Jump to content

நீங்கள் நோய்களை தீர்ப்பதென்றால் வைத்தியசாலைகளை மூடி விடலாமா?: மதம் மாற்ற முயன்ற குழுவை விரட்டிய இளைஞர்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பொன்னாலை மற்றும் கல்விளான் கிராமங்களில் மதம் பரப்பும் நோக்கத்துடன் சுவிசேசக் கூட்டம் நடத்துவதற்கு முற்பட்ட கிறிஸ்தவ சபை ஒன்றின் உறுப்பினர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இச்சம்பவம் இடம்பெற்றது.

பொன்னாலையில், கிறிஸ்தவ மக்கள் எவரும் வசிக்காத இடத்தில், தனியார் காணி ஒன்றில் இசை நிகழ்வுடன் கூடிய கூட்டம் ஒன்றை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. வெளி இடத்தில் இருந்து பேருந்து ஒன்றிலும் மோட்டார் சைக்கிள்களிலுமாக நூற்றுக்கணக்கானோர் கொண்டுவரப்பட்டு இறக்கப்பட்டனர்.

இதை அவதானித்து அங்கு சென்ற அவ்வூர் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் இருவர், யார் அனுமதி வழங்கியது என அப்பகுதி மக்களைக் கேட்டபோது அவர்கள், தாங்களாகவே இவர்கள் வந்து இங்கு கூட்டம் நடத்துகின்றார்கள் என்றனர்.

67553201_2484902468232742_70312353919947எதற்காகக் கூட்டம் நடத்துகிறீர்கள் என வந்தவர்களிடம் கேட்டபோது, நோய், பிணிகளில் இருந்து மக்களை விடுவிப்பதற்கான நிகழ்வு எனப் பதிலளித்தனர். அப்படியாயின் வைத்தியசாலைகளை மூடிவிட்டு நீங்களே ஜெபியுங்கள் என ஆத்திரத்துடன் கூறிய அவ் இளைஞர்கள் உடனடியாக இந்த இடத்தில் இருந்து வெளியேறுங்கள் என அவர்களை எச்சரித்தனர்.

பொன்னாலை பூர்வீகமாக சைவப் பூமி. இங்கு மதம் பரப்பும் செயற்பாடுகளில் ஈடுபட்டால் விளைவுகள் விபரீதமாக முடியும் என ஊரவர்களுடன் இணைந்து அவர்களைக் கடுமையாக எச்சரித்தனர். உடனடியாக இந்த இடத்தை விட்டு வெளியேறுங்கள் எனக் கூறி பலவந்தமாக அவர்களை வெளியேற்றினர்.

குறித்த கூட்டத்தினருக்கு தலைமை தாங்கி வந்த பாதிரியார், காலையில் தூக்கத்தால் எழும்பும்போது ‘இயேசுவே எனக் கூறியவாறு எழும்புங்கள்’ என தங்களை அறிவுறுத்தினார் என அங்கிருந்த சிறுவர்கள் தெரிவித்தனர்.

67319134_2484902308232758_18916668531602 பொன்னாலையில் இருந்து வெளியேற்றப்பட்ட குறித்த அல்லேலூயாக் கும்பல் அடுத்த கிராமமான கல்விளானில் கூட்டத்தை நடத்திக்கொண்டிருந்தனர். அந்தப் பகுதியைச் சேர்ந்த சனசமூக நிலையத்தின் பிரதிநிதிகள் அங்கு சென்று அவர்களைப் பலவந்தமாக வெளியேற்றினர்.

http://www.pagetamil.com/66122/?fbclid=IwAR3gQ09TR8Zd1D_b4T7D364t4A9C8MboOyaiatihfBGqj4KvjcTAEHTasFc

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தரமான சம்பவம். இருக்கிற பிரச்சினைக்குள்....   அரியண்டம் தாங்க முடியவில்லை.

Link to comment
Share on other sites

18 hours ago, பெருமாள் said:

குறித்த கூட்டத்தினருக்கு தலைமை தாங்கி வந்த பாதிரியார், காலையில் தூக்கத்தால் எழும்பும்போது ‘இயேசுவே எனக் கூறியவாறு எழும்புங்கள்’ என தங்களை அறிவுறுத்தினார் என அங்கிருந்த சிறுவர்கள் தெரிவித்தனர்.

சிறுவர்களை இப்படி ஏமாத்துவது மிக மிக கொடுமையான விஷயம்.
இவர்கள் சஹ்ரான் போன்ற ஒரு பயங்கரவாதக் கும்பலா இருக்கும்.
இவங்களை எல்லாம் சிறைகளில் தள்ளனும்!

ஏன் சிறுவர் காலைல அந்த பெயரை சொல்லணும்?
அது ஆர் அந்த ஏசு?
அப்படி ஒராள் இருந்தார் என்றதுக்கு என்ன ஆதாரம் இருக்கு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Rajesh said:


அது ஆர் அந்த ஏசு?
அப்படி ஒராள் இருந்தார் என்றதுக்கு என்ன ஆதாரம் இருக்கு?

மூண்டு ஆணி பிடிங்க முடியாதவர் எப்படி கடவுள் ஆனார் என்று புரியவில்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, பெருமாள் said:

மூண்டு ஆணி பிடிங்க முடியாதவர் எப்படி கடவுள் ஆனார் என்று புரியவில்லை .

அநேகர் எதிர்த்து வலியுறுத்தும் ஒரு கருத்து தான் இந்த "மதம் மாற்றம்", "தேவையற்ற மத பிரச்சாரம்".
எமது சைவ தொண்டு அமைப்புகள், கோயில்கள் சரியான படி மக்களை அரவணைத்து எங்கள் சைவ, தமிழ் பாரம்பரியங்களை நிலைநிறுத்தினாலேயே இந்த சபைகளுக்கும், மிஷனரிகளுக்கும் கிராக்கி இருக்காது.

எது எப்படியோ, இங்கே யேசுநாதரையும் அவர் போதனைகளையும் இழித்து கருத்தாடுவது முறையல்ல.
தனிப்பட்ட ஒரு கூட்டத்து செயல்களை கண்டியுங்கள். அதுவே சரியானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Sasi_varnam said:

அநேகர் எதிர்த்து வலியுறுத்தும் ஒரு கருத்து தான் இந்த "மதம் மாற்றம்", "தேவையற்ற மத பிரச்சாரம்".
எமது சைவ தொண்டு அமைப்புகள், கோயில்கள் சரியான படி மக்களை அரவணைத்து எங்கள் சைவ, தமிழ் பாரம்பரியங்களை நிலைநிறுத்தினாலேயே இந்த சபைகளுக்கும், மிஷனரிகளுக்கும் கிராக்கி இருக்காது.

எது எப்படியோ, இங்கே யேசுநாதரையும் அவர் போதனைகளையும் இழித்து கருத்தாடுவது முறையல்ல.
தனிப்பட்ட ஒரு கூட்டத்து செயல்களை கண்டியுங்கள். அதுவே சரியானது.

மன்னித்துகொள்ளுங்கள் சசி வர்ணம் எதோ ஒரு வேகத்தில் அப்படி எழுதிவிட்டன் . மனிசனாய் பிறந்து சாமி ஆகிவிட்டம் என்பவர்கள் எல்லாம் பிராடு கூட்டம் என்பது என் முடிவு .

Link to comment
Share on other sites

மற்றவர்களை மதம் மாற்றும் கோஷ்டிகளுக்கு உண்மையில் கடவுள் நம்பிக்கை இல்லை. பணத்துக்காக தான் மதம் மாற்றுபவர்கள். அதிலும் பலர் ஏற்கனவே மதம் மாறியவர்கள்.

வெளிநாடுகளிலும் வேலை எடுத்து தருகிறோம், பண உதவி செய்கிறோம் என்று கூறி மதம் மாற்றி விட்டு அவர்களை கொண்டே வேறு பலரையும் மதம் மாற்றுவார்கள்.

Link to comment
Share on other sites

34 minutes ago, பெருமாள் said:

மன்னித்துகொள்ளுங்கள் சசி வர்ணம் எதோ ஒரு வேகத்தில் அப்படி எழுதிவிட்டன் . மனிசனாய் பிறந்து சாமி ஆகிவிட்டம் என்பவர்கள் எல்லாம் பிராடு கூட்டம் என்பது என் முடிவு .

சாமிகள் மட்டுமல்ல நாடுகளை ஆளும் ஆசாமிகளும் பிராடு கூட்டம்தான். பிராடுகள் ஒன்றை ஒன்று கட்டியணைத்து குத்தாட்டம் போடுகின்றன. இது மனிதர் வாழும் யுகமல்ல, மனிதமிருகங்கள் வாழும் யுகம்.

10 hours ago, தமிழ் சிறி said:

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கு “World Icon Award” என்ற சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் இந்தியாவினால் வல்லுநர்களுக்காக “World Icon Award” விருது வழங்கப்படுகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல வளர்ந்த நாடுகளில் இருக்கும் வெள்ளையர்கள் கூட மதம் மாறி இருக்கின்றார்கள். இவர்கள் பணத்திற்காகவா, வேலைக்காகவா தெரியவில்லை.

இப்படி விரட்டியடிப்பது தவறானது. 

Link to comment
Share on other sites

1 hour ago, colomban said:

பல வளர்ந்த நாடுகளில் இருக்கும் வெள்ளையர்கள் கூட மதம் மாறி இருக்கின்றார்கள். இவர்கள் பணத்திற்காகவா, வேலைக்காகவா தெரியவில்லை.

இப்படி விரட்டியடிப்பது தவறானது

 

உண்மைதான் 

இப்படி விரட்டி அடிக்காமல் செருப்பால் இரண்டு அடியாவது அடித்து விரட்டி இருக்க வேண்டும் இந்த கள்ளர் கூட்டத்தை.

Link to comment
Share on other sites

யாழ்.ஆயரின் உரை வரலாற்றில் பதிவிடப்படும்

தமிழ் மக்கள் ஒருபோதும் மதத்தால் பிளவுபட்டிருந்தவர்கள் அல்ல. தமிழ் மக்களிடம் இருக்கக்கூடிய மதங்கள் அவர்களிடையே பேதங்களை ஏற்படுத்தவில்லை.
 
தவிர, விடுதலைப் புலிகளும் மதசார்பு என்பதற்கு இம்மியும் இடம் கொடுக்காமல் இருந்தனர்.
 
 அப்போதெல்லாம் மதங்கள் தமிழினத்தை வலுப்படுத்தினவேயன்றி பிளவுபடுத்த வில்லை.
 
ஆனால் இன்றைய நிலைமை வேறுவிதமாக உள்ளது. தமிழ் இனத்தைப் பிளவுபடுத்துகின்ற இலக்கை நோக்காகக் கொண்டு மதவாதம் முன்வைக்கப்படுகிறது. 
 
இந்த முன்வைப்பு மன்னாரில் இருந்து ஆரம்பித்துள்ளது. மன்னாரில் ஆரம்பித்த மத பேதமைக்கு இன்னமும் தீர்வு காணமுடியாமல் உள்ளது.
 
மன்னாரில் இருக்கக்கூடிய அரச நிர்வாகம் ஒரு மதத்தலைவரின் கட்டுப்பாட்டில் இருப்ப தாகக் கூறப்படுகிறது எனும்போது, இதற்குப் பின்னால் எத்தனை கோடி ரூபாய்கள் சுழற்சிப்பட்டிருக்கும் என்பதை ஊகிக்க முடியும்.
 
இதுதவிர, மன்னார் திருக்கேதீச்சரவளைவை அமைப்பதற்கு அனுமதி வழங்கிய மன்னார் பிரதேச சபை மீண்டும் அதனை இரத்துச் செய்திருக்கிறது.
 
முஸ்லிம் இனம் சார்ந்தவரே அந்தப் பிரதேச சபையின் தவிசாளராக இருக்கிறார்.
 
 திருக்கேதீச்சர வளைவை அமைப்பதற்கு அனுமதி கொடுத்த பின்னர் அதனை இரத்துச் செய்யும்படி மன்னார் ஆயர் கூறினார் என்பதற்காக அனுமதியை இரத்துச் செய்வது  என் றால் இஃது ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதத்தை விட பயங்கரமானதாகும்.
 
சட்டதிட்டங்களுக்கு அமைய அனுமதி வழங்கப்பட்ட பின்னர் மன்னார் ஆயர் கூறி விட்டார் என்பதற்காக அந்த அனுமதியை இரத்துச் செய்வதெனும்போது இதற்குப் பின்னால் இருக்கக்கூடிய எழுதப்படாத உடன்படிக்கை, ஒப்பந்தங்கள் எவ்வளவு வலுவாக இருக்கும் என்பதை சாமானியர்களும் புரிந்து கொள்வர்.
 
எனவே இது விடயங்களில் கவனம் செலுத்தப்படாவிட்டால் மன்னாரில் இருக்கக் கூடிய இந்து மக்களை இலக்கு வைத்துக் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெறலாம் என அனுமானிக்க வேண்டிய நிலைமை இன்றைய சூழ்நிலையில் உள்ளது.
 
இவை ஒருபுறமிருக்க, நானாக இருந்தால் திருக்கேதீச்சர வளைவை அமைக்க அனு மதித்திருப்பேன் என யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் மேதகு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை கூறியுள்ளார்.
 
அவர் கூறியது தொடர்பில் சைவ - கத்தோலிக்க மக்கள் ஆச்சரியமடையமாட்டார்கள்.
ஏனெனில் யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயரின் சிந்தனை தமிழினத்தின் ஒற்றுமை என்பதுதான்.
 
எனவே சமயத்தால் தமிழினம் பேதப்படுவதை அவர் ஒருபோதும் விரும்பவில்லை. அத னால் தான் திருக்கேதீச்சர வளைவை அமைப்பது தொடர்பில் தான் எதிர்வாதம் புரியமாட்டேன் எனக் கூறியுள்ளார்.
 
உண்மையில் திருக்கேதீச்சர வளைவு என்பது ஒரு பெரும் விடயமல்ல. அது சாதாரணமானது.
 
ஆனால் அதனை எதிர்த்தபோது நிலைமை பூதாகரமாகிவிட நம் தமிழினம் தடக்குப்படுகிறது. 
 
இந்த நிலைமையை மாற்றி தமிழ் மக்களின் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக யாழ்.ஆயர் மேதகு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை அப்போதும் இப்போதும் கூறியவை நிச்சயம் வரலாற்றுப் பதிவில் இடம்பெறும்.
 

அன்றும் பல மதம் இருந்ததே அதையும் தாண்டி அன்பு இருந்ததே !

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.