Jump to content

‘கோட்டாவே வேட்பாளரென நான் கூறவில்லை’


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

‘கோட்டாவே வேட்பாளரென நான் கூறவில்லை’

Editorial / 2019 ஜூலை 22 திங்கட்கிழமை, மு.ப. 09:58 Comments - 0
‘கோட்டாவே வேட்பாளரென நான் கூறவில்லை’

image_e3f1fd443c.jpg

 

அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்காக, கோட்டாபய ராஜபக்‌ஷவை களமிறக்குவதாக, தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் நேற்று(21) கலந்துகொண்டு  உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதென, ஒருவர் தெரிவிக்கும் போது, மற்றொருவர் நாட்டில் பாதுகாப்பு இல்லையெனத் தெரிவிப்பதாகத் தெரிவித்த மஹிந்த, சரத் பொன்சேகா மாத்திரமே பயங்கரவாதம் நாட்டிலிருந்து இன்னும் ஒழிக்கப்படவில்லை எனத் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

http://www.tamilmirror.lk/செய்திகள்/கோட்டாவே-வேட்பாளரென-நான்-கூறவில்லை/175-235682

Link to comment
Share on other sites

கோத்தா தான் வேட்பாளர் என்று மகிந்த கூறவில்லை தான். பொதுஜன பெரமுன சார்பில் யார் வேட்பாளர் என்று ஓகஸ்ட் 11 ஆம் திகதி மகிந்த அறிவிப்பார் என்று தான் சொன்னவை.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் பொதுஜன பெரமுனவும் கூட்டணி அமைக்குமா இல்லையா என்பதிலும் யார் வேட்பாளர் என்பது தங்கியுள்ளது. 

Link to comment
Share on other sites

அமெரிக்கப் பிரஜாவுரிமையைக் கைவிட்டவர்களின் முதல் காலாண்டுப் பட்டியலில் கோத்தபாயவின் பெயரில்லை

bit.ly/2M4yPnq  #SriLanka #UScitizenship #GotabhayaRajapaksa

Link to comment
Share on other sites

54 minutes ago, ampanai said:

அமெரிக்கப் பிரஜாவுரிமையைக் கைவிட்டவர்களின் முதல் காலாண்டுப் பட்டியலில் கோத்தபாயவின் பெயரில்லை

bit.ly/2M4yPnq  #SriLanka #UScitizenship #GotabhayaRajapaksa

முதல் காலாண்டு பட்டியலில் இல்லை என்பது முன்னரே வந்த செய்தி தான். அடுத்த காலாண்டு பட்டியலில் வருகிறதா இல்லையா என்பதை பார்க்க வேண்டும்.

ஏனென்றால் கோத்தா அமெரிக்க குடியுரிமையை துறக்கும் முயற்சியை மார்ச் மாதம் தான் ஆரம்பித்தவர். ஏப்ரல் 17 ஆம் திகதி அமெரிக்க கடவுச்சீட்டையும் மற்றும் தேவையான ஆவணங்களையும் அமெரிக்க தூதரகத்தில் கையளித்தவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க தவறினால் அருகில் இருக்கும் என் அருமை தம்பி சட்டையை கழற்றி திரிவார் என்பதை அறிய தருகின்றன் ..

maxresdefault.jpg

எது எப்படியோ அண்ணன் தம்பிக்குள் புடுங்குபாடு நடந்தால் சரி..☺️

 

Link to comment
Share on other sites

6 hours ago, Lara said:

கோத்தா தான் வேட்பாளர் என்று மகிந்த கூறவில்லை தான். பொதுஜன பெரமுன சார்பில் யார் வேட்பாளர் என்று ஓகஸ்ட் 11 ஆம் திகதி மகிந்த அறிவிப்பார் என்று தான் சொன்னவை.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் பொதுஜன பெரமுனவும் கூட்டணி அமைக்குமா இல்லையா என்பதிலும் யார் வேட்பாளர் என்பது தங்கியுள்ளது. 


எந்த ஒரு கட்சியும்  50% + பெறுமா என்பது கேள்வியே.

Link to comment
Share on other sites

2 hours ago, ampanai said:

எந்த ஒரு கட்சியும்  50% + பெறுமா என்பது கேள்வியே.

இத்தேர்தலில் சிங்களவர்கள் வாக்குகளை மட்டும் வைத்து வெல்ல முயல்கிறார்கள். அது சாத்தியமா என்பதை தேர்தல் முடிவுகள் தான் கூற வேண்டும்.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியும் பொதுஜன பெரமுனவும் கூட்டணி அமைத்தால் மைத்திரி ஜனாதிபதி வேட்பாளர், மகிந்த பிரதமர் என்று தான் பரிந்துரை செய்தார்கள். கூட்டணி அமைக்குமா இல்லையா என தெரியவில்லை.

ஐ.தே.க வேட்பாளராக சஜித்தை நிறுத்த முயல்கிறார்கள். இங்கு என்ன பிரச்சினை என்றால் சஜித் மகிந்த ஆதரவாளர்.

தேர்தலில் ஒருவரும் 50%+ பெறாவிட்டாலும் தேர்தலின் பின் சேர்ந்து அரசமைக்கக்கூடும்.

Link to comment
Share on other sites

தேர்தலில் யாரும் 50%+ வாக்குகளை பெறாவிட்டால் அதிக வாக்குகளை பெற்ற முதல் இரு வேட்பாளர்களை தெரிவு செய்து ஏனையோருக்கு வழங்கப்பட்ட வாக்குகளின் இரண்டாவது விருப்பத்தெரிவை கணக்கெடுத்து வெற்றியாளர் யார் என கூறுவார்கள்.

Link to comment
Share on other sites

மகிந்த தனது மகனைத்தான் ஜனாதிபதியாக காண விரும்புகிறார்.

இடையில் அண்ணனை இல்லை தம்பியை அமர்த்த பார்கின்றார்.

Link to comment
Share on other sites

35 minutes ago, ampanai said:

மகிந்த தனது மகனைத்தான் ஜனாதிபதியாக காண விரும்புகிறார்.

இடையில் அண்ணனை இல்லை தம்பியை அமர்த்த பார்கின்றார்.

இப்பொழுதும் மகனை தான் ஜனாதிபதியாக்க விருப்பம். ஆனால் அரசியலமைப்பில் ஆகக்குறைந்தது 30 வயதை கொண்டிருக்க வேண்டும் என்பதை 35 வயதாக மாற்றி விட்டதால் மகன் இம்முறை போட்டியிட முடியாத நிலை. 😀

அதனால் இடையில் இவர்கள் ஆட்டம். 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சஜித் தேர்தலுக்கு பின்னாக மகிந்தவுடன் கூட்டணி சேருவார் எண்டு நான் நினைக்கேல்ல.

கரு, நளின் எண்டு யுஎன்பி கூடாரமே காலியாகி பொது பெரமுனவில் இணந்தபோதும் சஜித் போகவில்லை. ரணிலுடன் லடாய் என்றபோதும்.

சஜித்தின் இரெட்டை இலக்கு யுஎன்பியை கைப்பறுவதும் ஆட்சியை பிடிப்பதும். ஆட்சி போகும் வரும் ஆனால் யுஎன்பி தலைமை போனாவராது.

ரணிலின், கருநாநிதி, ஸ்டாலின் அணுகுமுறையும் இதுவே.

Link to comment
Share on other sites

3 hours ago, goshan_che said:

சஜித் தேர்தலுக்கு பின்னாக மகிந்தவுடன் கூட்டணி சேருவார் எண்டு நான் நினைக்கேல்ல.

கரு, நளின் எண்டு யுஎன்பி கூடாரமே காலியாகி பொது பெரமுனவில் இணந்தபோதும் சஜித் போகவில்லை. ரணிலுடன் லடாய் என்றபோதும்.

சஜித்தின் இரெட்டை இலக்கு யுஎன்பியை கைப்பறுவதும் ஆட்சியை பிடிப்பதும். ஆட்சி போகும் வரும் ஆனால் யுஎன்பி தலைமை போனாவராது.

ரணிலின், கருநாநிதி, ஸ்டாலின் அணுகுமுறையும் இதுவே.

சஜித் மகிந்த ஆதரவாளர். ஆனால் தேர்தலின் பின் மகிந்தவுடன் தான் கூட்டு சேர வேண்டுமென்றில்லை, மைத்திரியுடனும் சேர முடியும் தானே? (கட்சி கூட்டணி)

இப்போதைக்கு சுதந்திர கட்சி சார்பில் மைத்திரி வேட்பாளர் என்றே கூறப்படுகிறது. சுதந்திர கட்சி, பொதுஜன பெரமுன கூட்டணி அமைக்காவிட்டால் மும்முனைப்போட்டி.

அதேபோல் தேர்தலின் பின் சுதந்திரக்கட்சி, பொதுஜன பெரமுன கூட்டும் உருவாகலாம்.

சிங்களவர்களை பொறுத்தவரை எதையும் உறுதியாக கூற முடியாது. 😀

Link to comment
Share on other sites

சஜித்தை யூ என் பி யில் இருப்பவர்களில் ஒரு சாரார் எதிர்ப்பதற்கு சஜித் தின் சாதியும் ஒரு காரணம். மேட்டுக்குடி வர்க்கம் அதிகமாக ஆதரிக்கும் கட்சியான யூ என் பி யிற்கு சிங்கள சாதி அமைப்பில் சாதி குறைந்த ஒருவர் தலைமை ஏற்பதை விருப்பத்துடன் அணுகாது.

பிரேமதாசாவையும் அவரின் சாதி காரணமாக சிங்கள மக்களில் ஒரு பகுதியினர் வெறுத்தனர். கண்டி சிங்களவர்கள் பலருக்கு பிரேமதாசாவை பிடிக்காமைக்கும் சாதியும் ஒரு காரணம்.

Link to comment
Share on other sites

சஜித் இலங்கையில் GCE OL பரீட்சையில் கூட சித்தியடையவில்லை, அதனால் இவருக்கு சனாதிபதி பதவி ஒரு கேடா என்று பலர் கதைப்பதாகத் தெரிகிறது.

உண்மை என்னவென்று உடனடியாக தெரியவில்லை.

Link to comment
Share on other sites

 

கோத்தாவை அறிவிக்குமாறு மகிந்தவுக்கு அழுத்தங்கள் அதிகரிப்பு

 

mahinda--300x201.jpg

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராக கோத்தாபய ராஜபக்சவை அறிவிக்குமாறு, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு அழுத்தங்கள் அதிகரித்துள்ளன என, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பொதுஜன பெரமுனவின் சார்பில் கோத்தாபய ராஜபக்சவை அதிபர்  வேட்பாளராக நிறுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும், கட்சிக்குள் பலத்த போட்டி நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவான- எதிரான அணிகள் தோற்றம் பெற்றுள்ள நிலையில், அதிபர் வேட்பாளர் தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் நிகழ்ந்து வருகின்றன.

இந்தநிலையில், வரும் ஓகஸ்ட் 11ஆம் நாள், நடைபெறவுள்ள பொதுஜன பெரமுனவின் மாநாட்டில், அதிபர் வேட்பாளரை தான்  அறிவிக்கப் போவதாக மகிந்த ராஜபக்ச நேற்று உறுதிப்படுத்தினார்.

எனினும் கோத்தாபய ராஜபக்ச தான் வேட்பாளர் என்பதை உறுதிப்படுத்த அவர் மறுத்து விட்டார்.

கோத்தாபய ராஜபக்சவை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப் போவதாக தாம் ஒருபோதும் கூறவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, கோத்தாபய ராஜபக்சவை அதிபர் வேட்பாளராக அறிவிப்பதற்கு, மகிந்த ராஜபக்சவுக்கு அழுத்தங்களைக் கொடுக்கும் வகையில், மாவட்ட அடிப்படையில் அவரை வேட்பாளராக முன்னிறுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த கம்பகா மாவட்ட பொதுஜன பெரமுன குழு கூட்டத்தில், கோத்தாபய ராஜபக்சவை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் எனக் கோரும் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

கோத்தாபய ராஜபக்ச எமது அதிபர் வேட்பாளராக இருக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். நாங்கள் இந்த விடயத்தைப் பற்றி விவாதித்தோம்.

முன்னாள் பாதுகாப்பு செயலர் சிறந்த வேட்பாளர் என்பது எங்கள் ஒருமித்த முடிவு.

ஓகஸ்ட் 11ஆம் நாள் நடைபெறும் கட்சி மாநாட்டில் எமது அதிபர் வேட்பாளர் யார் என்பதை மகிந்த ராஜபக்ச அறிவிக்கவுள்ளார். நாங்கள் சொல்வதை அவர் கேட்பார் என்று நம்புகிறோம்” எனவும் பிரசன்ன ரணதுங்க கூறினார்.

http://www.puthinappalakai.net/2019/07/23/news/39124

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த எருமை வந்தால் எங்களுக்கென்ன? ஈழத்தமிழனுக்கு எல்லாம் ஒண்டுதான்.
#அனுபவம் பேசவைக்குது :cool:

 

Bildergebnis für à®à®°à¯à®®à¯

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்கச் சென்ற வயதான வாக்காளரின் பெயர், இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்ததால், வாக்களிக்க முடியாமல் அதிர்ச்சியடைந்து திரும்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.   ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி, பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், திமுக கூட்டணி சார்பில் நவாஸ்கனியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் விருவிருப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 3 மணி வரை ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 52.46 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க சென்ற வயது முதிர்ந்த பெண் ஒருவரின் பெயர், இறந்தபோன வாக்காளர் லிஸ்ட்டில் இடம்பெற்றிருந்தததால் வாக்களிக்க முடியாமல் திரும்பினார். துளசிபாவா மடம் பகுதியை சேர்ந்த காளியம்மாள் (65) என்பவர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் சிலிப்புடன் தனது பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க சென்றுள்ளார்.         வாக்குப்பதிவு மையம் உ.பாண்டி     வாக்குச்சாவடி உ.பாண்டி வரிசையில் காத்திருந்த காளியம்மாள் வாக்குப்பதிவு மையத்தினுள் சென்று தனது பூத் சிலிப்பைக் கொடுத்துள்ளார். அதனை வாங்கிப் பார்த்த தேர்தல் பணியாளர், வாக்காளர் பட்டியலில் தேடி பார்த்தபோது, காளியம்மாளின் பெயர் இறந்தவர்களின் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து காளியம்மாளிடம் கூறிய தேர்தல் பணியாளர், அவரை வாக்களிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார். உயிரோடு இருந்து ஓட்டுப்போட ஆர்வத்தோடு வந்த தன்னை, இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்த்திருப்பதை அறிந்த காளியம்மாள் அதிர்ச்சியடைந்ததுடன், வாக்களிக்க முடியாமல் போன வேதனையுடனும் வாக்குப்பதிவு மையத்திலிருந்து வெளியேறினார். `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! | name in the dead voters list ramanathapuram woman failed to cast her vote - Vikatan
    • ஓமண்ணை…. பெரிய அநியாயம்….எனக்கெல்லாம் வாழ்க்கையின் பேக்ரவுண்ட் மியூசிக் அது. 70% க்கு மேல இப்ப wok style தாச்சிதான்.
    • மத்திய அரசுக்குச் சொந்தமான ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி, தனது இந்திச் செய்தி சேனலான 'டிடி நியூஸ்'-இன் பிராண்டிங், செட் டிசைன், போன்றவற்றில் மாற்றம் செய்துள்ளதாகக் கடந்த 16ம் தேதி அன்று சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது அதன் லோகோவை சிவப்பு நிறத்திலிருந்து காவி நிறுத்துக்கு மாற்றியிருக்கிறது.    டிடி நியூஸ் பா.ஜ.க. அரசு பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் தனது கட்சி நிறமான காவியைப் புகுத்தி வருவதற்கு ஏற்கெனவே எதிர்க்கட்சிகள் கண்டனங்களைத் தெரிவித்து வரும் நிலையில் டிடி நியூஸ் சேனலின் லோகோவையும் காவி நிறத்துக்கு மாற்றியுள்ளதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக வலைதளப் பயனாளர்கள் பலரும் கடும் அதிருப்தியும், கண்டனங்களும் தெரிவித்து வருகின்றனர். கடந்த 2012 முதல் 2016 வரை பிரசார் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஜாஹர் சிர்கார், டிடி நியூஸ் சேனல் லோகோ மாற்றம் குறித்து கூறுகையில், “இது பிரச்சார் பாரதி அல்ல. பிரசார பாரதி. அனைத்து மத்திய அரசு நிறுவனங்களையும் காவி மயமாக்கும் நடவடிக்கை நடந்துவருகிறது.   டிடி நியூஸ் புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்குள் நுழைந்தால், அதன் நிறங்கள் காவி நிறமாக மாற்றப்பட்டுள்ளன. மக்களவை, மாநிலங்களவை ஊழியர்களில் பாதி பேர் இப்போது காவி நிற சீருடைகளை அணிந்துள்ளனர்" என்று விமர்சித்திருக்கிறார். Doordarshan: காவி நிறத்துக்கு மாறிய தூர்தர்ஷன் லோகோ; வலுக்கும் கண்டனங்கள்! பின்னணி என்ன? | DD News logo changes to saffron colour (vikatan.com)
    • கொத்து என்றால்.... தகரத்தில் அடிக்கும் கொத்துதான் கெத்து. 😂 அந்தச் சத்தமே.... வாயில் இருந்து உணவுக் குழாய் வரை குதூகலிக்கும் சத்தம் அது. தாச்சியில்... அதுகும்  இலங்கையில்  கொத்து செய்வதை இப்போதான் கேள்விப்படுகின்றேன்.
    • 🤣 இந்த நுளம்பு கூட்டத்தை அவர்கள் பாணியில் சில ஒபாமாக்கள், விஜி களை ஏவி எதிர்கொள்ளுவதுதான் புத்திசாலித்தனம். அல்லது நீர்யோக நகரம், கொஸ்டரீக்கா போன்றனவற்றையும் கையில் எடுக்கலாம். சீரியசாக எடுத்தால் எமக்கு மண்டை காய்ந்து விடும். ————— உண்மையில் ஓரளவுக்கு சாத்தியமான எடுகோள், பலூசிஸ்தான் போலான் கணவாய் வழி மேற்கே இருந்து ஈயுரேசியர், பேர்சியன்ஸும், வடக்கே கைபர் கணவாய் வழி வந்த மத்திய ஆசியர், மங்கோலியர், பிராமணரும் (வேதங்களை நம்பியோர்)….. சிந்து சமவெளியில் இருந்த திராவிட/தொன் தமிழ் நாகரீகத்தை பிரதியீடு செய்ய, திராவிட/தொல் தமிழர் விந்திய மலைக்கு தெற்கே ஒதுங்கினர். இங்கே திராவிடம் எனப்படுவது தொல் தமிழையே.  இன்று தென்னிந்தியாவில் காணப்படும் மக்களின், மொழிகளின், பண்பாடுகளின் தோற்றுவாய். அலர்ஜி உபாதைகள் இருப்போர் திராவிட என்பதற்கு பதில் தொந்தமிழ் என்றோ அல்லது X நாகரீகம் எனவோ அழைத்துக்கொள்ளலாம். ஆனால் X பெர்சியாவில் இருந்து வந்தது என்பது - சந்தேகமே இல்லாமல் - product of Costa Rica தான்🤣.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.