை, சிறிது சிறிதாக தினமும் பாடப்புத்தகத்தை படிக்க வேண்டும். கடைசி நேரத்தில் படிக்கும் விளையாட்டெல்லாம் இங்கு வேலை செய்யாது.

Link to comment
Share on other sites

எங்கே மாணவர்கள் ஒருவரையும் காணவில்லை?

பிரசன்ட் மாப்பிசார்

:P

அட ஜம்மு சொல்லுற மாதிரி அவையின்ட குரூப்பில இருக்கிற 10 ஊற்சுற்றுற ஆட்களுக்கு சரி,

பரீட்சையில் கேள்விகளுக்கு பிழை விடும்போது மைனஸ்சில மார்கஸ் போகும் ஆகவே வடிவா புத்தகத்தை படித்து இருந்தால் தான் நல்ல புள்ளிகளை எடுக்க முடியும்,இல்லாவிடில் மைனசில் மார்கஸ் போய் கொண்டே இருக்கும்.

ஆனால் ஜம்மு கோஷ்டி ஊர் சுற்றி புத்தகத்தை கடைசி கிழமை எடுத்து இரவு இரவா லைபரியில இருந்து படித்து எங்களை விட மார்க்ஸ் எடுப்பார்கள் அது எப்படி என்று தான் விளங்கவில்லை,நாங்கள் கஷ்டபட்டு படித்து கிரடிட்டில தான் வந்து இருக்கும்

ஆனால் அந்த வழியை பின்பற்றுவது கலைஞன் சொல்வது மாதிரி மிகவும் பிழையானது

:lol:

என்ன நக்கலா சுற்றியும் படித்து உங்களை விட கூட எடுக்கிறொம் தானே பிறகு என்ன

:angry:

ஓம் நீங்கள் சொல்வது சரி, நிறையப் பாடங்கள் குறிப்பாக மருத்துவம், உயிரியல் செய்பவர்கள் முழுப்புத்தகக்தையும் கரைத்துக் குடிக்க வேண்டி இருக்கும். இதில் M.C.Q இல் பிழையான விடைகளிற்கு மைன்ஸ் புள்ளிகள் வழங்கப்படும். எனவே, இதைத் தவிர்ப்பதற்குரிய ஒரே ஒரு முறை, சிறிது சிறிதாக தினமும் பாடப்புத்தகத்தை படிக்க வேண்டும். கடைசி நேரத்தில் படிக்கும் விளையாட்டெல்லாம் இங்கு வேலை செய்யாது.

யார் அப்படி சொன்னது லெக்சர்சை வடிவா கேட்டு அதில் சில பகுதிகளை எழுதி வையுங்கோ அதை ஒவ்வொருகிழமையும் பாருங்கோ பின் அதை டேஸ்ட் நடக்க போகும் கடைசி கிழமைக்கு முன்னம் நன்றாக பார்த்துவிட்டு பயமில்லாம பரிட்சைக்கு போங்கோ

பயக்ட்துடன் பரிட்சைகு போனீங்கள் என்ற முகாமத்துவ பரிட்சை பெயில் என்று மட்டும் நினைவில் வைத்து கொள்ளுங்கோ

Link to comment
Share on other sites

பயத்துடன் எந்தப்பரீட்சைக்கு போனாலும் அதில் வெற்றி பெறமுடியாது.

நீங்கள் தலைப்பை பிழையாக விளங்கிவைத்து இருகின்றீர்கள். அதாவது இந்தக் கட்டுரையின் நோக்கம் பாடப்புத்தகத்தை மாத்திரம் படிப்பதல்ல. பாடப்புத்தகத்தையும் படிப்பதாகும்.

லெக்சர் நோட்ஸை எப்படி கையாள்வது என்பது சம்மந்தமாக விரைவில் இன்னொரு கருத்தாடலை ஆரம்பிக்கின்றேன்..

ஆனால், இங்கு பாடப்புத்தகங்களை படிக்கும்போது வரும் சிக்கல்கள், பிரச்சனைகள், குறுக்குவழிகள், உங்கள் தனிப்பட்ட அணுகுமுறைகள் என்பன பற்றி விவாதிக்கலாம்...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • திமுகாவில் ஒரு  it குருப் இருக்கு அதன் முக்கிய வேலையே திமுகாவை பற்றி இல்லாத பொல்லாத  செய்தியை சொல்லி dmk எதிரானவர்களின் நட்பை அனுதாபத்தை பெற்று கொள்வது .
    • தமிழ்மக்கள் 60 வருசத்துக்கு மேலாக தூர நோக்கோடுதான் வாக்களித்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் அந்த தூர நோக்கு தனது எல்லையை தொடவில்லை. தொடுவதற்கான அறிகுறியும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை.
    • பாவம் சிரித்திரன் சுந்தர்.  கல்லறைக்குள் இருந்து நெளிவார் என நினைக்கிறேன். 
    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.   கேட்டா எண்ட சாதகம் மோகனிடம் இருக்கு, நிழலிட்ட இருக்கு என்பார். அந்த தகவலை அவர்கள் தந்தாலும்…அதை வச்சு நான் என்ன செய்யலாம்? கலியாணம் பேசவோ🤣
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.