Jump to content

அக்காவின் காணாமல் போன கனவுகளில் இருந்து…


Recommended Posts

செவ்வந்திப்பூ!

பூத்திருக்கும் பூக்களெல்லாம்

சந்தோசக் கவிதை சொல்லும்!

பார்த்திருக்கும் பொழுதெல்லாம்

புன்னகைகள் மின்னலிடும்!

இறைவா உன் படைப்பினிலே

இத்தனை இனிமைகளா?

பூரித்து நிற்கின்றேன்

பொன்மனதும் மலர்கிறது!

விதியின் முடிவுகள்!

மகிழ்ந்து மலர்ந்திருக்கும்

வசந்தங்கள் வாழ்வில் இல்லை!

என்றாலும்…

மனமது மரத்து விடவில்லை!

கூடிக் குலாவித் திரிந்து

அணைபோட முடியாத அன்பையெல்லாம்

அர்ச்சித்து போற்றுதற்கு

ஜோடி என்று ஒன்றுமில்லை!

என்றாலும்…

கண்ணிலும் கருத்திலும்

கனிவிற்கு குறைச்சலில்லை!

கண்டதும் இருட்டு!

காண்பதும் இருட்டு!

காணப்போவதும் இருட்டாகலாம்!

என்றாலும்…

மென்மையான மெளனங்களில்

துளியான நிம்மதியில்

வாழ்க்கை கழிந்தே தீரும்!

தொடரும்….

(காணாமல் போன கனவுகள் கண்டுபிடிக்கப்பட்டால்)

Link to comment
Share on other sites

மாப்பி நீங்களா எழுதுனீங்க நல்லா இருக்கு உங்க கவிதை

Link to comment
Share on other sites

அற்புத வரிகொண்டு படைத்திட்ட

உங்கள் கவிதைக்கனவுகளில்

காணமல் போன இதயங்கள்

நிறையவேஉண்டு தொடரட்டும்

உங்கள்அக்காவின் கனவுகள்

Link to comment
Share on other sites

உங்கள் கருத்துக்களிற்கு நன்றி! இது எனது கவிதை அல்ல, எனது அக்காவின் கவிதை. அவர் அண்மையில் என்னிடம் விடுமுறையில் வந்திருந்தபோது அவருக்கு கரைச்சல் கொடுத்து, அவர் முன்பு பல்கலைக்கழகத்தில் படித்த காலத்தில் எழுதிய இரு குட்டிக் கவிதைகளை மீளவும் நினைவுபடுத்தச் செய்து அதை இங்கு ஒட்டியுள்ளேன். அவர் முன்பு நன்றாக கவிதை எழுதுவார், ஆனால் இப்போது எல்லாம் பொய்யும், புரட்டும், பித்தலாட்டமும் என்று வெறுத்து ஒன்றும் எழுதுவதில்லை. ஆனால் கடவுளைப் பற்றி மாத்திரம் இப்போது நிறைய கவிதைகள் எழுதுவார். அதை இங்கு ஒட்டுவதை அவர் விரும்பமாட்டார் என நினைக்கின்றேன். மேலேயுள்ள இரு குட்டிக்கவிதைகளை நான் இங்கு ஒட்டியதும் அவருக்கு தெரியாது...

Link to comment
Share on other sites

உங்கள் கருத்துக்களிற்கு நன்றி! இது எனது கவிதை அல்ல, எனது அக்காவின் கவிதை. அவர் அண்மையில் என்னிடம் விடுமுறையில் வந்திருந்தபோது அவருக்கு கரைச்சல் கொடுத்து, அவர் முன்பு பல்கலைக்கழகத்தில் படித்த காலத்தில் எழுதிய இரு குட்டிக் கவிதைகளை மீளவும் நினைவுபடுத்தச் செய்து அதை இங்கு ஒட்டியுள்ளேன். அவர் முன்பு நன்றாக கவிதை எழுதுவார், ஆனால் இப்போது எல்லாம் பொய்யும், புரட்டும், பித்தலாட்டமும் என்று வெறுத்து ஒன்றும் எழுதுவதில்லை. ஆனால் கடவுளைப் பற்றி மாத்திரம் இப்போது நிறைய கவிதைகள் எழுதுவார். அதை இங்கு ஒட்டுவதை அவர் விரும்பமாட்டார் என நினைக்கின்றேன். மேலேயுள்ள இரு குட்டிக்கவிதைகளை நான் இங்கு ஒட்டியதும் அவருக்கு தெரியாது...

பாவலரே உம் கவிகள்

படுக்கையிலே கிடக்கலாமோ...??

நித்தம் கண்ட கொடுமைகளை

நீ உரைக்கா இருக்கலாமோ...???

போலியென்று வந்திங்கு

பொய்யாக சொல்லாமோ...??

மெய்யாக வந்துயொரு

மெய் பா தாராயோ...???

இல்லையது தெய்வமென்று

இங்கு வந்துரைத்தவரே

உந்தனது கவி கண்டு

ஓடயவரை வைப்பாயோ...??

கல்லெடுத்து எறிகின்ற

கரியார் கூட்டமீது

சொல்லெடுத்து ஆடி வந்து

சொல் பா தொடுக்காயோ...??

வித்தகராய் வந்துயிங்கு

விளம்பியிங்கு அமர்ந்து விடு

நல்ல நல்ல பாவதனை

நாள் தோறும் தந்து விடு...

பாசமுடன் ஓடி வந்து - உன்

பாவெடுத்து காட்டிவிட்டான்

கட்டி வைத்து அடிக்காமல்

களையவனை விட்டு விடு...

நல்ல தொரு பா தந்தாய்

நன்றியோடு வாழத்துகிறேன்....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லா இருக்கு கலைஞன் உங்க அக்காட கவிதை...

Link to comment
Share on other sites

அக்காவும் உங்கள மாதிரி நல்லா கவிதை எழுதுறாங்க போல இருக்கு. நல்ல கவிதை. :lol:

Link to comment
Share on other sites

நானும் நன்றாக கவிதை எழுதுறனா? நன்றி! :கவிதை எழுதும் போது நிறைய என்னென்னமோ எல்லாம் எழுத வேண்டும் போல் இருக்கு, ஆனா சொல்லுகள் தான் வருகிது இல்லை. எல்லாம் ஊரைவிட்டு வெளிக்கிட்டவுடன் மறந்துபோச்சு. :blink:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.