Jump to content

வாத்தியாரின் பெருமை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

வாத்தியாரின் பெருமை 

கன காலத்தின் பின் 
என் பழைய நண்பன் 
வாத்தியாரை வழியில் கண்டேன் 
என்ன செய்கிறார்கள் 
பிள்ளைகள் என்றேன் 
கொச்சம் கூனை 
நிமிர்த்தியபடி சொன்னார் 
மூத்த மகள் டொக்டராம் 
இரண்டாவது மகள் 
இம்முறை டொக்டர் படிப்புக்கு 
பல்கலைக்கழகம் தெரிவாம் 
கடைசிப் பையனை பற்ரி  
கதைக்கவே இல்லை 
என்ன செய்கிறார் 
கடைசி பையன் என்றேன் 
ஓ அவனா 
சரித்திரம் சமூகக்கல்வி 
என்று  ஏதோ படிக்கிறான் 
கவிதை கத்தரிக்காய் என்று 
அது வேற அவருக்கு 
சோறு போடுமாம் 
என்ன பிரயோசனம் என்று 
எனக்கு விளங்கவில்லை என்றார் 
அப்போ இருந்த வாத்தியாராய் 
இப்போ இவர் இல்லை என்று 
எனக்குள்ளே  முழுமுணுத்தபடி 
மெல்ல நகர்ந்தேன் .


புலம் பெயர் நாடுகளில் வாழும் தமிழ் பிள்ளைகளின் முன்னேற்றம் பாராட்டத்தக்கது .
இம்முறையும் உயர் கல்வி கற்க பெரும் தொகை தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகம்  தெரிவு ஆகி இருப்பது எம் எல்லோருக்கும் பொருமை அநேகமான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் டாக்டர் ஆக வரவேண்டும் என்றே நினைக்கின்றனர் நல்லது தான் இருந்த போதும் சமூகம் ,சட்டம் ,அரசியல் ,மானுடவியல்,சர்வதேசஅரசியல் ,தத்துவம் ,உளவியல் போன்ற கற்கை நெறிகளையும் கற்க வேண்டும் .அப்போது தான் நாம் முழுமையான முன்னேற்ரம் கொண்ட ஓர் அறிவுசார் சமுதாயமாக [Intellectual] மாறி எல்லா அரசு சார் அல்லது தனியார் நிறுவனங்கள்  திணைக்களகள் போன்ற ஐ .நா .மற்றும் ஐரோப்பிய யூனியன் போன்ற அமைப்புகளில் ஆலோசகர்களாக அதி உயர் பதவி வகிப்பவர்களாக  வரவேண்டும் .அப்போது தான் முழுமையானா சமுதாயமாக தமிழர் சமூகம் வளர்ச்சி காணும் .
தமிழர்களின் அரசியல் சமூக கலாச்சார பொருளாதார விடுதலைக்கும் வாழ்வுக்கும் இது வழி வகுக்கும் .மொழி அறிவோடு வாசிப்பு திறன் கொண்ட அறிவு சார் சமூகமாக எம்மை வளர்த்து எடுத்து சரவதேச சமுதாயதுக்கு எம்மை அடையாளப்படுத்த வேண்டும் .தனியவே பணம் சம்பாதிப்பதை மட்டும் இலக்காககொள்ளாமல் தமிழர் என்ற ஒரு அடையாளத்தின் கீழ் எமது விடுதலையின் சரியான பாதை பற்றியும் எமது இளைய சமுதாயம் சிந்திக்க வேண்டும் .எமது தலை முறையின் பயணங்கள் செய்ய முடியாமல்  போனவைகளை எமது இளைய சமுதாயம் செய்வார்கள் என்ற நம்பிக்கை தான் எம் எல்லோரதும் எதிர் பார்ப்பாகும் .


பா .உதயகுமார் .

 

Link to comment
Share on other sites

On 7/22/2019 at 11:27 AM, uthayakumar said:

நல்லது தான் இருந்த போதும் சமூகம் ,சட்டம் ,அரசியல் ,மானுடவியல்,சர்வதேசஅரசியல் ,தத்துவம் ,உளவியல் போன்ற கற்கை நெறிகளையும் கற்க வேண்டும் .அப்போது தான் நாம் முழுமையான முன்னேற்ரம் கொண்ட ஓர் அறிவுசார் சமுதாயமாக [Intellectual] மாறி எல்லா அரசு சார் அல்லது தனியார் நிறுவனங்கள்  திணைக்களகள் போன்ற ஐ .நா .மற்றும் ஐரோப்பிய யூனியன் போன்ற அமைப்புகளில் ஆலோசகர்களாக அதி உயர் பதவி வகிப்பவர்களாக  வரவேண்டும் .அப்போது தான் முழுமையானா சமுதாயமாக தமிழர் சமூகம் வளர்ச்சி காணும் .

இவ்வாறு வருவதற்கு இரட்டிப்பு திறமையும் (காரணம் எமது தோல் நிறம்), நிறைந்த பேச்சாற்றலும், மற்றையவர்களை வசீகரிக்கும் குணமும், மேலாக 'புறக்கணிக்கப்படும் பொழுது' மனத்தை தளரவிடாத முயற்சியும் கூடவே வேண்டும் என கருதுகின்றேன். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/24/2019 at 8:25 AM, ampanai said:

இவ்வாறு வருவதற்கு இரட்டிப்பு திறமையும் (காரணம் எமது தோல் நிறம்), நிறைந்த பேச்சாற்றலும், மற்றையவர்களை வசீகரிக்கும் குணமும், மேலாக 'புறக்கணிக்கப்படும் பொழுது' மனத்தை தளரவிடாத முயற்சியும் கூடவே வேண்டும் என கருதுகின்றேன். 

 

நன்றி நீங்கள் சொன்ன கருத்து மிகவும் சரியானது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/23/2019 at 1:27 AM, uthayakumar said:

புலம் பெயர் நாடுகளில் வாழும் தமிழ் பிள்ளைகளின் முன்னேற்றம் பாராட்டத்தக்கது .
இம்முறையும் உயர் கல்வி கற்க பெரும் தொகை தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகம்  தெரிவு ஆகி இருப்பது எம் எல்லோருக்கும் பொருமை அநேகமான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் டாக்டர் ஆக வரவேண்டும் என்றே நினைக்கின்றனர் நல்லது தான் இருந்த போதும் சமூகம் ,சட்டம் ,அரசியல் ,மானுடவியல்,சர்வதேசஅரசியல் ,தத்துவம் ,உளவியல் போன்ற கற்கை நெறிகளையும் கற்க வேண்டும்

எனது சில அனுபவங்களிலிருந்து இது பெரும்பாலும் புலம்பெயர்ந்து வாழும் எங்களது இரண்டாவது அல்லது மூன்றாவது தலைமுறையிலேயே சாத்தியமாகும், ஏனெனில் முதலாவது தலைமுறை இன்னமும் அதிலிருந்து வெளிவரவில்லை அத்துடன் அவர்களது பிள்ளைகளையும்( பெரும்பாலும் ) அப்படி சொல்லி சொல்லியே வளர்ப்பதால் இரண்டாவது தலைமுறையும் அவ்வளவு இலேசில் மாறாது ..மூன்றாவது தலைமுறையிலேயே இந்த மாதிரி வேறு துறைகளில் அதிகளவு எங்களால் வேரூன்ற முடியும்.. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

எனது சில அனுபவங்களிலிருந்து இது பெரும்பாலும் புலம்பெயர்ந்து வாழும் எங்களது இரண்டாவது அல்லது மூன்றாவது தலைமுறையிலேயே சாத்தியமாகும், ஏனெனில் முதலாவது தலைமுறை இன்னமும் அதிலிருந்து வெளிவரவில்லை அத்துடன் அவர்களது பிள்ளைகளையும்( பெரும்பாலும் ) அப்படி சொல்லி சொல்லியே வளர்ப்பதால் இரண்டாவது தலைமுறையும் அவ்வளவு இலேசில் மாறாது ..மூன்றாவது தலைமுறையிலேயே இந்த மாதிரி வேறு துறைகளில் அதிகளவு எங்களால் வேரூன்ற முடியும்.. 

 

எந்த தலைமுறைல் இருந்தாவது மாற்றம் ஏற்படுமானால் வருவேற்கதக்கது .நன்றி பிரபா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரபா கூறியதுபோல் மூன்றாவது தலைமுறையில் தான் மாற்றம் வரும். என் மூத்த மகள் இரண்டாமாண்டுடன் மருத்துவத் துறைக்கு முழுக்குப்போட்டுவிட்டு வேறு துறையைத் தெரிவு செய்தபோது அந்த அதர்ச்சி நீங்க எனக்கு மூன்று மாதங்கள் எடுத்தது. என் கடைசி மகளும் திறமைச்சித்தி கிடைத்தும் மருத்துவத்துறையை நிராகரித்துவிட்டு வேறு ஒன்றைத் தெரிவு செய்தபோதும் கூட அவர்களின் உளவியல் எனக்குப் புரியவில்லை. எமது மனங்கள் 35 ஆண்டுகள் புலம்பெயர்ந்து வெளிநாட்டில் வாழ்ந்தும் இன்னும் அப்படியேதான் மாறாமல் இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பிரபா கூறியதுபோல் மூன்றாவது தலைமுறையில் தான் மாற்றம் வரும். என் மூத்த மகள் இரண்டாமாண்டுடன் மருத்துவத் துறைக்கு முழுக்குப்போட்டுவிட்டு வேறு துறையைத் தெரிவு செய்தபோது அந்த அதர்ச்சி நீங்க எனக்கு மூன்று மாதங்கள் எடுத்தது. என் கடைசி மகளும் திறமைச்சித்தி கிடைத்தும் மருத்துவத்துறையை நிராகரித்துவிட்டு வேறு ஒன்றைத் தெரிவு செய்தபோதும் கூட அவர்களின் உளவியல் எனக்குப் புரியவில்லை. எமது மனங்கள் 35 ஆண்டுகள் புலம்பெயர்ந்து வெளிநாட்டில் வாழ்ந்தும் இன்னும் அப்படியேதான் மாறாமல் இருக்கிறது.

சகோதரி ,நாங்கள் பலர் மாறாமல் தான் இருந்தபோதும் எமது இரண்டாம் தலை முறையிலும் மாற்றம் பல இருந்ததை யாரும் மறுக்க முடியாது அரசியல் பொருளாதார கலாச்சார ரீதியாகவும் அவரகள் சிந்தனையாலும் பல மாறுதல்களை நாம் கண்டிருக்கிறோம் .பலர் தனித்தே தங்கள் எதிர் காலம் பற்றி சிந்திக்கிறார்கள் .அவர்கள் தயனிவே இயந்திரங்கள் போல் இயக்கி தான் வேலை செய்யும் இயந்திரம் போல் நாம் பார்க்க முடியாது .தனித்த சிந்தனையும் மனித வேறுபாடுகளையும் அரசியல் பொருளாதார விடுதலையில் தனித்து போராடிய பல அறிவுசார் பிள்ளைகளை நாம் பார்த்திருக்கிறோம் .இவர்கள் மூலம் எமது அடையாளம் கூடவே சர்வதேசம் அறிந்து இருப்பதை மறக்கவும் முடியாது .நீங்கள் கூறுவது போல் படி படியாக பல மாறுதல்கள் வரும் என்பதில் மாற்றம் இல்லை .மாறும் விதியை யாரும் மறுக்கவும் முடியாது .எல்லோருமே இன்னும் மாறாமல் தான் இருப்பார்கள் என்றும் இல்லை .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பையன் மைண்ட் வொய்ஸ்:   அப்பாடா .......... பெரியப்பாவுடன்  10 பேர் ஆச்சுது ....... இனி போட்டிக்கு பங்கமில்லை........!  😂 கிருபன் & பையன்.......!  🤣
    • சுற்றுலாப் பிரதேசங்களில் சிறப்பு சோதனை நடவடிக்கை! நாட்டிலுள்ள சுற்றுலாப் பகுதிகளில் சிறப்பு சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு – காலி முகத்திடல், புதுக்கடை, பேருவளை, பெந்தோட்டை, ஹிக்கடுவ, காலி, எல்ல ஆகிய பகுதிகளில் இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் அண்மைக்காலமாக  சுற்றுலாப் பயணிகள்  அச்சுறுத்தப்படுதல் மற்றும் ஏமாற்றப்படும் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன. அண்மையில், கொழும்பு – புதுக்கடை மற்றும் களுத்துறை நகரப் பகுதிகளில் இவ்வாறு இரு சம்பவங்கள் நடைபெற்றிருந்தன. இதையடுத்தே, இந்த விசேட இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1378849
    • யாழில் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல். தியாகத்தாய் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நினைவுதிம் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலிபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக இவ் நினைவேந்தல் நடைபெற்றது. அன்ணை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் வடக்கு கிழக்கு மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் நடைபெற்று வருகின்றது. இதன் அங்கமாகக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண தலைமை அலுவலகத்தில் நினைவுநாள் தொடர்ச்சியாக அனுஷ்டிக்கப்பட்டு வந்ததுடன் இறுதிநாள் நிகழ்விற்காக ஊர்திப் பவணியொன்றும் இங்கிருந்து மட்டக்களப்பிற்கு சென்றிருந்தது. இதன் தொடராக நினைவுநாளின் இறுதிநாளான இன்று அக் கட்சியின் ஏற்பாட்டில் நல்லூரில் கொட்டகை அமைத்து நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இதன் போது பொதுச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் அரசியல் கட்சி உறுப்பினர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378867
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.