Jump to content

நெத்தலி கருவாடு பிரட்டல்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நெத்தலி கருவாட்டை மிகவும் ருசியாகவும் சுலபமாகவும் செய்யலாம்.
நான் செய்த முறை.
அரை இறாத்தல் நெத்தலி (நான் வாங்கியது தலையில்லாதது)
பெரிய வெண்காயம் 3.
தக்காளி 1
தேவையான உப்பு
கொஞ்சம் இஞ்சி
சிறிது உள்ளி.
தேசிக்காய் 1
3 கரண்டி மிளகாய்த் தூள்.

செய்முறை:-
ஓரளவு சுடுநீரில் நெத்தலியை 30 நிமிடத்திற்கு ஊற வைக்கவும்.அந்த இடைவெளியில் 3 பெரிய வெண்காயத்தையும் அரிந்து இரும்பு சட்டி அல்லது ஒட்டாத சட்டியில் போட்டு அரைவாசி வேகும் வரை வதக்கவும்.
அடுத்து தக்காளி சிறிதாக வெட்டி உள்ளி இஞ்சி கறிவேப்பிலை எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு வதக்கவும்.
ஊறப்போட்ட நெத்தலியை 3-4 தடவை கழுவி எடுத்து அதையும் சட்டியில் போட்டு வதக்கவும்.இதற்கு தண்ணீர் இல்லாதபடியால் கொஞ்சம் கூடுதல் எண்ணெய் தேவைப்படும்.ஒட்டாத சட்டி என்றால் நிறைய எண்ணெய் தேவைப்படாது.ஒரேயடியாக எண்ணெயை விடாமல் வத்தவத்த தேவைக்கேற்ப விடவும்.தூள் உப்பையும் தேவைக்கேற்க போடவும்.அடிப்பிடிக்காமல் அடிக்கடி பிரட்டவும்.
தூள் அவிந்த பின் சுவையைப் பார்த்து இறக்கி ஆறிய பின்னர் 1 தேசிக்காய் விடவும்.
வீட்டில் சிறியவர்கள் இல்லை என்றால் பச்சை மிளகாய் வெண்காயத்தோடு சேர்த்து வதக்கலாம்.
சோறு புட்டு இடியப்பம் பாண் எதோடு வேண்டுமானாலும் சாப்பிடலாம்..
நன்றி.

22963685-7-DD1-4401-A39-C-B7-D79598281-F

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெத்தலி மீன் எப்பவும் சுவையானது. பார்க்க... நல்லாய் இருக்கு. 
மூன்று கரண்டி... மிளகாய்த் தூள் போட்டும், எதிர்பார்த்த நிறம் வரவில்லை.
ஈழப் பிரியன்... தேக்கரண்டியால்... மிளாகாய் தூளை  போட்டிருக்கிறார் போலை இருக்கு.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறி இதற்குள் தண்ணீர் விடுவதில்லை.ஆனபடியால் உறைப்பாகத் தான் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உருளக்கிழங்கை காணோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, colomban said:

உருளக்கிழங்கை காணோம்

கொழும்பான் இதற்கு உருளைக்கிழங்கு போடுவதில்லை.அது ருசியையே மாற்றிவிடும்.பொதுவாகவே உருளைக்கிழங்கு சாப்பிடுவது குறைவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ரெசிபி . எனக்கு சரிவாரதே இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, nilmini said:

நல்ல ரெசிபி . எனக்கு சரிவாரதே இல்லை

முயற்சி செய்து பாருங்கள்.நல்ல ருசியாகவும் சத்தாகவும் இருக்கும்.
வடை செய்த மாதிரி செய்து போட்டு படத்தையும் போடுங்கோ.
சீனர்களின் கடைகளில் வாங்கினால் மண் இருக்காது.
அதுவும் தலையில்லாதது வாங்கினால் மண்ணே இருக்காது.
எதுக்கும் இரண்டு மூன்று தடவைகள் கழுவவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி. கொழும்பில வெள்ளையா தலை இல்லாமல் வாங்கி வந்தேன் . அந்த படத்தையும் செய்தபின் சமைச்ச படத்தையும்  போடுகிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nilmini said:

நன்றி. கொழும்பில வெள்ளையா தலை இல்லாமல் வாங்கி வந்தேன் . அந்த படத்தையும் செய்தபின் சமைச்ச படத்தையும்  போடுகிறேன் 

இலங்கையில் வாங்குவது மண் இருக்கும் .கவனம்.

Link to comment
Share on other sites

1 hour ago, ஈழப்பிரியன் said:

இலங்கையில் வாங்குவது மண் இருக்கும் .கவனம்.

இலங்கையில் தமிழனுக்குத்தான் மண் இல்லை. நெத்தலிக்காவது இருக்கிறதே.!

இங்கு யேர்மனியில் பூனை உணவுக்குவரும் நெத்தலியில் ஒரு மண்கூட இல்லையாம். அத்தனை சுத்தமாம். ஒரு தமிழ்கடையில் இரு நுகர்வோர் கதைத்தபோது கேட்டேன்.

Link to comment
Share on other sites

உண்டன வெங்காயம் போட்டு  மாதத்தில் ஒரு தடவையாவது சமைக்கும் சாப்பாடு இது. சிவத்த அரிசிமா புட்டுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Paanch said:

இலங்கையில் தமிழனுக்குத்தான் மண் இல்லை. நெத்தலிக்காவது இருக்கிறதே.!

இங்கு யேர்மனியில் பூனை உணவுக்குவரும் நெத்தலியில் ஒரு மண்கூட இல்லையாம். அத்தனை சுத்தமாம். ஒரு தமிழ்கடையில் இரு நுகர்வோர் கதைத்தபோது கேட்டேன்.

 

பாஞ்ச் நல்லகாலம் நெத்தலிக்கு மாதிரி தமிழனுக்கும் தலைக்குள் மண் இல்லையே என்று சந்தோசப்படுங்க.
மண் இருந்தால் மனிதன் பேசிப்பேசி கழுவி தின்பான்.
பூனை கழுவி தின்னுமோ?அல்லது
பூனைக்கு மண் போடும் என்று கழுவி வைப்பானோ?
பூனைக்கு இதனால் ஏதாவது வருத்தம் வந்தால் இருந்த இடத்திலிருந்தே பூனை லோயருக்கு அடித்து சொல்லிப் போட்டு எப்போ பணம் வரும் என்று காத்திருப்பான்.

7 hours ago, நிழலி said:

உண்டன வெங்காயம் போட்டு  மாதத்தில் ஒரு தடவையாவது சமைக்கும் சாப்பாடு இது. சிவத்த அரிசிமா புட்டுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

நானும் 3 பெரிய வெண்காயம் போட்டேன்.இருந்தும் இன்னொன்று போட்டிருக்கலாம் போலத் தான் இருந்தது.
இதுவரை நெத்தலி பிரட்டல் கறியாகத் தான் வீட்டில் செய்வார்கள்.
இம்முறை இப்படி செய்து பார்க்கலாம் என்று முயற்சித்தேன்.
கை நிறைய பலன்.மிகவும் உருசியாக இருந்தது.
நன்றி நிழலி.

Link to comment
Share on other sites

6 hours ago, ஈழப்பிரியன் said:

பாஞ்ச் நல்லகாலம் நெத்தலிக்கு மாதிரி தமிழனுக்கும் தலைக்குள் மண் இல்லையே என்று சந்தோசப்படுங்க.

ஒரு அறிவிலியைப் பார்த்துத் தலைக்குள் ஒரு மண்ணும் இல்லையே என்று ஆன்றோர் கூறுவது எதனால்.......??????🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான அயிட்டம், செய்து அசத்தியிருக்கிறீங்கள் ஈழப்பிரியன்......!  👍

ஊரில் முன் நெஞ்செலும்பு தெரிய வாறவர்களை நெத்தலிப் பயில்வான் என்று சொல்லுறது வழக்கம்.....! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/21/2019 at 9:51 PM, ஈழப்பிரியன் said:

சோறு புட்டு இடியப்பம் பாண் எதோடு வேண்டுமானாலும் சாப்பிடலாம்..
நன்றி.

22963685-7-DD1-4401-A39-C-B7-D79598281-F

ச்..சா நெத்தலி கருவாட்டை பாக்க நிலாவரை கிணறுமாதிரி வாய் ஊறிக்கொண்டே இருக்குது.....நாசமறுப்பார் வாயை கட்டிப்போட்டுட்டாங்கள்..🤬

21 hours ago, ஈழப்பிரியன் said:

முயற்சி செய்து பாருங்கள்.நல்ல ருசியாகவும் சத்தாகவும் இருக்கும்.
வடை செய்த மாதிரி செய்து போட்டு படத்தையும் போடுங்கோ.
சீனர்களின் கடைகளில் வாங்கினால் மண் இருக்காது.
அதுவும் தலையில்லாதது வாங்கினால் மண்ணே இருக்காது.
எதுக்கும் இரண்டு மூன்று தடவைகள் கழுவவும்.

நல்ல சத்து ஓகே....ஆனால் நெத்தலியிலை பயங்கர கொலஸ்ரோல் எண்டு கதைக்கிறாங்கள் எல்லே?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெத்தலியில் இருப்பது  unsaturated fat . இது ரத்தத்தில் இருக்கும் கூடாத கொழுப்பை ஈரலுக்கு கொண்டு சென்று அகற்றும். என்றபடியால் உயர்  ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. உப்பு இருப்பதால் கொதி தண்ணீரில் நன்றாக கழுவி சமைத்தால் சரி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் உப்பில ஊற வைத்த  நெத்தலியை இப்படி  பிரட்டுவதுண்டு  உருளைக்கிழங்கு போட்டு அதிகாலை தண்ணீச்சோறும் வடித்த சோறை எடுத்து அதற்கும் கொஞ்சம் தேங்காய் பூவைப்போட்டு  சோற்றில் பிசைந்து இந்த பிரட்டலை வைத்து சாப்பிடுவது இதற்கு நிகர் இதுதான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்க நால்லாத்தான் இருக்கு. கொஞ்சம் மஞ்சள் தூள் போட்டிருந்தால் கலர் நன்றாக இருக்கும்.  எனக்கு இப்போதெல்லாம் இந்த நெத்தலி கருவாடு எல்லாம் பிடிப்பதே இல்லை. ஆனாலும் என்ன செய்யிறது மனுசனுக்குச் சமைச்சுக் குடுக்கிறதுதான்.

ஆனால் உடன் நெத்தலி  பொரியல் எண்டால் அவ்வளவுதான். போகவரச் சாப்பிடுவன்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/22/2019 at 8:06 AM, ஈழப்பிரியன் said:

முயற்சி செய்து பாருங்கள்.நல்ல ருசியாகவும் சத்தாகவும் இருக்கும்.
வடை செய்த மாதிரி செய்து போட்டு படத்தையும் போடுங்கோ.
சீனர்களின் கடைகளில் வாங்கினால் மண் இருக்காது.
அதுவும் தலையில்லாதது வாங்கினால் மண்ணே இருக்காது.
எதுக்கும் இரண்டு மூன்று தடவைகள் கழுவவும்.

1.jpg

2.jpg

3.jpg

On 7/22/2019 at 8:06 AM, ஈழப்பிரியன் said:

முயற்சி செய்து பாருங்கள்.நல்ல ருசியாகவும் சத்தாகவும் இருக்கும்.
வடை செய்த மாதிரி செய்து போட்டு படத்தையும் போடுங்கோ.
சீனர்களின் கடைகளில் வாங்கினால் மண் இருக்காது.
அதுவும் தலையில்லாதது வாங்கினால் மண்ணே இருக்காது.
எதுக்கும் இரண்டு மூன்று தடவைகள் கழுவவும்.

நல்ல ரெசிப்பி . சூப்பர் டேஸ்ட்டாக இருந்தது. நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, nilmini said:

1.jpg

2.jpg

3.jpg

ஆஹா... நில்மினி, சொன்ன மாதிரி நெத்தலி கருவாடு செய்து... படத்தையும் போட் டு விட்டீர்கள். :)
பார்க்க வடிவாக இருக்குது. அது என்ன வெள்ளையாக.. இருப்பது கோதுமை மாவில் அவித்த புட்டா? 

இதனை... நில்மினி செய்தவாரா? அல்லது அவரின் அம்மா செய்தவாரா.. என்று எனக்கு சந்தேகமாக இருக்கு.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/23/2019 at 6:53 AM, குமாரசாமி said:

நல்ல சத்து ஓகே....ஆனால் நெத்தலியிலை பயங்கர கொலஸ்ரோல் எண்டு கதைக்கிறாங்கள் எல்லே?????

நீங்கள் பேதி தந்ததும் கொஞ்சம் வயிற்றோட்டமாக இருந்தது.

டாக்கர் நில்மினியின் மருந்தில் குணமாகிவிட்டது.

On 7/23/2019 at 10:37 AM, nilmini said:

நெத்தலியில் இருப்பது  unsaturated fat . இது ரத்தத்தில் இருக்கும் கூடாத கொழுப்பை ஈரலுக்கு கொண்டு சென்று அகற்றும். என்றபடியால் உயர்  ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. உப்பு இருப்பதால் கொதி தண்ணீரில் நன்றாக கழுவி சமைத்தால் சரி 

நன்றி நில்மினி.

On 7/27/2019 at 1:08 PM, தனிக்காட்டு ராஜா said:

நாங்கள் உப்பில ஊற வைத்த  நெத்தலியை இப்படி  பிரட்டுவதுண்டு  உருளைக்கிழங்கு போட்டு அதிகாலை தண்ணீச்சோறும் வடித்த சோறை எடுத்து அதற்கும் கொஞ்சம் தேங்காய் பூவைப்போட்டு  சோற்றில் பிசைந்து இந்த பிரட்டலை வைத்து சாப்பிடுவது இதற்கு நிகர் இதுதான் 

ராசா முன்னர் பிரட்டல் கறியாக வைத்தே சாப்பிட்டோம்.இடையிடை பொரித்து சாப்பிடுவது.இது தான் முதல்முறையாக எண்ணெயில் வதக்கி எடுத்தது.நன்றாகவே இருந்தது.நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/27/2019 at 2:15 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பார்க்க நால்லாத்தான் இருக்கு. கொஞ்சம் மஞ்சள் தூள் போட்டிருந்தால் கலர் நன்றாக இருக்கும்.  எனக்கு இப்போதெல்லாம் இந்த நெத்தலி கருவாடு எல்லாம் பிடிப்பதே இல்லை. ஆனாலும் என்ன செய்யிறது மனுசனுக்குச் சமைச்சுக் குடுக்கிறதுதான்.

ஆனால் உடன் நெத்தலி  பொரியல் எண்டால் அவ்வளவுதான். போகவரச் சாப்பிடுவன்.  

இதுவும் முழுக்கவும் எண்ணெயில் செய்கிறபடியால் பொரியல் மாதிரியே இருக்கும்.நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும்.

9 hours ago, nilmini said:

1.jpg

2.jpg

3.jpg

நல்ல ரெசிப்பி . சூப்பர் டேஸ்ட்டாக இருந்தது. நன்றி 

நில்மினி வீட்டிலே நெத்தலி இருந்தபடியால் உடனேயே செய்து பார்த்திருக்கிறீர்கள்.நல்லது .

இந்தமுறை செய்தது எனது மகனும் விரும்பி சாப்பிட்டான்.எதுவாக இருந்தாலும் எண்ணெய் சேர்த்தால் தனிசுவை தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

ஆஹா... நில்மினி, சொன்ன மாதிரி நெத்தலி கருவாடு செய்து... படத்தையும் போட் டு விட்டீர்கள். :)
பார்க்க வடிவாக இருக்குது. அது என்ன வெள்ளையாக.. இருப்பது கோதுமை மாவில் அவித்த புட்டா? 

இதனை... நில்மினி செய்தவாரா? அல்லது அவரின் அம்மா செய்தவாரா.. என்று எனக்கு சந்தேகமாக இருக்கு.  :grin:

சிறி
நில்மினி வீட்டில் கோதுமைப் புட்டு அவிப்பாங்கள் என்று நம்புகிறீர்களா?
நோ நோ நெவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

ராசா முன்னர் பிரட்டல் கறியாக வைத்தே சாப்பிட்டோம்.இடையிடை பொரித்து சாப்பிடுவது.இது தான் முதல்முறையாக எண்ணெயில் வதக்கி எடுத்தது.நன்றாகவே இருந்தது.நன்றி.

எங்களுக்கு  அப்படியே துடிக்க துடிக்க மீன் கிடைப்பதால்  ருசி பிரமாதமாக இருக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஈழப்பிரியன் said:

சிறி
நில்மினி வீட்டில் கோதுமைப் புட்டு அவிப்பாங்கள் என்று நம்புகிறீர்களா?
நோ நோ நெவர்.

ஈழப்பிரியன்... அவித்த கோதுமை மாவில்... இடியப்பம், புட்டு  செய்தால், நல்ல சுவையாக இருக்கும்.
வறுத்த கோதுமை மா...   பித்தம் (தலை இடிக்கும், சத்தி வரும்)   என்று சொல்வார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.