Jump to content

‘கோட்டாவே வேட்பாளரென நான் கூறவில்லை’


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

‘கோட்டாவே வேட்பாளரென நான் கூறவில்லை’

Editorial / 2019 ஜூலை 22 திங்கட்கிழமை, மு.ப. 09:58 Comments - 0
‘கோட்டாவே வேட்பாளரென நான் கூறவில்லை’

image_e3f1fd443c.jpg

 

அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்காக, கோட்டாபய ராஜபக்‌ஷவை களமிறக்குவதாக, தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் நேற்று(21) கலந்துகொண்டு  உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதென, ஒருவர் தெரிவிக்கும் போது, மற்றொருவர் நாட்டில் பாதுகாப்பு இல்லையெனத் தெரிவிப்பதாகத் தெரிவித்த மஹிந்த, சரத் பொன்சேகா மாத்திரமே பயங்கரவாதம் நாட்டிலிருந்து இன்னும் ஒழிக்கப்படவில்லை எனத் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

http://www.tamilmirror.lk/செய்திகள்/கோட்டாவே-வேட்பாளரென-நான்-கூறவில்லை/175-235682

Link to comment
Share on other sites

கோத்தா தான் வேட்பாளர் என்று மகிந்த கூறவில்லை தான். பொதுஜன பெரமுன சார்பில் யார் வேட்பாளர் என்று ஓகஸ்ட் 11 ஆம் திகதி மகிந்த அறிவிப்பார் என்று தான் சொன்னவை.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் பொதுஜன பெரமுனவும் கூட்டணி அமைக்குமா இல்லையா என்பதிலும் யார் வேட்பாளர் என்பது தங்கியுள்ளது. 

Link to comment
Share on other sites

அமெரிக்கப் பிரஜாவுரிமையைக் கைவிட்டவர்களின் முதல் காலாண்டுப் பட்டியலில் கோத்தபாயவின் பெயரில்லை

bit.ly/2M4yPnq  #SriLanka #UScitizenship #GotabhayaRajapaksa

Link to comment
Share on other sites

54 minutes ago, ampanai said:

அமெரிக்கப் பிரஜாவுரிமையைக் கைவிட்டவர்களின் முதல் காலாண்டுப் பட்டியலில் கோத்தபாயவின் பெயரில்லை

bit.ly/2M4yPnq  #SriLanka #UScitizenship #GotabhayaRajapaksa

முதல் காலாண்டு பட்டியலில் இல்லை என்பது முன்னரே வந்த செய்தி தான். அடுத்த காலாண்டு பட்டியலில் வருகிறதா இல்லையா என்பதை பார்க்க வேண்டும்.

ஏனென்றால் கோத்தா அமெரிக்க குடியுரிமையை துறக்கும் முயற்சியை மார்ச் மாதம் தான் ஆரம்பித்தவர். ஏப்ரல் 17 ஆம் திகதி அமெரிக்க கடவுச்சீட்டையும் மற்றும் தேவையான ஆவணங்களையும் அமெரிக்க தூதரகத்தில் கையளித்தவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க தவறினால் அருகில் இருக்கும் என் அருமை தம்பி சட்டையை கழற்றி திரிவார் என்பதை அறிய தருகின்றன் ..

maxresdefault.jpg

எது எப்படியோ அண்ணன் தம்பிக்குள் புடுங்குபாடு நடந்தால் சரி..☺️

 

Link to comment
Share on other sites

6 hours ago, Lara said:

கோத்தா தான் வேட்பாளர் என்று மகிந்த கூறவில்லை தான். பொதுஜன பெரமுன சார்பில் யார் வேட்பாளர் என்று ஓகஸ்ட் 11 ஆம் திகதி மகிந்த அறிவிப்பார் என்று தான் சொன்னவை.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் பொதுஜன பெரமுனவும் கூட்டணி அமைக்குமா இல்லையா என்பதிலும் யார் வேட்பாளர் என்பது தங்கியுள்ளது. 


எந்த ஒரு கட்சியும்  50% + பெறுமா என்பது கேள்வியே.

Link to comment
Share on other sites

2 hours ago, ampanai said:

எந்த ஒரு கட்சியும்  50% + பெறுமா என்பது கேள்வியே.

இத்தேர்தலில் சிங்களவர்கள் வாக்குகளை மட்டும் வைத்து வெல்ல முயல்கிறார்கள். அது சாத்தியமா என்பதை தேர்தல் முடிவுகள் தான் கூற வேண்டும்.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியும் பொதுஜன பெரமுனவும் கூட்டணி அமைத்தால் மைத்திரி ஜனாதிபதி வேட்பாளர், மகிந்த பிரதமர் என்று தான் பரிந்துரை செய்தார்கள். கூட்டணி அமைக்குமா இல்லையா என தெரியவில்லை.

ஐ.தே.க வேட்பாளராக சஜித்தை நிறுத்த முயல்கிறார்கள். இங்கு என்ன பிரச்சினை என்றால் சஜித் மகிந்த ஆதரவாளர்.

தேர்தலில் ஒருவரும் 50%+ பெறாவிட்டாலும் தேர்தலின் பின் சேர்ந்து அரசமைக்கக்கூடும்.

Link to comment
Share on other sites

தேர்தலில் யாரும் 50%+ வாக்குகளை பெறாவிட்டால் அதிக வாக்குகளை பெற்ற முதல் இரு வேட்பாளர்களை தெரிவு செய்து ஏனையோருக்கு வழங்கப்பட்ட வாக்குகளின் இரண்டாவது விருப்பத்தெரிவை கணக்கெடுத்து வெற்றியாளர் யார் என கூறுவார்கள்.

Link to comment
Share on other sites

மகிந்த தனது மகனைத்தான் ஜனாதிபதியாக காண விரும்புகிறார்.

இடையில் அண்ணனை இல்லை தம்பியை அமர்த்த பார்கின்றார்.

Link to comment
Share on other sites

35 minutes ago, ampanai said:

மகிந்த தனது மகனைத்தான் ஜனாதிபதியாக காண விரும்புகிறார்.

இடையில் அண்ணனை இல்லை தம்பியை அமர்த்த பார்கின்றார்.

இப்பொழுதும் மகனை தான் ஜனாதிபதியாக்க விருப்பம். ஆனால் அரசியலமைப்பில் ஆகக்குறைந்தது 30 வயதை கொண்டிருக்க வேண்டும் என்பதை 35 வயதாக மாற்றி விட்டதால் மகன் இம்முறை போட்டியிட முடியாத நிலை. 😀

அதனால் இடையில் இவர்கள் ஆட்டம். 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சஜித் தேர்தலுக்கு பின்னாக மகிந்தவுடன் கூட்டணி சேருவார் எண்டு நான் நினைக்கேல்ல.

கரு, நளின் எண்டு யுஎன்பி கூடாரமே காலியாகி பொது பெரமுனவில் இணந்தபோதும் சஜித் போகவில்லை. ரணிலுடன் லடாய் என்றபோதும்.

சஜித்தின் இரெட்டை இலக்கு யுஎன்பியை கைப்பறுவதும் ஆட்சியை பிடிப்பதும். ஆட்சி போகும் வரும் ஆனால் யுஎன்பி தலைமை போனாவராது.

ரணிலின், கருநாநிதி, ஸ்டாலின் அணுகுமுறையும் இதுவே.

Link to comment
Share on other sites

3 hours ago, goshan_che said:

சஜித் தேர்தலுக்கு பின்னாக மகிந்தவுடன் கூட்டணி சேருவார் எண்டு நான் நினைக்கேல்ல.

கரு, நளின் எண்டு யுஎன்பி கூடாரமே காலியாகி பொது பெரமுனவில் இணந்தபோதும் சஜித் போகவில்லை. ரணிலுடன் லடாய் என்றபோதும்.

சஜித்தின் இரெட்டை இலக்கு யுஎன்பியை கைப்பறுவதும் ஆட்சியை பிடிப்பதும். ஆட்சி போகும் வரும் ஆனால் யுஎன்பி தலைமை போனாவராது.

ரணிலின், கருநாநிதி, ஸ்டாலின் அணுகுமுறையும் இதுவே.

சஜித் மகிந்த ஆதரவாளர். ஆனால் தேர்தலின் பின் மகிந்தவுடன் தான் கூட்டு சேர வேண்டுமென்றில்லை, மைத்திரியுடனும் சேர முடியும் தானே? (கட்சி கூட்டணி)

இப்போதைக்கு சுதந்திர கட்சி சார்பில் மைத்திரி வேட்பாளர் என்றே கூறப்படுகிறது. சுதந்திர கட்சி, பொதுஜன பெரமுன கூட்டணி அமைக்காவிட்டால் மும்முனைப்போட்டி.

அதேபோல் தேர்தலின் பின் சுதந்திரக்கட்சி, பொதுஜன பெரமுன கூட்டும் உருவாகலாம்.

சிங்களவர்களை பொறுத்தவரை எதையும் உறுதியாக கூற முடியாது. 😀

Link to comment
Share on other sites

சஜித்தை யூ என் பி யில் இருப்பவர்களில் ஒரு சாரார் எதிர்ப்பதற்கு சஜித் தின் சாதியும் ஒரு காரணம். மேட்டுக்குடி வர்க்கம் அதிகமாக ஆதரிக்கும் கட்சியான யூ என் பி யிற்கு சிங்கள சாதி அமைப்பில் சாதி குறைந்த ஒருவர் தலைமை ஏற்பதை விருப்பத்துடன் அணுகாது.

பிரேமதாசாவையும் அவரின் சாதி காரணமாக சிங்கள மக்களில் ஒரு பகுதியினர் வெறுத்தனர். கண்டி சிங்களவர்கள் பலருக்கு பிரேமதாசாவை பிடிக்காமைக்கும் சாதியும் ஒரு காரணம்.

Link to comment
Share on other sites

சஜித் இலங்கையில் GCE OL பரீட்சையில் கூட சித்தியடையவில்லை, அதனால் இவருக்கு சனாதிபதி பதவி ஒரு கேடா என்று பலர் கதைப்பதாகத் தெரிகிறது.

உண்மை என்னவென்று உடனடியாக தெரியவில்லை.

Link to comment
Share on other sites

 

கோத்தாவை அறிவிக்குமாறு மகிந்தவுக்கு அழுத்தங்கள் அதிகரிப்பு

 

mahinda--300x201.jpg

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராக கோத்தாபய ராஜபக்சவை அறிவிக்குமாறு, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு அழுத்தங்கள் அதிகரித்துள்ளன என, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பொதுஜன பெரமுனவின் சார்பில் கோத்தாபய ராஜபக்சவை அதிபர்  வேட்பாளராக நிறுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும், கட்சிக்குள் பலத்த போட்டி நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவான- எதிரான அணிகள் தோற்றம் பெற்றுள்ள நிலையில், அதிபர் வேட்பாளர் தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் நிகழ்ந்து வருகின்றன.

இந்தநிலையில், வரும் ஓகஸ்ட் 11ஆம் நாள், நடைபெறவுள்ள பொதுஜன பெரமுனவின் மாநாட்டில், அதிபர் வேட்பாளரை தான்  அறிவிக்கப் போவதாக மகிந்த ராஜபக்ச நேற்று உறுதிப்படுத்தினார்.

எனினும் கோத்தாபய ராஜபக்ச தான் வேட்பாளர் என்பதை உறுதிப்படுத்த அவர் மறுத்து விட்டார்.

கோத்தாபய ராஜபக்சவை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப் போவதாக தாம் ஒருபோதும் கூறவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, கோத்தாபய ராஜபக்சவை அதிபர் வேட்பாளராக அறிவிப்பதற்கு, மகிந்த ராஜபக்சவுக்கு அழுத்தங்களைக் கொடுக்கும் வகையில், மாவட்ட அடிப்படையில் அவரை வேட்பாளராக முன்னிறுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த கம்பகா மாவட்ட பொதுஜன பெரமுன குழு கூட்டத்தில், கோத்தாபய ராஜபக்சவை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் எனக் கோரும் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

கோத்தாபய ராஜபக்ச எமது அதிபர் வேட்பாளராக இருக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். நாங்கள் இந்த விடயத்தைப் பற்றி விவாதித்தோம்.

முன்னாள் பாதுகாப்பு செயலர் சிறந்த வேட்பாளர் என்பது எங்கள் ஒருமித்த முடிவு.

ஓகஸ்ட் 11ஆம் நாள் நடைபெறும் கட்சி மாநாட்டில் எமது அதிபர் வேட்பாளர் யார் என்பதை மகிந்த ராஜபக்ச அறிவிக்கவுள்ளார். நாங்கள் சொல்வதை அவர் கேட்பார் என்று நம்புகிறோம்” எனவும் பிரசன்ன ரணதுங்க கூறினார்.

http://www.puthinappalakai.net/2019/07/23/news/39124

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த எருமை வந்தால் எங்களுக்கென்ன? ஈழத்தமிழனுக்கு எல்லாம் ஒண்டுதான்.
#அனுபவம் பேசவைக்குது :cool:

 

Bildergebnis für à®à®°à¯à®®à¯

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.