Jump to content

ஃபேஸ்புக் தமிழக இளைஞருக்கு 20 லட்சம் வெகுமதி கொடுத்தது - காரணம் தெரியுமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஃபேஸ்புக் தமிழக இளைஞருக்கு 20 லட்சம் வெகுமதி கொடுத்தது - காரணம் தெரியுமா?

சாய்ராம் ஜெயராமன்,பிபிசி தமிழ்
லக்ஷ்மன் முத்தையா Image captionலக்ஷ்மன் முத்தையா

இன்ஸ்டாகிராம் செயலிலுள்ள ஒரு மிகப் பெரிய பாதுகாப்பு குறைபாட்டை கண்டறிந்த தமிழகத்தை சேர்ந்த கணினி பாதுகாப்பு ஆய்வாளரான லக்ஷ்மன் முத்தையாவை பாராட்டி ஃபேஸ்புக் நிறுவனம் 30,000 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 20 லட்சம் ரூபாய்) வெகுமதி அளித்துள்ளது.

ஏற்கனவே 30க்கும் மேற்பட்ட முறைகள் ஃபேஸ்புக் நிறுவனத்திடமிருந்து இதுபோன்ற வெகுமதியை பெற்றுள்ள லக்ஷ்மன், இம்முறை எதற்காக, எப்படி இந்த வெகுமதி வென்றுள்ளார் என்பதை அறிந்துகொள்வதற்காக பிபிசி தமிழ் அவரிடம் பேசியது.

அதிகரிக்கும் ஹேக்கிங் சம்பவங்கள்

உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், கூகுள் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களின் சேவைகளில் மிகப் பெரிய பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வெளிவருகின்றன. அதன் மூலம், எண்ணிலடங்கா புகைப்படங்கள், காணொளிகள் என பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் அவர்களது ஒப்புதல் இல்லாமலே பொதுவெளியில் வெளியாகும் ஹேக்கிங் சம்பவங்கள் அதிகரித்து வண்ணம் இருக்கின்றன.

ஹேக்கிங்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்நிலையில், தனது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சேவைகளில் பாதுகாப்பு குறைபாட்டை கண்டறியும் வல்லுநர்களுக்கு வெகுமதி அளிக்கும் வழக்கத்தை கொண்டுள்ள ஃபேஸ்புக் நிறுவனம், அதன் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட திட்டத்தின் மூலமாகவே லக்ஷ்மனனுக்கும் இந்த வெகுமதியை அளித்துள்ளது.

"நான் என்ன கண்டறிந்தேன்?"

20 லட்சம் ரூபாய் வெகுமதியை பெறுவதற்கு காரணமான கண்டுபிடிப்பு குறித்து லக்ஷ்மனிடம் கேட்டபோது, "சுருக்க சொல்ல வேண்டுமென்றால், மற்ற சமூக ஊடகங்களை போன்று இன்ஸ்டாகிராமிலும் மறந்து போன கடவுச் சொல்லை மாற்றியமைப்பதற்கான வழி உள்ளது. அதாவது, உங்களது பயனர் பெயரை பதிவிட்டு, அதோடு பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணுக்கு சரிபார்ப்பு எண்ணை பெற்று, அதை உள்ளீடு செய்வதன் மூலம் கணக்கை மீட்டெடுக்க முடியும். இந்த வழியிலுள்ள பாதுகாப்பு குறைபாட்டை பயன்படுத்தி எந்த இன்ஸ்டாகிராம் பயனரின் கணக்கையும் ஹேக் செய்யும் முடியும் என்பதை ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு தெரியப்படுத்தியதன் மூலமே எனக்கு இந்த வெகுமதி கிடைத்துள்ளது" என்று அவர் கூறுகிறார்.

இலங்கை இலங்கை

ஒரு இன்ஸ்டாகிராம் பயனர் தனது கணக்கில் உள்நுழைவதற்கான கடவுச்சொல்லை மறந்துவிட்டு, தவறான கடவுச்சொல்லை ஒரு குறிப்பிட்ட முறைகளுக்கு மேலாக பதிவு செய்தால், அக்கணக்கு முடக்கப்படும். அதே போன்று, கடவுச்சொல்லை மாற்றுவதற்கு, பதிவு செய்த அலைபேசிக்கு வரும் எண்ணை பதிவு செய்யும் இந்த முறையில் ஹேக் செய்வதை தடுக்கும் வசதியை இன்ஸ்டாகிராம் ஏற்படுத்தவில்லையா என்று அவரிடம் கேட்டபோது, "நீங்கள் உங்களது இன்ஸ்டாகிராம் செயலியின் கடவுச்சொல்லை மறந்துவிட்டு, புதிய கடவுச்சொல்லுக்காக வேண்டுகோள் விடுப்பதாக வைத்துக்கொள்வோம்.

அதன் பிறகு, உங்களது அலைபேசிக்கு ஆறு எண்கள் கொண்ட குறுஞ்செய்தி பாதுகாப்பு சரிபார்ப்புக்காக அனுப்பப்படும். அதை உள்ளீடு செய்வதன் மூலம் நீங்கள் புதிய கடவுச்சொல்லை ஏற்படுத்தி உங்களது கணக்கை மீண்டும் பயன்படுத்த முடியும். இவ்வாறாக அனைத்து இன்ஸ்டாகிராம் பயன்பாட்டாளர்களுக்கும் அனுப்பப்படும் பாதுகாப்பு சரிபார்ப்பு எண்கள், அந்நிறுவனத்தின் ஒரு குறிப்பிட்ட பத்து லட்சம் எண்ணிக்கை கொண்ட தொகுப்பிலிருந்து எடுத்தாளப்படுகிறது.

தமிழக இளைஞருக்கு 20 லட்சம் வெகுமதி கொடுத்த ஃபேஸ்புக் - காரணம் என்ன தெரியுமா?படத்தின் காப்புரிமைFACEBOOK

இதில் முக்கியமான விடயம் என்னவென்றால், ஒரு இன்ஸ்டாகிராம் பயனரின் கணக்கோடு தொடர்புடைய அலைபேசி எண்ணுக்கு அந்த பத்து லட்சம் தொகுப்பிலிருந்து எந்த எண்கள் சரிபார்ப்புக்காக அனுப்பப்படுகிறது என்பதை கண்டறிவதன் மூலம் அந்த கணக்கை ஹேக் செய்ய முடியும். இந்த பாதுகாப்பு குறைபாட்டை நிரூபிப்பதற்காக, நான் 1,000 மைக்ரோ கணினிகளை பயன்படுத்தி ஒரே சமயத்தில் இரண்டு லட்சம் எண்களை உள்ளீடு செய்தேன்" என்று லக்ஷ்மன் விளக்குகிறார்.

ஒரே சமயத்தில் 1,000 கணினிகள் எப்படி சாத்தியம்?

ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கிற்கு இரண்டு லட்சம் புதிய கடவுச்சொல் கோரிக்கைகளை அனுப்பவது சாத்தியமா? இதுபோன்ற இயல்புக்கு மாறான செயல்பாட்டின்போது, அக்கணக்கு உடனுக்குடன் அடையாளம் காணப்பட்டு முடக்கப்படாதா? என்று அவரிடம் கேட்டபோது, "நீங்கள் ஒரேயொரு கணினியில்/ ஐபி முகவரியில் இருந்து நூற்றுக்கும் குறைவான தவறான கடவுச்சொல்லை உள்ளீடு செய்தாலே அந்த இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டு விடும். ஆனால், இதுவே வேறுபட்ட கணினி/ ஐபி முகவரியிலிருந்து ஒரே இன்ஸ்டாகிராம் கணக்கின் கடவுச்சொல்லை மாற்ற முயற்சித்தால் அதை தடுக்கும் தற்காப்பு அமைப்பு இன்ஸ்டாகிராமிடம் இல்லை என்பதையே இதன் மூலம் நான் நிரூபித்து காண்பித்தேன்.

இலங்கை இலங்கை

ஒரே நேரத்தில் ஆயிரம் உண்மையான கணினிகளை பயன்படுத்துவதற்கு பதிலாக, அமேசான் நிறுவனத்தின் மேகக்கணினியக தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதன் மூலம் சில நிமிடங்களுக்கு 1,000 மைக்ரோ கணினிகளை வாடகைக்கு எடுத்து இதை நிகழ்த்தினேன். இதற்காக நான் சுமார் 3,500 ரூபாய் மட்டுமே செலவிட்டிருப்பேன்" என்று தனது கண்டுபிடிப்பை விளக்குகிறார் லக்ஷ்மன்.

தனது பணிசார்ந்த வாழ்க்கையில் ஏற்றத்தை அடைவதற்காக, இதுபோன்ற மிகப் பெரிய பாதுகாப்பு குறைபாட்டை கண்டுபிடிக்கும் பணியில் சில ஆண்டுகளாக இடைவேளைக்கு பிறகு, கடந்த மார்ச் மாதம் களத்தில் இறங்கியதாக கூறுகிறார் இவர். "இரண்டு மாதகால கடுமையான சோதனைகளுக்கு பிறகு இன்ஸ்டாகிராமிலுள்ள இந்த குறைபாட்டை கடந்த மே மாதம் கண்டறிந்தவுடன் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு அனுப்பினேன். நான் அனுப்பிய தகவல்கள் போதுமானதாக இல்லாததால், ஃபேஸ்புக் நிறுவனத்தின் கோரிக்கையின்படி, எனது சோதனை தொடர்பான செய்முறை காணொளியையும், மேலதிக விளக்கத்தையும் ஜூன் மாதம் அனுப்பிய நிலையில், கடந்த 10ஆம் தேதி எனக்கு இந்த வெகுமதி அளிக்கப்படுவதாக ஃபேஸ்புக் தரப்பில் தெரிவிக்கப்பட்டது."

அடுத்தது என்ன?

தமிழக இளைஞருக்கு 20 லட்சம் வெகுமதி கொடுத்த ஃபேஸ்புக் - காரணம் என்ன தெரியுமா?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

காரைக்குடியை பூர்விகமாக கொண்ட லக்ஷ்மன் முத்தையா, அங்கு தனது பள்ளிக்கல்வியை முடித்துவிட்டு, சென்னையிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரில் 2014ஆம் ஆண்டு கணினி பொறியலில் இளங்கலை பட்டம் பெற்றவர்.

அதன் பிறகு 2015ஆம் ஆண்டு வரை தனியார் நிறுவனத்தில் இணையதள வடிவமைப்பாளராக பணியாற்றிய இவர், அதற்கடுத்த ஆண்டு தனது நண்பர்களுடன் இணைந்து 'நெட்மை சாஃப்ட்' எனும் மின்னணு பாதுகாப்பு மற்றும் இணையதள வடிவமைப்பு நிறுவனத்தை சென்னையில் தொடங்கி நடத்தி வருகிறார்.

முன்னதாக, 2013ஆம் ஆண்டு டிசம்பரில், ஒரு ஃபேஸ்புக் பயனரால் பிளாக் செய்யப்பட்ட ஒருவர், தொடர்ந்து தன்னை பிளாக் செய்தவருடன் தொடர்பு கொள்ளும் வகையிலான பாதுகாப்பு குறைபாட்டை கண்டறிந்ததற்காக 4,500 டாலர்கள் வெகுமதியும், 2015ஆம் ஆண்டு பிப்ரவரியில், ஒரு ஃபேஸ்புக் பயனர் மற்றொருவரின் கணக்கிலுள்ள புகைப்படங்களை அழிக்கக் கூடிய குறைபாட்டை கண்டறிந்ததற்காக 12,000 டாலர்களும், அதே ஆண்டு மார்ச் மாதம் ஒருவருக்கு தெரியாமலேயே அவரது ஃபேஸ்புக் செயலியில் பதிவேறியுள்ள புகைப்படங்களை, அதே அலைபேசியில் பதியப்பட்டுள்ள மற்ற செயலிகளின் தயாரிப்பாளர்கள் பார்க்கக் கூடிய குறைபாட்டை கண்டறிததற்காக 10,000 டாலர்களும் என இதுவரை ஃபேஸ்புக் நிறுவனத்தின் தயாரிப்புகளிலுள்ள பாதுகாப்பு குறைபாடுகளை கண்டறிந்ததன் மூலம் மட்டும் பல்லாயிரக்கணக்கான டாலர்களை அந்நிறுவனத்திடமிருந்து வெகுமதியாக பெற்றுள்ளார் லக்ஷ்மன் முத்தையா.

"தொழிற் வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுவது மட்டுமின்றி, கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சேவைகளிலுள்ள குறைபாட்டை கண்டறிந்து வெளிப்படுத்துவது மக்களுக்கு பலனளிக்கும் என்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துவதோடு, எனது பணியை உத்வேகத்துடன் தொடருவதற்கு உதவுகிறது" என்று பெருமையுடன் கூறுகிறார் லக்ஷ்மன் முத்தையா.

https://www.bbc.com/tamil/science-49064934

Link to comment
Share on other sites

பாராட்டுக்கள்.

"என இதுவரை ஃபேஸ்புக் நிறுவனத்தின் தயாரிப்புகளிலுள்ள பாதுகாப்பு குறைபாடுகளை கண்டறிந்ததன் மூலம் மட்டும் பல்லாயிரக்கணக்கான டாலர்களை அந்நிறுவனத்திடமிருந்து வெகுமதியாக பெற்றுள்ளார் லக்ஷ்மன் முத்தையா"

இவ்வாறான நோக்கத்துடன் ஒரு நிறுவனத்தையே நாம் ஆரம்பிக்கலாம். அதாவது, பெரிய நிறுவனங்களில் உள்ள 'ஓட்டைகளை' கண்டு அவர்களுடன் ஒரு சட்ட ஆலோசகர்கள் ஊடாக வெகுமதியை பெறலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ampanai said:

பாராட்டுக்கள்.

"என இதுவரை ஃபேஸ்புக் நிறுவனத்தின் தயாரிப்புகளிலுள்ள பாதுகாப்பு குறைபாடுகளை கண்டறிந்ததன் மூலம் மட்டும் பல்லாயிரக்கணக்கான டாலர்களை அந்நிறுவனத்திடமிருந்து வெகுமதியாக பெற்றுள்ளார் லக்ஷ்மன் முத்தையா"

இவ்வாறான நோக்கத்துடன் ஒரு நிறுவனத்தையே நாம் ஆரம்பிக்கலாம். அதாவது, பெரிய நிறுவனங்களில் உள்ள 'ஓட்டைகளை' கண்டு அவர்களுடன் ஒரு சட்ட ஆலோசகர்கள் ஊடாக வெகுமதியை பெறலாம்.

தமிழ் இளையோர் மற்றும் ஆர்வமுடையோர் குழுக்களாக இயங்குதல் பலனளிக்கும்.

நாங்கள் சிகரங்களை (கல்வி, பொருளாதாரம், அறிவியல், ஆரோக்கியம்) அடையும்போது மண்ணும் மக்களும் ஓரளவு பாதுகாக்கப்படலாம்.

Link to comment
Share on other sites

இன்றைய உலகின் தங்கம் : பாவனையாளர்களின் தரவுகள்  

தமது தரவுகளை பாதுகாப்பது ஒவ்வொரு நிறுவனத்தின் கடமை

அவ்வாறாக, தரவுகளை பாதுகாப்பதில் உள்ள ஓட்டைகளை அறிந்து அதை தெரியப்படுத்தி பணம் சம்பாதிக்கலாம்.  

செலுத்திய பணம் : 700 மில்லியன்கள் அமெரிக்க டாலர்கள் 
பாதிக்கப்பட்ட அமெரிக்கர்கள் : 147 மில்லியன்கள் 
பாதிக்கபட்ட அமெரிக்கர்கள் பெறக்கூடிய தொகை : 20000   அமெரிக்க டாலர்கள்

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் கூட பணம் சம்பாதிக்கலாம். 

 

 

Link to comment
Share on other sites

புதிய தொழில்நுட்பங்கள் புதிய எல்லைகளை தொட திறவுகோல்களாக உள்ளன.

எம்மவரில் பலரும் புலம்பெயர்ந்த நாடுகளில் முன்னேற இவ்வாறான புதிய தொழில்நுட்பங்களும் ஒரு காரணம்.

அவ்வாறான ஒன்று எயர் பி அன்  பி.

உல்லாச விடுதிகளின் வியாபார திட்டமிட்டலை இந்த வடிவமைப்பு ஆட்டம் காண வைத்துள்ளது. அதில் இணைந்து வீடுகளை / அடுக்குமாடி கட்டிட அறைகளை வாடகைக்கு கொடுத்த ஒருவர், அதில் பணம் உழைப்பவர்களுக்கு உதவும் ஒரு தளத்தை ஆரம்பித்து பிரபல்யம் அடைந்ததுடன் அதிக பணமும் சேர்க்கும்  திட்டமிடலை உருவாக்கி உள்ளார். 

https://yourfrontdesk.co/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.